Saturday 31 December 2011

அண்மையில் படித்த புத்தகம் ; முழுமையாகச் செய்யுங்கள் (DO IT TI A FINISH )

அண்மையில் படித்த புத்தகம் ; முழுமையாகச் செய்யுங்கள் (DO IT TI A FINISH )

நூலின் தலைப்பு : முழுமையாகச் செய்யுங்கள் ( DO IT TI A FINISH )

மூல நூலின் ஆசிரியர் : ஆரிசன் ஸ்வெட் மார்டன்
தமிழில் : மலர்க்கொடி B.A.
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், சென்னை- 600017 தொலைபேசி: 2433 2682
முதற்பதிப்பு : நவம்பர் 2005
நான்காம் பதிப்பு : ஜீலை 2010
மொத்த பக்கங்கள் : 56
விலை : ரூ 28.

மொத்தம் 9 தலைப்புகளில் உள்ள 56 பக்கம் உள்ள புத்தகம். முழுமையாக, அருமையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ள புத்தகம் . மொழி பெயர்ப்பாளருக்கு பாராட்டுக்கள்(ஆங்கிலத்தில் உள்ளதையும் படித்ததால்) .

முழுமையாகச் செய்தல் என்றால் என்ன? ஏன் முழுமையாகச் செய்ய வேண்டும், ஒரு சிறு கவனக்குறைவு எப்படியெல்லாம் பாதிக்கும் போன்ற பல்வேறு தகவல்களை ஆரிசன் விவரிக்கும் போக்கே தனித்தன்மையானது. இளைஞர்கள் அதிலும் குறிப்பாக ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வேலைகளை அரைகுறையாகச் செய்துவிட்டு பரபரவென்று தெரிவோர் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம். தொழிலுக்கும் நடத்தைக்கும் உள்ள தொடர்பு (THE RELATION OF WORK TO CHARACTER) என்னும் அத்தியாயம் 'ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை " என்பதனை விளக்கும் அத்தியாயம் எனலாம். தனக்கு உண்மையாயிருத்தல், நேர்மையாயிருத்தல் போன்றவையே சாதிக்கத் துணை புரியும் என்பதனை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கியிருக்கிறார். பக்கம் 49,50 ல் உள்ள பிரபல நீதிபதி, வேலி கட்டிய இளைஞன் ஒரு நல்ல எடுத்துக்காட்டான பதிவு.

வா.நேரு -31-12-11

Friday 30 December 2011

டிசம்பர் 24: தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்

விடுதலையின் விழுமிய பணிகள்
கழகத்தின் களப்பணி பேச்சாளர்களின் உரை வீச்சு

சென்னை, டிச. 29- சென்னை - பெரியார் திடலில், தந்தை பெரியாரின் நினைவுநாள் நிகழ்ச்சிகளுள் ஒன்றாக நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 24.12.2011 அன்று மாலை 4.30 மணிக்கு விடுதலையின் விழுமிய பணிகள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங் கத்திற்கு பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் தலைமை வகித்தார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் முன்னிலை வகித் தார். கருத்தரங்கத்தின் தொடக்க உரையினை பேராசிரி யர் முனைவர் பு.இராசதுரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு வருகை தந்தோரை வரவேற்றுப் பேசினார்.

விடுதலை சந்தித்த அடக்குமுறைகள் எனும் தலைப்பில் விடுதலை இதழ் பல்வேறு சமூகத் தளங்களில் ஆற்றிவரும் முன்னேற்றப் பணிகளைப் பற்றி வழக்குரைஞர் அ.அருள்மொழி, முனைவர் அதிரடி க.அன்பழகன், தஞ்சை இரா.பெரியார்செல்வன், இராம.அன்பழகன் ஆகியோர் கருத்துச் செறிவு மிக்க உரைகளை ஆற்றினர்.

கருத்தரங்கின் நன்றியுரையினை திராவிடர் மகளிர் பாசறையின் செயலாளர் பொறியாளர் கனிமொழி வழங்கினார்.

விடுதலை - இரவும் பகலுமாய் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகை

முனைவர் பு.இராசதுரை பேசியதாவது: ஆண்டாண்டு காலமாக, மன்னர் ஆட்சி காலம் முதற்கொண்டு பார்ப்பனர்கள் ஆதிக்கம் தலைதூக்கியே வந்தது. வீரம் மிகு மன்னர்கள் எல்லாம் கடவுள் தத்துவ மயக்கத்தில் பார்ப்பனர்களின் அடிமைகளாகவே இருந் தனர். பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் பொது வாழ்க்கையில் தலை எடுத்ததற்குப் பின், அவரது அருஞ் சமூகப் பணியினால் அடிமைத்தளை மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.

அறிவுப் புரட்சிக்கான வித்து முளைத்து விளைச்சல் தரத் தொடங்கியது. தந்தை பெரியார் ஏற்படுத்திய அறிவுப்புரட்சியின் ஆற்றல்மிக்க கருவி, கருத்துப் படைக்கலன்தான் விடுதலை ஏடு. 1935ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் வாரம் இருமுறை ஏடாகத் தொடங்கப்பட்டதுதான் விடுதலை.

விடுதலை ஏடு வெளிவந்ததன் மகிழ்ச்சியை தனது குடிஅரசு இதழில் தந்தை பெரியார் வெளிப்படுத்தினார். ஒவ்வொரு பார்ப்பனர் அல்லாதாரும் இரவும் பகலுமாய் தமிழ் பத்திரிகை, தமிழ்ப் பத்திரிகை என்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்த வேளையில் வெளிவந்துள்ளது விடுதலை ஏடு. விடுதலை வெளிவந்ததைப் பார்த்து எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு பாக்கியம் கிடைத்ததாக மகிழ்ச்சி அடைவார்களே ஒழிய, இதற்கு மதிப்புரை வருகின்றதா, அது எப்படி வருகிறது என்று கவனிக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் எதிர்பார்த்த படி தமிழ்பத்திரிகை வந்துவிட்டது.

அதைத் துய்த்து தினசரிக்கு நிலைநிறுத்த வேண்டியது தமிழர்களின் கடமை என அறைகூவல் விடுத்தார். அன்றைய விடுதலை யின் ஆண்டுச் சந்தா 3 ரூபாய் 62 காசுகள். அப்படி ஆரம்பிக்கப்பட்ட விடுதலை ஏட்டினை நீதிக்கட்சியின் தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தந்தை பெரியாரால் தினசரி ஏடாக மாற்றம் பெற்று ஈரோட்டி லிருந்து காலணா விலையில் வெளிவரத் துவங்கியது.

பணச்சுமை, நிருவாக நட்டம் மிகுந்த நிலையில் 1962ஆம் ஆண்டில் விடுதலை ஏட்டினை அதற்கு மேல் நடத்திட முடியாது என்ற நெருக்கடியில்தான் இயக்கத் திற்கு வாராது வந்த மாமணியாய், நமது ஆசிரியர் வீரமணி அவர்கள் கிடைத்தார். அவரது பொறுப்பில் விடுதலையை ஒப்படைத்தார். தந்தை பெரியார். விடுதலை ஏட்டின் வெள்ளி விழாவின் போது விடுதலை சந்தா சேகரிப்புப் பணியாக இரண்டு மாத கால அவகாசத்தில் 2500 சந்தாக்கள் சேகரிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.

அப்படிப்பட்ட சந்தா சேகரிப்பு நிலையிலிருந்து இன்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுப் பொது வாழ்வின் சிறப்பாக மூன்றே மாதங்களில் 50,000 விடுதலை சந்தாக்களை வழங்கிட முன் வந்துள்ளோம். விடுதலை சந்தா சேகரிப்பு என்பது வெறும் பத்திரிகை சந்தா சேகரிப்பு அல்ல. தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை அவரது இயக்கப் பணியின் இன்றைய தேவையை, சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துக்கொண்டு சேர்க்கும் நீடித்த நிலைத்த கருத்துப் பிரச்சாரப் பணியாகும்.

அப்படிப்பட்ட விடுதலை ஏட்டின் வளர்ச்சி பன்மடங்கு பெருகி தமிழ்ச் சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் என வாழ்த்துகிறேன். அதற்கு உண்டான பணிகளுக்கு ஆக்கம் சேர்த்திட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். விடுதலை -
சமூகப் பணிக்கான போர்வாள்
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் எழுதிய கவிதையை மேற்கோள் காட்டி அத்தகைய சமூகப் பணிக்கான போர்வாள் விடுதலை ஏடு என எடுத்துரைத்து அதன் வளர்ச்சிக்கு மேலும் வலுகூட்ட வேண்டும் என்றார். வருகைதந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

விடுதலை - வெறும் செய்தித்தாள் அல்ல கருத்து இதழ்

முனைவர் நம்.சீனிவாசன் பேசியதாவது: பயிற்சி வகுப்புகளும், கருத்தரங்குகளும் அறிவு ஆட்சி செய்யும் களமாகும். சுயமரியாதை இயக்கம் தொடங்கிய நாள் தொட்டு கருத்துப் பிரச்சாரத்திற்கு இந்த அறிவியல் வடிவம் பயன்பட்டு வருகிறது.

விடுதலை நாத்திகக் கருத்துகளைத் தாங்கி வரும் ஒரே நாளிதழ். இது செய்தித்தாள் அல்ல; கருத்து இதழ். ஒழுக்கக் கேடானதும், மூடநம்பிக்கைகளை வளர்க்கக் கூடியதும், தமிழ்மக்களுக்குச் சமுதாயத்திலும், அரசிய லிலும், உத்தியோகத் துறையிலும் கேடு அளிக்கக்கூடியது மான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பயன்படும் பத்திரிகை விடுதலை என்று விடுதலை ஏட்டின் இலட்சியப் பணியினை தந்தை பெரியார் தெளிவுபடுத்துகிறார்.

சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வற்றைத் தமிழ் மக்களிடத்தே வலியுறுத்தி வளர்த்தல், தீண்டாமைக் கொடுமை ஒழிப்பு, வேத, சாஸ்திர, புராண இதிகாசங்களை எதிர்த்து ஒதுக்குதல், புரோகிதம் புறக்கணிப்பு, கடவுள் மதக்கற்பனைகளை மறுத்தல், பெண்ணடிமை நீக்கம், கைம்பெண் மணம், மணவிலக்கு உரிமை, சுயமரியாதை முறை வாழ்க்கை ஒப்பந்தம், வடமொழி, இந்தி மொழிகளின் தீங்குகளைத் துடைத் தெறியக் கிளர்ச்சிகள் மேற்கொள்ளுதல், வடநாட்டாரின் வல்லாட்சி கூடாதென அறவழிப்போராட்டங்களை நடத்துதல், அனைத்துச் ஜாதிப் பிரிவினருக்கும் கல்விச் செல்வம் கிட்டுமாறு செய்தல், அரசுப்பணிகளில் வகுப்பு வாரி உரிமை வழங்கும் சட்டம் இயற்றல் இவற்றையெல்லாம் வழங்குவதற்கான முயற்சிகள், சிறை வாழ்க்கையையும் ஏற்க அணியமாயிருத்தல் முதலிய தன்மான இயக்கக் கொள்கைகள்-திட்டங்கள் தொடர்பாக கருத்துகளைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் விடுதலையே என்று பேராசிரியர் இறையனார் விடுதலையின் பாதை இலக்கணத்தை வரையறை செய்கிறார்.

விடுதலை என்ற சொல் எந்த பொருள் உடையது.
ஜாதியிலிருந்து விடுதலை
மதத்திலிருந்து விடுதலை
மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
வறுமையிலிருந்து விடுதலை
ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை
சுரண்டலிலிருந்து விடுதலை
பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து விடுதலை
பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுதலை
என்று பரந்து விரிந்த பொருளைக் கொண்டிருக்கிறது விடுதலை.

விடுதலையின் சாதனை சாதாரணமானதல்ல. தமிழ் அறிஞர்களையும், மடாதிபதிகளையும் மக்களுக்குச் சேவை செய்ய அழைத்த பெருமை விடுதலைக்கு உண்டு. சைவத்தின் உச்சியில் தான் உண்டு, தன் சைவம் உண்டு என்று தவமிருந்த தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரை 1938இல் இந்தித் திணிப்பை எதிர்த்து களமிறக்கியது விடுதலை. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை யும் மக்கள் மன்றத்திற்கு அழைத்து வந்ததும்-தந்தை பெரியாரும், விடுதலையும்தான். அதனை அடிகளாரே ஒப்புக்கொண்டு பேசியதுண்டு.

மாநில அரசுப் பணியில் நடைமுறையில் இருந்த ஊழியர்களுக்கான ரகசியக் குறிப்பை எதிர்த்து அந்த நடைமுறையினை நீக்கிய ஏடு விடுதலை. ஜாதி வெறியர்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட சத்துணைவுக் கூட பெண் சமையல் பணி யாளருக்கு ஆதரவாக கண்டித்து எழுதி மாவட்ட ஆட்சியர் மூலம் பணியிட மாறுதல் ஆணையினை ரத்து செய்திட வைத்தது விடுதலை ஏடுதான்.

இப்படி சமுதாய மேம்பாட்டில் விடுதலை ஏட்டின் பங்கு பற்றிய விடுதலையின் விழுமிய பணிகள் எனும் கருத்தரங்கம் பகுத்தறிவுக் கருத்துப் பரவலுக்கு மேலும் வலுவூட்டும். உரையாற்றுவோரின் கருத்து வீச்சு களப் பணியில் எதிரொலிக்க வேண்டும். தமிழர் வீடுதோறும் விடுதலை என்பது நடைமுறை இயல்பு எனும் நிலையினை உருவாக்கிட நாம் பாடுபட வேண்டும் எனக்கூறி கருத்தரங்கை தொடங்கி வைப்பதும், உங்களைப் போல் கேட்டு மூளைக்குள் பதித்து வைப்பதும் என் பணியாகும். கருத்தரங்கினை மகிழ்ச்சியோடு தொடங்கி வைக்கிறேன்.

விடுதலை - உரிமை மீட்புப் பணி

முனைவர் இராம.அன்பழகன் பேசியதாவது: தமிழர் தம் இயற்கைச் செல்வமீட்பு, பொருளாதார மேம்பாட்டுப் பணியில் விடுதலை ஏட்டின் பணி மகத்தானது. நெய்வேலியில் நிலக்கரி எடுப்பதில், தமிழக மக்களுக்குப் பயன்படுகின்ற வகையில் மாநில அரசுக்கு ராயல்டி கிடைக்க வேண்டும் எனும் கோரிக்கையினை முதன் முதலாக எடுத்து வெற்றியைப் பெற்றது விடுதலை ஏடு. பெரும்பாலான மக்கள் ராயல்டி என்பதன் பொருள், உரிமை பற்றிய விளக்கம் பெற்றது விடுதலை ஏட்டின் வாயிலாகத்தான். கிடப்பில் போடப்பட்டிருந்த சேது கால் வாய் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்ததில் ஆரம்பக் காலம் முதல் பெரும்பங்கு வகித்தது விடுதலை தான்.

முல்லைப் பெரியாறு நீரில் தமிழகத்திற்கான உரிமை யினை தக்க வைக்கும் தரு விடுதலை. சபரிமலைக்குப் போகும் பக்தர்களை உரிமை வேட்கை கொள்ளச் செய்து பக்தி மாலையை எடுத்துப்போட்டுவிட்டு போராட வைத்தது விடுதலை நாளிதழ். சேர வேண்டிய ஒப்பந்த அடிப்படையிலான நீர்ப் பங்கீட்டு உரிமை என தொடர்ந்து வலியுறுத்தி தமிழர்தம் உரிமை மீட்புப் பணியில் உரக்கக் குரல் எழுப்பி வருவது விடுதலை ஏடு. தமிழர்தம் உரிமை மீட்பு விடியலுக்கான தனித்துவமான, சிறப்புமிகு போர்க்கருவி விடுதலையே.

விடுதலை - பகுத்தறிவுப் பணி

தஞ்சை பெரியார்செல்வன் பேசியதாவது: மற்ற ஏடுகளிலிருந்து விடுதலை ஏடு முற்றிலும் மாறுபட்டது. ஜோதிடம், ராசிபலன், சொல்லாத ஏடு விடுதலை. மத பண்டிகைக்களுக்கு விடுமுறை விடாத ஏடு விடுதலை. அய்ரோப்பிய நாத்திக அறிஞர் லெவி பிரகல் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசும் பொழுது, உலகில் நாத்திகக் கொள்கையினை தாங்கி பரப்பிவரும் ஒரே நாளேடு விடுதலை எனக் குறிப்பிட்டது உலக பத்திரிகை உலகில் விடுதலை ஏட்டின் தனியிடத்தை சிறப்பிடத்தை பறைசாற்றுவதாக உள்ளது.

பார்ப்பனர்களின் வஜ்ஜீராயுதம் ஊடகங்கள். அத் தகைய ஊடகத்துறையில் பல வித எதிர்ப்புகளையும் தாண்டி பீடு நடைபோட்டு வருகிறது விடுதலை. டில்லியில் பிள்ளையார் பால் குடிக்கிறார் எனும் செய்தி யினை கன்னியாகுமரி வரை எடுத்துச் சென்ற பார்ப்பனர் களின் செயலை தமிழர் தலைவரின் பிள்ளையார் பால் குடிப்பதை நிரூபித்தால் ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனும் அறிவிப்பால் மூடநம்பிக்கையை முறியடித்த பெருமை விடுதலைக்கு உண்டு. பகுத்தறிவின் அடிப்படையில் மனிதநேய உணர்வுடன் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக தொடர்ந்து குரல் கொடுத்து நடை முறைக்கு பாடுபட்டு வருகிறது விடுதலை.

அய்யப்ப மகரஜோதி - அப்பட்டமான பொய், மோசடி என பிரச்சாரம் செய்ததில் அரசே மகரஜோதி என்பது மனிதசெயல்தான் என ஒப்புக்கொள்ளச் செய்தது விடுதலை. மலைபோன்று நிலைத்துவிட்ட மூடநம்பிக்கையை பகுத்தறிவு உளிமூலம் செதுக்கிய பெருமை விடுதலைக்கு உண்டு. மூடநம்பிக்கை பலூனை, பகுத்தறிவு ஊசிகொண்டு குத்தி செயலிழக்கச் செய்து வலு விழக்கச் செய்தது விடுதலை என்பது வரலாற்றுச் செய்தி மட்டுமல்ல, தொடர்ந்து வரும் நிகழ்வுகளாகும்.

விடுதலை - இனமானப் பணி

முனைவர் அதிரடி க.அன்பழகன் பேசியதாவது: திராவிடர்களுக்கு குரல் கொடுக்க திராவிடர்களிடம் இன உணர்வினை இன மேம்பாட்டு எதிர்பார்ப்பினை ஊக்கப் படுத்திய ஏடு விடுதலை. தமிழர் தலைவர் வீரமணி அவர்களை விடுதலை ஏட்டின் ஆசிரியர் பணியினை ஏற்றிட தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தபொழுது, இந்து ஆங்கில நாளேடு தலையங்கமாக எதை எழுது கிறதோ அதற்கு எதிராக எழுதினாலே நமது கருத்து வெளிப்பட்டு விடும் எனப் பொருள்படும் வகையில் ஆசிரியருக்கு அறிவுறுத்தியது ஒன்றே போதும்; அதுவும் விடுதலையின் இனமானப் பணிக்கு எடுத்துக் காட்டாக அமைந்துவிட்டது.

மேலும் இராஜாஜி விடுதலையும், நாயக்கரும் (பெரியார்) எனது அன்பான எதிரிகள் எனக் குறிப்பிட்டது விடுதலை திராவிடர் இனம் மேம்பாட்டுக்கு பாடுபட்டு வரும் ஏடு என்பதற்கு விளக்கமாக அமைந்துவிட்டது. கலைஞர் ஒரு முறை காய்ச்சலால் உடல்நலம் குன்றிய நிலையில், காஞ்சி சங்கராச்சாரியார், தான் கடவுளிடம் விடுத்த வேண்டுகோளால் கலைஞருக்கு காய்ச்சல் வர செய்துவிட்டார் எனும் சிறிதும் மனிதநேயமற்ற மதவாதி யின் செயலை, ஆரிய ஆதிக்க அடையாளத்தை தோலுரித் துக் காட்டியது விடுதலை ஏடு.

விடுதலை ஏட்டின் இனப்பற்றினை டவுட் செய் யும் சில ஏடுகள் அவுட் ஆகிவிடும் நாள் தூரத்தில் இல்லை. அந்த தூரத்தின் தொலைவை குறைக்கும் பணி விடுதலை ஏட்டின் பரந்துபட்ட வாசிப்பில்தான் நிறைவேறும். திராவிடர் இனமும் மேம்படும்.

விடுதலை - சமூகநீதிப்பணி

வழக்குரைஞர் அ.அருள்மொழி பேசியதாவது: விடுதலை ஏட்டிற்கு எதிர்ப்பு வந்தபொழுது தந்தை பெரியார் எழுதுகிறார். தனிப்பட்ட ஜாதியை எதிர்க்கவோ, மதத்தை துரத்தவோ, தனி மதத்தை துவக்கவோ விடுதலை எடு தொடங்கப்படவில். இந்த நாட்டிற்குச் சொந்தமான ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை குறிப்பிடுவ தற்கு ஒரு பெயர் கூட இல்லை. பலநூற்றாண்டுகளாக நிலவிவந்த இந்த இழிவை போக்க வந்த ஏடு விடுதலை எனக்கூறினார்.

சமூகநீதித்தளத்தில் விடுதலை ஏடு அளப்பரிய சாதனை புரிந்துள்ளது. அவ்வப்போது இடஒதுக்கீட்டின் நடைமுறை குறைபாடுகளை, எதிர்ப்பாடுகளை குறித்து எழுதி சமூகநீதியை நிலைநாட்டி வருகிறது. எடுத்துக் காட்டாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மொத்த நீதிபதிகளில் 10 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த வர்கள். மொத்த நீதிபதிகளில் ஏறக்குறைய சரிபாதிப்பேர் பெண் நீதியரசர்கள்.

இத்தகைய நிலைமை இந்தியாவின் எந்த உயர்நீதிமன்றத்திலும் இல்லை. சமூகநீதிக்குச் சாதகமாக அரசியல் அதிகாரத்தில் உள்ளோரை, மக்கள் மன்றத்தின் கருத்தைத் திரட்டுவதன் மூலம் பக்குவப் படுத்தி, நேர்செய்து, கொண்டு சென்ற பணியில் விடுதலை ஏடு பெரும்பங்கு வகிக்கிறது.

1980களில் தமிழ்நாட்டில் சென்னையைத் தலைமையிட மாகக் கொண்டுள்ள இந்தியன் வங்கியில் பெரும்பாலான அதிகாரப் பொறுப்பில் பார்ப்பனர்கள் இருந்து அக்கிரகார வங்கி எனச் சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டதை பாராளுமன்றத்தில் பேச வைத்தது நிவர்த்தி செய்தது விடுதலை ஏடு. சமூகத்தின் அடித்தள மக்கள் வீட்டுப் பிள்ளைகள் கல்வி வாய்ப்புகளில் உரிய இடம் பெறுவதற்கு தடையாக இருந்த நுழைவுத்தேர்வினை நீக்கப் பாடுபட்டது விடுதலை நாளிதழ்.

இன்னும் சொல்லப்போனால் நுழைவுத் தேர்வு நுழைவதற்கு முன்பே அதன் பாதக அடையாளங்களை எடுத்துக்கூறிய ஏடு விடுதலைதான் ரூ.9000 வருமான வரம்பு ஆணையை விலக்கிக்கொள்ள வைத்தது. தமிழகத்தில் 69 விழுக்காடு, சட்ட வடிவ இடஒதுக்கீட்டுக்கான ஏற்பாடு, மண்டல் குழு பரிந்துரை நடைமுறையாக்கம் என விடுதலையின் பங்கு, வரலாற் றுச் சுவடுகளாய் தடம் பதித்து நிற்கிறது. வஞ்சிக்கப்பட்டு வரும் தமிழ்நாட்டின் உரிமைக்கு குரல் கொடுத்துவரும் விடுதலை ஏட்டிற்கு நன்றி. விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவருக்கு நன்றி.

கருத்தரங்கின் உரை வீச்சால் கருஞ்சட்டைப் பட்டாளத்திற்கு நினைவூட்டலும் ஊக்கமும், இன உணர்வாளர்களுக்கு புத்தாக்கமும் ஒருங்கே கிடைத்தது, வருகை தந்த அனைவரும் பரந்துபட்ட தளத்தில் விடுதலை ஏட்டின் விழுமிய பணி பற்றிய செய்தி மழை யில் நனைந்து சென்றனர். கருத்து வீச்சால் எழுச்சியும் பெற்று மகிழ்ந்தனர்.

திராவிடர் கழக மகளிர் பாசறையின் செயலாளர் பொறியாளர் கனிமொழி நன்றி கூறிட கருத்தரங்க நிகழ்வு நிறைவு பெற்றது.

- தொகுப்பு வீ.குமரேசன்

Tuesday 27 December 2011

அண்மையில் படித்த புத்தகம்(28.12.11)- குழந்தைகளைக் கொண்டாடுவோம்

நூலின் தலைப்பு : குழந்தைகளைக் கொண்டாடுவோம்
ரஷ்ய மூலம் : ஷ.அமனஷ்வீலி
தமிழில் : டாக்டர் இரா.பாஸ்கரன்
தமிழில் மறுவரைவு : முனைவர் அ.வள்ளிநாயகம்
வ.அம்பிகா
முதல் வெளியீடு : டிசம்பர் 2007,புக்ஸ் பார் சில்ரன்
விற்பனை உரிமை : பாரதி புத்தகாலயம்,சென்னை-18 -044-24332924
மொத்த பக்கங்கள் : 158
விலை : ரூ 80

சோவியத் நாட்டின் கல்வியியல் அறிஞர் ஷ.அமனஷ்வீலி ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தியது, பாடம் நடத்துவதற்கு முன் ஆசிரியரின் மனநிலை, பாடம் நடத்துவதற்காக அவர் தயாரித்த முன் தயாரிப்புகள் - மனதாலும், செய்கையாலும் போன்றவற்றை விவரிக்கும் நூல். ஷ.அமனஷ்வீலி கைவசம் இருந்த 800 பக்க நாட்குறிப்பின் அடிப்படையில் , பள்ளி திறந்த 1வது நாள், 20,84,122,170-வது நாட்களிம் நிகழ்ந்தவைகளை படம் பிடித்துக் காட்டும் நூல்.

26.12.2011 விஜய் டி.வி.யில் நடந்த நீயா? நானா? நிகழ்ச்சியில் (ஆசிரியர்கள் & மாணவர்கள்) ,ஒரு மாணவர் "ஆசிரியர்கள் எந்தவிதமான தயாரிப்பும் இல்லாமல் வந்து எதையாவது பேசி வகுப்பைப் போரடிக்கவைத்து காலத்தைக் கடத்துகிறார்கள் "எனக்குறிப்பிட்டார். கல்லூரி மாணவ,மாணவிகள் புரிந்துகொள்வார்கள் -ஆசிரியர் தயாரிப்போடு வந்திருக்கிறாரா, இல்லையா என்று. ஆனால் 6 வயதுக் குழந்தைகள் புரிந்துகொள்ள இயலுமா? புரிய இயலாத குழந்தைகளுக்குப் பாடம் நடத்தப்போகும்போது எவ்வளவு தயாரிப்போடு போகவேண்டும், அப்படிச் சென்றால் வகுப்பில் எவ்வளவு வெற்றி பெற முடியும் , எவ்வளவு தூரம் அந்தப் பிள்ளைகள் மனதில் இடம்பிடிக்க முடியும், இந்தப் புத்தகத்தைப் படித்தால் உணரலாம்.குழந்தைகள் பற்றி அக்க்றை உள்ள யாரென்றாலும் அவர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம்,பெற்றோர்களாக இருக்கலாம், கல்வியாளர்களாக இருக்கலாம், சமூக அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம் அவர்கள் எல்லாம் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

"குழந்தைகள் என் ஆசிரியர்கள் " என்றுதான் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. கற்றுக்கொள்ள எவ்வளவு விசயங்கள் குழந்தைகளிடம் இருக்கின்றன என்பதனை உணர்த்துகிறார். " நாங்கள் பிறந்ததிலிருந்து நல்லவர்கள், எங்களைக் கொடியவர்களாக ஆக்காதீர்கள் " எனக் குழந்தைகள் கூறுவார்கள் என பக்கம் 16-ல் குறிப்பிடுகின்றார். பெரும்பாலான பள்ளிகள் அப்படித்தான் இருக்கின்றன நம்மைச் சுற்றி . நல்லவர்களாக வரும் குழந்தைகளை கெட்டவர்களாக ஆக்குவதற்காக.

"குழந்தைகள் பெரியவர்களாக உதவ வேண்டும் என்றால் அவர்களில் தன்னைப் பார்க்கவேண்டும்.அவர்களின் மூலம் தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ள தனது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களின் உருவத்தில் காணவேண்டும்,என்றென்றும் மனிதாபிமானம் மிக்க ஆசிரியராக இருக்க வேண்டுமெனில் குழந்தையோடு குழந்தையாக வாழவேண்டும் " பக்கம் 39

" இங்கே குழந்தையுடைய மனதின் ஒவ்வொரு பகுதியையும் சீராட்டி வளர்க்க வேண்டும்.சிறு இதயங்களின் ஒவ்வொரு ஜீவ அசைவிலும் மனித நேயத்தை ஊட்ட வேண்டும் " -பக்கம் 45
"உண்மையான ஆசிரியர்கள் இறப்பதில்லை,இவர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்,யுவதிகளில் கரைந்து அவர்களை உயர்ந்த லட்சியங்களை உடைய நபர்களாக மாற்றுகின்றனர் " பக்கம் 24

இப்படி நூற்றுக்கணக்கான மேற்கோள்களை இப்புத்தகத்தில் காட்டலாம். ஒரு மணி நேரத்திற்குமேல் இப்புத்தகம் குறித்து மட்டுமே ஆசிரியர்கள், பெற்றொர்கள் முன் பேசலாம் அந்தளவிற்கு நிறைய அனுபவங்களை சொல்லும் நூலாக உள்ளது இப்புத்தகம். தமிழில் மறுவரைவு செய்த முனைவர் அ.வள்ளி நாயகம்,வ.அம்பிகா,மொழி பெயர்த்த டாக்டர் இரா.பாஸ்கரனை இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பதன் மூலம் பாராட்டலாம். இப்புத்தகத்தை என்னிடம் அளித்த(விற்பனை செய்த) மதுரை புத்தகத்தூதன் பா.சடகோபன் (9443362300) அவர்களுக்கு என் நன்றிகள். ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்தால் அதில் வரும் திருப்தி ......................படித்துப் பார்த்தால்தான் தெரியும்.

வா.நேரு - 28.12.11

Sunday 25 December 2011

நேற்று (25.12.2011 ) படித்த புத்தகம்

நூலின் தலைப்பு : புதிய நோக்கில் புரட்சிக் கவிஞர்
நூலின் ஆசிரியர் : இல.சொ.சத்தியமூர்த்தி, எம்.ஏ., பி.எல்.
பதிப்பகம் : வயல்வெளிப் பதிப்பகம்,இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்),பெரம்பலூர் மாவட்டம்- 612901
விலை : ரூபாய் ஐம்பது
முதல் பதிப்பு : திசம்பர் 2003

தமிழில் பலதுறை சார்ந்த அறிஞர்கள் எழுதுகிறார்கள். இந்த நூலின் ஆசிரியர் ஒரு நீதிபதி. கல்லூரிக் காலத்தில் புரட்சிக் கவிஞர் பற்றிக் கலந்து கொண்ட கட்டுரைப்போட்டியில் வெற்றி பெறுகின்றார். பின் பல் வருடங்கள் கழித்து அந்தக் கட்டுரையின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். புரட்சிக் கவிஞர் பற்றி பல நுட்பமான செய்திகளை உள்ளடக்கிய புத்தகமாக இந்தப் புத்த்கம் உள்ளது.

மொத்தம் 128 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் 10 தலைப்புகளில் கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. புதிய நோக்கில் புரட்சிக் கவிஞரை பார்த்திருக்கின்றார் என சொல்லலாம். "கல்வி நல்காக் கசடர்களுக்குத் தூக்கு மரம் உண்டாம் " எனும் கவிதையைக் குறிப்பிட்டு , கற்றவன் ஒவ்வொருவனும் கல்லாதவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்னும் கருத்தில் பாடிய பாடல் என்பதனை எடுத்துக் காட்டுகளோடு கூறியுள்ளார். மிகவும் அக்க்றையோடு பல்வேறு தகவல்களைத் திரட்டி ஒன்று சேர்த்து , தன் எழுத்துக் கை வண்ணம் சேர்த்துக் கொடுத்துள்ளார். பாராட்டப் படவேண்டியவர். மதுரை மத்திய நூலகத்தில் இதன் எண்: 156244.

வா.நேரு ,26.12.2011

பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் நூல் அறிமுக விழா

பகுத்தறிவாளர் கழக மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு எழுதிய பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் நூல் அறிமுக விழா
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முனைவர் வா.நேரு எழுதிய பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் புத்தக வெளியீடு

பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் சோம.இளங்கோவன் பங்கேற்றார்

மதுரை, டிச. 15- 11.12.2011 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் மதுரை நியூ காலேஜ் ஹவுஸ், திருவள்ளுவர் அரங்கத்தில் பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் நூல் அறிமுக விழா நடைபெற்றது.

விழாவிற்கு வந்தவர்களை இனிப் போடு வரவேற்று வா.நேரு, நே.சொர் ணம் இணையரின் குழந்தைகள் சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவு மதி ஆகியோர் பகுத்தறிவுப் புத்தகங் களை வழங்கினர். விழாவிற்கு வந்த அனைவரையும் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் க.அழகர் வரவேற்றார்.

வீ.குமரேசன்

பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தலைமை யேற்று உரையாற்றினார். அவர் தனது உரையில் பகுத்தறிவாளர் கழகத்தை தந்தை பெரியார் அவர்கள் தொடங் கியதன் நோக்கம், தொடக்க காலம் முதல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புரவலராக இருந்து வழி நடத்தும் இயக்கமாகிய பகுத்தறி வாளர் கழகத்தின் சிறப்புகள், ஆசிரி யர் அவர்களின் அணுகுமுறை போன்ற பல்வேறு செய்திகளைக் கூறி, கவிதை நூலைப் பாராட்டி பேசினார். தொடர்ந்து சிகாகோ, பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் கவிதை நூலினை வெளியிட முதல் பிரதியினை திராவிடர் கழகத் தின் மாநில சட்டத்துறைத் தலைவர் கி.மகேந்திரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராசா, மண்டலத்தலைவர் வே.செல்வம், மண்டல செயலாளர் மீ.அழகர்சாமி, மதுரை புற நகர் மாவட்டத் தலைவர் மா.பவுண்ராசா நூலினைப் பெற்றுக் கொண்டனர்.

பேராசிரியர் நம்.சீனிவாசன்

கவிதை நூலின் ஆய்வுரையினை மதுரை மன்னர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பேரா.நம். சீனிவாசன் அளித்தார். அவர் தனது ஆய்வுரையில் தமிழ்க் கவிதையின் வகைகள், புதுக் கவிதையின் சிறப்புக்கள், கவிஞர் வைர முத்துவின் கவிதைகள் போன்றவற் றைக் கூறி பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் என்ற கவிதையினை முழுமை யாக வாசித்து சிறப்புக்களை எடுத்துக் கூறி கவிதை நூலின் நிறை குறைகளை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து தி.க. நெல்லை மண்ட லத் தலைவர் பொறியாளர் சி.மனோ கரன், ப.க.பொதுச் செயலாளர் வடசேரி வ. இளங்கோவன், தொலை தொடர்புத் துறை தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ந.முருகன், எழுத்தாளர் க.சி. அகமுடை நம்பி, மதுரை மாநகர் மாவட்ட ப.க. தலைவர் சே.முனிய சாமி, செயலாளர் சுப.முருகானந்தம், பழக்கடை வணிகர் சங்க செயலாளர் அ.முருகானந்தம், திருப்பூர் ஜோ. இராஜேந்திரன், ஐ.ஓ.சி. உதவி மேலா ளர் இரா.பழனிவேல்ராஜன், வழக்கறி ஞர் நா.கணேசன், தேனி மாவட்ட ப.க. தலைவர் ஸ்டார் நாகராசன், திண்டுக் கல் மாவட்ட ப.க. செயலாளர் மு.நாக ராசன், அருப்புக்கோட்டை தி.ஆதவன், அய்யா ஆனந்தம், வா.நேருவின் தாயார் சு.முத்துக்கிருட்டிணம்மாள், தங்கை ஆசிரியை வா.சாரதா, அண் ணண்கள் ஆசிரியர் வா.ஜெயராஜ், வா,தமிழ் செல்வன், மாமா சு.இராதா கிருட்டிணன் , வா.நேருவின் துணைவி யார் நே.சொர்ணம் மற்றும் பலர் கவிதை நூலினைப் பெற்றுக்கொண் டனர்.

நூலினைப் பெற்றுக்கொண்டு கருத்துரையினை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி, மதுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் முனைவர் க.பசும்பொன் ஆகியோர் அளித்தனர். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறைத் தலைவர் கி.மகேந்திரன் கவிதை நூலினை விமர்சனம் செய்து உரையாற்றினார்.

டாக்டர் சோம.இளங்கோவன்

நிறைவாக பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் நிறைவுரை யாற்றினார். அவர் தனது உரையில் புரட்சிக் கவிஞரின் பாடல்களை எடுத்துக்கூறி நேருவின் கவிதைகளை ஒப்பிட்டுக் கூறினார். தந்தை பெரியா ரின் தனித்துவத்தை எடுத்துக்கூறினார். 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் ' கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை எடுத்துக்கூறி விமர்சனம் செய்தார்.

தமிழர் தலைவர் அவர் களின் உழைப்பினைக் கூறி அவருக்கு முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். இணையத்தில் வரும் அவதூறு களுக்கு பதிலடி கொடுக்கும் பழனி தமிழ் ஓவியா, காரைக்குடி பிராட்லா போன்றவர்களைப் பாராட்டினார். இணையத்தை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும், அது ஒன்றும் கடினமல்ல என்று எடுத்துரைத்தார். தமிழ் ஓவியாவிற்கு நினைவுப் பரிசு அளித்துப் பாராட்டினார்.

முடிவில் வா.நேரு ஏற்புரையாற் றினார். தனது ஆசிரியர் வீரி செட்டி அவர்கள் இவ்விழாவிற்கு வந்து சிறப்பித்ததற்காகவும் மற்றும் தனது தாயார், உறவினர்கள், நண்பர்கள், இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார். சிக்காகோவில் இருந்து இங்கு வந்த நிலையில், இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்த, இந்த கவிதை நூலினை வெளியிட்ட பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களுக்கு என்றைக் கும் நன்றி உடையவனாக இருப்பேன் என்று உரைத்தார்.

நூலினைப் படித்த சிலர் கருத்துக் களை சொல்லும்விதம் மிகக் கடுமை யாக இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல, பண்படுத்துவதே எங் கள் நோக்கம், அதுவே எங்களுக்கு தந்தை பெரியாரும் , தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் கற்றுக் கொடுத்த பாடம் எனக்குறிப்பிட்டார்.

முடிவில் மானமிகு பதிப்பகத்தின் உரிமையாளரும், ப.க. மாவட்ட துணை செயலாளருமான பா.சடகோ பன் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவரின் அறிவுரைப்படி சால்வைக்குப் பதிலாக விழா நினை வுப் பரிசுகள் அளிக்கப்பட்டன.

மாநில ப.க.

ப.க. தோழர்கள் விடுதலை சந்தா ரூ.3,74,430 2013-இல் உலக பகுத்தறிவு, மனிதநேய மாநாடு

மாநில ப.க. கலந்துரையாடலில் தமிழர் தலைவர் அறிவிப்பு

சென்னை, டிச. 19-சென்னை பெரியார் திடலில் மாநில பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.3,74,430 விடுதலைக்கான சந்தா வழங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலக பகுத்தறிவு மனிதநேய மாநாடு நடைபெறும் என்று கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவித்தார்.

விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் பொன் விழா ஆண்டில் சென்னையில் பகுத்தறி வாளர் கழக மாநில, மாவட்டப் பொறுப்பா ளர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாவாக ரூ3,74,430 அளிக்கப்பட்டது.

ஊமை.ஜெயராமன் உள்ளிட்ட தோழர்கள் கழகத் தலைவரிடம் சந்தாவை வழங்கினர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் 18.12.2011 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு சென்னை-பெரியார் திடல் அன்னை மணியம்மை மன்றத்தில் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர் கள் வழிகாட்டு நெறி யுரையாற்றினார்.

பொறுப்பாளர்கள் தாங்கள் சேகரித்த விடுதலை சந்தாக்களின் தொகையாக ரூ3,74,430 அய் தமிழர் தலைவ ரிடம் அளித்தனர்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங் கோவன் கலந்துகொண் டார்.

பொதுச் செயலாளர் வீ. குமரேசன்

கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த பொறுப்பாளர் களை, தோழர்களை வரவேற்று பகுத்தறிவா ளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரே சன் உரையாற்றினார்.

விடுதலை சந்தா சேகரிப்புப் பணியில், கடந்த கலந்துரையாடல் கூட்டங்களில் வழங்கப் பட்ட தொகை, களப்பணி ஆற்றிவரும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் மாவட்ட அளவிலான பங்கேற்பு, பங்களிப்பு பற்றி எடுத்துக்கூறினார்.

இயக்கத்தின் பிற அணியினருடன் இணைந்து பணியாற்றி, தங்களது விடுதலை சந்தா சேகரிப்பு பங்க ளிப்பினை தனித்துவ மாக காட்டிடும் பகுத் தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் பணிபற்றி ஊக்கப்படுத் திப் பேசினார். விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் பொன்விழா ஆண்டு நிறைவு பெற இருக்கின்ற தருணத்தில் விடுபட்ட விடுதலை சந்தாக்களை சேகரித்து இன்னும் முனைப்பாகப் பணி ஆற்றிட வேண்டு கோள் விடுத்தார்.

ப.க. தலைவர் வா. நேரு

பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வா.நேருவுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வா.நேரு தலைமை உரையாற்றியதாவது:
பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக 50 ஆண்டுகள் விடுதலை நாளிதழின் ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக் கும் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்து களை, பாராட்டுகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம்.

தந்தை பெரியாரின் இயலே, மனிதநேய நெறி, உலகுக்கு புதுப் பாதை காட்டும் நெறி-அந்த நெறியை உலக மெங்கும் பரப்பிட அய்யா ஆசிரியர் அவர் களின் பணிக்கு உறு துணையாக இருப் போம். பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பிற மொழிகளில் நமது இயக்க நூல்கள் வெளி யீடு, இணையதள பயிற்சி முகாம் போன்ற வற்றை முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

தமிழர் தலைவர் நெறியுரை

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி நெறியுரையாற்றினார்.
விடுதலை ஏட் டிற்கு சந்தா சேர்த்திடும் பணியில் முனைப்பாக ஈடுபட்டுள்ள பகுத்தறி வாளர் கழகத்தின் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பகுத்தறிவாளர் கழகத் தின் பணித்தளம் பரந்து பட்டது.

பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பா ளர்கள் மற்றும் தோழர் கள் அரசுப்பணி, அலு வலகப் பணியில் ஈடுபட் டுள்ள தன்மையால் களம் இறங்கி போராட்ட தளத்தில் பங்கேற்க இய லாது. ஆனால் பகுத்த றிவுக் கருத்துகளை மூட நம்பிக்கை ஒழிப்பினை, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பது பற்றிய பிரச் சாரப் பணியில் முழு மையாக ஈடுபடலாம்.

பெரியார் உலக மயமாக்கல் பணியில் பகுத்தறிவாளர் கழகம் பெரும்பங்கு வகித்திட வேண்டும். வெளி மாநி லங்களில் அயல்நாடு களில் பெரியாரின் மனிதநேயக் கருத்துகள் சென்றடையும் வகையில் பல்வேறு நவீன தொழில் நுட்ப தளங்களான இணையதளம், மின் னஞ்சல் மூலம் பிரச்சா ரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2013ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலக பகுத்தறிவு, மனிதநேய மாநாடுபெரியார் உலகமய மாக்கல் பணியில் ஒரு கட்டமாக 2013ஆம்ஆண்டு தொடக்கத்தில் இயக்கத்தின் சார்பாக உலக பகுத்தறிவு, மனிதநேய மாநாடு நடத்திட வேண்டும்.

அம்மாநாட்டினை நடத்துவதில் பகுத்தறிவாளர் கழகத்தின் பணி பெரும்பங்கு வகித்திட வேண்டும். கால அவகாசம் கணிசமாகவே உள்ளது. பகுத்தறிவுக் கருத்துகள் பரப்பும் பணியினை பல்வேறு தளங்களில் பிரித்து காலக்கட்டத்தின் முன்னுரிமை அறிந்து களப்பணி ஆற்றிட தோழர்கள் முன் வரவேண்டும். விடுதலை சந்தா சேர்க்கும் பணியினை நிலைத்து நீடிக்கும் கொள்கை பரப்பும் அணுகுமுறையாகக் கருதி அளிக்கப்பட்ட இலக்கினை பொறுப்பாளர்கள் விரைந்து முடித்திடல் வேண்டும் என்று கூறி விளக்கவுரையாற்றினார்.

பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் கலந்துரையாடல் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் பேசியதாவது:

கணினி தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில் கருத்துப் பரப்பும் பணியிலும் புதுமையான தொழில்நுட்ப அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இணையதளம் மூலம் உலகின் மூலை முடுக்குகளில் உள்ளவர் களிடமெல்லாம் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இருப்பதை முழுமையாகப் பயன்படுத்தும் வண்ணம் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தங்களது அணுகுமுறை ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த நூற்றாண்டும், இன்னும்வருகின்ற காலமும் பெரியார் கருத்து வெற்றியடையும் காலம் என்பது உறுதி. தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துகளுக்கெல்லாம் முதன்மைச் சொத்து தமிழர் தலைவர் ஆசிரியர் ஆவார்கள். அவர்களது வழிகாட்டுதலில் வரக் கூடிய காலங்களில் பெரியார் உலகமயமாக்கல் மேலும் வலுப்படும். வலுப்படுத்தும் கரங்களாக கழகத் தோழர்கள் செயல்பட வேண்டும் என்றார்.

கோ.சாமிதுரை

திராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை தமது உரையில் கூறியதாவது:
பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் இயக்கத்தின் மற்ற அணியினரைவிட, பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பினைப் பெற்றவர்கள். பழகுநிலைச் சூழலுக்கு ஏற்றவாறு பகுத்தறிவுக் கருத்து பிரச் சாரப் பணியில் ஈடுபட முன்வரவேண்டும். விடுதலை சந்தா சேகரிப்புப் பணியில் பகுத்தறி வாளர் கழகத் தோழர்கள் தனி முத்திரை பதித்திட வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பினை வளப்படுத்தி சந்தா சேகரிப்புப் பணியினை விரைந்து முடித்திட வேண்டுகிறேன்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தமது உரையில் கூறியதாவது:

விடுதலை சந்தா சேர்த்திடும் பணியில் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பல்வேறு மாவட்டங்களில் இயக்கத்தின் இதர அணித் தோழர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின் றனர். தனிப்பட்ட முயற்சியில், உரியவர்களைச் சந்தித்து சந்தா தொகையினை மட்டுமல்ல. விடுதலை வளர்ச்சிக்கு நிதி திரட்டும் ஆற்றல் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு உண்டு. அந்த ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி விடுதலை பரப்பும் பணியில் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட பங்களிப்பினை விரைந்து, குறித்த காலத்தில் முடித்திட பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் முயல வேண்டும்.

முயற்சி திருவினை யாக்கும் என்பது உங்களது செயல்பாடுகளில் பிரதிபலித்திட வேண்டும். மேலும் கலந்துரை யாடல் கூட்டத்தில் பகுத்தறி வாளர் கழகத்தில் மாநில துணைத் தலைவர் பொறுப்பினை புதிதாக ஏற்றுள்ள கோ.ஒளிவண்ணன் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் டாக்டர் ஆர்.எஸ். இரத்தினசபாபதி ஆகியோர் உரையாற்றினர்.

Tuesday 25 October 2011

உதைக்கும் கழுதையின்

பூமாதேவி
ஒரு கடவுள்
பன்றி
ஒரு கடவுள்
பன்றியும்
பூமாதேவியும்
போகம் செய்ததால்
நரகாசுரன் பிறந்தானாம்

கதை சொன்னேன்
இந்தக் கதை
எல்லாம் யார்
நம்புகிறார் என்றான்

எந்தக் கதையை
வைத்து சேது
சமுத்தரத் திட்டம்
தடுக்கப்பட்டது
நிறுத்தப்பட்டது என்றேன்

ஆமாம்ல என்றான்
தீபாவளி என்றால்
தீப ஒளித் திருநாள்
அல்லவோ என்றான்

இல்லை இல்லை
இது ஆரியப் பகட்டு
உடன்பிறப்பே உனக்கே
இது புரியவில்லையே என்றேன்

உதைக்கும் கழுதையின்
காலுக்கு உதை வாங்கியோன்
தங்கத்தால் இலாடம் கட்டுவதும்
ஆட்டை அழைத்து
ஓநாய்க்கு விருந்தளி
எனக் கூறுவதும்
கொட்டும் தேளை
எடுத்து கண்ணில்
ஒத்திக் கொளவதும்
தமிழன் தீபாவளி
கொண்டாடுவதும் ஒன்று
என்றார் அண்ணா!

அறிவாயோ !
உடன்பிறப்பே அறிவாயோ!
அண்ணாவின் படத்தோடு
கட்சி நடத்துவோர்
தீபாவளி வாழ்த்துக்
கூறுகின்றார்
அது ஆரியம்
நுழைந்ததால்
விழுந்த ஓட்டை

உனக்கோ பழைய
வரலாறை நூலை
அறியாததால்
வந்த ஓட்டை என்றேன்


தனக்கு ஏற்பட்ட
இழிவைக் கொண்டாடும்
இனமாய் தமிழனை
தர்ப்பைப்புல்காரன்
ஆக்கி வைத்தான்
தடுமாறலாமா ?
உடன்பிறப்பே தடுமாறலாமா?
தடம் மாறலாமா ?
உடன்பிறப்பே தடம் மாறலாமா?

Monday 17 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக்கவிஞரும் (4)

மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் நண்பர் சுப.முருகானந்தம் அவர்கள் புரட்சிக்கவிஞரும் சாதி ஒழிப்பும் பதிவுகளைப் படித்துவிட்டு, ஊக்கமூட்டக் கூடிய சில வார்த்தைகளையும், ஆலோசனைகளையும் கூறியுள்ளார். நன்றிகள் பல அவருக்கு. அவர் கண்ணதாசன் எழுதிய ‘சவாலே சமாளி’ பட்த்தில் வரும் பாடலைக் குறிப்பிட்டுள்ளார். இன்றைய முதல்வர் திரு.ஜெ.ஜெயல்லிதா அவர்கள்
கதாநாயகியாக நடித்த படம் , ஆணவத்தின் உச்சியில் கணவரை எதிர்த்துப் பேசித் தொடாதே எனச் சொல்லும்போது திரு சிவாஜி கணேசன் அவர்கள் பாடுவதாக அமைந்த பாடல்.
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது என்னைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது என்னைத் தொடாதே
புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமையல்லவே அதை நீயும் சொன்னது

....
தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்தா
தர்மம காத்த கை சமதர்மம் கண்டதா
ஆலயம் செய்தோம் அங்கே அனுமதியில்லை - நீ
அந்த கூட்டமே இதில் அதிசயமில்லை

என்னும் வரிகள் அப்படித்தான் அவர்கள் அன்றுமுதல் இன்றுவரை இருக்கின்றார்கள் என்பதனைக்கண்ணதாசன் சுட்டிக் காட்டும் வரிகள்..

ஆலயம் செய்தோம், அங்கே அனுமதியில்லை. சரி ...,அனுமதியில்லாத ஆலயத்தைக் கட்டுவதிலே ஏன் தமிழன் குறியாக இருக்கின்றான்,இன்றைக்கும் கூட நகரின் புற நகர்ப்பகுதிகளில் புதிய குடியிருப்புகள் எழும்புவதற்குமுன்பே கோயில்கள் கட்டப்படுகின்றதே எப்படி? கட்டிய பின்பு மணி அடிக்க பார்ப்பான் வந்து மிக எளிதாக அமர்ந்து கொள்கிறானே .. ? தன் வீட்டில் படித்து விட்டு வேலை இல்லாமல் பிள்ளைகள் இருந்தாலும் ஒரு பார்ப்பனருக்கு பூசாரி வேலை கொடுப்பதற்கு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட தமிழனே முன்னனியில் இருக்கின்றானே ஏன் ? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சட்டம் இயற்றினாலும் உயர் நீதி மன்றம் ,உச்ச நீதி மன்றம் என்று சென்று பார்ப்பனர்கள் தடுக்கின்றார்களே ! பக்தி தமிழனுக்கு ஏன் உணர்ச்சி வரவில்லை, பார்ப்பனர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்யவேண்டும் எனும் உணர்வு ஏன் வரவில்லை? வராது ! உணர்வு வராது ! கோயிலின் பெயரால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மூளையில் போடப்பட்டுள்ள நுண்ணிய விலங்குகள் சாதாரணமாக கண்களுக்குத் தெரியாது.ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்க்கும்போது பளிச்சென்று தெரியும்.

கோயில் கட்டுவது மிகப்பெரிய புண்ணியச் செயல் , நீ என்னதான் பாவம் செய்திருந்தாலும், எவ்வளவு பெரிய கொடுமை செய்திருந்தாலும் கோயில் கட்டினால், குடமுழுக்குச் செய்தால், கோவில் பணிகளுக்கு கொட்டிக் கொடுத்தால் உனக்குச் சொர்க்கம் உண்டு என்று தமிழர்களின் மூளையிலே பார்ப்பனர்கள் ஏற்றி வைத்துள்ளார்கள். இந்த விலங்கை உடைக்க பகுத்தறிவுச் சம்மட்டி தேவை. தமிழர்கள் கோயில்களில் அர்ச்சகராக வருவதை நீங்கள்(பார்ப்பனர்கள் ) திட்டமிட்டு தடுக்கின்றீர்கள், எனவே பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக இருக்கும் கோயில்களுக்கு வரமாட்டோம், அந்தக் கோயில் உண்டியலுக்கு காசு போடமாட்டோம், அங்கு நடக்கும் சிறப்பு பூசை போன்றவைகளுக்கு பணம் தரமாட்டோம் என்று தமிழர்கள் கூறுகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்போது பார்ப்பனர்கள் வழிக்கு வருவார்களா? இல்லையா? ஏன் சொல்ல மறுக்கிறார்கள் ? ஏன் சொல்ல வேண்டும் என்ற உணர்ச்சி வரவில்லை ?...

பிற்படுத்தப்பட்டவரை கோவில் கருவறைக்குள் வராதே என்று சொல்கின்றான் பார்ப்பான் . தாழ்த்தப்பட்டவரை கோவிலுக்குள்ளே வராதே என்று பிற்படுத்தப்பட்டவரின் மூலமாகச் சொல்லவைக்கின்றான் பார்ப்பான். இருவரும்(தாழ்த்தப்பட்டவரும் பிற்படுத்தப்பட்டவரும்) இணைந்து கருவறைக்குள்ளிருந்தும், கோயிலுக்குள் இருந்தும் ஏன் பார்ப்பனரை வெளியேற்ற இயலவில்லை?

புரட்சிக் கவிஞர் தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பதைக் குறித்து
தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
சாமிக்குச் சத்தில்லையோ ? எனில்
வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட
மேலும் சமர்தில்லையோ .....
குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற்
கொஞ்சமும் தீட்டில்லையோ – நாட்டு
மக்களிலே சிலர் மாத்திரம் அந்த
வகையிலும் கூட்டிலையோ ?...
“தாழ்ந்தவர் “என்றொரு சாதிப் பிரிவினைச்
சாமி வகுத்த்துவோ ? எனில்
வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்த
வம்பு புகுத்தியதோ ?......

மேற்கண்ட புரட்சிக்கவிஞரின் கவிதையில்
“கருவறைக்குள் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர் வந்திடில் தன்னுயிர் போமெனில் ....”என்றும்
‘தாழ்ந்தவர்’ என்னும் இட்த்தில் தாழ்த்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர் என்னுமிரு .......என்று மாற்றிப் போட்டால் இருவருக்குமே சரியாக வரும் பாட்டுத்தானே 1 தன்னையும் கோவில் கருவறைக்குள் அனுமதிக்காதவன் பார்ப்பானே என உணர்ந்து தாழ்த்தப்பட்டோரோடு இணைந்து பிற்படுத்தப்பட்டவன் பார்ப்பனருக்கு எதிராகப் போராடுவதுதானே இயல்பாக இருக்க முடியும். இவன் ஏன் பார்ப்பனரோடு இணைந்து தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் வராதே என்று சொல்கின்றான். பார்ப்பனரின் அடியாளாய் பிற்படுத்தப்பட்டோன் மாறி ஏன் தாழ்த்தப்பட்டோருக்கு கொடுமை இழைக்கின்றான்? வன்கொடுமை செய்கின்றான் ? ...... இந்த நிலை மாற வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் உற்றார்கள், உறவினர்கள் , பார்ப்பனர்களால் பிரிக்கப்பட்டு பல்வேறு சாதிகளாக கூறு போடப்பட்ட உறவினர்கள் என்பதனை உரத்துச் சொல்லவேண்டும்.இந்த வேலையை எப்படிச் செய்வது? களப்பணிகள் மூலமாக, கருத்துப் பணிகள் மூலமாக ,கலப்புத்திருமணங்கள் வழியாகச் செய்ய்வேண்டும். ஆயிரக்கணக்கான கலப்புத்திருமணங்கள் பெற்றோர்களின் ஏற்பாட்டின்மூலமாக , சுயமரியாதைத் திருமணங்களாக நடைபெற்றன.இன்றும் நடைபெறுகின்றன. எனக்குத் தெரிந்த கழகத் தோழர் ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர், தாழ்த்தப்பட்ட கழகத் தோழ்ருக்கு தன் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தார். நான் அறிந்தவரை தங்கள் சொந்த சாதியில் ,உறவுகளில் திருமணம் செய்து தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு வாழும் தம்பதிகளை விட அருமையாக எடுத்துக்காட்டாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இது இன்னும் விரிவாகப் பரவுதல் வேண்டும். சாதி ஒழிப்பு வேண்டும் என்று சொல்பவர் எவரும் தனது சொந்த சாதியில் திருமணம் முடிக்கக்கூடாது,தனது குழந்தைகளுக்கு சொந்த சாதியில் திருமணம் ஏற்பாடு செய்யக் கூடாது. ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்றால் எல்லா சாதி அமைப்புக்களும், தாங்கள் நடத்தும் பத்திரிக்கையில் நாம் ஆண்ட ஜாதி , மீண்டும் நமது ஜாதி ஆளவேண்டும், ஓடி வா, என அழைப்பதைப் பார்க்கிறோம்.

சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறோம். ஒருவன் நம்மீது மாட்டு சாணத்தை எறிந்துவிட்டான். சட்டையில் ஒட்டி அசிங்கிமாகி விட்டால், அய்யோ என ஓடிப்போய் அசிங்கத்தை கழுவ முற்படுவதுபோல சாதி என்னும் அசிங்கத்தை நம்மீது பார்ப்பனர்கள் திட்டமிட்டு தங்கள் பிழைப்புக்காக நம்மீது எறிந்திருக்கிறார்கள் , இந்த சாதி என்னும் அசிங்கத்தை நாம் கழுவவேண்டும், நம்மை விட்டு விரட்ட வேண்டும், நமக்கு இது இழிவு என்பதனை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்த ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதற்கு புரட்சிக் கவிஞரைப் படிக்க வேண்டும், பரப்ப வேண்டும்.

Saturday 15 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக் கவிஞரும்(3)

ஆரியர்கள் எப்படி திராவிடர்களைத் தங்கள் வயப்படுத்தினர் என்பதை அர்த்தமுள்ள இந்துமதம்! எனப் பாகம் பாகமாய் எழுதிக் குவித்த , கோப்பையிலே என் குடியிருப்பு எனத் தன்வாக்குமூலம் எழுதிய கவிஞர் கண்ணதாசன் கவிதை வழியாக இன்னும் சிறப்பாகக் காணலாம். நாம் திராவிடர் என்றால் ஆரியர் யார் என்பதனை கண்ணதாசன் கூறுகின்றார் கேளுங்கள் .
“ஆடுமாடுகள் முன் நடந்திட
ஆரணங்குகள் பின் தொடர்ந்திட
காடு யாவையும் கடந்து சிற்சிலர்
கன்னித் தாயக எல்லை தொட்டனர்;”

நமது எல்லையை ஆடுமாடோடும் ஆரணங்கோடும் தொட்டவர்கள் யார்?இன்றைய சுப்பிரமணிய சுவாமி, சோ, குருமூர்த்தி அய்யர்களின் மூதாதையர்கள் , எத்தனை பேருக்குத் தெரியும் இது ...
“மஞ்சள் மேனியும் வஞ்ச நெஞ்சமும்
மான மென்னும் ஓர் எண்ணம் இன்மையும்
கொஞ்சும் வார்த்தையும் கொண்டவர் தமிழ்க்
கோட்டை வாசற் படியை மிதித்தனர்;”

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயையில் முதல் பக்கத்தில் வரும் “ பேராசைப் பெருந்தகையே, போற்றி,போற்றி “ பாடலோடு மேற்கண்ட வரிகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

“சொந்தமாக ஓர் நாடி லாதவர்
தொட்ட பூமியில் சூழ்ந்து வாழ்பவர்
எந்த நாடுமதம் சொந்த நாடென
ஏற்று மாந்தரை மாற்றி ஆள்பவர் “

ஈழத்தமிழெருக்கென ஒரு நாடு கிடைத்துவிடக்கூடாது , தமிழனின் கொடி தனி நாட்டில் பறக்கக்கூடாது என்பதற்காக எத்தனை சூழ்ச்சி செய்தனர், இன்றும் செய்கின்றனர், ஏனெனில் சொந்த நாடென்றால் என்னவென்றே அறியாதவர்கள் பார்ப்பனர்கள்.

சொத்து என்பதோ தர்ப்பை ஒன்றுதான்
தூய்மை என்பதோ துணியும் இன்மையாம்
வித்தை யாவையும் சூழ்ச்சிப் பள்ளியில்
விரும்பிக் கற்றதாம்; வேறு என் சொல!
நச்சரவுகள் மனித மேனியில்
நடமிடும் கதை இவர்கள் கதையாம்

அச்சம் மிக்கவர் கோழையர்; ஆயினும்
அடுத்து வீழ்த்திடும் திறமை மிக்கவர்!
அடியெடுத்து வைத்ததும், கண்ணெதிர்
அங்கு நின்றவோர் தமிழனைப்பார்த்து, இப்
படி அமர்ந்திடும் பண்புடை தென்னவ!
பாரில் உம்புகழ் பரவக் காண்கிறோம்!
மிடிமை இல்லதாம் உங்கள் தாயகம்!

வீரர் தேயமாம்! கேள்வி யுற்றனம்!
எனில் உமக்கொரு தெய்வம் இல்லையாம்!
என்ன மோசம், இஃதாண்டவன் ஏற்பரோ!
என்றதும் தமிழ் ஏறு கூறுவன்;
ஏன் இலை! கதிரோன் ஒரு தெய்வமாம்!
எழில் நிலாவும் யாம் போற்றிடு தெய்வமாம்
என்றுகூற அவ்வீணர்கள் யாவரும்
எழுதபதாயிரம் கடவுள்கள் கூறி, அக்
கடவுள் யாவரும் வானில் உண்டெனக்
கதைய ளந்தனர் கற்பனை பொங்கிட!

பொய்ய லால்சிறு மெய்யுமி லாமலே
புவியில் வாழும் திறம்மிகு ஆரியர்
சொன்ன யாவையும் தமிழன் ஏற்றனன்!
சூழ்ச்சி வென்றது! நாடு சாய்ந்ததே!

கடவுள் வாசலை காத்தனர் ஆரியர்!
கன்னியர் விழிக் கடலைக் காட்டினர்!
வீரம் முற்றும் ஒழிந்தது ஏட்டிலே!
தீரம் மாண்டு ஆரியர் சாத்திரத்
தீக்குழி யிடைச் சாய்ந்தனர் தென்னவர்!

இந்தக் கவிதையை இன்றைய இளைஞர்கள் கையில் கொடுத்து மனப்பாடம் செய்யச் சொல்லல் வேண்டும். அப்போதுதான் உண்மை வரலாறு அவர்களுக்குப் புரியும் . கடவுள் என்னும் கருத்தாக்கத்தால் எப்படி திராவிடன் ஆரியரின் சாத்திரத் தீக்குழியிடைச் சாய்ந்தனர் என்னும் வரலாற்றை உணர்வர்.
எப்படியெல்லாம் பொய் சொல்லித்தமிழர்களை ஆரியர்கள் ஏமாற்றினார்கள் என்பதனைப் பட்டியலிடும் புரட்சிக்கவிஞர் அதனை வெறுத்த, அந்தக் கடவுள் ,வேதம் என்னும் பொய்மைகளை எதிர்த்தவர்களை பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் என்பதனைப் பட்டியலிடுகின்றார்.
தம் சிறு வேதம் ஒப்பாத்
தமிழரை ஆரிய்ர்கள்
நஞ்சென்று கொண்டாரடி...
வெஞ்சிறு வேதம் ஒப்பா
வீரரை ஆரியர்கள்
வஞ்சித்துக் கொன்றாரடி .....

ஆரியர்தமை ஒப்பா
ஆதித் திராவிடரைச்
சேரியில் வைத்தாரடி ...
சேரிப் பறையர் என்றும்
தீண்டாதார் என்று சொல்லும்
வீரர் நம் உற்றாரடி “
தீண்டப்படாதவர்கள் என்று சொல்லப்படும் வீரர்கள் நம் உறவினர்கள் என்பதனை தமிழர்கள் அனைவருக்கும் சமத்துவப்பாட்டில் புரட்சிக் கவிஞர் சொல்வதைக் காண்கிறோம்......... நடைமுறையில் அப்படி இல்லையே ஏன்? எங்கே கோளாறு ?
வா.நேரு – 15-10-2011

Friday 14 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக் கவிஞரும் (2)

இந்தியாவில், தமிழகத்தில் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசுகிற எவரும் பார்ப்பன எதிர்ப்பையும் சேர்த்துப் பேசவேண்டும். பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கார் அதனைச் செய்தார். தந்தை பெரியார் அதனைச் செய்தார்,அவரது இயக்கமான திராவிடர் கழகம் இன்றும் செய்கின்றது-ஏனெனில் பார்ப்பனர் பிழைப்பும் சாதி அமைப்பும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை. அவ்வளவு எளிதில் பிரிக்கமுடியாதவை. சாதி எனும் அமைப்பு தோன்றுவதற்கும் அது ஆண்டாண்டு காலமாக இம்மண்ணில் முள்ளாக வளர்ந்து விசச் செடியாய் மண்டிப்போய்க் கிடப்பதற்கும் பார்ப்பனர்களே, அவர்கள் வளர்த்தெடுத்த பார்ப்பனீயமே காரணம்.

இன்றைய நிலையில் இதனை நாம் சொல்கின்றபோது சாதி அமைப்பை பாதுகாக்கின்றவர்களாக பிற்படுத்தப்பட்டவர்கள்தானே இருக்கின்றார்கள், ஆதிக்க வெறியர்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதியின் பெயரால் வன்கொடுமை புரிகின்றவர்களாக பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்கள்தானே இருக்கின்றார்கள் என்னும் உண்மை சுட்டப்படுகின்றது. உண்மைதான், இதனை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.வெட்கப்படவேண்டும், வேதனைப்படவேண்டும். அப்போதுதான் இதற்கு தீர்வு என்ன என்பது பற்றி யோசிக்கமுடியும். டாகடர் அம்பேத்கர் அவர்கள் சுட்டிக் காட்டிய ஏணிப்படிகள் போன்ற இந்த சாதி அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்,. சின்னக்குழந்தைகள் சில நேரம் அமர்ந்திருக்கும், பக்கத்தில் வரும் பெரியவன் ஒருவன் அக்குழந்தையின் கன்னத்தில் குழந்தையின் கைகளை எடுத்தே அடிக்க வைப்பான், பார்ப்போருக்கு குழந்தை தன் கன்னத்தில் தன் கைகளாலேயே அடித்துக் கொள்வதுபோலத் தோன்றும்.ஊன்றிக் கவனித்தால்தான் இன்னொருவனின் கைங்கரியம் தெரியும் அதனைப் போல சாதி அமைப்பை ஊன்றிக் கவனித்தால்தான் பார்ப்பானர்களின் சூழ்ச்சியும் தந்திரமும் புரியும். சாதாரண மக்களுக்கு இதனைப் புரிய வைக்கவேண்டும், எளிதில் புரிய வைக்க புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகள் கையில் வேண்டும்

ஆரியர்கள் வருவதற்கு முன்னர் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தில் பிறப்பின் பெயரால் பேதமில்லை, பெருமிதத்துடன் திராவிடர்களாய் வாழ்ந்தோம் என்பதனை
“ஆரியர்கள் இங்கே அடிவைக்கும் முன்னமே
வேரிட்டு வாழ்ந்த வெற்றித் திராவிடரின்
பேரர்க்குப் பேரனே ! பிள்ளையாய் நீ கண்ணுறங்கு “ என்று பாடுகின்றார் புரட்சிக் கவிஞர் ஆண் குழந்தை தாலாட்டில் . வெற்றித் திராவிடரின் பேரனுக்குப் பேரன் எப்படி தாழ்த்தப்பட்டவனானான், பிற்படுத்தப்பட்டவனான், எப்படி நான் மேல் என்றும் நீ கீழ் என்றும் சண்டையிட ஆரம்பித்தான் சொல்கின்றார் புரட்சிக் கவிஞர்.

“ஆண்டார் தமிழர் இந்நா
ட்தன்பின் ஆரியர் என்போர்
ஈண்டுக் குடியேறினார் –சகியே
ஈண்டுக் குடியேறினார் “ என்று தொடங்கி சமத்துவப் பாட்டில் பார்ப்பனர்கள் எப்படி வஞ்சகமாக தமிழர்களை ஏமாற்றினார்கள் என்பதனை பட்டியலிடுகின்றார் புரட்சிக் கவிஞர்

“ வெள்ளை யுடம்பு காட்டி
வெறும் வாக்கு நயம் காட்டிக்
கள்ளங்கள் செய்தாரடி ......”

“மேலே மூலோகம் என்றார்
கீழே மூலோகம் என்றார்
நூலெல்லாம் பொய் கூறினார்...”

“சுவர்க்கத்தில் தேவர் என்போர்
சுகமாய் இருப்பதுண்டாம்
அவர்க்குத் தாம் சொந்தம் என்றார்...”

அறிவியல் எவ்வளவோ வளர்ந்து விட்டது. மனிதன் சந்திரனுக்குப் போய் வந்து விட்டான், செவ்வாய்க்குப் போகப் போகின்றான் அண்டங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஆழமாய்ப் போய்க்கொண்டேயிருக்கிறது ஆனால் எவரும் சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்த்தாகத் தெரியவில்லை,கண்டு பிடித்த்தாகத் தெரியவில்லை. பார்ப்பனர்கள் , சொர்க்கம் என்று ஒன்று இருக்கிறது, அதில் தேவாதி தேவர்கள் என்பவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் யார் என்றால் இந்த உலகில் வாழும் பார்ப்பனர்களுக்கு மாமன் , மச்சி,அண்ணன் ,தம்பி என்று கதை கட்டிய கதையை புரட்சிக் கவிஞர் மேற்கண்ட கவிதையிலே எடுத்துரைக்கின்றார்.....
வா.நேரு -14-10-11

Wednesday 12 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக் கவிஞரும்

நமது சமூகம் சாதிகளால் ஆன சமூகம். மனிதர்களை சாதியால் மட்டுமே பல நேரங்களில் அடையாளப்படுத்தும் சமூகம். செத்த பின்பும் கூட இன்றும் தனித்தனியாய் சுடுகாடும் இடுகாடும் வைத்து மனிதர்களைப் பிரித்து எரிக்கும்,புதைக்கும் சமூகம். குறிப்பிட்ட மக்களை மனிதர்களாய் மதிக்காது மாடுகளைப் போல மதித்து மனநிலையில் இன்னும் விலங்குகளாய் இருக்கும் கேடு கெட்ட சமூகம். புராதனப் பெருமையுனும் புணுகு பூசி ,சாதியால் அழுகிக்கிடக்கும் சமூகத்தை மணக்க வைக்க முயற்சி செய்யும் சமூகம். இப்போது இருக்கும் நிலையைப் போல நூறு மடங்கு சாதி இறுக்கமாய் இருந்த நேரத்தில்தான் பொது வாழ்வில் தந்தை பெரியார் நுழைந்தார். எனக்குச் சரியெனப்பட்டதைச் சொல்வேன், எனக்குச் சரியெனப்பட்டதை- இந்த சமூகம் மேன்மையுறச் செய்வேன். அதற்காக நீ கொடுக்கும் சிறைத்தண்டனையை ,அவதூறுகளை,அவமானங்களைச் சகித்துக்கொள்வேன். சாதி ஒழிப்பே எனது வாழ்வின் இலட்சியம் எனக்கொண்டு சுழன்று சுழன்று பணியாற்றினார். தனது பணியில் பெரும் வெற்றியும் கண்டார்.

தந்தை பெரியாரின் சாதி ஒழிப்புக் களத்திலே தோளோடு தோள் நின்றவர்கள் பலபேர். தங்களது வாழ்க்கையை, சொத்தை, சுகத்தை அனைத்தையும் துறந்துவிட்டு தலைவா, நீ ஆணையிடு,சாதியை ஒழிக்க நீ ஆணையிட்டு களம் அமைத்தால் சாதாரண சிறை என்ன, கடும் சிறையையே சந்திக்கத் தயார் எனத் தந்தை பெரியாரின் பின்னால் நின்று, சிறையேகி செத்து மடிந்த சுயமரியாதைச் சுடரொளிகளின் நாடு இந்தத் தமிழ்நாடு.பதவியா, பணமா, புகழா எதுவும் வேண்டாம் எங்களுக்கு, நம்மைப் பிடித்து ஆட்டும் இந்தச் சாதி செத்துத் தொலையட்டும் என்பதற்காக தங்களைத் தாங்களே கருக்கிக் கொண்ட கருப்பு மெழுகுவர்த்திகளின் நாடு இந்தத் தமிழ்நாடு.1957-ல் சாதி ஒழிப்புக்காக இந்திய அரசியல் சட்ட்த்த்தையே எரித்து சாரை சாரையாய் சிறையேகிய சாதி ஒழிப்புத் தீரர்களின் நாடு இது.

தந்தை பெரியாரின் பெரும்படையில் இணைந்து சாதி ஒழிப்பும் போரில் பணியாற்றிய, பணியாற்றும் சுயமரியாதை இயக்கத் தோழர்கள், தோழியர்கள் மேடைப் பிரச்சாரம் என்றாலும், திண்ணைப்பிரச்சாரம் என்றாலும் பயன்படுத்தும் கவிதை வரிகள் சில உண்டு. ரசிய மண்ணைப் பக்குவப்படுத்துவதற்கு தோழர் லெனினுக்கு கிடைத்த மார்க்சிம் கார்க்கி போல தந்தை பெரியாருக்கு கிடைத்த இலக்கியவாதி அவர். போர்க்களத்திலே எதிரிகள் சுற்றி வளைக்கும்போது,போராடும் வீரரின் கையிலே இருக்கும் கத்தி போல, கேடயம் போல ஆண்டாண்டு காலமாய் இந்தச் சமூகத்தை சாதியெனும் சங்கிலியால் கட்டிப்போட்ட சதிகாரர்கள் சுற்றி இருக்கும் நிலையிலே, அவர்கள்தான் நம்மைக் காப்பவர்கள் என்று தமிழர்கள் எண்ணி ஏமாந்து நிற்கும் நிலையிலே அவர்களின் சிந்தையிலே சுருக்கென்று தைக்கும் அளவுக்கு சொல்வதற்கு சில சாதி ஒழிப்புக் கவிதைகள் தமிழில் உண்டு – அந்தக் கவிதை வரிகளுக்கு சொந்தக்காரர் புரட்சிக் கவிஞர்.

பாரதிதாசன் என்று தன்னை அழைத்துக்கொண்டாலும் தமிழன் எவனுக்கும் எந்த நாட்டுக்கும் தாசனாக இருக்கக்கூடாது என்பதற்காகப் பாடிய தமிழ்ப்புலவர் புரட்சிக்கவிஞர். சாதியால் வெந்து, நொந்து புலம்பிக்கொண்டிருந்த தமிழன் கைகளிலே சாதி ஒழிப்பு அணுகுண்டுக் கவிதைகளை கொடுத்த தன்மானப்புலவன். “மனிதரில் நீயுமோர் மனிதன், மீசை முறுக்கு,எழு,விழி, கொலை வாளினை எட்டா, மிகு கொடியோர் செயல் அறவே” எனத் தீரம் பாடிய செந்தமிழ்க்கவிஞன் .தமிழ்க் கவிதைகளைப் பொறுத்தவரை தனக்குப் பின்னால் தமிழை ஆள பரம்பரைக் கவிஞர்களை தந்து சென்ற பாவேந்தன். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிஞர்களில் வேறு எவரும் எழுதாத அளவுக்கு 41000 வரிகளை எழுதிக் குவித்த சுயமரியாதைக் கவிஞன். தனது கவிதை வரிகளைப் படிப்பதாலேயே படிப்பவனுக்கு உணர்ச்சியும் மனதிலே அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் எனும் கிளர்ச்சியும் தந்த கவிஞன், தமிழுக்கு கிடைத்த பெரும்கொடையாம் புரட்சிக் கவிஞர் சுயமரியாதை இயக்கத்தவர்களைத் தவிர மற்றவர்களால் புகழப்பட்டாரா? ஏற்றுக் கொள்ளப்பட்டாரா? இல்லை, இல்லை, மறைக்கப்பட்டார், மிகச் சாதுர்யமாக ஒதுக்கப்பட்டார், மிகத் தந்திரமாக முற்போக்கு முகமூடி அணிந்தவர்களால் கூட விலக்கி வைக்கப்பட்டார். ஏன்? ஏன்?....
வா.நேரு 13-10-11

Tuesday 11 October 2011

வணக்கம் டீச்சர் நூல் அறிமுகம்

வணக்கம் டீச்சர்
மதுரை
வானொலி நிலையம்

ஒலிபரப்பிய நாள்:24.09.11

இன்று நாம் காண இருக்கின்ற புத்தகம் ‘வணக்கம் டீச்சர் ‘ என்னும் புத்தகம் ஆகும். இதன் ஆசிரியர் தங்கவேலு மாரிமுத்து ஆவார். கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் செப்டமபர் 2010–ல் வெளிவந்தது.மொத்தம் 144 பக்கங்கள் உள்ள புத்தகத்தின் விலை ரூ55 ஆகும்.

இந்த வணக்கம் டீச்சர் என்னும் புத்தகம் 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. கல்வி அதன் நோக்கங்கள் என்னும் முதல் தலைப்பில் எதற்காக கற்க வேண்டும்,ஏன் கற்க வேண்டும் என்னும் கேள்வியைக் கேட்டு கல்வி என்பது எழுதப் படிக்கக் கற்றுத்தர,வேலைக்கோ தொழில் தொடங்கவோ வேண்டிய தகுதிகளைப் பெற,சிந்தனைத்திறனை சீர்படுத்த, வாழ்க்கைக்கான வலிமையான அஸ்திவாரத்தை அமைத்து தர,வருங்கால சவால்களை சந்திக்க, பிறந்த நாட்டை சிறந்த நாடாக்கும் குடிமக்களை உருவாக்க எனப் பட்டியல் இடுகின்றார் இதன் ஆசிரியர் தங்கவேலு மாரிமுத்து. கல்வியின் நோக்கங்களை நிறைவேற்றக் கூடிய பெரும் பொறுப்பு ஆசிரியர்களிடம் இருப்பதால் மீண்டும் உங்களுக்கு வணக்கம் டீச்சர் எனக் கூறுகிறார்.
ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் உண்டு எந்த முகத்தை எவரிடம் எப்போது காட்டுகிறோம் என்பதுதான் வெற்றியின் அடிப்படை என்பர்.இந்த நூலின் ஆசிரியர் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய சில முகங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.ஆசிரியர் என்பவர் பாடம் சொல்லித் தருகிறவர்,இரண்டாவது பெற்றோர்,முதல் நண்பன்,குரு,மாணவன் என்னும் கல்லில் வேண்டாத பழக்கங்களை நீக்கும் சிற்பி,பாதையைக்காட்டும் வழிகாட்டி,அச்சங்களைப் போக்கும் ஆலோசகர், தனது நடத்தையால் மாணவனுக்கு முன் உதாரணமாகத் திகழும் ஆதர்சன மனிதர்(ROLE MODEL) என பல முகங்கள் ஆசிரியர்களுக்கு வேண்டும் எனக் கூறுகின்றார். இன்றைக்கு மாணவர்களின் ரோல் மாடல்களாக சினிமா நடிகர்களும் கிரிக்கெட் வீரர்களுமே இருக்கிறார்கள் என வேதனைப் படுகின்றார்.

மாணவர்கள் விருப்பத்தோடு சில ஆசிரியர் வகுப்பிலே அமர்கின்றார்கள், சில ஆசிரியர்கள் வகுப்பினில் வெறுப்போடு அமர்ந்திருக்கிறார்கள்.மாணவர்கள் விருப்பத்தோடு அமரவேண்டுமானால் ஆசிரியர்களிடம் இருக்க வேண்டியது என சிலபண்புகளை பட்டியலிடுகிறார் இந்நூலின் ஆசிரியர்,ஆசிரியர்களே உங்கள் பணி குறித்து பெருமிதம் கொள்ளுங்கள் என்கின்றார்.முன்னால் குடியரசுத்தலைவர் திரு.அப்துல்கலாம் திண்டுக்கல் வந்து தனது ஆசிரியர் சின்னத்துரையை சந்தித்து மரியாதை செலுத்தியதை குறிப்பிடும் நூலாசிரியர் பெருமிதம் கொள்ளுங்கள் ஆசிரியர்களே பெருமிதம் கொள்ளுங்கள். நேர்த்தியான உடை, நிமிர்ந்த நன்னடை, காந்தமும் கவர்ச்சியும் கொண்ட பார்வை,இனிமையான,அன்பான,தெளிவான பேச்சு போன்றவை ஆசிரியர்களுக்கு தேவை என்கின்றார்.பிறருக்கு எரிச்சல் ஊட்டும் படியான மூக்கை நிமிண்டுதல் தாடையைத் தடவுதல், தலையைச் சொரிதல் போன்ற பழக்கங்களை கைவிடல் வேண்டும் என்கின்றார்.ஆசிரியர்களுக்குத் தேவைப்படுகிற மனோபாவங்களாக உயர்ந்த சுயமதிப்பு, தன்னம்பிக்கை, பொறுமை,கனிவு,உற்சாகம் போன்றவற்றைக் குறிப்பிடுகின்றார். ஆசிரியர்களுக்குத் தேவைப்படுகின்ற திறமைகளாக சுவையூட்டும் திறமை,கவுன்சிலிங்க் திறமை, மனித உறவுத் திறன்,நேர நிர்வாகத் திறன்,ஊக்கப்படுத்தும் திறன் போன்றவற்றை பட்டியலிடுகின்றார்.கற்றுக் கொண்டே இருப்பவர் தான் நல்ல ஆசிரியர்களாக விளங்கமுடியும் என்பர் அவ்வகையில் கூடுதல் அறிவுகளாக பொது அறிவு,கணினி அறிவு,உளவியல் அறிவு போன்றவற்றை ஆசிரியர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

எப்படி பாடம் நடத்த வேண்டும் என்பதனைப்பற்றி நான்காம் அத்தியாயம் ஆன கற்பித்தல்- அடிப்படை அம்சங்கள் என்னும் பகுதியில் விவரிக்கின்றார்.ஆசிரியருக்குப் புரிந்தால் தான் மாணவனுக்கு புரியும்படி நடத்த முடியும்.பாடத்தை ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக ஆசிரியர் ஏற்றால்தான் மாணவனுக்கு மகிழ்ச்சியாக நடத்த முடியும்.கற்பித்தலில் ரசனை கலந்து இருக்க வேண்டும்,உயிரோட்டம் இருக்க வேண்டும், ஆன்ந்தம் இருக்க வேண்டும்.கற்பித்தலில் அன்பும் நட்பும் அடிப்படையானவை கற்பித்தலில் ஏற்கனவே தேவைப் படுகின்ற ஒன்று ஒத்திகை, ஒத்திகை என்று ஒன்று இருந்தால் தானே நாடகமும் சினிமாவும் மிகச் சிறப்பாக அமைய முடிகிறது.ஆக ஆசிரியர்கள் தங்களின் அறிவுத் திறனை அதிகரித்துக் கொள்வதற்கும்,கற்பிக்கும் திறனை செம்மைப் படுத்திக் கொள்வதற்கும் ஹோம் ஒர்க் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றார்.ஏற்கனவே தயாரிப்பு இருக்கும் பொழுது எந்த வேலையும் செய்வது எளிது.

மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும் என்றால் கல்வியை அவர்கள் முதலில் விரும்ப வேண்டும்.விரும்பாவிட்டாலும் பரவாயில்லை கல்விமீது அவர்களுக்கு எந்த விதமான வெறுப்பும் வந்து விடக் கூடாது.அதற்கு பள்ளிக்கூடச் சூழல், வகுப்பறை சூழல்,கற்பிக்கும் உபகரணங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதனை கற்பித்தல் சில தேவைகள் என்னும் தலைப்பில் இன்றைக்கு இருக்கக்கூடிய நவீன அறிவியலின்,உளவியலின் அடிப்படையில் கூறுவது நன்று.

வயலில் விதைப்பதற்க்கு முன் மண்ணை பக்குவப் படுத்துவது போல மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு முன் அவர்களின் மனங்களைப் பக்குவப்படுத்தல் அவசியம்.அதற்கு சில யுக்திகளைக் கூறுகின்றார்.கல்வியினால் அவர்கள் அடையப் போகும் நன்மைகளை அதாவது வருமானம், சமூகத்தில் மதிப்பு, உயர் பதவி, குடும்ப நிலை உயர்வது, வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றை மாணவர்களின் மனங்களிலே பதிய வைக்கலாம்.மாணவர்களைப் பேச விடுங்கள்,ஆசிரியரே பேசிக் கொண்டிருப்பது அதாவது சொல்லிக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு நீண்ட வறட்டு உரை நிகழ்த்துவது ஒரு நல்ல ஆசிரியருக்கு அடையாளம் அல்ல.அதை ஒரு டேப் ரெக்கார்டர் அழகாக செய்யும். அதற்குப் பெயர் கற்பித்தல் அல்ல என்கின்றார். கற்பித்தலில் திறமை முழுமை எப்படி வரும் என்பதற்கு நூலாசிரியர் சொல்லக்கூடிய சுவையூட்டுதல், நடித்தல், வீட்டுப் பாடங்கள், செய்முறை வேலைகள், வெளியுலக தொடர்பு போன்ற தலைப்புகளில் சொல்லும் ஆலோசனைகள் வரவேற்கத்தக்கவை. பெற்றோர்களிடம் எப்படி பேசுவது,பெற்றோர்களின் நேர்மறை சக்தியை ஆசிரியர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பதெல்லாம்,நடைமுறை வாழ்வியலை அடிப்படையாக்க் கொண்டு அமைந்திருக்கிறது.

கற்றுக்கொள்வதில் மாணவர்கள் பலவகை.ஆசிரியர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளில் மாணவர்கள் பலவகை. பலவகையான மாணவர்களை ஆசிரியர்கள் எப்படி கையாளுவது.கையாளுவதில் அதிகாரவழியைப் பயன்படுத்துவதா, அன்பு வழியைப் பயன்படுத்துவதா என்பதனை பக்கங்கள் 104 முதல் 111ம் பக்கம் வரை விவாதிக்கின்றார்.சில தீர்வுகளைக் கூறுகின்றார்.பிரச்சனைக்குரிய மாணவன் என்று யாரும் கிடையாது, பிரச்சனை உடைய மாணவர்கள் தான் உண்டு.பிரச்சனையைத் தீர்த்துவிட்டால் மாணவர்களால் பிரச்சனையில்லை.மாணவர்களை முறையாக திறமையாகக் கையாளுவது ஒரு நல்ல ஆசிரியரின் அடையாளங்களில் ஒன்று எனக் கூறுகின்றார்.

தோட்டத்திலே நல்ல பூச்செடிகளை வளர்ப்பதர்க்கு சில வழிகளைப் பயன்படுத்துவதைப் போல மாணவர்களை மேம்படுத்துவதற்கு சில வழிமுறைகளை இந்நூலின் ஆசிரியர் கூறுகின்றார். தேவையற்ற பயம்,தாழ்வு மனப்பான்மை,எதிர்மறை எண்ணம்,கூச்சம் போன்றவற்றை மாணவர்களிடமிருந்து நீக்க ஆசிரியர்களே முயற்சி செய்யுங்கள் நல்ல வாழ்க்கைக்கான சில கொள்கைகளைச் சொல்லுங்கள்,நல்ல கொள்கைகளுடன் வாழ்ந்த சில தலைவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.ஆசிரியருக்கென்று ஒரு தனிமரியாதை இன்றும் இருக்கிறது அந்த மரியாதை வெறும் படிப்பை மட்டும் சொல்லித் தருகிற ஆசிரியர்களுக்கு கிடைப்பதேஇல்லை.படிப்புடன் வாழ்க்கைக்குத் தேவையான விசயங்களிலும் மாணவர்களின் சிந்தனையை செலுத்தி அவனை வல்லவனாக,நல்லவனாக உருவாக்குவதற்கு அக்கறை காட்டுகின்ற ஆசிரியர்களுக்குத்தான் அந்த மரியாதை கிடைக்கிறது ஆசிரியர்களே அந்த மரியாதையை ஏன் விட்டுத் தருகிறீர்கள் இன்று கிடைக்கும் மன நிறைவையும் நாளைகிடைக்கப் போகும் மதிப்பு மரியாதையையும் ஏன் இழக்க நினைக்கிறீர்கள் முயற்சி செய்யுங்களேன் என்று வேண்டுகோள் விடுக்கின்றார்.

நல்ல ஆசிரியர்களை உருவாக்க கல்வி நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை பக்கம் 117-ல் இருந்து 124 வரை எடுத்துக் காட்டுகளோடு விவரிக்கின்றார். அரசின் பங்குபற்றி 11வது அத்தியாயத்தில் பல்வேறு யோசனைகளை குறிப்பிடுகின்றார்.அவை,ஆசிரியர்களை கற்பிபதைத் தவிர மற்ற பணிகளில் ஈடுபடுத்துவதை குறைக்க வேண்டும் தவிர்க்க வேண்டும். சிறப்புப் பயிற்சிகளை அவ்வப்போது ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.ஸ்போக்கென் இங்க்லிஷ் கென்று வாரம் ஒரு வகுப்பாவது ஒதுக்கும்படி பாடத்திட்டம் அமைப்பது போன்றவற்றை குறிப்பிடுகின்றார்.கடைசித்தலைப்பாக வணக்கம் டீச்சர் எனக் குறிப்பிட்டு ஆசிரியர் பணியின் மேன்மையை,உயர்வை குறிப்பிடுகின்றார்.உங்கள் வகுப்பில் நாளைய குடியரசுத் தலைவர் இருக்கிறார்,நாளைய ஆளுநர் இருக்கிறார்,நாளைய மாவட்ட ஆட்சித் தலைவர் இருக்கிறார். “இந்த ஆசிரியரிடம் இந்த நல்ல விசயத்தைக் கற்றுக்கொண்டேன்,இந்த நல்ல குணத்தைப் பெற்றுக் கொண்டேன் இந்த அணுகுமுறையைத் தெரிந்து கொண்டேன்” என்று உங்கள் பெயரை குறிபிட்டுச் சொல்லி “என்னை உயர்த்தியவர்களில் அவரும் ஒருவர்” என்று நாளைக்கு அவர்கள் பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுப்பார்கள் நீங்களும் படிக்கத்தான் போகிறீர்கள் என்று இந்நூலாசிரியர் ஆசிரியர்களுக்கு ஊக்கம் ஊட்டுகிறார்.

(“A GOOD TEACHER TEACHES; A BETTER TEACHER COACHES; THE BEST TEACHER INSPIRES; AN EXCELLENT TEACHER MOTIVATES” ) என நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஆசிரியர் தினமான செப்டம்பர்5-ல் பிறந்த டாக்டர்.இராதகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடுவார்.ஊக்கப்படுத்துகிற அருமையான ஆசிரியராக திகழ்வதற்கான வழிமுறைகளை,பல்வேறு யோசனைகளை வணக்கம் டீச்சர் என்னும் இந்த நூலின் ஆசிரியர் தங்கவேலு மாரிமுத்து கொடுத்திருக்கிறார்.கற்பித்தல் என்னும் கடல் பயணத்திற்கு நிச்சயமாக இது ஒரு பாதுகாப்பான நல்ல தோணி என்னும் நூலாசிரியரின் கூற்று உண்மைதான்.படித்துப் பாருங்கள் பயன் பெறுங்கள்.

‘வணக்கம் டீச்சர்‘ என்னும் இந்தநூலின் ஆசிரியர் தங்கவேலு மாரிமுத்து ஆவார்.கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் செப்டம்பர் 2010–ல் வெளிவந்தது.மொத்தம் 144 பக்கங்கள் உள்ள புத்தகத்தின் விலை ரூ55 ஆகும்.
நன்றி வணக்கம்

இவர்தான் பெரியார் நூல் அறிமுகம்

இவர்தான் பெரியார் நூல் அறிமுகம்
மதுரை
வானொலி நிலையம்


ஒலிபரப்பிய
நாள்:17.09.11


இன்று நாம் காண இருக்கின்ற புத்தகம் ‘இவர்தான் பெரியார்‘ என்னும் புத்தகம் ஆகும். இதன் ஆசிரியர் மஞ்சை.வசந்தன் ஆவார். கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் மார்ச் 2011–ல் வெளிவந்தது.மொத்தம் 216 பக்கங்கள் உள்ள புத்தகத்தின் விலை ரூ75 ஆகும்.

பெரியாரின் வாழ்வும் சிந்தனைகளும் முழுமையாக அடங்கிய நூல் என முகப்பில் கூறப்பட்டுள்ள இந்த நூல் பெரியாரைப்பற்றி விவரித்துக்கூறுகின்ற ஒரு நூலாகும்.முன்னுரையில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் “முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய எழுத்தாளர் தோழர் மஞ்சை வசந்தன் அவர்கள்...இவர்தான் பெரியார் என்ற இந்நூலின் மூலம் அறிவுலக ஆசான், நம் அனைவருக்கும் விழி திறந்த வித்தகர்,தொண்டு செய்து பழுத்த பழம் அய்யாவைப் பற்றி மிகவும் அருமையாக எழுதியுள்ளார்.எவரும் எளிதில் தந்தை பெரியார் வாழ்க்கை,தத்துவங்கள் இவை இரண்டினைப் பற்றியும் புரிந்துகொள்ளும் வண்ணம் சிறப்பாக எழுதியுள்ளார் மிகவும் சுருக்கமான குளிகைகள் மூலம் (capsules)மூலம் பல முக்கிய சம்பவங்களையும், விளக்கங்களையும் அருமையாக தந்துள்ளார்” என்று குறிப்பிடுகின்றார்.

இந்நூலின் ஆசிரியர் மஞ்சை வசந்தன் அவர்கள் தனது உரையில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் முழுவதையும் அறிந்தவர்கள் சிலரே, சுமார் பத்தாயிரம் பக்கங்களுக்கு மேல் அவர்கூறிய கருத்துக்களை பலரும் படித்தறிவது நடைமுறைச் சாத்தியம் இல்லை என்பதையும் எதையும் சுருக்கமாக அறிந்து கொள்ள முயலும் இன்றைய உலகின் உள நிலையையும் கருத்தில் கொண்டு பெரியாரின் வாழ்வை 80 பக்கங்களிலும், அவரது சிந்தனைகளை 140 பக்கங்களிலும் பிழிந்து தந்துள்ளேன் எனக் கூறுகின்றார்.

மொத்தம் 29து தலைப்புகளில் இந்தப் புத்தகம் வடிவமைக்கப் பட்டுள்ளது.பெரியாரின் பெற்றோர் பற்றியும்,அவரது பிறப்பு பற்றியும் ,அவரது திருமணம் பற்றியும் சொல்வதாக முதல் தலைப்பான ‘பிறப்பும் பிள்ளை வெறுப்பும்’ எனும் தலைப்பு அமைகிறது.1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம்தேதி பெரியார் பிறந்தார் என்பதும் அவரது திருமணம் 1898ம் ஆண்டு நாகம்மையாரோடு நடைப்பெற்றது போன்ற வரலாற்றுச் செய்திகள் இடம் பெறுகின்றன.பெரியார் துறவு பூண்டு காசிக்குச் சென்றதும் அங்கு நடைபெற்ற செயல்களால் வெறுப்புற்று ஈரோட்டுக்குத் திரும்பியதும் வியாபாரம் செய்ததும் அடுத்து விவரிக்கப்பட்டுள்ளன. “சாதி வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களுடனும் அன்போடு பழகினார்.எல்லா சமூதாய மக்களின் விழாக்களிலும் கலந்து கொண்டார்....பிளேக் நோய் ஈரோட்டில் பரவியபோது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்க பெரிதும் உழைத்தார்”என பக்கம் 21-ல் குறிப்பிடுகின்றார்.

காங்கிரசில் பெரியார் சேர்ந்த சூழல் விவரிக்கப்படுகிறது “பெரியார் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்து வந்தாலும் ,1919ம் ஆண்டுதான் காங்கிரசில் உறுப்பினரானார்.இவ்வாண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையின் கொடுமையைக் கண்டு கொதித்த பெரியார் .,ஆங்கில ஆட்சியை ஒழித்தே தீர வேண்டும் என்று உறுதிகொண்டு காங்கிரசில் சேர்ந்தார்.ஈரோடு நகரசபைத் தலைவர் பதவி உள்ளிட்ட அவர் வகித்த 29 பதவிகளை துறந்தார்” என ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

பெரியாரின் பணியைக்கண்டு மகிழ்ந்த காந்தியார் கதர் இயக்கத்துக்கு பெரியாரை பொறுப்பாளராக நியமித்தார். இதனை பெரியாரே “ நான் எதிலும் தீவிரமாகவும் உண்மையாகவும் உழைக்கக் கூடியவன் என்கிற கருத்து காந்திக்கு இருந்ததால் கதர் இயக்கத்துக்கு என்னைப் பொறுப்பாளராக நியமித்தார்” என்று குறிப்பிட்டதைக் குறிப்பிடுகின்றார்.கள்ளுக் கடை மறியலில் முதன் முதலாக ஒருமாத சிறைதண்டனையை பெரியார் பெற்றதையும் அவரது குடும்பத்துப் பெண்களான மனைவி நாகம்மாளும் தங்கை கண்ணம்மாளும் மறியலில் ஈடுபட்டு சிறைபட்டதையும் கள்ளுக் கடை மறியலை நிறுத்த வேண்டும் என்று சொன்ன பொழுது காந்தியார்
“மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களின் கையில் உள்ளது அவர்களைக் கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டதை கூறுகின்றார் இன்று கூட பெண்கள் மறியலில் ஈடுபட்டு சிறை செல்வது அரிதாகவே உள்ளது.சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வு என்பது ஒரு கொள்கையை தான் பின்பற்றுவது மட்டுமல்ல, அதற்காக தான் சிறை செல்வது மட்டுமல்ல, தன் குடும்பத்துப் பெண்களையும் சிறை ஏற்கச் செய்தது என்பது வரலாற்று நிகழ்வு.

“ஒடுக்கப்பட்ட தோழன் நெஞ்சில் ஒளிச்சிலையாய் வாழ்கின்றார் பெரியார் “ என்பார் கவிஞர் கலி.பூங்குன்றன்.ஏன் என்பதனை வைக்கம் சென்றார் வழி திறந்து வென்றார் என்னும் தலைப்பில் நூலாசிரியர் விவரிப்பதைப் படித்தால் அறியலாம். அண்ணல் அம்பேத்கார் அவர்களுக்கே தூண்டுதலைக் கொடுத்த போரட்டமாக இப்போராட்டம் அமைந்தது என்கின்றார். சாதி என்னும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடியாக பெரியார் நடத்திய .சேரன்மாதேவியின் குருகுலத்து ஜாதி வேற்றுமை எதிர்ப்பு போராட்டமும், இட ஒதுக்கீட்டிற்காக போராடி போராடி பின்பு முடியாமல் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தையும் தொடர்ந்து குறிப்பிடுகின்றார்.

“ வெண்தாடியின் வெப்ப மின்னல்கள் என்னை இருட்டின் ஈசான்ய மூலையிலிருந்து இழுத்து வந்துவிட்டன” என்று கவிஞர் தாமரை பெரியாரை குறிப்பிடுவார்.பெண்களால் மாநாடு கூட்டப்பட்டு பெரியார் என்னும் பெயரை பெண்களால் கொடுக்கப்பட்டதை குறிப்பிடுகின்றார். “பெண்களுக்காக உழைத்தவர்களில் பெரியார் தான் உலகிலேயே முதலிடம் பெற்றவர் அந்த அளவிற்கு யாரும் சிந்தித்தும் இல்லை போராடியதும் இல்லை” .அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய இளம் வயது திருமணம்,விதவைக் கொடுமை, பெண்களுக்கு சொத்துரிமை இன்மை, கல்வியின்மை போன்ற கொடுமைகளை களைய எவ்வாறு போராடினார்.என்பதனை பல்வேறு புள்ளி விவரங்களொடு எடுத்துரைக்கிறார்.காலம் காலமாக அழுத பெண்களின் கண்ணீரை துடைத்த பெரியாரின் பணி, பெண்ணடிமை ஒழிப்பில் எவ்வாறு இருந்தது எனபதனை அறிய இன்றைய தலைமுறை ஆண்களும் பெண்களும் இதனை படிக்க வேண்டும். 

“ஆண்களுடன் பெண்கள் நெருங்கிப் பழகவும் சேர்ந்து படிக்கவும் இடம் கொடுத்துவிட்டால், கண்டிப்பாய் இன்றைய தினம் பெண்களுக்கு உள்ளது போன்ற அடிமை நிலை,அடுப்பூதும் நிலை,குழந்தை வளர்ப்பு,கும்மி,கோலாட்டம்தான் ஏற்றது என்ற நிலை பறந்தோடிப் போய்விடும்.

“பெண்கள் யாவரும் படிக்க வேண்டும்.அரசங்காத்தின் உத்தியோகங்கள் பெரும்பாலும் இனி பெண்களுக்கே வழங்கப்படுமாதலால் அவர்கள் படித்துத் தயாராய் இருக்க வேண்டும்.படித்த பெண்களையே ஆண்கள் மணக்க விரும்புவதாலும் பெண்கள் அவசியம் படிக்க வேண்டும்”.

“பெண்களுக்கு கும்மியும் கோலாட்டமும் கற்றுத்தருவதை ஒழித்துவிட்டு ஓடவும்,குதிக்கவும்,தாண்டவும் கைக்குத்து,குஸ்தி முதலியவற்றைச் சொல்லிக் கொடுத்து ஒரு ஆண்பிள்ளைக்கு உரிய பலம்,தைரியம்,உணர்ச்சி ஆகியவைகள் பெண்களுக்கும் உண்டாகும் படியாகச் செய்ய வேண்டும்.”

ஆண்களுக்கு ஏற்ற கலை வேறு, பெண்களுக்கு ஏற்ற கலை வேறு என்று சொல்லும் புத்தியை அறவே ஒழிக்க வேண்டும்.

ஆண்கள் படிக்காவிட்டாலும்கூட முதலில் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும்.பெண்கள் படித்து விட்டால் ஆண்கள் ஒழுக்கசீலர்களாக இருப்பார்கள்.ஆண்கள் இவ்வளவு அயோக்கியர்களாக இருப்பதற்குக் காரணம் பெண்கள் படித்து அறிவு பெறாமலிருப்பதுதான்” என்று பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் பெரியார்,

பெண்கள் உண்மையான மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமென்றால் மூன்று காரியங்கள் உடனே செய்யப்பட வேண்டும் முதலில் அடுப்பங்க்கரையை விட்டு அவர்கள் வெளியே வர வேண்டும்,இரண்டாவதாக நகைப் பற்றை அவர்களிடமிருந்து விரட்ட வேண்டும்,மூன்றாவதாக தற்போதுள்ள திருமணச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும்.பெண்கள் பதவிகளில் அமர்ந்துவிடுவார்களேயானால் மேற்குறிப்பிட்ட மூன்றும் தாமே படிப்படியாக நிறைவேறிவிடும்.பெண்களுக்கு எல்லாவிதமான வேலையும் கிடைக்கும்படியாக அரசாங்க விதிகளைத் திருத்த வேண்டும் என பெரியார் குறிப்பிட்டதை எல்லா வேலைகளிலும் 50% பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என பெரியார் வலியுறுத்தியதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். “அவர்தந்த சிந்தனைகள் ஒற்றடைக் கொம்புகள் எங்கள் மூளைகளின் மூலை எல்லாம் மூடி மறைத்திருந்த நூலாம்படையை அந்த கம்போன்றோ அடித்தது”என்று கவிஞர் அப்துல் ரகுமான் கூறுவதைப் போல பெண்ணடிமை என்னும் நூலம்படையை பெரியார் எப்படியெல்லாம் நீக்கினார் என இந்நூல் மூலம் அறியலாம்.

உண்மையைக் காண வேண்டும் என்ற உணர்வோடும் சரியானதையே ஏற்க வேண்டும் என்ற முடிவோடும் சமுதாய பொறுப்போடும் கடவுள் உண்டா?என்ற ஆய்வை பெரியார் நிகழ்த்தி அதன்முடிவுகளை உலகுக்கும் எடுத்துக் கூறினார்.கடவுள் இல்லை என்பதனையும் கடவுள் நம்பிக்கையால் ஏற்படும் சீரழிவையும் நுட்பமாக ஆய்வு செய்து பெரியார் விளக்கியுள்ளார்.அவருடைய ஆய்வு அறிவு பூர்வமானது பிடிவாதமோ விதண்டாவாதமோ அவரிடம் இல்லை என பக்கம் 127-ல் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.புராண ஆய்வில் புகழ்பெற்ற பெரியார் என்னும் தலைப்பில் தன்னுடைய பிரச்சாரத்தில் பெரியார் பட்ட துன்பங்களை விளக்குகிறார்.அழுகிய முட்டை,செருப்பு,பாம்பு ஆகியவை அவர்மீது வீசப்பட்டன அப்போதுகூட பெரியார் அவர்களின் அறியாமையைக் கண்டு வருந்தினாரே அவர்களின் செயல்களுக்காக வருத்தப்படவில்லை. “ஆக்காத நூலில்லை ஆய்ந்து தேர்ந்து அளிக்காத கருத்தில்லை அழுத்தமாக தாக்காத பழைமையில்லை தந்தை நெஞ்சில் தழைக்காத உவமையில்லை தமிழ் நிலத்தில் நீக்காத களை இல்லை” என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டதைப் போல களைகளை நீக்க பெரியார் பட்டபாடுகள் விரிவாக நூலாசிரியரால் கூறப்படுகின்றன.

சிறிது காலத்திற்கு மக்கள் தொடர்ச்சியாக திருக்குறளைப் படித்து மனதில் ஆழப்பதியவைத்து வருவார்களானால் நம் நாட்டில், நம் மக்கள் வாழ்வில் ,நம் மக்கள் உள்ளத்தில் ஒரு புதிய உணர்ச்சி உறுதியாக ஏற்படும் என்பது என் கருத்து.மேலும் திருக்குறள் ஒன்று போதும் இந்நாட்டு மக்களுக்கெல்லாம் அறிவை உண்டாக்க,ஒழுக்கத்தை உண்டாக்க வேறு மத நூல்கள் தேவையில்லை என்று கூறிய பெரியார் திருக்குறளை அச்சேற்றி மலிவு விலையில் எல்லோரும் படிக்கும்படி செய்தார்.திருக்குறளைப் பரப்ப பல மாநாடுகளை நடத்தினார்.பண்டிதர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த திருக்குறளை பாமரனும் படித்து பயன் பெறும் படி செய்த பெருமை பெரியாரைச் சாரும் என பக்கம் 170-ல் குறிப்பிடுகின்றார்.

இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டு ஏற்கப்பட்டபின் முதன்முறையாக திருத்தம் செய்யப்பட்டது.பெரியாரின் போராட்டத்திற்காக இடஒதுக்கீட்டிற்காக என்பது இந்திய வரலாற்றின் ஒரு சிறப்பிற்குரிய பெருமையாகும் என பக்கம்203-ல் குறிப்பிடுக்கின்றார். போராடு புரட்சிப்பாதை ஈரோடு என்னும் தலைப்பில் பெரியார் நடத்திய போராட்டங்களும் பெற்ற சிறைத்தண்டனைகளும் வரிசையாக்க் குறிப்பிடப்பட்டுள்ளன. “எரிமலையாய் சுடுதழலாய் இயற்கைக்கூத்தாய் எதிர்ப்புகளை நடுங்க வைக்கும் இடியொலியாய் இன உணர்வு தீப்பந்தப் போராளியாய் இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடு வாளாய்... எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்” என கலைஞர் அவர்கள் கூறியதைப் போல பெரியார் வாழ்ந்திட்டார் என்பதனை வரிசைப்படுத்துகிறார் நூலாசிரியர்.

இன்னல்களுக்கிடையே இறுதிவரை என்னும் தலைப்பில் பெரியாருக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளையும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சிங்கமென மேடைகளில் இறுதிவரை முழங்கியதையும் குறிப்பிடுகின்றார். “தமிழ்நாட்டின் சமூக விழிப்பு ஏற்பட பெரியார் ஆற்றிய பணி அவர் வகித்தப் பாத்திரம் மிகப் பெரியது.அவர் ஒரு மாபெரும் தேசபக்தர்” என்று பெருந்தலைவர் காமராசர், “ பெரியார் நயமிக்கதோர் தலைவர்,வீரமிக்கதோர் போராட்டக்காரர் “ என அன்றைய குடியரசுத்தலைவர் வி.வி.கிரி, “ஏற்றுக்கொள்ளப்பட்ட பல கருத்துக்களை எதிர்த்து அறைகூவி நின்றவர் பெரியார்” என அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, “பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஜாதி,மூட நம்பிக்கைகளை முழுமூச்சாக எதிர்த்த பெருந்தலைவர், இந்தியாவில் அவரைப் போன்று ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது” கொடுமைக்கு எதிராய் பெரும்போர் தொடுத்தவர்“ என ஜெயப்பரகாஷ் நாராயணன், “தமிழர் சமுதாயம் தனது பாதுகாவலரை –இன மொழி உயர்வுகளுக்காக அரசியல் பொருளாதார விடுதலைக்காகப் போராடி ,போராட்டத்திலேயே தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த விடுதலை வீரரை இன்றைக்கு இழ்ந்துவிட்ட்து “ என எம்.ஜி.ஆர் எனத் தலைவர்கள் தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டு திசம்பர் 24-ம் நாள் மறைந்தபொழுது விடுத்த அறிக்கைகளை கடைசிப்பக்கங்களில் கொடுத்துள்ளார் நூலாசிரியர்.

“நின் அடையாளம் தாடியும் தடியும், நீதான் எங்கள் அடியும் முடியும்” என்பார் பெரியார் பற்றி கவிஞர் வைரமுத்து. அப்படித் திகழ்ந்த தந்தை பெரியாரின் வாழ்வை முழுமையாக அறிய படித்துப்பாருங்கள் !சமூகத் தொண்டாற்றும் விழிப்புணர்வு பெறுங்கள்!
நூலின் பெயர் “இவர்தான் பெரியார்”, ஆசிரியர் மஞ்சை வசந்தன் . கோவை விஜயா பதிப்பகம் , பக்கம் 216. விலை ரூ75. .

எங்கள் முத்தான புரட்சிக் கவியே !

கோவில் பல கட்டும் தமிழர்கள் பலர் கல்வித்தந்தைகளாகவும் இருக்கின்றார்கள் . கல்லூரிகளில் விளக்குபூஜை நடத்துகின்றார்கள், ஏன் சில கல்லூரிகளில் யாகம் கூட நட்த்துகின்றார்கள். இந்திய அரசியல் சட்டத்திற்கு நேர் விரோதமான செயல் என்றாலும் கூட இதனை நடத்துகின்றார்கள். மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டிய கல்விக்கூடங்கள் இவர்களைப் போன்றவர்களால் பாழ்படுத்தப்படுகின்றன. சில கல்விக்கூடங்களில் கோவில் கட்ட சித்தாள்களாக மாணவ , மாணவியர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள் .ஏதோ ஒரு கோவிலைக் கட்டி விட்டால் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டதைப் போல பெருமைப்பட்டுக்கொள்கின்றார்கள். இவர்களைப் பற்றி, இன்று இவ்வளவு சுய நிதிப் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், மெட்ரிக் பள்ளிகள் இருந்தாலும் கூட இவையெல்லாம் புற்றீசல் போல வராத காலத்தில் வாழ்ந்த புரட்சிக் கவிஞர் பாடுகின்றார் பாருங்கள்

“ நேர்மையின்றிப் பிறர்பொருளில்
தம் பெயரால் கல்லூரி
நிறுவிப் பெண்ணைச்
சீர்கெடுத்தும் மறைவழியாய்ச்
செல்வத்தை மிகவளைத்தும்
குடி கெடுத்தும்
பார் அறியத் தாம் அடைந்த
பழியனைத்தும் மறைவதற்குப்
பார்ப்பான் காலில்
வேர் அறுந்த நெடுமரம்போல்
வீழ்ந்தும் அவன் விட்டதுவே
வழியாம் என்றும்”
கூறுகின்றார். ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து, பக்தி என்பது தனிச்சொத்து என்பார் தந்தை பெரியார். ஒருவனுக்கு பக்தி இல்லாவிட்டால் சமூகத்திற்கு நட்டமில்லை, ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் சமூகத்திற்கு கேடு என்பார்.

பார் அறியத் தாம் அடைந்த பழியனைத்தும் மறைவதற்குப் பார்ப்பான் காலில் வேர் அறுந்த நெடுமரம் போல வீழ்கின்றார்கள் ‘கல்வித்தந்தைகள்’ என்று சொல்கின்றார் . கணிதத்தில் நேர்விகிதம் (directly proportional) என்று சொல்வார்கள். அதைப் போல ஒழுக்கக்கேடு என்பது பக்திக்கு நேர் விகிதம் என்று பாடுகின்றார் புரட்சிக் கவிஞர். திரு. கிருபானந்தவாரியார் அவர்கள் “ பக்தி வளர்ந்திருக்கிறது, ஆனால் ஒழுக்கம் வளரவில்லை” என்று சொல்லியதை இங்கு நினைவு கூறலாம். பக்தி வளர்ந்தால் ஒழுக்கம் வளராது, குறையத்தான் செய்யும், ஒழுக்கம் வளரவேண்டும் என்று சொன்னால் பக்தி குறைய வேண்டும நாட்டில் .ஒழுக்கக்கேட்டை மறைக்கப் பயன்படும் முகமூடிதான் பக்தி என்னும் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வரவேண்டும்.

தமிழ்ச் சொற்களை
பார்ப்பன எதிர்ப்பின்
ஆயுதங்களாய்
வார்த்தெடுத்த
முதல் கவியே !
எங்கள் முத்தான
புரட்சிக் கவியே !

காட்டாற்று வெள்ளமாய்
கரை புரளும் உனது
கவிதைப் பரப்பில்
இரு கரைகளாய்
தமிழ் உணர்வும்
தன்மான உணர்வும்

புத்துணர்வு பெறுகின்றேன்
ஒவ்வொரு முறையும்
உனது
கவிதைகளைப் புரட்டும்போது
புதிய உணர்ச்சியும்
மகிழ்ச்சியும் பெறுகின்றேன்
ஒவ்வொரு முறையும்
உனது கவிதைகளை
மனப்பாடமாய்
மனதில் கொள்ளும்போது!

வா.நேரு – 12-10-2011

Sunday 9 October 2011

புரட்சிக் கவிஞர் பாடல்

இந்த வாரம் படித்து மனப்பாடம் செய்த புரட்சிக் கவிஞர் பாடல்
“ கோவில் பல கட்டுகின்றீர்
குளங்கள் பல வெட்டுகின்றீர்
கோடை நாளில்
வாயிலுற நீர்ப்பந்தல்
மாடுறிஞ்ச நெடுந்தறிகள்
வாய்ப்பச்செய்தீர்
தாயிலும் பன்மடங்கு அன்போடு
மக்கள் நலம் நாடுகின்றீர்
ஆயினும் தமிழ் நாட்டில்
செயத்தக்க இன்னதென்று
அறிகிலீரே “ என்று சொல்கின்றார்.

புரட்சிக்கவிஞர் பாடி ஏறத்தாழ 60,70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கும் தமிழர்களுக்கு தமிழ் வளர, தமிழ் வளர்க்க என்ன செய்வது என்று தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கின்றார்களா?

நாங்கள் ஒரு பெரிய பணக்காரப் பெரியவரை பள்ளிக்கூடம் கட்டப் பணம் வேண்டும் என்று கேட்டச்சென்றபோது , எந்தவித தயக்கமும் இல்லாமல் பளிச்சென்று கூறினார், “ நான் கோவில் கும்பாவிசேகம் மற்றும் கோவில் திருப்பணிகள் தவிர வேறு எவற்றுக்கும் பணம் தருவதில்லை “ என்றார். பேசிப்பார்த்து பின்பு எந்த நன்கொடையும் அவரிடமிருந்து வாங்கமுடியாமல் திரும்பிவந்தோம். அவர் பார்ப்பனர் அல்ல, பரம்பரை பணக்காரர் அல்ல ,உழைப்பால் முன்னேறி பணம் பெற்றவர்தான் . வாய்ப்பு வசதிகள் வந்தவுடன் அது கடவுளாள்தான் வந்தது,எனவே அதைத்தவிர வேறு எவற்றுக்கும் பணம் கொடுக்க்க்கூடாது என நம்புகின்றார்.

அதைத் தகர்ப்பது எப்படி ? கடவுளுக்கு கொடுப்பது என்றால் பார்ப்பனருக்கு கொடுப்பது , அதனால் தமிழ் வளருமா? தமிழ் நாடு வளருமா?

“ தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு
தானுயரும் அறிவு உயரும்
அறமும் ஓங்கும்
இமயமலை போலுயர்ந்த
ஒரு நாடும் தன்
மொழியில் தாழ்ந்தால் வீழும்”
கோவிலுக்கு கொடுப்பதால் தமிழர் நிலை உயருமா? உறுதியாக உயராது
அப்போது என்ன செய்ய வேண்டும் ?

தமிழுக்குப் பொருள் கொடுங்கள்
தமிழறிஞர் கழகங்கள்
நிறுவிடுங்கள்
தமிழ்ப்பள்ளி, கல்லூரி
தமிழ் ஏடு பலப்பலவும்
நிலைப்பச்செய்வீர் “ என்று அறிவுறுத்துகின்றார் புரட்சிக்கவிஞர். செய்தோமா?

தமிழுக்குப் பொருள் கொடுங்கள் என்றால் , நமது ஆள் கம்பன் புகழ் பாடும் கழகங்களில் போய் விழுகின்றான் , மீண்டும் அந்த பார்ப்பன வளையத்துக்குள் எளிதாக மாட்டிக்கொள்கின்றான். கொஞ்சம் பேசத்தெரிந்த ஆட்களெல்லாம் கம்பன் புகழ் பாட, பெரிய புராணம் பற்றி விரிவுரையாற்ற கிளம்பி விடுகின்றான்.கொஞ்சம் பெயர் வெளியே பிரபலமாகின்றது, பேசப்போனால் பணம் கிடைக்கிறது, விளம்பரம் கிடைக்கின்றது.பின் தமிழ் எப்படிப்போனால் என்ன? தமிழ்நாடு எப்படிப்போனால் என்ன?

தமிழறிஞர் கழகங்கள் எப்படி இருக்கின்றன? திருவள்ளுவர் கழகம் என்று பெயர் இருக்கின்றது, சரி அங்கு திருக்குறளின் பெருமை பேசப்படுகின்றதா? திருக்குறளுக்கு நுட்பமான விளக்கங்கள், விரிவுரைகள்,மேலை நாட்டு இலக்கியங்களோடு ஒப்பிடல் இவையெல்லாம் நடக்கிறதா என்றால் இல்லை, இல்லை. அங்கும் நமது ஆள் கம்பராமாயணத்தை பற்றியும், பெரியபுராணம் பற்றியும்தான் பேசிக்கொண்டிருக்கிறான்.

படித்தவர்களைச் சுற்றியும் பணக்கார்ர்களைச்சுற்றியும் பார்ப்பனர்கள் மிக நுட்பமான பதுங்குகுழிகளை அமைத்திருக்கின்றார்கள்.தமிழர்களை எளிதாக அதில் பதுங்கிக்கொள்ள பார்ப்பனர்கள் பழக்கிவிடுகின்றார்கள் .பேச்சாளன் என்றாலும் சிலவற்றை விட்டுத் தாண்டி வரமறுக்கின்றான், பணக்காரன் என்றாலும் சிலவற்றை விட்டுத் தாண்டி வர மறுக்கின்றான். அவர்களை அதனைத் தாண்டி வர பழக்கவேண்டும் அதற்கு புரட்சிக்கவிஞரைப் படிக்கச் சொல்லவேண்டும்.

வா.நேரு – 08.10.2011

அழகாய் படமெடுத்தாலும்

உண்ணாவிரதம்
இருப்போர் எல்லாம்
காந்தியல்ல !

பந்தல் போட்டு
பட்டினி இருப்பதாலேயே
பத்தரை மாற்றுத்
தங்கமல்ல !

ஊடகங்கள் காட்டும்
செயற்கை வெளிச்சத்தில்
உண்மைகள் பொய்யாகும்
இருட்டெல்லாம் நிலவாகும்
நின்று யோசி !
பாம்பு
அழகாய் படமெடுத்தாலும்
கொட்டப்போவது
என்னமோ நஞ்சுதான் !

Friday 2 September 2011

பசியால் உலர்ந்து....


கொடிது கொடிது
பெற்றோரின் கண்
முன்னால்
பிள்ளைகள் சாவது கொடிது
அதனினும்
பசிக்கிறதே எனக் குழந்தைகள்
அழுக
கொடுக்க எதுவும் இல்லாமல்
நான் அழுக
என் கண்முன்னால்
நான்கு குழந்தைகள்
பசியால் உலர்ந்து
செத்துப்போனார்கள்
எனக் கதறி இருக்கிறார்
சோமாலியா நாட்டுத் தாய் !

எல்லாம் வல்ல !
இறைவனின் பெயரால்
கைகளில் துப்பாக்கியோடு
என் நாட்டுக் குழந்தைகளுக்கு
எதுவும் கொடுக்காதே
என்கிறார்களாம் சிலர் அந்நாட்டில்

உயிருக்குப் போராடும்
குழந்தைக்கு உதவும்
கரங்கள் எந்த மதத்துக்
கரங்களாய் இருந்தாலென்ன?
மதத்தால்
சாகலாமா மனிதம் ?

உலகில்
பசிக்கும் குழந்தையெல்லாம்
என் குழந்தை என
மதம் தாண்டி நாடு தாண்டி
பாலூட்டூம் சோறூட்டூம்
நாளே மனிதர்கள் நாள் !

அதுவரை
உண்டு களித்து
உறங்கி விழித்து
எவருக்கோ என
போய்க்கொண்டிருக்கிறோம்
நீங்களும் நானும்
மனிதர்கள் எனும்
பெயர் தாங்கி !

வா. நேரு

Friday 19 August 2011

காந்திக் குல்லாய் அணிந்து

குருவிக்கூட்டைக்
கலைக்காதீர்கள்
குரங்குகள்
உண்ணாவிரதம் இருந்தன

தவளைகளைக்
காப்பாற்றுங்கள்
பாம்புகள் குரல் எழுப்பின

பசுவைக் காக்க
பசுந்தோல் போர்த்திய
புலிகள்
போராட்டம் நடத்தின

குண்டு வைக்கும்
காவித் தீவிரவாதிகள்
ஆதரவில்
காந்திக் குல்லாய் அணிந்து
ஊழலுக்கு எதிராக
அகிம்சைப் போராட்டம்
நடத்தினர்

பூனைக்குட்டி வெளியில் வந்தது

ஊழல் ! ஊழல் !
என ஓலமிட்ட
கதர்க்குல்லாய்
அணிந்த பூனைக்குட்டி
வெளியில் வந்தது !

வன்முறையை மட்டுமே
வழியாய்க் கொண்ட
காந்தியாரைக் கொன்ற
வன்முறைக் கூட்டம்
ஏவிய அம்பு
மிகக் கவனமாய்
காந்தியார் சொன்ன
அகிம்சைப் படி
நடக்க அறிவுரை சொன்னது !

நான் சொன்னபடி நட!
இல்லையேல் நடக்க
விடமாட்டேன் பாராளூமன்றத்தை
என்று அடாவடி செய்யும்
குரங்குக் கூட்டத்தலைவி
பெருமிதமாய்ச் சொன்னார்

எங்கள் மாணவர் அணிதான்
கதர்க்குல்லாய் பின்னால்
இதிலென்ன குற்றம் !

குற்றமில்லை குரங்குத் தலைவியே !
வெளிப்படையாய் நாங்கள்
என்று அறிவித்து செய்தால்-
அதுதான் உங்களுக்கு
வழக்கமே இல்லையே !

ஒளிந்திருந்தே அம்பு
எய்யும் இராமனக் கூட்டமே !
சுன்னத் செய்து
காந்தியைக் கொன்ற
காலிகள் கூட்டமே !

அன்றே சொன்னார்
எங்கள் ஆசிரியர் வீரமணி!
பாபா ராம்தேவும்
அன்னா கசாரேவும்
காவியின் பினாமிகள்!
கவனமாய் இருங்களென்று !
தும்பை விட்டு
வாலைப் பிடிக்கும்
காங்கிரசு இயக்கமே !

பம்மினால் நடக்காது!
பதுங்கினால் தீராது !
ஒட்ட நறுக்குங்குள்
முகமூடிகளை -
இவர்கள் யாரென
உலகுக்கு காட்டுங்கள் !
அப்படியானால் தப்பிப்பீர்கள்!
இல்லையேல் தவிப்பீர்கள் !



Tuesday 16 August 2011

விதவை என்றே சொல்லே நம் புழக்கத்திலிருந்து எடுக்கப்படவேண்டிய ஒன்று.


பெண்ணுரிமை என்பது பெரியார் காலத்தில் பேச்சளவில் இருந்தது இப்ப
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ரது என்றாலும் முழுமை அடையாமல் வீக்கமாய்
நகரங்களில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.. ஒருபக்கம் வேதனைக்குறிய
முன்னேற்றமாகவும் ஆகியுள்ளது.


நாம் இவ்விழையில் விதவை மறுமணத்தை , அதன் பிரச்னைகளை , அதற்கான தீர்வுகளை
குறித்து நல்லதொரு முடிவெடுக்கும் கருத்துகளை பகிர்ந்துகொள்வோம்.


சேவையாக நினைத்து நம்மால் இயன்ற பங்களிப்பை தர முயல்வோம்..


நான் வாசித்த ஒரு கவிதையை பகிர்கிறேன்.. யோசிக்க வைத்தது..


பெண்களால்
பெரியார் எனப் பெயர் சூட்டப்பட்ட
பெருந்தகையே!
உலக மகளிர்
தினம் என்றவுடன்
உன் நினைவுதான்
எங்கள் முன்னால்


ஆனால் சிலர்
மகளிர் நாள்
எனச்சொல்லி
மார்ச் 8ல்
கோலப்போட்டி
நடத்திக்
கொண்டிருக்கிறார்கள்


நல்ல
பட்டுப்புடவை
ஒன்றுபோல் எடுத்து
பெண்கள் எல்லாம்
மார்ச் 8ல்
அலுவலகத்திற்கு
கட்டிவர வேண்டுமாம்
சில மாமிகள்
அலுவலகத்தில்
ஆணையிட்டுக்
கொண்டிருக்கிறார்கள்


சிலர் கோயில்
பிரசாதங்கள்
வழங்க
பட்டியல்
தயாரிக்கின்றார்கள்
மகளிர் தினத்தை
முன்னிட்டு
எந்த நாளையும்
மாமிகள்
விடுவதாயில்லை
இந்துமத
வளையத்துக்குள்
கொண்டு வருவதிலேயே
குறியாய் இருக்கிறார்கள்


பெண்ணுரிமை
எனும் பேச்சு
வரும் இடமெல்லாம்
பெரியார் எனும்
பெயர் நினைவில் வரும்
நம் எதிரிகளுக்கும்


ஆதலால்
என்ன செய்யலாம்
இந்நாளில்
பெரியார் பெயர்
வராமல் இருக்க ?
யோசித்து யோசித்து
பாரதியை
முன்னிறுத்துகின்றார்


எங்கள்
ஈரோட்டுச்சூரியனே
தன்னிகர் இல்லா
பெண் விடுதலைக்
கருத்துகளை
தரணியில் எவரும்
சிந்திக்கா நிலையில்
கனலாய் கக்கிய
எரிமலையே!
மண்ணில்
ஆணுக்கு
என்னென்ன
உரிமை உண்டோ
அத்தனையும்
பெண்ணுக்கு
வேண்டுமெனக்
கேட்டவர் நீ !
மதம்
தோற்றுவிக்கப்பட்டதே
பெண்களை
அடிமைப்படுத்த என்றாய்
கடவுள் எனும்
வார்த்தையே
பெண்விடுதலை
எனும் சொல்லுக்கு
எதிர்ப்பதம் என்றாய்
கற்பு என்ற
சொல்லே பெண்ணை
வீட்டுக்குள்ளே
பூட்டிவைக்க சிலர்
சொல்லிவைத்த
வார்த்தை என்றாய்
கர்ப்பப்பையை
கழற்றி எறி என்றாய்
எனக்கு தாலி என்றால்
உனக்கு என்னடா
அடையாளம்?
எனக்
கேட்கச் சொன்னாய்
பெண்ணை விதவை என்றால்
விதவன் எனப்பெயர் ஏன்
ஆணுக்கு இல்லை?
வினவச் சொன்னாய்
ஆரியப் பார்ப்பான்
மனுவைச் சொல்லி
அடங்கிப் போ என்றான்
கல்வியை
ஆயுதமாக்கு!
துணிச்சலை
துணையாகக் கொள்!
மனு தர்மத்தை
பொசுக்கு என்றாய்
நடுங்கித்தான் போனது
பார்ப்பனியம்


பெண் ஏன்
அடிமையானாள்?
எண்பது ஆண்டுகளுக்கு
முன்னால் நீ
சொல்லிய வார்த்தைகளை
திருப்பிச் சொல்வதற்கே
பயம்
நிறைய முற்போக்குகளுக்கு
இன்றைக்கும்


எங்கள் முன்னால்
எனது தங்கையும்
எனது தாயும்
எனது துணையும்
நன்றியோடு
உனை நினைத்து
புகழ்கிறார்கள்!
மண்ணில் மகளிர்
சுயம்ரியாதையாய்
வாழ வழிகாட்டியவர்
நீங்கள் என்பதால் ...


------------------- ப.க.தலைவர். மானமிகு - வா நேரு அவர்கள்


இனி கேள்விகளை தொடுப்போம்..


என் அப்பா அடிக்கடி சொல்லும் நிகழ்வு இது ....காந்திஜியிடம் ,விதவைகள்
மறுமணம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது ,அவர் "மனைவியை இழந்தவர்கள் மறுமணம்
செய்யக்கூடாது "என்றாராம் .இதனால் கோபமான பாரதியார் ,"காந்தி மகானிடம் நாம்
விதவைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு வழிகேட்டால் அவர் விதவர்கள் (இந்த சொல்
எனக்கு சரியாக நினைவில்லை )எண்ணிக்கையை அதிகமாக்க வழி சொல்கிறார் ,"என்று
எழுதினாராம் .இதை பாரதியார் கட்டுரை தொகுப்பில் காண முடியும் .


நகரத்தில் மட்டுமல்ல சாந்தி ,சில கிராமங்களில் எப்போதும் இது இயல்பாக
நடந்ததுண்டு .


2009/9/23 jmms





>
>Subject: Re: [தமிழமுதம்] Re: இந்திய விதவை மாதருக்கு மறுவாழ்வு தருவது எப்படி ?
விதவைகள் வாழ்வுரிமை இயக்கம் எனும் அமைப்பு துவங்கியுள்ள கலங்கரை என்ற
தன்னார்வத் தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ள ஒரு ஐ.நா சபையின் ஆய்வுப்படி
இந்தியாவில் 15 முதல் 59 வயதுவரை உள்ள பெண்களில் ஆயிரத்தில் 53பேர் விதவைகளாம்
(குமுதம் ரிப்போர்ட்டர், 17.7.08). தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் இந்த
விகிதம் நூற்றுக்கு ஏழுபேராம். அதன்படி ஆயிரத்திற்கு எழுபது பேர். நாட்டிலேயே
விதவைகளின் விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகமாம். இந்த அதிக விதவை விகிதத்திற்கு
என்ன காரணம்?


தமிழ்நாடு குடிகாரர்களின் தேசமாக மாறிவருவதுதான் இந்த நிலைக்கு காரணம்.
டாஸ்மாக் விற்பனையின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 9000 கோடி ரூபாய்
வருமானம் வருகிறது என்றால் குடிப்பவர்களின் எண்ணிக்கையையும், குடியின் அளவையும்
ஊகித்தறியலாம். நகரமயமாக்கம் உருவாக்கியிருக்கும் புதிய உடழைப்பு வேலைகள்
காரணமாக உதிரிப் பாட்டாளிகள் அன்றாடம் பெறும் கூலியில் கணிசமான அளவை
சாராயக்கடையில் அள்ளிக் கொடுக்கின்றனர். மிதமாக ஆரம்பிக்கும் குடிப்பண்பு
பின்பு மிதமிஞ்சியதாக மாறி குடிக்கு அடிமையாக மாற்றிவிடுகிறது.


எனவே இந்தப்பிரிவினர் 40, 50 வயதுகளில் கல்லீரல் கெட்டு மரணத்தைத்
தழுவுகின்றனர். இம்மக்கள் பார்க்கும் கடின உழைப்பு வேலைகள் உடல் சோர்வை மறக்கக்
குடித்தே ஆகவேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருப்பதும் உண்மைதான். குடிக்கும்
நடுத்தரவர்க்கம் போதிய உணவை எடுத்துக்கொள்வதாலும், அவர்களுக்கு கடின உழைப்பு
வேலைகள் இல்லை என்பதோடு குடியும் அளவுக்குட்பட்டு இருப்பதாலும் இளவயது மரணம்
இவர்களிடத்தில் பொதுவில் இல்லை. ஆனால் உழைக்கும் வர்க்கமோ சத்தான உணவைச்
சாப்பிட வாய்ப்பில்லாமலும், இருக்கும் காசை குடியில் கொட்டுவதாலும் மரணம்
வாசலைத் தட்டுகிறது. ஆக திருமணம் ஆன பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகிறார்கள்.


விதவைகள் மற்றவர்களைப் போல வாழ்வதும், மறுவாழ்வு பெறுவதும் இயல்பாக முடியுமென்ற
நிலை இன்னும் வரவில்லை. விதவைகளைப் புறக்கணிக்கும் பிற்போக்குச் சமூகமாகவே
தமிழகம் நீடிக்கிறது. புத்தாடை அணிந்தாலே மினுக்கிகிட்டுத் திரிகிறாள் என்று
பேசுவதும், மங்கல நிகழ்ச்சிகளில் ஒதுக்குவதும் இன்றும் சமூகத்தில்
சாதாரணம்தான். அவ்வளவு ஏன் மேற்கண்ட விதவைகள் சங்கம், கூட்டம்
நடத்துவதற்குக்கூட பல திருமண மண்டப உரிமையாளர்கள் புனிதத்தைக் காரணம் காட்டி
அனுமதி மறுத்துவிட்டனராம்.


பெண்கள் கைம்பெண்களாவதும், வளைகுடா தொழிலாளர்கள் தற்கொலை செய்வதும்
நாளிதழ்களின் செய்தியலைகளில் ஒதுங்கிவிட்ட இருபிரிவினரின் வாழ்க்கை மட்டுமல்ல.
அதன் சங்கிலித் தொடர் வாழ்க்கையில் அல்லல் படும் மக்கள் ஏராளம் இருக்கின்றனர்.
தோல்வியும், விரக்தியும், சலிப்பும், சோர்வும் இன்னபிற சோகங்களையும்
ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு பழக்கப்படுத்தப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் “இந்தியா
முன்னேறுகிறது, வல்லரசாகிறது” என்று சொல்வது சிரமம் இல்லையே?
> என் அப்பா அடிக்கடி சொல்லும் நிகழ்வு இது ....காந்திஜியிடம் ,விதவைகள்
> மறுமணம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது ,அவர் "மனைவியை இழந்தவர்கள் மறுமணம்
> செய்யக்கூடாது "என்றாராம் .இதனால் கோபமான பாரதியார் ,"காந்தி மகானிடம் நாம்
> விதவைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு வழிகேட்டால் அவர் விதவர்கள் (இந்த சொல்
> எனக்கு சரியாக நினைவில்லை )எண்ணிக்கையை அதிகமாக்க வழி சொல்கிறார் ,"என்று
> எழுதினாராம் .இதை பாரதியார் கட்டுரை தொகுப்பில் காண முடியும் .


இருக்கும் பூங்குழலி.

நண்பர் ஒருவர் பதில் பாருங்கள்.


[[



> கணவனை இழந்த பெண்களை திருமணம் செய்த நாத்திக இயக்கத்தினரும், கலவரத்தில்
> பலாத்காரப்படுத்தப்பட்டு கணவனை இழந்த பெண்களை காந்தியின் கட்டளையின் பேரில்
> திருமணம் செய்த ஆத்திகரும் நம் நாட்டில் உண்டு.விதவை மறுமணம் குறித்து பாரதி
> நிறைய எழுதி இருக்கிறான். ]]
> நகரத்தில் மட்டுமல்ல சாந்தி ,சில கிராமங்களில் எப்போதும் இது இயல்பாக
> நடந்ததுண்டு .


ஒஹ்..

--
சாந்தி




Discussion subject changed to "[தமிழமுதம்] Re: இந்திய விதவை மாதருக்கு மறுவாழ்வு தருவது எப்படி ?" by Poongulali








Subject: Re: [அன்புடன்] Re: [தமிழமுதம்] Re: இந்திய விதவை மாதருக்கு மறுவாழ்வு தருவது எப்படி ?
Print | Individual message | Show original | Report this message | Find messages by this author
". நாட்டிலேயே விதவைகளின் விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகமாம்"


இதற்கு காரணம் நம் மாநிலத்தில் கணக்கு தெரிந்திருப்பதாக கூட இருக்கலாம் ...


உதிரிப் பாட்டாளிகள் அன்றாடம் பெறும் கூலியில் கணிசமான அளவை சாராயக்கடையில்
அள்ளிக் கொடுக்கின்றனர்
இது பல காலமாக நடக்கிறது சாந்தி..என் சிறு வயதில் என் அம்மா வீட்டில்
பணிபுரியும் பெண்கள் பலர் இப்பேற்பட்ட குடிகார கணவன்களால் அவதிப்பட்டதைக்
கண்டிருக்கிறேன் .அதில் ஒருவர் தன் கணவருக்கு வைத்த செல்லப் பெயர் "புட்டி ":)


புத்தாடை அணிந்தாலே மினுக்கிகிட்டுத் திரிகிறாள் என்று பேசுவதும், மங்கல
நிகழ்ச்சிகளில் ஒதுக்குவதும் இன்றும் சமூகத்தில் சாதாரணம்தான்.


என் பேஷன்ட் ஒருவர் தன் தம்பி கல்யாணத்தில் நகை அணிந்து கொண்டு நிற்க ..ஊரார்
கேலிப் பேச்சில் மனநோயாளியே ஆகிப் போனார் .


படித்து பட்டம் பெற்று தன்னம்பிக்கையோடு இல்லை குடும்ப ஆதரவோடு வாழும்
பெண்களின் நிலை பரவாயில்லை ...மற்றவர்களுக்கு பாலியல் தொல்லைகள் ,பொருளாதார
சிக்கல்கள் என்று ஏகப்பட்ட இன்னல்கள் .


பல வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வந்த கவிதை இது .
"விதவைகளுக்கும் பொட்டில்லை
விதவை என்ற சொல்லுக்கும் பொட்டில்லை "


இதற்கு அடுத்த வாரமே பதில் கவிதை வந்தது ,
"விதவைகளுக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்பதாலோ
கைம்பெண் என்ற சொல்லுக்கு இரண்டு பொட்டுகள் "


> விதவைகள் வாழ்வுரிமை இயக்கம் எனும் அமைப்பு துவங்கியுள்ள கலங்கரை என்ற
> தன்னார்வத் தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ள ஒரு ஐ.நா சபையின் ஆய்வுப்படி
> இந்தியாவில் 15 முதல் 59 வயதுவரை உள்ள பெண்களில் ஆயிரத்தில் 53பேர் விதவைகளாம்
> (குமுதம் ரிப்போர்ட்டர், 17.7.08). தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் இந்த
> விகிதம் நூற்றுக்கு ஏழுபேராம். அதன்படி ஆயிரத்திற்கு எழுபது பேர். நாட்டிலேயே
> விதவைகளின் விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகமாம். இந்த அதிக விதவை விகிதத்திற்கு
> என்ன காரணம்?
> தமிழ்நாடு குடிகாரர்களின் தேசமாக மாறிவருவதுதான் இந்த நிலைக்கு காரணம்.
> டாஸ்மாக் விற்பனையின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 9000 கோடி ரூபாய்
> வருமானம் வருகிறது என்றால் குடிப்பவர்களின் எண்ணிக்கையையும், குடியின் அளவையும்
> ஊகித்தறியலாம். நகரமயமாக்கம் உருவாக்கியிருக்கும் புதிய உடழைப்பு வேலைகள்
> காரணமாக உதிரிப் பாட்டாளிகள் அன்றாடம் பெறும் கூலியில் கணிசமான அளவை
> சாராயக்கடையில் அள்ளிக் கொடுக்கின்றனர். மிதமாக ஆரம்பிக்கும் குடிப்பண்பு
> பின்பு மிதமிஞ்சியதாக மாறி குடிக்கு அடிமையாக மாற்றிவிடுகிறது.


> எனவே இந்தப்பிரிவினர் 40, 50 வயதுகளில் கல்லீரல் கெட்டு மரணத்தைத்
> தழுவுகின்றனர். இம்மக்கள் பார்க்கும் கடின உழைப்பு வேலைகள் உடல் சோர்வை மறக்கக்
> குடித்தே ஆகவேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருப்பதும் உண்மைதான். குடிக்கும்
> நடுத்தரவர்க்கம் போதிய உணவை எடுத்துக்கொள்வதாலும், அவர்களுக்கு கடின உழைப்பு
> வேலைகள் இல்லை என்பதோடு குடியும் அளவுக்குட்பட்டு இருப்பதாலும் இளவயது மரணம்
> இவர்களிடத்தில் பொதுவில் இல்லை. ஆனால் உழைக்கும் வர்க்கமோ சத்தான உணவைச்
> சாப்பிட வாய்ப்பில்லாமலும், இருக்கும் காசை குடியில் கொட்டுவதாலும் மரணம்
> வாசலைத் தட்டுகிறது. ஆக திருமணம் ஆன பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகிறார்கள்.


> விதவைகள் மற்றவர்களைப் போல வாழ்வதும், மறுவாழ்வு பெறுவதும் இயல்பாக
> முடியுமென்ற நிலை இன்னும் வரவில்லை. விதவைகளைப் புறக்கணிக்கும் பிற்போக்குச்
> சமூகமாகவே தமிழகம் நீடிக்கிறது. புத்தாடை அணிந்தாலே மினுக்கிகிட்டுத்
> திரிகிறாள் என்று பேசுவதும், மங்கல நிகழ்ச்சிகளில் ஒதுக்குவதும் இன்றும்
> சமூகத்தில் சாதாரணம்தான். அவ்வளவு ஏன் மேற்கண்ட விதவைகள் சங்கம், கூட்டம்
> நடத்துவதற்குக்கூட பல திருமண மண்டப உரிமையாளர்கள் புனிதத்தைக் காரணம் காட்டி
> அனுமதி மறுத்துவிட்டனராம்.


> பெண்கள் கைம்பெண்களாவதும், வளைகுடா தொழிலாளர்கள் தற்கொலை செய்வதும்
> நாளிதழ்களின் செய்தியலைகளில் ஒதுங்கிவிட்ட இருபிரிவினரின் வாழ்க்கை மட்டுமல்ல.
> அதன் சங்கிலித் தொடர் வாழ்க்கையில் அல்லல் படும் மக்கள் ஏராளம் இருக்கின்றனர்.
> தோல்வியும், விரக்தியும், சலிப்பும், சோர்வும் இன்னபிற சோகங்களையும்
> ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு பழக்கப்படுத்தப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் “இந்தியா
> முன்னேறுகிறது, வல்லரசாகிறது” என்று சொல்வது சிரமம் இல்லையே?











> பல வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வந்த கவிதை இது .
> "விதவைகளுக்கும் பொட்டில்லை
> விதவை என்ற சொல்லுக்கும் பொட்டில்லை "


> இதற்கு அடுத்த வாரமே பதில் கவிதை வந்தது ,
> "விதவைகளுக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்பதாலோ
> கைம்பெண் என்ற சொல்லுக்கு இரண்டு பொட்டுகள் "



அருமை..

--
சாந்தி












தீபா மேத்தாவின்
வாட்டர் !
விதவைகளின் மறுவாழ்வு !


இவ்வார பீ.பீ.சி தமிழழோசை செய்திகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும்
33.000 விதவைகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. யாழ் குடாநாட்டை எடுத்துப்
பார்த்தால் இந்தத் தொகை மேலும் நெஞ்சங்களை நடுங்க வைக்கும். அலைகள் மூவீஸ்
எடுத்துள்ள இளம்புயல் திரைப்படம் விதவைகள் மறுவாழ்வு பற்றிய செய்திகளுடன்
திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் தீபா மேத்தாவினால் எடுக்கப்பட்ட
விதவைகள் மறுவாழ்வை குறிக்கும் வாட்டர் திரைப்படம் பற்றிய தகவல்களை இக்கட்டுரை
தருகிறது.


ஓரின பாலியலை விபரிக்கும் பயர், மற்றும் ஏர்த் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை
எடுத்த தீபா மேத்தாவினால் எடுக்கப்பட்ட படமே வாட்டராகும். உலகளவில் பலத்த
விவாதங்களை கிளப்பிய திரைப்படம் இதுவாகும்.


இந்திய, இலங்கைக் கலாச்சாரத்தில் திருமணமான பெண் கணவனை இழந்துவிட்டால் பாதி
இறந்தவளாகிவிடுகிறாள். அவளுக்கு மூன்று வழிகள்தான் இருக்கிறது. 1. கணவனின்
சிதையில் விழுந்து உயிர்விடுவது 2. கணவனின் தம்பியை மறுமணம் செய்வது 3.
மொட்டையடித்து வெள்ளைப் பிடவையுடன் எங்காவது ஒரு மடத்தில் நாட்களை கழிப்பது.
2000 ம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுசாஸ்திரம் என்னும்
நூல் பெண்களின் வாழ்வுரிமையை அடியோடு மறுத்ததை இந்தத் திரைப்படம் சுட்டிக்காட்ட
முற்பட்டது.


படப்பிடிப்பு ஆரம்பித்தவுடனேயே இந்து மத அடிப்படைவாதிகளும், இந்து
அமைப்புக்களும் பெரும் அடாவடித்தனங்களை கட்டவிழ்த்து விட்டன. படப்பிடிப்பு
கருவிகளை பறித்து கங்கையில் வீசினார்கள். இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே
தடைப்பட்டது. தொடர்ந்து தீபா மேத்தாவுக்கு கொலை மிரட்டல்கள் வந்தவண்ணமிருந்தன.
இதனால் இலங்கையில் படப்பிடிப்பை நடாத்தி ஆறு வருடங்களாக போராடி 2007ம் ஆண்டு
படத்தை திரைக்குக் கொண்டு வந்தார் தீபா மேத்தா.


முதலில் இந்தியாவில் திரையிடாமல் உலகின் மற்றய நாடுகளில் திரையிட்டு பெரும்
பாராட்டுக்களை பெற்றார். படத்திற்கு அடிப்படைவாதிகள் கொடுத்த எதிர்ப்பு பெரிய
விளம்பரமாக அமைந்த காரணத்தால் ஆஸ்கார் விருதுக்கு நியமனம் பெறும் வரை படத்தின்
பயணம் தொடர்ந்தது.


இப்படத்தின் கதை 1930 ம் ஆண்டில் நடைபெறுகிறது. படத்தின் கதை நாயகி
சுய்யாவுக்கு எட்டு வயது. தனக்கு நடைபெற்ற திருமணம் கூட நினைவில் இல்லாத வயது.
அவள் ஒரு கிழவனுக்கு மணம் முடித்து வைக்கப்படுகிறாள். அவள் கணவனான கிழவன்
மரணிக்கவே மொட்டை மழிக்கப்பட்டு மடத்திற்கு அனுப்பப்படுகிறாள். மற்ற
விதவைகளுடன் சேர்ந்து வாரணாசிப் பகுதியில் பக்திப் பாடல்களை பாடி பிச்சை
எடுக்கிறாள்.


மற்றவர் முன் விதவை தோன்றினால் அப சகுனம் என்று புறந்தள்ளப்படுகிறாள். அந்த
மடத்தின் தலைமை விதவையால் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட கல்யாணியை சந்திக்கிறாள்.
விபச்சாரத்திற்காக வேண்டி அவள் முடி வளர்க்க அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவள்
உதவியால் நாராயணன் என்ற விதவைகள் மறு மணத்தை வலியுறுத்தும் காந்தியவாதியை
சந்திக்கிறாள். அவனுடன் இணைந்து இந்து மதத்தின் மூடத்தனமான அடிப்படைக்
கொள்கைகளை எதிர்க்கிறாள். மற்ற விதவைகளும் மனு சாஸ்திரத்தை தூக்கி வீசிவிட்டு
அவளைப் போலவே மறுமணத்தை நாடுகிறார்கள்.


மதம், கட்டுப்பாடு, கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்கள் வாழ்வை தேங்க வைக்கக்
கூடாது. ஒரு காலமும் வாட்டர் தேங்கி நிற்கக் கூடாது. அது
ஓடிக்கொண்டிருப்பதுதான் புனிதமானது. விதவை வாழ்வானது பெண்களை தண்ணீர் போல தேங்க
வைப்பதால் எஞ்சுவது சமுதாய அவலமே என்று திரைப்படம் முடிவடைகிறது.


இந்தியாவில் மறு மணமின்றி வாடிக் கிடக்கும் 33 மில்லியன் விதவைகளே இதற்கு நல்ல
சாட்சியமாகும். வாட்டர் இந்துமதம் தரித்துள்ள போலியான கொள்கைகளுக்கு எதிராக
குரல் கொடுத்த காரணத்தால் உலகப் புகழ் பெற்ற திரைப்படமாக போற்றப்பட்டது.


இயக்குநர் - தீபா மேத்தா
இசை- ஏ.ஆர். ரகுமான்.
மொத்தம் 10 விருதுகள் பெற்றது. ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.
மேலும் 11 விருதுகளுக்கு அனுப்பப்பட்டது.


ஆதார நூல் - உலகைக் கலக்கிய திரைப்படங்கள்.










> விதவை வாழ்வானது பெண்களை தண்ணீர் போல தேங்க வைப்பதால் எஞ்சுவது சமுதாய அவலமே
> என்று திரைப்படம் முடிவடைகிறது.



சிறப்பான கருத்து.

இவர்களுக்கென்று சிறப்பு ஒதுக்கீடுகள் தரப்படணும்..


--
சாந்தி


இன்றைய தேதியில் பரவாயில்லை ..எத்தனையோ பெண்கள் விதவை என்பதற்கான அந்த வெள்ளை
உடையையாவது களைந்திருக்கிறார்கள் .பால்ய விவாகங்களும் தமிழ்நாட்டில் வெகுவாக
குறைந்திருக்கின்றன .என் அம்மாவின் ஆச்சி ,இருந்தார் .நான் கல்லூரி படிக்கும்
காலத்தில் அவருக்கு தொண்ணூறு வயது .நாற்பது வயதில் விதவையானவர் .அதோடு வெள்ளை
சேலை ,நகைகள் ஏதும் இல்லாமல் வாழ்ந்தவர்.இந்த தொண்ணூறு வயதில் தன்னை பார்க்க
வருபவர்கள் அணிந்திருக்கும் நகைகளை அணியக் கேட்பார் ,குறிப்பாக மோதிரம்
.என்னிடமும் ஒருமுறை ,சிறிது நேரம் அணிந்து விட்டு திரும்ப தந்தார் .என்ன வேதனை
,பாருங்கள் ....இப்படி எத்தனை ஆசைகள் தேக்கி வைத்திருந்தாரோ ?
2009/9/23 jmms



- Hide quoted text -
- Show quoted text -

> விதவை வாழ்வானது பெண்களை தண்ணீர் போல தேங்க வைப்பதால் எஞ்சுவது சமுதாய
>> அவலமே என்று திரைப்படம் முடிவடைகிறது.

> சிறப்பான கருத்து.


> இவர்களுக்கென்று சிறப்பு ஒதுக்கீடுகள் தரப்படணும்..


> --
> சாந்தி


> Forgiveness is to offer no resistance to life - to allow life to live
> through you


> http://punnagaithesam.blogspot.com/ =============================













You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.



jmms View profile
More options Sep 23 2009, 10:27 am

From: jmms
Date: Wed, 23 Sep 2009 12:27:19 +0700
Local: Wed, Sep 23 2009 10:27 am
Subject: Re: [அன்புடன்] Re: இந்திய விதவை மாதருக்கு மறுவாழ்வு தருவது எப்படி ?
Print | Individual message | Show original | Report this message | Find messages by this author
2009/9/23 Poongulali



> விதவை வாழ்வானது பெண்களை தண்ணீர் போல தேங்க வைப்பதால் எஞ்சுவது சமுதாய அவலமே
> என்று திரைப்படம் முடிவடைகிறது.
> நிதர்சனம் ....

ஊடகத்துறை

ஊடகத்துறையில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்போம்!
மதுரையில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை தொடக்க விழாவில் சூளுரை

மதுரை, மார்ச் 5_ தந்தை பெரியாரின் பகுத்-தறிவு, சமூக நீதிக் கருத்து-களை ஊடகங்களின் வாயிலாக பரப்புவதற்-காகத் தொடங்கப்பட்ட பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை அமைப்பை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உருவாக்க வேண்டும் என்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கட்டளை-யிட்டிருந்தார். அதன்படி மதுரையில் பெரியார் சுயமரியாதை ஊடகத்-துறையின் தொடக்க-விழாவும், கருத்தரங்கமும் பிப்ரவரி 7-ஆம் தேதி-யன்று மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்-தால் ஏற்பாடு செய்யப்-பட்டிருந்தது. மதுரை மூட்டா அரங்கில் நடை-பெற்ற இவ்விழாவிற்கு வருகை தந்திருந்தவர்-களை மாவட்ட ப.க. செயலாளர் பா.சட-கோபன் வரவேற்று உரை-யாற்றினார்.

குறும்படம் திரையிடல்

ஊடகத்துறையின் அவசியம் குறித்தும், சென்னையில் நடை-பெற்ற பெரியார் திரை குறும்படப்போட்டி உருவாக்கிய தாக்கம் குறித்தும் மாநில பகுத்தறி-வாளர் கழகத் தலைவர் வா.நேரு தனது தலைமை-யுரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து நீதிய-ரசர்(ஓய்வு) பொ.நடராசன் மற்றும் மாநில திராவி-டர் கழக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் கி.மகேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். பிறகு, 2002-இல் குஜராத் இந்துத்துவாவினரால் நடத்தப்பெற்ற இனப்-படுகொலை தொடர்-பாக, ச.பிரின்சு என்னா-ரெசு பெரியார் இயக்கிய திற குறும்படம் திரை-யிடப்பட்டது. அரங்கம் நிறைந்திருந்த நிலையி-லும், சலனம் ஏற்படாத அளவு, படம் பார்வை-யாளர்களிடம் தாக்-கத்தை ஏற்படுத்தியி-ருந்தது. பார்ப்பனர்களின் திட்டமிட்ட செயல்

திரையிடலின் நிறை-வில் படம் தொடர்பான விவாதமும் விளக்கமும் சிறிது நேரம் இடம்-பெற்றது. பெரியார் சுய-மரியாதை ஊடகத்துறை அமைப்பாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஊடகங்களும் பார்ப்பனி-யமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். பத்திரிகை, தொலைக்-காட்சி, திரைப்படம் மற்றும் இணைய ஊட-கங்களில் பார்ப்பனர்-களின் திட்டமிட்ட செயல்பாடுகள் எவ்-வாறு இருக்கின்றன என்பதை ஆதாரங்களுடன் விளக்-கினார். மேலும் தனது உரையில், ஊடகங்களில் என்ன செய்தி வெளிவர-வேண்டும் என முடிவு செய்யும் இடத்தில் உயர்-ஜாதியினரும் குறிப்பாக பார்ப்பனர்களுமே ஆதிக்கம் பெற்றுள்ளனர் என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. நம்மவர்களின் பல்லவியோ!

மக்களின் பொதுப்புத்-தி-யில் உலவ வேண்டிய கருத்தாக்கங்களை பார்ப்-பனர்கள் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். அதை உண்மையென்றும், நடுநிலையானதென்றும் நம்பி தங்களின் கருத்தாக பார்ப்பனரல்லாத மக்களும் ஏற்கின்றனர். இதனால் தான் இட-ஒதுக்கீடு, ஈழத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்திலும் பார்ப்-பனர்களின் கருத்துக்கு ஒப்ப படித்த பாமரர்-களான நம்மவர்களும் கருத்து கொண்டிருக்-கிறார்கள். தகுதிக்குதான் சார் மதிப்பு கொடுக்-கணும் என்று பார்ப்ப-னர்களின் பல்லவியை நம்மவர்களும் பாடுகி-றார்கள்.

திரைப்படத்துறை-யிலும் முற்போக்கு, சமூகப்பார்வை என்ற பார்வையில் பாலச்சந்தர், மணிரத்னம், சுஜாதா உள்ளிட்ட பார்ப்பனர்-களும், ஷங்கர் போன்ற கன்வர்ட்டட் பார்ப்ப-னர்களும் தூவியிருக்கும் விஷ விதைகள் தமிழர்-களை படுகுழியில் தள்ளியிருக்கிறது. எனவே பொது ஊடகத்துறையில் பெருமளவில் பங்கேற்க, பணியாற்ற நம் இளை-ஞர்களை உருவாக்கும் பணியைத்தான் தமிழர் தலைவர் அவர்கள் உருவாக்கிய பெரியார் சுயமரியாதை ஊடகத்-துறை செய்துவருகிறது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு ஊடகத்-துறையில் இருக்கும் பார்ப்பனிய ஆதிக்-கத்தைத் தகர்க்க முன்வர-வேண்டும் என்று தமி-ழின இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்து உரையாற்றினார். வாழ்க்கை இணைஏற்பு

பின்னர் பெரியார் திடலில் பணியாற்றும் சிவகங்கை மாவட்டம் கோவனூரைச் சேர்ந்த கண்ணன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த லெட்-சுமி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. மாநில ப.க. தலைவர் வா.நேரு, மதுரை மாவட்ட திராவிடர் கழக ஒருங்-கிணைப்பாளர் வே. செல்வம் ஆகியோர் முன்னிலையில் மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் கி.மகேந்-திரன் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை ஏற்கச்-செய்து இணையேற்பை நடத்திவைத்தார். சுயமரியாதைத் திருமண முறையில் வாழ்க்கை இணையேற்பு நடப்பதன் வரலாற்றுப் பின்ன-ணியையும் வாழ்வியல் சிறப்பையும் எடுத்துக் கூறி, பெரியார் கொள்-கைப்படி தமிழர் தலை-வர் இளைஞர்களுக்கு விடுத்த கட்டளைகளில் ஒன்றான மணவிலக்குப் பெற்ற மகளிரைத் திரு-மணம் செய்தல் என்ற அடிப்படையில் இணை-யேற்றிருக்கும் மண-மக்களை வாழ்த்தி உரையாற்றினார். விழாவில் தி.க. மாவட்டத் தலைவர் க. அழகர், மாவட்டச் செய-லாளர் திருப்பதி, மாவட்ட துணைத்-தலை-வர் அ. வேல்-முருகன், பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி மற்றும் எண்ணற்ற இயக்கத் தோழர்களும், இயக்கம் சாராத புதுமுகங்களும் பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி செயலா-ளர் விடுதலை ராசா நன்றி கூறினார். தொடர்ந்து மதுரையில் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் திரையிடல்களை நடத்து-வது என முடிவு செய்-யப்பட்டுள்ளது.