Thursday 9 May 2019

பாராட்டு பெற்ற கவிஞர் இளம்பிறை......

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா (29.4.2019) தமிழர் தலைவர் அவர்களால் பாராட்டு பெற்ற கவிஞர் இளம்பிறை (தன்குறிப்பு)


தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வைய கம் என்பதுதான், புத்தக வாசிப்பின் அரு மையை உணர்ந்தவர்களின் நிலை. இதைத் தான் விசாலப்பார்வையால் விழுங்கு மக் களை என்று புரட்சிக் கவிஞர் சொன்னார். வாசிப்பு என்பது ஒரு தனித்த இன்பம். அந்த இன்பம் பலரது துன்பத்தைத் தீர்க்கும் அருமருந்து. வாசிப்புத் தூண்டலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த சமுகம் நமக்கு எவ்வளவோ செய்துள்ளது. நாம் அதற்குத் திருப்பிச் செய்தது என்ன? ஒன்றுமே இலையென்றாலும், ஒரு நல்ல புத்தகத்தையாவது பிறர் வாசிக்கத் தூண்டி விடலாமே! அதனால் சமுகத்திற்கு ஒரு நல்ல படைப்பாளி கிடைக்கலாம்.

அப்படி உருமலர்ச்சி பெற்றுக் கிடைத்த கவிஞர்களில் ஒருவர்தான் கவிஞர் இளம் பிறை!



இவர் 1971 இல் பிறந்தவர். இயற்பெயர் ச.பஞ்சவர்ணம். பெற்றோர் சன்னாசி, கருப் பாயி ஆகியோரின் 5 ஆவது மகளாகப் பிறந்தவர்.. பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் சாட்டியக்குடி கிராமம். எளிய குடும்பத்தில் பிறந்து எம்.ஏ.பிஎட் பயின்றவர். தற்போது சென்னை அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டபிறகு இவர் தயங்காமல் எழுதிப் பார்த்திருக்கிறார். உரை நடை வசப்பட்டிருக்கிறது! தொடர்ந்து எழுதி யிருக்கிறார். கவிதையும் வசப்பட்டிருக்கிறது! சின்னச் சின்ன அங்கீகாரம் இவரை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டியிருக்கிறது.

புத்தகம் என்பது விதைநெல் போன்றது என்று புரட்சிக்கவிஞர் சொல்லியிருப்பதாக கவிஞர் இளம்பிறையே சொல்கிறார்.

இளவேனில் பாடல்கள், மவுனக்கூடு, நிசப்தம், முதல் மனுசி, பிறகொரு நாள், இவற்றின் மொத்தத் தொகுப்பு, நீ எழுத மறுக்கும் எனதழகு, அவதூறுகளின் காலம் போன்ற கவிதைத் தொகுப்புகளும் வனாந் திரப் பயணி, காற்றில் நடனமாடும் பூக்கள் போன்ற கட்டுரைத் தொகுப்புகளும் கவிஞர் இளம்பிறையால் எழுதப்பட்டிருக்கின்றன.

புத்தகம் விதைநெல் என்று சொன்னா ரல்லவா? அதன் விளைச்சல்தான் மேற் கண்ட படைப்புகள்.

தமிழக அரசின் சிறந்த பாநூல் பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, களம் இலக்கிய விருது, கவிஞர்கள் தின விருது, சேலம் தமிழ்ச்சங்கம் விருது, பாவலர் இலக்கிய விருது, சிற்பி இலக்கிய விருது, தனியார் மற்றும் அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும், பள்ளிக்கல்வியிலும் இவரது கவிதைகள் பாடங்களாக இடம் பெற்றுள்ளன. இவை யெல்லாம் விதைநெல்களின் விளைச்சலுக் குக் கிடைத்த பயன்கள்.

இப்படிபட்ட சிறப்புகளைப் பெற்ற கவிஞர் இளம்பிறை அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 129 ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் 40 ஆம் ஆண்டு தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சிவிழாவில், புரட்சிக் கவிஞர் விருது வழங்குவதில் பெருமகிழ்வு எய்துகிறோம்.

நன்றி :விடுதலை 07.05.2019

அண்மையில் படித்த புத்தகம் தலைப்பில்   நீ எழுத மறுக்கும் எனதழகு- இளம்பிறை கவிதைகள்.....
 கவிஞர் இளம்பிறை அவர்களைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் எழுதியது

https://vaanehru.blogspot.com/2013/09/blog-post_30.html