Thursday, 15 December 2016

கருஞ்சட்டை இயக்கத்தின் கம்பீரமான வணக்கமும், வாழ்த்துகளும்.....

கருஞ்சட்டை இயக்கத்தின் கம்பீரமான வணக்கமும், வாழ்த்துகளும்

நானும் எனது மகனும் மதுரையில் உள்ள திரையரங்கில் 'மாவீரன் கிட்டு ' படம் பார்த்தோம். உண்மையாக நடப்பவற்றை அப்படியே திரையில் காட்டும் படம். நாம் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய படம். மற்றவர்களை பார்க்கச்சொல்ல வேண்டிய படம். 'மாவீரன் கிட்டு ' படம் பற்றி 'விடுதலை'யில் வந்த தலையங்கம் இனி .......

‘மாவீரன் கிட்டு’ என்று கேள்விபட்டால், அது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தளபதிகளுள் ஒருவராக இருந்தவரின் பெயர் நினைவிற்கு வரக்கூடும்; அப்படி நினைத்து திரையரங்குக்குச் சென்றவர்கள் சற்று ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும்.

ஆனாலும் இன்னொரு கோணத்தில் மன நிறைவுடன் தான் திரையரங்கினை விட்டு வெளியே வந்திருப்பார்கள்.

இந்தப் பெயரில் ஒரு திரைப்படம் இயக்குநர் சுசீந்திரன் முத்திரையோடு வெளிவந்திருக்கிறது.

திரைப்படத்தின் உரையாடலைக் கவிஞர் யுகபாரதி தீட்டியிருக்கிறார். இவ்விரண்டு பேர்களுமே திராவிடர் கழகத்தால் பாராட்டப்பட்ட நமது இனத்தைச் சேர்ந்த பொறுக்கு மாமணிகள்!

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இன்னமும் தேநீர்க் கடைகளில் இரண்டு கிளாசுகள், செத்துப் போய் சுடுகாட்டுக்குச் சுமந்து செல்லும் பாதையில் ஜாதி வெறிக் கண்ணோட்டம், ஆணவக் கொலைகள் நடந்து கொண்டுதானே உள்ளன.

இந்த அசிங்கத்தை, ஆபாசத்தை, அறிவுக்குப் பொருத்தமற்ற அநாகரிகத்தை தத்ரூபமாக ‘எக்ஸ்ரே’ எடுத்துக்காட்டும் திரைப்படம் இது.

தங்களுக்கு மேல் உயர் வருணம் என்று கூறி கால் நீட்டிக் கொண்டிருக்கும் பேர் வழிகளின் கால் களைத் தங்கள் தலையில் சுமந்து நிற்கும் அவமரி யாதையைப்பற்றிச் சற்றும் பொருட்படுத்தாமல் தனக்குக் கீழும் தாழ் ஜாதியினர் இருந்தால், அது தனக்குக் கவுரவம் என்று கருதும் மனநோயாளிகளை மக்கள் மன்றத்தில் முகமூடியைக் கிழித்துத் தொங்கவிடும் திரைப்படம் இது! ‘சபாஷ்’ என்று ஒரு முறைக்குப் பலமுறை கைதட்டத் தோன்றுகிறது.

தாழ்ந்த ஜாதிக்காரர் - ஊர்த் தலைவர் என்று மெச்சத் தகுந்த ஒருவர் இறந்தபோது- அவர் உடலை தங்கள் வீதியாக சுமந்து செல்லக்கூடாது என்று தோள்தட்டி துடை தட்டி எழுந்தது மட்டத்தில் உசத்தியான ஒரு ஜாதிக் கும்பல்.

பிரச்சினை உயர்நீதிமன்றம் வரை சென்று முட்டுகிறது. பொது வீதியில் பிணத்தைத் தூக்கிச் செல்லலாம் என்பது உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!

நீதிமன்றம் சொன்னால் என்ன? ஜாதி வீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டுமே! காவல்துறை உதவி ஆய்வாளரே காக்கிச் சட்டைக்குள் ஜாதி வெறிப் பனியனை அணிந்துகொண்டிருக்கும் பேர்வழி!

பொது வீதியில் பிணத்தைத் தூக்கிச் செல்லலாம் என்பதுதான் நீதிமன்றத்தின் ஆணையே தவிர தாழ்த்தப் பட்டவர்கள்தான் தூக்கிச் செல்லவேண்டும் என்ற ஆணை இல்லையே என்று குதர்க்கமான வியாக்கியானத்தை தெரி விப்பவரும் அந்தக் காவல்துறை உதவி ஆய்வாளர்தான்.

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவன் சின்னராசு அதற்குக் கூட ஒப்புக்கொள்கிறார். பொது வீதியில் தாழ்த் தப்பட்டவரின் பிணம் செல்லுவது ஒரு வெற்றி- அந்தப் பிணத்தை அந்த மட்டத்தில் உசத்தி ஜாதிக்காரர்கள் தாங்களே தூக்கிச் செல்லு கிறார்கள் என்பது இன்னொரு வெற்றி! ஆக, ஒரு கல்லில் இரண்டு காய்கள் வீழ்த்தப்படுகின்றன.

அத்தோடு ஆதிக்க ஜாதிக்காரர்களின் கண்மூடித்தன திமிர் ஒடுங்கிவிட முடியுமா? ஊருக்குப் பேருந்து வருவ தால்தானே தாழ்த்தப்பட்டவன் எல்லாம் பள்ளிக்குச் செல்லு கிறான்? சட்டமன்ற உறுப்பினர் நல்லது செய்யாவிட்டலும் ‘கெடுதல்’ செய்வதன்மூலம்தானே அந்த மட்டத்தில் உசத்தி ஜாதியினரின் நன்மதிப்பைப் பெற முடியும்.

பேருந்து நிறுத்தப்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை நாயகன் சின்னராசும், பள்ளி மாணவர்களும், நிதி வசூல் செய்து பேருந்து ஒன்றுக்கு வழி செய்யப்படுகிறது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அதுவும் எரிக்கப்படுகிறது.

இதற்கிடையே மாணவன் கிட்டு - தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் - மாநிலத்திலேயே முதல் மதிப் பெண் பெற்று வருகிறார். மாணவர்கள் மத்தியிலும், பொதுவானவர்கள் மத்தியிலும் நல்ல பெயர்!

மட்டத்தில் உசத்தி ஜாதி மாணவியைப் பாம்பு கடித்தபோது 6 கல் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு மாணவர்கள் ஒத்துழைப்போடு தூக்கிச் சென்று உயிரைக் காப்பாற்றினாலும், அந்த மட்டத்தில் உசத்தி ஜாதியினர் என்ன சொல்லுகிறார்கள்! என் பெண் செத்தாலும் பரவா யில்லை; கீழ்ஜாதிக்காரன் எப்படித் தொட்டுத் தூக்கலாம் என்று மீசை முறுக்கித் துள்ளுகிறார்கள்.

மாணவன் கிட்டுமீது பொய் வழக்குகள், காவல் நிலை யத்தில் சித்திரவதை, இன்னோரன்ன அட்டூழியங்கள் ஒரு புறம். அந்த மாணவன்மீது அந்த மட்டத்தில் உசத்தி ஜாதிப் பெண் காதல் கொள்ளுதல் - இருவரும் ஈருடல் ஓருயிராகப் பழகிய தன்மை - இப்படியாக கதை ஓடிக் கொண்டிருக்கிறது விறுவிறுப்பாக!

ஒரு கொலை வழக்கில் அபாண்டமாகச் சிக்க வைத்து கிட்டுவை சிறையில் தள்ளவேண்டும் என்பது திட்டம்.  ஏனெனில் அவன் சிறப்பாகப் படித்துக் கலெக்டராக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறான். கொலை வழக்கில் சிக்க வைத்து சிறையில் தள்ளினால், அவன் அய்.ஏ.எஸ். படிக்க முடியுமா? இதனை அந்தக் காவல்துறை உதவி ஆய்வாளரே வெளிப்படையாகவே சொல்லும் நிலை!

இறுதியில் மாணவன் கிட்டு குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் தன்னையே மாய்த்துக் கொள்ளும் நிலை. அவனது பிண ஊர்வலத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொண்டு  அந்த மட்டத்தில் உசத்தி ஜாதிக் காரர்களின் தெருக்கள் வழியாகக் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்ட பாடையில் வைத்துத் தூக்கிச் செல்லப்படுகிறது.

சின்னராசாக நடிக்கும் பார்த்திபன் தொடக்க முதல் கடைசிவரை கருப்புச்சட்டையிலேயே காட்சியளிக்கும் கம்பீரம்! உரிமைக்கு உரத்த முறையில் குரல் கொடுக்கும் தன்மானம் - வீரம்!

ஜாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான தத்துவம் அந்தக் கருஞ்சட்டைக்குள் இருக்கிறது என்பதை உணர்த்தும் நோக்கும் - போக்கும் தந்தை பெரியார் அவர்களையும், அவர்கள் கண்ட கழகத்தையும் சமுதாயத்திற்கு அடை யாளம் காட்டுவதாகவே கொள்ளவேண்டும்.

சட்டமும், அதிகாரமும் ஜாதி வெறியர்களின் கைப் பாவையாக எப்படி சலாம் போடுகிறது என்பதை வெளிச்ச மிடும் அழுத்தமான உரையாடல்கள், அரிவாள் வீச்சாக இருப்பது தனிச்சிறப்பு!

குத்தாட்டமும், கும்மாளமும், அடிதடியும், ஆபாச இரட்டை வசனங்களும்தான்  சினிமாத்தனம் என்று ஆகி விட்ட ஒரு காலகட்டத்தில் சமுதாயத்தில் அடிப்படையான நோயின் மூல விக்கிரகத்தை சல்லி சல்லியாக உடைத்துச் சிதறடித்து, ஒரு சிந்தனைச் செழுமையைத் தீட்டும் இதுபோன்ற திரைப்படங்கள் காலத்தின் பசியை ஆற்றக் கூடிய அருமருந்து என்று சொல்லுவதுதான் சரியான மதிப்பீடாக இருக்க முடியும்!

தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள், திரைக்கதை உரையாடல், பாடல் ஆசிரியர்களுக்குக் கருஞ்சட்டை இயக்கத்தின் கம்பீரமான வணக்கமும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்!



நன்றி : விடுதலை 13.12.2016

Tuesday, 13 December 2016

அண்மையில் படித்த புத்தகம் : ஊரும் சேரியும் ----- சித்தலிங்கையா...தமிழில் : பாவண்ணன்

அண்மையில் படித்த புத்தகம் : ஊரும் சேரியும்
கன்னட மொழியில்          : சித்தலிங்கையா
தமிழில்                    : பாவண்ணன்
வெளியீடு                   : புத்தா வெளியீட்டகம், 3, மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலிபாளையம்,கோயம்புத்தூர்-641 015
வெளியிட்ட ஆண்டு          : டிசம்பர் 2004, 144 பக்கங்கள், விலை ரூ 60
மதுரை மைய நூலக எண்    : 155565

                       ஊரும் சேரியும் என்னும் இந்த நூல் கன்னட நூல் .  சித்தலிங்கையாவால் எழுதப்பட்ட தலித் சுயசரிதை. " கடந்த இருபது ஆண்டுகளாக கன்னடச்சூழலில் கவிஞராகவும் சமூகப்போராளியாகவும் அறியப்பட்டு வருபவர் சித்தலிங்கையா(3.12.1954).பெங்களுர் பல்கலைக்கழகத்தில் கன்னடத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகளும் மூன்று நாடகங்களும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் இவரது பிற படைப்புகள். இவருக்கு முனைவர் பட்டத்தைத் தேடித்தந்த நாட்டுப்புறக்கடவுள்கள் பற்றிய ஆய்வேடு இன்றளவும் ஆய்வுலகத்தில் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இரண்டாம் முறையாகச்சட்ட மேலவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். தலித் சுயசரிதைகளுக்குக் கன்னட இலக்கிய உலகில் முக்கிய இடமுண்டு.ஊரும் சேரியும் தொடராக வந்த சமயத்திலேயே பெரிதும் வரவேற்கப்பட்ட படைப்பு . ஏழ்மையும் போர்க்குணமும் நிறைந்த தலித்துகளின் வாழ்வை, குறும்பும் கிண்டலும் மிகுந்த தொனியில் தன் சுயசரிதையில் முன்வைக்கிறார் சித்தலிங்கையா. புதைந்த காற்று மூலம் கன்னடத் தலித் படைப்புலகைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய பாவண்ணன் தற்சமயம் ஊரும் சேரியும் நூலை மொழிபெயர்த்துள்ளார்"- இது இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் உள்ள வாசகங்கள்.

 இந்த நூலினை மொழிபயர்க்க வேண்டிய எண்ணம் எப்படி ஏற்பட்டது என்பதனை மொழிபெயர்ப்பு எழுத்தாளர் பாவண்ணன் 'வலியின் சுவடுகள் ' என்னும் தலைப்பில் " இந்த தேசத்தில் இன்னும் கல்வியை எல்லோருக்கும் கிட்டக்கூடிய ஒன்றாக உருவாக்க இயலாததற்கான காரணங்களில் , வறுமையும் ஒன்றெனச்சொல்லலாம். இந்த வறுமைக்கொடுமையோடு  சாதிக்கொடுமையும் சேர்ந்துகொள்ளும்போது இயலாமையும் ஆற்றாமையும் இன்னும் தீவிரமடைகின்றன. வறுமைக்கான காரணத்தையும் சாதிக்கான காரணத்தையும் என்னவென்றே அறியாத ஓர் இளம்நெஞ்சம் இக்கொடுமைகளிடையே உழல நேரும்போது படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. மிகச்சாதாரணமாக் கிடைக்கக்கூடிய ஒரு பொருள்கூட இந்த இரண்டு காரணங்களால் சின்னஞ்சிறுவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது மிகப்பெரிய கொடுமை. இத்தகு சூழலில் அங்குலம் அங்குலமாக நகர்த்தும் எதிர்ப்புகளை விவேகமுடன் எதிர்கொண்டும் இவர்கள் முன்னேறி வரவேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தை அனைவரும் அறியத்தரவேண்டியது அவசியம் என்கிற என்ணம் தான் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதை மொழிபெயர்க்கத் தூண்டியது " எனச்சொல்கின்றார். (பக்கம் 8)

            இந்த நூல் புனைவு இல்லை, சிறுகதைத் தொகுப்பு இல்லை , திரு.சித்தலிங்கையா அவர்களின் சுயசரிதை. ஆனால் அவரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அவர் விவரிப்பது ஒவ்வொரு நிகழ்வும் ஒரு சிறுகதை போல இருக்கிறது. அதனால்தான் முன்னுரையில் பாவண்ணன் '. எந்த இடத்திலும் அரற்றல் இல்லை. ஆவேசம் இல்லை. தன்னிரக்கமும் இல்லை.இது இந்த நூலின் மிகப் பெரிய பலம். ஒவ்வொரு பகுதியிலும் தெளிவு இருக்கிறது. குறும்பும் சிறுநகையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இழைபோடுகின்றன. தன்னம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு அனுபவத்தையும் கலைத்தன்மையோடு முன்வைக்கும் ஆற்றல் இருக்கிறது. இந்த ஆற்றலே இச்சுயசரிதையை மிகமுக்கியமான நூலாகக் கருதவைக்கிறது' எனச்சொல்கின்றார் .உண்மைதான்.

          இந்த நூல் முதலில் புத்தா வெளியீட்டகத்தின் பதிப்புரை என ஆரம்பித்து , மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை, 5 பகுதிகளாக அமைந்த சித்தலிங்கையாவின் சுய சரிதை,  ' ஏழைகளின் சிரிக்கும் சக்தி ' எனத்  தலைப்பிடப்பட்ட .டி.ஆர். நாகராஜ் என்பவர் எழுதிய பின்னுரை, சுயசரிதையில் வரும் சிலரைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய குறிப்புகள், முடிவில் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு என்பதாக முடிகின்றது.
            பகுதி ஒன்று - 'சேரியின் கடைசி வீடு எங்களுடையதாகும் ' என்று ஆரம்பிக்கும் இப்பகுதியின் முதலிரண்டு பக்கங்களிலேயே, 'ஐயரின் நிலத்தில் இரண்டு பேர் தம் கழுத்தில் நுகத்தடியை சுமக்க ஒருவன் கலப்பையை அழுத்தி உழுது கொண்டிருந்தான். நுகத்தடியைச்சுமந்த இருவரும் எருதுகள் போலச்சென்றுகொண்டிருக்க , மூன்றாவது ஆள் பின்னால் இருந்த உழுத அக்காட்சி ஏதோ மாயாஜாலக் காட்சியைப்போல இருந்தது. ஆனால் நுகத்தடியைச்சுமந்த இருவரில் ஒருவர் எனது தந்தை என்று தெரிந்தபோது என் மனத்தில் இனம் புரியாத வேதனை பரவியது ' என்று சொல்கின்றார். இந்த வேதனையும் எதார்த்தக் கொடுமைகளும் அவலங்களும் நூல் முழுக்க பரவிக்கிடக்கிறது. ஆனால் அதனை சொல்லும்விதத்தில் இருக்கும் நையாண்டித்தனமும் அதனைத் தாண்டி நிற்கும் உள்வேதனையும் உளக்குமுறலும் படிக்கும் எவரையும் உருக்கும்.பிராமணர் வீட்டில் எஞ்சிய சாப்பாடு, ..,மண்டெஸ்வாமியின் பரம்பரை,மாரியம்மன் கோவிலில் 'மாரியம்மன் ' வந்து இறங்கும் தனது பாட்டியைப் பற்றிச்சொல்லும் 'நற நறவென்று பல்லைக் கடிக்கும் ஜல்தகெரே அம்மா ' ,உடைந்து போன நட்பின் அடையாளமாக தனித்தனியாகக் கிழித்து மீண்டும் தொங்கவிடப்பட்ட நண்பர்களின் புகைப்படைக்கதையையும் அப்பா செல்ல ஏரிட்ட 'போலீஸ் ஸ்டேசன் ' பற்றிச்சொல்லும் 'கந்தர்வ உலக லம்பாணிகள் ', ...'கணவன் மனைவி சண்டையின் முதல் பாடம் ' என அவரின் வீடு, தெரு, அவரின் பரம்பரை, சுற்றி இருக்கும் உறவினர்கள் , அவர்களின் சூழல், அவர்களின் கடவுள், நம்பிக்கை போன்ற பல செய்திகளை சொல்லும் பகுதியாக பகுதி ஒன்று இந்தப்புத்தகத்தில் இருக்கிறது.

         பகுதி இரண்டு- தனது கிராமமான மஞ்சணபெலேயில் இருந்து பெங்களூரின் சிறீராமபுரம் குடிபெயர்ந்தது பற்றியும் அதன் வாழ்க்கை பற்றியும் பேசுகிறது. பகுதி இரண்டு தொடங்கியவுடனேயே சொல்லும் 'ஆட்டுக்கார சாமி' நல்ல ஈர்ப்பான செய்தி . 'பக்கத்து ஊரில் வசித்து வந்த ஒருவன் மேல் சாமி வருவதுண்டு. மக்கள் அதை 'ஆட்டுச்சாமி' என்று அழைப்பதுண்டு.சாமி வந்ததுமே அவன் 'ஆடு ஆடு ' என்று கூச்சலிடுவான். பக்தர்கள் பயத்தோடு 'எந்த ஆடு தாயே ?' என்று கேட்பார்கள். அப்போது 'ஏதாவது ஒரு ஆடு ' என்று சாமி சொல்லும். ஓடிச்செல்லும் பக்தர்கள் ஏதாவது ஒரு ஆட்டைப்பிடித்து வந்து சாமியின் முன் நிறுத்துவார்கள். சாமி உடம்பிலிருந்து விலகியபிறகு பூசாரியும், பக்தர்களும் கூடி ஆட்டை வெட்டிச்சமைத்து நன்றாகச்சாப்பிடுவார்கள். ஆட்டை இழந்தவர்களாலோ வெளிப்படையாய் எதையும் சொல்லவும் முடியாது. விருந்துக்குச்சென்று அனுபவித்து சாப்பிடவும் முடியாது. மறுத்துப்பேசினால் தெய்வக்குற்றம் நேர்ந்துவிடுமோ என்கிற பயம். ஒருமுறை சாமி வந்து 'ஆடு ஆடு' என்று கூச்சலிட்ட சமயத்தில் என் மாமாவும் அங்கே இருந்தார். சுற்றி இருந்த பக்தர்கள் அக்கம்பக்கத்தில் சட்டென்று கைக்கு கிடைத்த ஆட்டைப்பிடித்துக்கொண்டுவந்து நிறுத்தினார்கள். எதற்காகவோ,'இந்த ஆடு எனக்கு வேணாம், வேறு ஆடு கொண்டாங்க ' என்றது சாமி. மக்களைப் பயம் சூழ்ந்தது.தங்களால் ஏதாவது பிழை நேர்ந்திருக்குமோ என்று கவலை கொண்டார்கள்.'எதற்காக சாமி வேணாம் ? ' என்று தாழ்மையோடு கேட்டார்கள். 'தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவேண்டும் ' என்று கெஞ்சிக்கேட்டுக்கொண்டார்கள். சாமி எந்த வார்த்தைக்கும் மசியவில்லை. 'இந்த ஆடு வேணாம்ன்னா வேணாம்தான் ,' என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கிற மாதிரி சாமி கறாராய்ச்சொல்லி விட்டது. பிரச்சனைக்கு முடிவில்லாமல் போனது. ஊர்க்காரர்களைப் பார்த்த மாமா 'இந்த ஆடு யாருது ' என்று கேட்டார். ஊர்க்காரர்கள் இதைப் பற்றி யோசித்தேயிருக்கவில்லை. அந்த ஆட்டை நன்றாக உற்றுப்பார்த்து அடையாளம் கண்டுபிடித்த ஒருவன் ' இது சாமி வந்து ஆடுற பூசாரிக்குச்சொந்தமான ஆடு ' என்றான். 'இது பூசாரியுடைய ஆடு அதனாலதான் வேணாங்கறான் ' என்பது ஊர்க்காரர்களுக்குப் புரிந்தது.சாமி வருகிற விஷயமெல்லாம் ஆட்டுக்கறி தின்பதற்காகப் போடுகிற நாடகம் என்று புரிந்துவிட்டது. இதற்குமுன்பு ஆட்டைப் பலி கொடுத்தவர்களெல்லார்க்கும் கோபம் தலைக்கேறி விட்டது. சாமி வந்து ஆடிய பூசாரிக்குச்செமத்தியாய் உதை கிடைத்தது. அன்றிலிருந்து ஆட்டுச்சாமியின் தொல்லை நீங்கியது ". (பக்கம் 31) இந்தப் பகுதியில் சாமி, பேய்களின் தொல்லை பற்றியும் , மனைவியின் தொல்லை பற்றியும் எழுதிச்செல்லும் செய்திகள் எல்லாம் புனைவுகளில் கூட கிடைக்க அரிதான செய்திகள். சொற்பொழிவாற்றக் கற்றுக்கொண்டதைப்பற்றியும் அதனால் தனக்கு ஏற்பட்ட மரியாதை பற்றியும் பயிற்சி பற்றியும் எழுதுவது கிண்டலோடு கூடிய உற்சாகம் தரக்கூடிய செய்திகள்....
                                                                                                               ( தொடரும் )


Saturday, 10 December 2016

இறை மறுப்பாளர் ,பன்முக ஆளுமை வா.செ.குழந்தைசாமி மறைந்தார்....

பன்முக ஆளுமை வா.செ.குழந்தைசாமி மறைந்தார்
(மணிவண்ணன் மணி ,கணினித் தமிழ் வல்லுநர் , எழுத்தாளர்)

அவரது கணீரென்ற குரல். துல்லியமான சிந்தனை. அதைப் பேச்சிலும் கொண்டு வரும் திறமை. பண்டைக்காலப் பேரரசர்களின் ஆணைகளை அமைச்சர்கள் இப்படித்தான் அறிவித்திருப்பார்களோ என்ற மிடுக்கு. இப்படித்தான் அவர் எனக்கு அறிமுகமானார்.
அவரது மேடைப்பேச்சைப் பார்வையாளானாக இருந்து கற்றுக் கொண்டேன். பின்னால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
இறை மறுப்பாளர்
"துணைவேந்தர்களுக்கெல்லாம் துணைவேந்தர்" என்று அவர் மீது பேரன்பு கொண்டிருக்கும் பேராசியர்களால் பாராட்டப்பட்ட பெரியவர், என்னிடம் சமமாக அமர்ந்து வாதாடுவார். அப்படி வாதாடும்போதும் அவரது மிடுக்கு குறையாது. இருந்தாலும் அவரிடம் உரிமையுடன் பேச முடியும் என்ற வரவேற்பு இருந்தது. பெரியாரின் மீது ஈடுபாடு கொண்டு இறுதி வரை இறை மறுப்பாளராகவே வாழ்ந்தவர்.
ஆணையிட்டுத் தம் கொள்கைகளைத் திணிப்பதைக் காட்டிலும் ஏரணத்துடன் ( Logic) தம்முடன் மாறுபட்டவர்களை மாற்றலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருடையது.
நீண்ட சாதனைப்பட்டியல்
அவருடைய சாதனைப்பட்டியல் நீண்டது. கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் 1929 இல் பிறந்தவர். தமிழ்வழி அரசுப்பள்ளிகளில் படித்தவர். அப்போதெல்லாம் அவர் போன்ற மாணவர்களுக்கு இருந்த வாய்ப்புகள் மிகக் குறைவு. வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் உயர்ந்த அவர், தம் வேர்களை மறக்கவேயில்லை.
நீர்வளத்துறை வல்லுநரான பேரா. குழந்தைசாமி கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றபின் ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் மேற்படிப்பைத் தொடர்ந்தார். ஜெர்மனியில் அவர் படித்த போது ஜெர்மனி மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீவிரமான அலசல்கள் நடந்து கொண்டிருந்தன. ஏற்கனவே பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை ஆதரித்திருந்த பேரா. வா.செ.கு.வுக்கு தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய புதிய எண்ணங்கள் பலவற்றுக்கு விதை அங்கேதான் விழுந்தது.
தொடர் துணை வேந்தர்
அமெரிக்காவின் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் நீர்வளத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நீர்வளத்துறை ஆய்விலக்கியத்தில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. பிறகு தமிழகம் திரும்பி சென்னை கிண்டி பொறியியற் கல்லூரியில் பல ஆண்டுகள் பேராசிரியராக ஆய்வுப்பணி, கற்பித்தலை மேற்கொண்டார். தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பொறுப்பை அவர் ஏற்றபோது ஆசிரியர் பணியிலிருந்து கல்வி மேலாண்மைப் பணிகளுக்கு மாறினார். உடனடியாகவே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார் (1978-79).
பழம்பெரும் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து பொறியியல் தொழில்நுட்பக்கல்லூரிகளைப் பிரித்துத் தொடங்கிய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அவர் துணைவேந்தரான போது (1981), இது பெயர்பெறுமா என்ற ஐயம் இருந்தது. மூன்று முறை தொடர்ந்து அண்ணா பல்கலையின் துணைவேந்தராக இருந்து அது உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் என்று பெயர் பெறும் அளவுக்கு அதை வளர்த்தார்.
தொடர்ந்து இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகத் தலைமை ஏற்று (1990-94) அந்த நிறுவனத்தையும் செழுமைப்படுத்தினார்.
தமிழ் கற்கும் குழந்தைகள் (கோப்புப்படம்)Image copyrightGETTY IMAGES
இலக்கியப் பணி
பேரா வா.செ.கு. பெருந்தமிழறிஞர் தேவநேயப் பாவாணரிடம் தமிழ் கற்றதைப் பெருமிதத்துடன் சொல்வார். அந்தத் தமிழ் ஈடுபாட்டை வாழ்நாள் முழுதும் தொடர்ந்தார்.
கவிஞர் குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதைகளை எழுதினார். எண்ணற்ற கட்டுரைகளை அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, இலக்கியம் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்தார். அவரது "அறிவியல் தமிழ்", "வாழும் வள்ளுவம்", "உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ்" ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1980 ஆம் ஆண்டு இவரது தமிழ்த்தொண்டுகளைப் பாராட்டிக் கௌரவ முனைவர் பட்டமளித்தது.
தமிழ் இலக்கியப் பணிகளுக்காக 1988 இல் சாகித்ய அகாடமி விருது பெற்ற இவருக்கு, கவிதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைகளுக்காக 1999 ஆம் ஆண்டு தமிழக அரசு திருவள்ளுவர் விருது வழங்கியது.
தமிழைச் செவ்வியல் மொழியாக இந்திய ஒன்றிய அரசு அறிவித்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் இவரது தொண்டிற்காக 1992 இல் பத்மஸ்ரீ விருதையும் 2002 இல் பத்மபூஷன் விருதையும் பெற்றார். இந்தியாவிலும் ஏனைய காமன்வெல்த் நாடுகளிலும் நெடுந்தொலைக் கல்வி, திறந்த நிலைக்கல்வி ஆகியவற்றுக்கு இவரது தலைமையையும் தொண்டையும் பாராட்டி 1999 இல் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு விருது வழங்கியது.
பன்னாட்டு அளவில் நீர்வளத்துறையில் பல பொறுப்புகளை ஏற்றுப் பணிபுரிந்தார். பல ஆய்வுக்குழுக்களிலும், திட்டக்குழுக்களிலும் தலைமை வகித்தார். சென்னை ஆசியக் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.
''தமிழர்களின் அடையாளம் தமிழால் மட்டுமே ''
உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழர்கள் தம் அடையாளத்தைத் தமிழ் மொழியின் மூலம் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த நோக்கத்தில் தமிழைப் புலம்பெயர்ந்த தமிழர்களும் எளிதாகக் கற்கத் தமிழ் எழுத்துகளைச் சீரமைக்க வேண்டும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகப் போராடினார்.
கணினித் தமிழ் தமிழ்நாட்டில் வேரூன்றத் தொடங்கும்போது தமிழக அரசு நாடிய குறிப்பிட்ட சில தலைவர்களில் ஒருவர்.
இணையம் வழியாகத் தமிழைக் கற்பிக்க நிறுவிய தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நிறுவனத் தலைவராக வழி காட்டினார்.
தமிழில் உயர்மட்ட அறிவியலும் தொழில்நுட்பமும் கற்பிப்பதில் பெருமுனைப்பு கொண்டு பல முயற்சிகளைத் தொடங்கினார். பல துறைகளின் ஆங்கிலக் கலைச்சொற்களைத் தொகுத்து அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்த பெரும்பணியை இவர் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் செயல்படுத்தினார்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்த முயற்சிகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை. அவர் வாழ்நாளில் பெரும்பகுதி எழுத்துச் சீர்திருத்தத்துக்கான போராட்டம்தான். அதனால் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் என்றாவது ஒரு நாள் நான் அவரது எழுத்துச் சீர்திருத்தக் கோட்பாட்டின் தேவையையும், ஏரணத்தையும் புரிந்து கொண்டு ஏற்பேன் என்பார்.
எழுத்துச்சீர்திருத்தத்தைச் "சீரழிப்பு" என்று நான் சொல்வதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே அது மேடைப்பேச்சு rhetoric, வருங்காலத்தில் தமிழர்கள் முன்னேறுவதற்குத் தமிழெழுத்தே தடையாக இருக்கிறது என்பார். பல நிறுவனங்களை நிறுவி, நிலைநாட்டி வெற்றிப்பாதையில் கொண்டு சென்ற தலைவர். அவரைப் போன்ற தொழில்நுட்ப, மேலாண்மைத்தலைவர்கள், இவ்வளவு ஆழமாகத் தமிழையும் கற்று எழுதுபவர்கள் இல்லவே இல்லை எனலாம். தமிழர்களின், தமிழ்மொழியின் வருங்காலம் பற்றித் தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்த அவரது மறைவு ஈடு செய்ய இயலாத இழப்பு.

நன்றி : பி.பி.சி. தமிழ் - 10.12.2016
அய்யா வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கு வீரவணக்கம்.

Wednesday, 7 December 2016

கால்கள் (பகுத்தறிவு) இருக்கும்போது தேவையற்ற ஊன்று கோலை (கடவுள் நம்பிக்கை) ஏன் பிடித்துச் செயற்கையாக நடந்து அல்லல் படுகிறீர்கள்?....


கால்கள் (பகுத்தறிவு) இருக்கும்போது தேவையற்ற ஊன்று கோலை (கடவுள் நம்பிக்கை) ஏன் பிடித்துச் செயற்கையாக நடந்து அல்லல் படுகிறீர்கள்?




அறிவியல் சிந்தனைகள் 15. கல்லறையில் கடவுள்! புதை குழிக்குள் ஆத்மா!


19 ஆம் நூற்றாண்டு அறிவியல் சாதனைகளை நிகழ்த்தி, மக்கள் அடிப்படையில்கொண்டிருந்த பல மூட நம்பிக்கைகளை ஆட்டங் காணச் செய்தது!

அதற்கு வழிவகுத்தவர் சார்லஸ் டார்வின் ஆவார். பரிணாம வளர்ச் சியின் மூலம்தான் மனிதன் இன்றைய நிலையில் உருவானான். இது ஆண் டவனின் படைப்பு அல்ல என்று கூறி, கர்த்தர் சிருஷ்டித்தார் என்ற கற்பனையை உடைத்தார்!

அறிவியலின் வேகம் இருபதாம் நூற்றாண்டில் மிக அதிகமாகச் சென்றது. 20 ஆம் நூற்றாண்டு ஒரு கண்டுபிடிப்பு யுகமாகும். (Age of Discovery) 21 ஆம் நூற்றாண்டு, கண்டுபிடிப் புகளை மேலும் செம்மையாக்கி, அத னைப் பக்குவப்படுத்தி மனிதகுலம் பயன்பெறும் நூற்றாண்டாகவே மிளிரப் போகிறது என்பது அறிவியலார் கணிப்பு ஆகும்.

கடவுள் கற்பனையின் மரண ஓலம் துவங்கியதோடு, அதன் அண்ணனான ஆத்மா கற்பனையும் ஆடிப்போய் - ஓடிப்போய் மறைந்து விட்ட நூற்றாண்டு ஆகும்!

அதற்கானஆதாரங்களைவிளக் கினால் பெரிய நூல்களே கூட எழுத வேண்டியிருக்கும் - வந்தும் உள்ளன! ‘‘கடவுளின் இறுதி ஊர்வலம்‘(God’s Funeral)  என்ற நூல் ஒன்று 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளி வந்துள்ளது. A.N.Wilson  என்பவர் எழுதி யுள்ளார்.

அதுபோலவே அறிவியல் புரட்சி எந்த எல்லைக்குச் செல்லும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் என்பதை ‘‘மிச்சியோ காக்கூ’’ என்ற ஜப்பானிய அமெரிக்க விஞ்ஞானி  Visions”என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

‘‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ நாளேட் டின், அறிவியல் பகுதியான Science Express --இல்  “Scientists find the essence of Life” ‘‘



‘‘அறிவியலார் மனித வாழ்க்கை உற்பத்தியின் அடிப்படைகளைக் கண்டு பிடித்துவிட்டனர்’’ என்ற தலைப்பில் மிக ஆதாரப்பூர்வமான அறிவியல் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

இவைகளுடன் அறிவியல் வான வியல் விஞ்ஞானியான கார்ல் (Carl Sagan)

- அண்மையில் தான் மறைந்தார் “The Demon – Haunted World”

என்ற ஓர் அரிய விஞ்ஞான நூலில் பக்கம் 32-இல் ஓர் அருமையான தகவலைத் தந்துள்ளார்.

“Spirit” comes from the latin Word “to breath”.

What we breath is air which is certainly matter, however thin.

Despite usage to the contrary, there is no necessary implication in the word “Spiritual” that we are talking of anything other than matter, of which the brain is made or anything outside the realm of Science”

தமிழாக்கம்:

‘‘ஸ்பிரிட்’’ என்ற சொல் லத்தீன் மொழிச் சொல்லாகும்; இந்த ‘ஸ்பிரிட்’ என்ற சொல்லிலிருந்துதான் ‘‘ஸ்பிரிச்சுவல்’’ (Spiritual) என்ற சொல்லும் வந்தது.

இந்த ஸ்பிரிட் என்ற சொல் மூச்சை இழுத்து விடுவதைக் குறிப்ப தாகும். மூச்சு இழுத்துவிடுவது காற்று என்ற பருப்பொருள் மூலமே நடைபெறுவதாகும்.

எனவே சுவாசிப்பது என்பது Matter

ஆகும் என்பதால், அதை வைத்து ஆத்மா, ஆத்மீகம் - ஆன்மீகம் என்ற சொற்களை உருவாக்கி அதற்கு மாறுபட்டது போல் கூறுவது அறிவியல் ரீதியாகச் சரியானதுஅல்ல.”

1) சார்லஸ் டார்வினின்  Theory of Evolution

பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு, Origin of Species

உயிர்வகைகளின் தோற்றம் பற்றிய நூல், பைபிள் மற்றும் மூடநம்பிக்கைகளின் அஸ்தி வாரத்தையே அசைத்தது!

“Critics of the First Cause Theory have no difficulty in pointing out its inadequacies by asking what or who caused the First Cause?” As an explanation it is hopeless”



உற்பத்தி பற்றி பைபிளில் கூறப்பட்ட புரட்டு ஆட்டங்கண்டதால், மத உலகம் மருண்டது! வெகுண்டெழுந்து ‘வீர் வீர்’ என்று அலறியது! 1859 இல் - 19ஆம் நூற்றாண்டில்!

2) 1953இல் (இருபதாம் நூற்றாண்டில்) கேம்பிரிட்ஜில் வாட்சன்  என்பவரும், கிரிக் என்பவரும் (Watson and Crick’s theory of DNA)

இணைந்து கண்டுபிடித்த DNA

ஆய்வு, சார்லஸ் டார்வினும், வாலஸ்ஸும் இணைந்து நூறு ஆண்டு களுக்கு முன்பு துவங்கிய பணியில் இறுதிப் ‘பாராவை’ எழுதியது எனலாம்!

3) உயிர் வேதியியலின் விளக்கமாக, நோபல் பரிசு பெற்ற டாக்டர் கொரானா தன்னுடைய ஆய்வுக்கூடத்தில், பொதுவான பரிணாம வளர்ச்சியில், உயிர்ப் பொருளும், உயிரற்ற பொரு ளும் ஒரு படிநிலையில் உள்ளன என்றபோதிலும்,முறையானசூழ் நிலையில், ஓர் உயிரற்ற கரித் துண்டோ,உலோகத்துணுக்கோ ‘‘வைரஸ்’’ போன்ற உயிர்ப்பொருளாக மாறிவிடக்கூடும் என்று உணர்த்தினார்!

முற்றும் உயிரற்ற ரசாயனப் பொருள் களைக் கொண்டு, உயிர்ப் பொருளாகிய Gene  மூலக் கருவினைத் தயாரித்துக் காட்டினார்!

“கம்ப்யூட்டர் வைரஸ்” என்ற சொல் இப்போது உலகமெங்கும் புழக்கத்தில் வந்துள்ளதை நினைவுபடுத்திக் கொள் ளுங்கள்!

4) அமெரிக்காவில் -மேரிலண்ட் மாநிலத்தில் (இது வாஷிங்டன் D.C.

. க்கு பக்கத்தில் உள்ள மாநிலமாகும்) Institute ofGenomic Research (“TIGER”)

என்ற ஆய்வு அகத்தில் ஆராய்ச்சி செய்து, ஜீன்கள் என்ற மரபணுக்கள் 300 அய்க் கொண்டு உயிரினத்தை உற்பத்தி செய்யமுடியும் என்று காட்டியுள்ளனர்! இது மூடநம்பிக்கை உலகத்தினை பூகம்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கும் கண்டுபிடிப்பு ஆகும்! கடவுள் கற்பனைக்கு மரண அடி கொடுக்கப்பட்டுவிட்டது!

மிக மிகச் சிறிய கிருமியான உயிரின குச்சியத்தை (Bacteria)

ஆய்வுக் கூடத்தில் மைக்கோ பிளாஸ்மா ஜெனிடாலியம், ‘Mycoplasma Genetalium’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர்!

‘‘‘‘Science’’’ என்ற ஏட்டில் உள்ளபடி இந்தவிஞ்ஞானிகள்டாக்டர்கிரேக் வென்ட்டர் (Dr. Craig Venter), கிளேர் ஃப்ரேசர் (Dr. Clare Fraser)

ஆகிய இருவரும் இதுபற்றி விரிவான ஆராய்ச்சியின் மூலம் அதிர வைக்கும் சாதனையைச் செய்துள்ளனர்.

இதுவரை விஞ்ஞானிகளுக்குத் தெரியாத சுமார் 300 ஜீன்கள் என்ற மரபு அணுக்கள் இந்த மைக்கோ பிளாஸ்மா ஜெனிட்டாலியம் என்ற மிகச் சிறிய குச்சியத்தில் உள்ளதைக் கண்டுபிடித்து, செயற்கையான குச்சி யங்கள் (Artificial Bacterium)

மூலம் உயிரினத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று நிரூபித்துவிட்டனர்!

இதுபற்றி டாக்டர் வென்ட்டர் தெளிவாகக் கூறுகிறார்:

““It would clearly be creating a new species of life that does not exist. I think if we could go down to the point of truly understanding and having one of the formulas of life, and you have to understand that there are thousands of, if not millions of different formulas, it would be a profound break through”

“Once they get through the first barrier of creating life in the lab, scientists propose to use the molecular information to build an organism from Scratch from the basic chemicals upwards”

தமிழாக்கம்:

“இம்முறை, இதுவரை இல்லாத முற்றிலும் புதுவகையான உயிரினத்தை உருவாக்குவது ஆகும்.

இந்த“ஃபார்மூலா”மூலம் உயிரினத்தை புதுமையாக - ஆயி ரக்கணக்கில் (ஏன் மில்லியன் கணக் கில் அவைகள் உண்டு) உள்ள ஜீன்களிலிருந்து தேர்வு செய்து அறிவியலார் உருவாக்குகிறார்கள்.

இந்த விதிமுறைகளில் தேர்ச்சி பெற்றவர்களான விஞ்ஞானிகள் பரி சோதனைக் கூடத்திலேயே இம்மாதிரி உயிரினத்தை இனி எதிர்காலத்தில் உற்பத்தி செய்வார்கள்.

இனிமேல் அடிப்படை ரசாயனப் பொருள்களை வைத்துக்கொண்டே, வேறு எந்தப் பொருளின் துணையும் இல்லாமல் இதைச் செய்து காட்டும் வாய்ப்பு மிகுந்து விடும் என்று வென்ட் டர் கூறுகிறார்.”

‘குளோனிங்’ என்ற முறையில் ‘‘டோலி’’ என்ற ஆட்டுக்குட்டியை நகலாக, அசலிலிருந்துதான் முன்பு உற்பத்தி செய்து விந்தையான சாத னையைச் செய்தனர்.

அது மூலத்திலிருந்து (Original)  படிகள்  (Copics)எடுப்பதுபோன்ற ஒரு செயல்.

இதுவோ, உயிரற்ற குச்சியப் பொரு ளிலிருந்து உயிர்களை உருவாக்கும் சாதனை என்றால், இனி கடவுளுக்கு என்ன வேலை? கடவுள் கற்பனை என்று கூறும்போது அதற்கு மரணம் எப்படி நிகழ முடியும்? இப்படி ஒரு கடவுளின் மரணம் என்ற தலைப்புத் தந்துள்ளது முரண்பாடு அல்லவா என்று கேட்காதீர்கள்.

ஆதி மனிதர்கள் கடவுளை உற் பத்தி செய்தார்கள்; இப்போது புது மனிதர்கள் “கடவுளை” மரணப் படு குழியில் தள்ளிவிட்டனர். அந்த கற் பனைப் புரட்டு, மரண ஓலமிட்டுக் கொண்டே கல்லறைக்குள் செல்லும்படி வைத்துவிட்டனர்!

இவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் பரிசோதனைக்கூடங்களில் ஆய்வு செய்து கண்டறிந்தனர்! ஆனால், நமது அறிவு ஆசான் தந்தை பெரி யாரின் “மண்டைச்சுரப்பு” சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே “இனிவரும் உலகத்தில்” கடவுளுக்கு வேலை இல்லை என்று துல்லியமாகக் கணக் கிட்டு உலகுக்கு அறிவித்துவிட்டது என்னே அவரது ஒப்பற்ற சுய சிந்தனை!

அமெரிக்கப் பகுத்தறிவாளர் இராபர்ட் கிரீன் இங்கர்சால் மிக அருமையாகச் சொன்னார்.

““An honest god is the noblest work of man””

‘‘ஒரு யோக்கியமான கடவுள் என்பது, மனிதனின் உயர்ந்த படைப்பு.’’

21  ஆம் நூற்றாண்டில், அறிவியல் அதை அகிலத்திற்குப் பறைசாற்றுகிற நிலையில், இன்னமும் கடவுளை நம்பும் பரிதாபத்திற்குரியவர்களே, உங்கள் கால்கள் (பகுத்தறிவு) இருக்கும்போது தேவையற்ற ஊன்று கோலை (கடவுள் நம்பிக்கை) ஏன் பிடித்துச் செயற்கையாக நடந்து அல்லல் படுகிறீர்கள்?

ஊன்றுகோலை (Crutches)வீசி எறிந்து பீடு நடைபோடுங்கள். புது உலகம் காணுங்கள்!

கடவுளும், ஆத்மாவும் புதைகுழிக் குள் செல்லுவதைப் பார்த்துப் பூரியுங்கள் - இல்லையேல் குறைந்த பட்சம் புரிந்து கொள்ளவாவது செய்யுங்கள்.



திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நன்றி : விடுதலை 07.12.2016



Thursday, 1 December 2016

மதுரையில் உடல் கொடை -தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 84-ஆம் ஆண்டு பிறந்த நாள்(02.12.2016) விழா






மதுரை, டிச. 1- தந்தை பெரியா ருக்குப்பின் தந்தை பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகம் இருக்குமா? இயங்குமா? என அய்யம் எழுப்பியவர்களின் அய்யப்பாடுகள் எல்லாம் நீர்த் துப்போகும்வண்ணம் தந்தை பெரியாரின் கொள்கைகளை தமிழகத்தில், இந்தியாவின் பல மாநிலங்களில், பெரியார் பன்னாட்டு மய்யங்கள் மூல மாக உலகத்தின் பல நாடுகளில் கொண்டு சென்ற,  அய்யாவின் அடிச்சுவட்டில் தொய்வில்லா மல் தொடர்ந்து செல்லும் திரா விடர் கழகத்தின் தலைவர் தமி ழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்களின் 84-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் தொடக் கம் மதுரையில் உடல் கொடை வழங்கும் உறுதிப் படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி இந்திய செஞ் சிலுவை சங்கத்தோடு இணைந்த விழாவாக  30.11.2016 காலை யில் நடந்தது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழா வில் திராவிடர் கழக, பகுத்த றிவாளர் கழகப்பொறுப்பாளர் கள் ஏற்கனவே உறுதி மொழி படிவங்களை வாங்கி புகைப் படம் ஒட்டி, தங்கள் வாரிசு களிடம் கையெழுத்து பெற்று வாங்கி வந்திருந்த படிவங் களை மதுரை மருத்துவக் கல் லூரி முதல்வர் டாக்டர் வைர முத்துராஜாவிடம் வழங்கினர்.

விழாவில் கழக தலை மைச்செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா தனது தாயா ரின் உடலை, அவர் இறந்த வுடன் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு உடல்கொடையாக வழங்கியதையும், தான் பத் திரப்பதிவு அலுவலகத்திலேயே உயிலாக தனது உடல்கொ டையை பதிந்திருப்பதையும் எடுத்துக்கூறினார். விழாவினை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்த திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர், வே. செல்வம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பல்வேறு சிறப்புகளை  எடுத்துக்கூறினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு, மிகச்சிறந்த எழுத் தாளர், பேச்சாளர், பல்கலைக் கழக வேந்தர் எனப் பல பரி மானங்கள் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு இருந் தாலும் தந்தை பெரியாரின் தொண்டன் என்பதையே தனது அடையாளமாகக் கொள்பவர். தந்தை பெரியார் தந்த புத்தியே போதும் என்பவர்.வாழ்வியல் சிந்தனைகள் நூல்களில் தொடர்ந்து குருதிக்கொடை, விழிக்கொடை, உடல்கொடை, உடல் உறுப்புகள் கொடை பற்றி எழுதி வருபவர். அவரின் பிறந்த நாளில் அவர் கூறும் தொண்டறத்தின் அடிப்படை யில் இந்த உடல் கொடை வழங்குகிறோம் என்றார்.

திராவிடர் கழகத்தின் தலை மைச்செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா, மாநில அமைப் புச்செயலாளர் வே.செல்வம், மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முனைவர் வா.நேரு, திராவிடர் கழக மண்டலத் தலைவர்  அ.முருகானந்தம், மண்டலச்செயலாளர் மா.பவுன் ராசா, மதுரை மாவட்டத் தலைவர் சே.முனியசாமி, செயலாளர் அ.வேல்முருகன்,  இணைச்செயலாளர் ந.முரு கேசன்,பகுத்தறிவாளர் கழக மாவட்டச்செயலாளர் பெரி.காளியப்பன், கல்விக் கொடை வள்ளல் ஹார்விபட்டி இராம சாமி, மகளிரணி இராக்கு, சுமதி செல்வம், விஜயராணி, சுகுணா ஜெகதீசன், அண்ணா நகர் மணி ராசு, லோகேசு, பக லவன் ஆட்டோ தங்கராசு, போட்டோ இராதா, சிவா, ஜெக தீசன், மருத்துவர் சு.ச. அன்பு மதி, விராட்டிபத்து சுப்பையா, நல்லதம்பி, மதுரை இராம சாமி, ‘புத்தகத்தூதன்’ பா.சட கோபன், மாரிமுத்து, முனிச் சாலை மாரி,தங்கம்  உள்ளிட்ட தோழர்கள், தோழியர்கள்   உறுதி மொழிப்படிவங்களை வழங்கினர்.

ரெட் கிராஸ் சொஸைட்டி யைச்சார்ந்த குருதிக்கொடை மா.சோசு அவர்கள், பெரி யாரின் தொண்டர்கள் வாழ் வில் சிறப்பாகவும், எடுத்துக் காட்டாகவும் வாழக்கூடியவர் கள். சடங்குகளை முற்றிலுமாக புறக்கணிப்பவர்கள். தங்கள் குடும்பத்தினரையும் அப்ப டியே பக்குவப்படுத்துகிறவர் கள். மற்றவர்கள் 100 பேர் உடல்கொடை உறுதிப் படிவம் கொடுத்தால் அதில் 20 சதவீதம் தான் வரும். ஆனால் தந்தை பெரியாரின் தொண்டர்கள் கொடுக்கும் உடல்கொடை உறுதிப்பத்திரத்தின்படி 100க்கு நூறு சதவீதம் மதுரை மருத்து வக்கல்லூரிக்கு வரும் என்று உறுதி அளிக்கிறேன் என்று உரையாற்றினார்.  மதுரை மருத்து வக்கல்லூரி முதல்வர் டாக்டர் வைரமுத்து ராசு அவர்களின் அலுவலகத்திலேயே நடை பெற்ற விழாவில் அன்புடன் அனைவரையும் வரவேற்ற முதல்வர் டாக்டர் வைரமுத்து ராசு அவர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கி உபசரித்து, உடல் கொடை விழிப்புணர்வுக் காக தமிழக அரசின் சார்பாக பல்வேறு விழாக்களை நடத்து கின்றோம். அந்த வகையில் தானாக மனமுவந்து இவ்வளவு பேர் உடல் கொடை வழங்க முன்வந்தமை பாராட்டுக்குரி யது , மகிழ்ச்சிக்குரியது எனத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.விழாவில்  மதுரை மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வர், உடல்கூறியல் துறைத் தலைவர் மற்றும் மருத்துவக்கல் லூரி ஊழியர்கள்   ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த னர்.தோழர்களின் உடல் கொடை பற்றிய பல்வேறு சந்தேகங்க ளுக்கு பொறுமையாகவும் நிறை வாகவும் மதுரை மருத்துவக்கல் லூரியின் முதல்வர், துணை முதல்வர், துறைத்தலைவர் ஆகியோர் விளக்கமளித்தனர்.

நன்றி : விடுதலை 01.12.2016






Friday, 18 November 2016

திருமண விருந்தினரை சுட்ட பெண் சாமியார் கோர்ட்டில் சரண்....



திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி வேட்டுக்களை வானோக்கி சுட்ட பின்னர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த பெண் சாமியார், சாத்வி தேவா தாக்கூர், நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார்.


இந்த துப்பாக்கிச்சூட்டில் மணமகனின் அத்தை கொல்லப்பட்டுள்ளார். உறவினர் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சர்ச்சைக்குரிய போதகர் பற்றி பிபிசியின் கீதா பாண்டே :

சாத்வி ஓர் ஆயுத விரும்பிImage copyrightMANOJ DHAKA

Image caption

சாத்வி ஓர் ஆயுத விரும்பி


இந்தியாவின் வடக்கேயுள்ள ஹரியானா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி வெளியான காணொளியில், சாத்வி தேவ தாக்கூர் முதலில் ரிவால்வராலும், பின்னர் இரட்டைக் குழல் துப்பாக்கியாலும் சுடுவது தெரிகிறது.

அவரோடு சேர்ந்து அவருடைய சில பாதுகாப்பு பணியாளர்களும் சுடுகின்றனர்.

“புனிதப் பெண்” அல்லது “பெண் கடவுள்” என்று பொருள்படும் சாத்வி என்ற இந்தி மொழி சொல்லை தனது பெயரோடு இணைத்திருக்கும் சாத்வி தேவ தாக்கூர், நடன மேடைக்கு சென்று, அவர் விரும்புகிற ஒரு பாடலை ஒலிக்கவிட கேட்டு நடனமாடி, திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினரை பிரமிக்க வைத்ததாக இந்திய ஊடகங்கள் கூறின .

எல்லோரும் சூழ்ந்திருக்கும் வேளையில் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கி அனைவரையும் அவர் பீதி அடைய செய்திருக்கிறார்.

மணமகன் மற்றும் மணமகளின் தரப்பினர் அவரை நிறுத்துவதற்கு கேட்டுகொண்டது செவிடன் காதில் ஒலித்த சங்காகிப் போனது.

தவறுதலாக சுடப்பட்ட துப்பாக்கி குண்டு மணமகளின் 50 வயது அத்தை ஒருவரை தாக்கி அவர் கீழே சரிந்தவுடனும், மூன்று உறவினர் படுகாயமுற்ற பின்னரும்தான் இந்த துப்பாக்கிக்சூடு நின்றது.

அப்போது உருவான குழப்பத்தில் சாத்வியும், அவருடைய ஆறு பாதுகாப்பு பணியாளர்களும் தப்பிவிட்டனர்.


நீதிமன்றத்தில் சரண்

அவர்கள் ஏழு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை பிடிக்க தேடி வந்தனர்.

வெள்ளிக்கிழமை இந்த சாமியார் மேஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்றம் 5 நாட்கள் போலிஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. அவரது மெய்க்காப்பாளர்கள் இன்னும் பிடிபடவில்லை.

“நான் நிரபராதி, நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. இது எனக்கெதிராக போடப்பட்ட சதி”, என்று சரணடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் சாத்வி கூறினார். “இந்த நிகழ்வில் ஒருவர் இறந்துவிட்டார் என்பது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்”, என்றார் சாத்வி.

சாத்விImage copyrightMANOJ DHAKA

Image caption

சாத்வியை பின்பற்றுவோரில் பெரும்பாலோர் உள்ளூர் கிராமவாசிகள்

சர்ச்சைக்குரிய கருத்துகள்

அனைத்திந்திய இந்து மகாசபை என்ற சிறியதொரு இந்து மத நிறுவனத்திற்கு துணை தலைவராக இருக்கும் சாத்வி தாக்குர், இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் செய்திகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல.


முஸ்லிம் மற்றும் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு, அவர்களை மலடாக்க வேண்டும் என்று கூறியது தொடர்பாக கடந்த ஆண்டு காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.


"முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அதிக குழந்தைகளை பெற்றெடுப்பதை தடுக்கும் வகையில் அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்கு அவர்களை மலடாக்குவது கட்டாயப்படுத்தப்பட வேண்டும்" என்று அவர் ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

தங்களுடைய நாட்டில் சிறுபான்மையினரின் மதமாக மாறுகின்ற அச்சுறுத்தலை தடுக்கும் வகையில், இந்து மத பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுகொள்ள வேண்டும் என்கிற இந்து மத தேசியவாத தலைவர்களின் பரிந்துரைகளை ஏற்றுகொள்வதாக சாத்வி தெரிவித்திருக்கிறார்.


கோட்சேக்கு சிலை வேண்டும் என்று கூறிய சாத்வி

"நீளமாக சென்று கொண்டிருக்கும் ஒரு கோட்டோடு நீங்கள் எவ்வாறு போட்டியிட முடியும்? அதற்கு பக்கத்தில் அதனைவிட நீள கோடு ஒன்றை வரைவதன் மூலம் தான்" என்று அவர் கூறியிருக்கிறார்.


இன்னொரு சர்ச்சைக்குரிய கருத்தாக, மசூதிகளிலும், தேவாலயங்களிலும், இந்து மத ஆண் மற்றும் பெண் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட வேண்டும் என்றும், மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்ஸேவின் சிலை ஒன்று ஹரியானாவில் நிறுவப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளதாக டிஎன்எ செய்தித்தாள் சாத்வியை மேற்கோள் காட்டியுள்ளது.

சாத்விImage copyrightMANOJ DHAKA

Image caption


சாத்வி சர்ச்சைக்குரிய வகையில் செய்திகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல

’தங்கம் , துப்பாக்கி விரும்பி’

கர்னால் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமமான பிராஸில், சாத்வி பிறந்து வளர்ந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், அந்த கிராமத்தில் ஆசிரமம் ஒன்றை நிறுவியிருக்கிறார். அவரை பின்பற்றும் சிலரில் பெரும்பாலோர் உள்ளூர் கிராமவாசிகளாவர்.

நவீன வாழ்க்கைப்பாணியால் பிரபலத்தை தேடுபவராக சாத்வி அறியபடுகிறார் என்று உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

தலை முதல் கால் வரை எப்போதும் காவி ஆடை அணிந்திருக்கும் 27 வயதான சாத்வி, பொன் ஆபரணங்கள் மற்றும் துப்பாக்கி விரும்பியாக தோன்றுகிறார்.


சகோதரர் ராஜீவ் தாக்குரால் நடத்தப்படும் அவருடைய முகநூல் பக்கம், சாத்வியை தேவா இந்திய பவுண்டேஷனின் இயக்குநர் என்றும், ஒரு தேசியவாதி என்றும் விவரிக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இந்து மகாசபையில் இணைந்தார்.

சாத்வியோடு அவர்களது கட்சியின் டெல்லியிலுள்ள தலைமையகத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பயணம் மேற்கொண்டதாக ஹரியானாவிலுள்ள இந்து மாகா சபை மூத்த உறுப்பினர் தராம்பால் சிவாச் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.


"நான் அவருக்கு சார்பாக பேசிய பின்னர் கட்சியின் தேசிய துணை தலைவராக சாத்வி நியமிக்கப்பட்டார்" என்று அவர் கூறியிருக்கிறார்.

"அவர் துப்பாக்கிகளோடு புகைப்படங்களை எடுத்துகொள்வது எங்களுக்கு மிகவும் அசௌகரியம் அளித்தது. அதனால், எங்களுடைய கொண்டாட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் சாத்வியை அழைப்பதை விரைவில் நிறுத்திவிட்டோம்".

சாத்வி ஓர் ஆயுத விரும்பி என்பதற்கு செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சோக சம்பவத்தின் காணொளி ஒரு சான்றாகும்.

இப்போது, சாத்வி தன்னை தானே சிக்கலுக்குட்படுத்திக்கொண்டதாகவே தோன்றுகிறது.


நன்றி : பி.பி.சி. 19.11.16( செய்தியில் இருந்த வண்ணப்புகைப்படங்கள் இணைக்கப்படவில்லை)

Thursday, 17 November 2016

இன்றைய கார்ட்டூன்














Nantri- BBC  18.11.2016


தேர்தல் தோல்விக்கு பின் வீட்டை விட்டு வெளியே வரவே விரும்பவில்லை: ஹிலரி



ஒரு வாரத்துக்கு முன்பு வெளிவந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் தோல்வியடைந்த பிறகு, தான் கலந்து கொண்ட முதல் பொது சந்திப்பில், அதிபர் தேர்தலில் தான் டொனால்ட் டிரம்பிடம் தோல்விடைந்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்தை தனது பேச்சில் ஹிலரி கிளிண்டன்அப்பட்டமாக வெளிப்படுத்தினார்.

வாஷிங்டன் டிசியில் உரையாற்றிய ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் மீண்டும் தனது வீட்டை விட்டு வெளியே செல்வதையே தான் விரும்பவில்லை என்று கூறினார்.
ஒரு குழந்தைகள் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அண்மைய அதிபர் தேர்தல் அமெரிக்கர்களை அவர்களின் ஆத்ம தேடலுக்கு தூண்டியதாக தெரிவித்தார்.
அதிபர் தேர்தலில், மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை ஹிலரி பெற்றாலும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க தேர்தல் அவை வாக்குகளில் பெரும்பான்மை பெறும் போட்டியில் அவர் தோல்வியடைந்தார்.

ஹிலரி தோல்வி குறித்து மேலும் படிக்க:ஹிலரி ஏன் தோற்றார்?

குழந்தைகள் பாதுகாப்பு நிதி அமைப்பினால் கெளரவிக்கப்பட்ட ஹிலரி கிளிண்டன் அந்நிகழ்ச்சியில் பேசுகையில், ''இன்றிரவு இந்த விழாவுக்கு வருவது எனக்கு எளிதாக இருக்கவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.
தொடந்து அவர் உரையாற்றுகையில், ''தேர்தல் முடிவுகளால் உங்களில் பலர் ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களை போலவே, நானும் இது வரை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளேன்''
''இது எளிதில்லை என்பது எனக்கு தெரியும். கடந்த வாரத்தில் பலரும் நாம் நினைத்த அமெரிக்கா தானா இது என்று தங்களை தாங்களே கேட்டுக் கொள்கின்றனர் என்பது எனக்கு தெரியும்'' என்று தெரிவித்தார்.

நன்றி : பி.பி.சி.தமிழ் 17.11.2016

Wednesday, 16 November 2016

காது கேட்காதோர் நாள்! (நவம்பர் 16).


இன்று பன்னாட்டு சகிப்புத் தன்மை நாள் - காது கேட்காதோர் நாள்! (நவம்பர் 16).

இந்நாள் உலக காலங்காட்டியில் இத்தலைப்பில் மக்களுக்கு அறி வுறுத்தும் ஒரு முக்கிய நாளாகக் கருதி, கொண்டாடப்பட வேண்டிய நாள் என்பது அதன் தத்துவம் ஆகும்.

வீட்டில், குடும்பத்தில், அமைப்பு களில், இயக்கங்களில், கட்சிகளில், மதங்களில் ஏன் அண்டை மாநிலங் களில், பற்பல நாடுகளிலும்கூட சகிப்புத்தன்மை காணாமற் போனதால் தான் உலக அமைதிக்கு எங்கெங்கும் அச்சுறுத்தல் ஆகும்!

பெரிய மீன், சிறிய மீன்களைப் பிடித்து விழுங்கி, ஏப்பம் விட்டு தனது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுவதுபோல், பாதிக்கப்பட்ட நாடுகள் பலவும் ஆதிக்க நாடு களின் அடாவடித்தனத்தால் அவதி யுறுகின்றன!

சகிப்புத்தன்மை என்பது நாகரி கமும், படிப்பும், அறிவியலும் வள ரும் நிலையில், பெருக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது. ஆக்கிரமிப்புச் செயல் கள், அதீதமான சட்டபூர்வமற்ற நட வடிக்கைகள் காரணமாக சகிப்புத் தன்மை அறவே அரிய பொருளாகி விட்டது!

அடுத்த நாடான இலங்கையில் இன்று காலை வந்துள்ள மனிதாபி மானமற்ற, இரக்கமற்ற கொடுமையை அங்குள்ள புத்த பிக்குகளே கையாளு கிறார்கள் என்றொரு செய்தி, பவுத் தத்தை கொச்சைப்படுத்திடும் புத்தர் கொள்கை விரோதச் செயல் - சகிப்புத் தன்மை இன்மைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு!

‘‘ஏய் தமிழ் நாயே, நான் உன்னைக் கொல்லுவேன் -You Tamil  Dog, I will kill you, Buddhist monk - tells Tamils Government official in Batticaloa.


(அம்பீத்திலே சுமணா என்பவர் புத்த பிக்குவாம்! இப்படி ‘‘குரைத்தல்’’ இல்லை - முழங்கிய மாபெரும் மனிதர்?)

கவுதமபுத்தரின்அருள்அறம் கூட எப்படி சிதைத்து சின்னா பின்னப்படுத்தப்பட்டது என்பதற்கு இலங்கை நாட்டின், புத்த பிக்குகளே தகுந்த சான்று; மற்ற மதவெறியர்கள், யானைக்குப் பிடித்த மதவெறியை சிறிதாக்கிடும் நிலையில், இன ஒடுக்கு முறையின் முகவர்களாக இவர்கள் உள்ளனர்.

‘புத்தம் சரணம் கச்சாமி’ என்பது அங்கே

‘ரத்தம் சரணம் கொல்லு சாமி’

என்று உளறி தமிழின சொந்தக் குடிமக்களையே அழிக்கும் கொலை காரர்களாக மாறி வருவதைவிட பொருத்தமான உதாரணம் தேவையா?

இங்கே ‘‘இந்தியத் திருநாட்டில்’’ மட்டும் என்ன வாழுகிறது?

மதவெறியினால் பசு மாட்டைப் பாதுகாக்கும் படை என்பவர்களின் வெறி, தாழ்த்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினரையும் அடித்தே கொல்லும் அவலம் ஜனநாயக நாட்டில் அரங்கேறிக் கொட்டமடிக்கிறதே!

ஒரே மதத்தில் - ஹிந்து மதத்தில் உள்ளவர்கள் போடும் நாமம் - திருப்பதி வெங்கடாசலபதிக்கு வடகலை நாமம் போட்டு விட்டார் என்று திருப்பதி அர்ச்சகர்மீது, ஜீயர் என்ற மற்றொரு பிரிவு  தலைவர் குற்றம் சுமத்தி வாய்ச் சண்டை, கைச் சண்டையாக திருப்பதியில் சில நாள்களுக்கு முன்பு நடந்ததை ஏடுகளில் காண முடிந்தது.

தனக்குச் சொத்து தரவில்லை என்று சொந்தத் தாய், தகப்பனைக் கொல்லும் சோகச் சம்பவங்கள் அன் றாடச் செய்திகள் ஆகின்றனவே. எவ்வளவு சகிப்புத்தன்மை மறைந்து சுயநலம் படமெடுத்தாடிய கோரமான நிகழ்வு அது!

நண்பர்கள் மத்தியில்கூட ‘ஒருவர் பொறை; இருவர் நட்பு’ அல்லவா?

உலக நாள் என்பது காலண்டரில் அச்சடிக்கவா? இல்லை, நிச்சயமாக!

மக்களின் பண்புநலன்களில் மிகுந்த தலையானதாக வேண்டும் என்பதற்காகத்தானே உலக மக்களுக்கு அறிவுறுத்தும் நாள் - மறக்கலாமா?

அதுபோலவே, உடல் ஊனமுற்ற - பழுதடைந்தோர் - விழி இழந்தோர் - உடல்நலிவுற்று நோயுடன் போராடும் முதுமையாளர்கள் - இவர்களை அருள் கூர்ந்து அவர்கள் மனம் நோகும்படி நடக்காதீர் என்று இடித்துரைக்கவே, காது கேளாதோர் நாள்.

காது கேட்காதவர்கள், சிலர் பிறவியிலேயே என்ற நிலையில், மற்றும் முதுமையாலும், வேறு பல காரணங்களாலும் செவிப் புலன் செயல்தன்மை குறைந்துவிடுவதால், காது கேட்க முடியவில்லை - அவர் களை அரவணைத்துப் பழகுங்கள்!

அவர்களைச் ‘செவிடர்கள்’ என்று கேலி பேசுதலோ, சைகைகளால் அவமானப்படுத்துதலோ கூடாது; குறிப்பாக இளைஞர்கள் இதனைக் கடைப்பிடித்து மனிதநேயமும், பச் சாதாப குணத்தைக்காட்டி, தங்களை நன்கு செதுக்கிக் கொள்வது அவசர அவசியம் ஆகும்; இதே இளைஞர்கள் நாளை முதியவர்களாகி, முதுமையில் வாடும்போது, காது கேட்காத நிலை வரும்; அப்போது மற்றவர்கள் இவர்களைக் கேலியும், கிண்டலும் செய்தால், அவர்கள் உள்ளம் எவ் வளவு நொந்த உள்ளமாகும்; புண்படும் என்பதை அவர்களிடத்தில் உங்களை அமர்த்திக் கொண்டு ஒத்தறிவு (Empathy) டன் யோசியுங்கள்!

தவறான பல செய்திகள் நம் காதில் விழும்போது, நாம் ‘காது கேளாதவர்களாகியிருந்தால்’, எவ்வளவு நன்மை என்று நாமே கூட பற்பல நேரங்களில் சிந்திக்க வேண்டியுள்ளதே!

எனவே, பல நேரங்களில் காது கேளாமை பாதிப்பு; ஆனால், மேற் சொன்ன சந்தர்ப்பங்களில் அதுவே நமக்குக் கிடைத்த அருட்கொடை என்றும் எண்ணவேண்டியுள்ளது!

எனவே, சகிப்புத்தன்மை, அன்பு காட்டி செவித்திறன் குறைந்தோர்களை நீங்கள் அரவணைக்காவிட்டாலும் சரி, குறைந்தபட்சம் கேலியும்,  கிண்டலும் செய்யாமலிருந்தால் அதுவே போதும்!

மனிதத்தை இழந்துவிட்டு ‘மனிதர்களாக’ இருந்தால் அவர்கள் நடைபிணங்களேயாவார்கள்!


திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்- வாழ்வியல் சிந்தனைகள் காலண்டருக்காக அல்ல, வாழ்வுக்காக என்னும் தலைப்பில்

நன்றி : விடுதலை 16.11.16



Tuesday, 15 November 2016

வாஸ்துவும் முதலமைச்சரும்.......இவர்கள்தான் நம்மை ஆளும் மன்னர்கள்!!!!!!



வாஸ்து சாஸ்திரப்படி அமையாததால், அது இந்தியாவின் புதிய மாநிலமான தெலங்கானாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று கூறி, தலைமைச் செயலக கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் முடிவெடுத்துள்ளார்.

ஹைதராபாத்தில் ஹூசைன் சாகர் ஏரியில் அமைந்துள்ள சைஃபாபாத் அரண்மனையின் கட்டடப் பணிகளைப் பார்வையிட, ஹைதராபாத்தின் 6-வது நிஜாம் மெஹபூப் அலி பாஷா, 1888-ம் ஆண்டில் அங்கு நேரடியாக வந்தார்.
நிஜாம் அந்த அரண்மனைக்கு வந்து குடியேறுவதை விரும்பாத இரண்டு முக்கிய பிரமுகர்கள், அவர் வரும்போது உடும்பு குறுக்கே செல்லுமாறு ஏற்பாடு செய்தார்கள். அதன்படி தனது வழியில் உடும்பு குறுக்கிடுவதைக் கண்ட நிஜாம், சைஃபாபாத் அரண்மனையை இழுத்துப்பூட்டுமாறு உத்தரவிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஹைதராபாத் பேரரசின் நிர்வாக அலுவலகமாக அந்த அரண்மனையை திவான் பயன்படுத்தினார்.
சைஃபாபாத் அரண்மனை, தற்போதைய தலைமைச் செயலக வளாகத்தில், இன்றும் பாரம்பரிய சின்னமாக நிற்கிறது. அதில், தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநில அரசு அலுவலகங்களும் உள்ளன.

ஆனால், தெலங்கானாவின் வளர்ச்சிக்கு தலைமைச் செயலக கட்டடம் தடையாக இருக்கும் என்று கூறி, அந்தக் கட்டடத்தை முழுமையாக இடித்துவிட்டு, புதிய வளாகம் கட்ட முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்.
வாஸ்து நம்பிக்கை காரணமாக, சந்திரசேகர ராவ் தனது அலுவலகத்துக்கே வருவதில்லை. அமைச்சரவைக் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பதற்காக மாதத்தில் ஒன்று அல்லது இரு முறை மட்டும் வருகிறார். தலைமைச் செயலக கட்டடத்தின் வாஸ்து, தெலங்கானாவுக்கு சாதகமாக இல்லை என அவர் நம்புகிறார். வாஸ்து என்பது, கட்டடக் கலையின் அறிவியலாக புராதன காலத்தில் இருந்து பார்க்கப்படுகிறது. ஆனால் இது மூடநம்பிக்கை என விமர்சகர்கள் கண்டிக்கிறார்கள்.
கே சந்திரசேகர ராவ்Image copyrightAFP
Image caption
வாஸ்து சாஸ்திரப்படி இல்லாதது மாநிலத்துக்கு நல்லதில்லை என்கிறார் கேசிஆர்
அந்தக் கட்டடம் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத மோசமான நிலையில் இருந்தால் அதிக சர்ச்சை ஏற்பட்டிருக்காது. ஆனால், அக் கட்டடத்தின் பெரும்பகுதி புதிதாக கட்டப்பட்டவை. பத்து ஆண்டுகளுக்கும் குறைவானவை.
``நல்ல நிர்வாகம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல், அரசு கட்டடங்களைக் கட்டுவதில்தான் அக்கறை காட்டுகிறோம். தற்போதுள்ள கட்டடத்தின் தன்மை, வசதியைப் பற்றி ஆராயாமல் அலங்கார காரணங்களுக்காக அந்தக் கட்டடம் இடிக்கப்பட உள்ளது'' என்றார் அரசியல் ஆய்வாளர் கே. நாகேஸ்வர்.
ஆனால், வாஸ்து சரியில்லாத காரணத்தால்தான் நிஜாம் முதல், ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல்வராக இருந்த கிரண்குமார் ரெட்டி வரை வெற்றிகரமாக ஆட்சி செய்ய முடியவில்லை என்று முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் கூறுகிறார்.
பசுமை தலைமைச் செயலகம் கட்டும் முடிவு குறித்து சந்திரசேகர ராவிடம் கேட்டபோது, ``கண்டிப்பாக மோசமான வாஸ்துதான். வரலாறுதான் அதற்கு உதாரணம். ஆட்சியில் இருந்த யாரும் செழிக்க முடியவில்லை. தெலங்கானாவுக்கும் அந்த கதி ஏற்பட்டுவிடக்கூடாது'' என்றார் அவர்.
ஆனால், தனது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அனைவருக்கும் பொதுவான வாஸ்து என ஒன்றில்லை. அது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, தெலங்கானா சட்டமேலவை எதிர்க் கட்சித் தலைவர் ஷபிர் அலி கூறும்போது, 2019-ஆம் ஆண்டு புதிய முதலமைச்சர் பதவிக்கு வந்து, வாஸ்து தனக்கு பொருத்தமாக இல்லை என்று கூறி மீண்டும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
சைஃபாபாத் அரண்மனைImage copyrightTS SUDHIR
Image caption
19-ஆம் நூற்றாண்டு சைஃபாபாத் அரண்மனை அதிர்ஷ்டமில்லாதது என ஆட்சியாளர்களால் நம்பப்படுகிறது.
ஆனால், இதையெல்லாமல் காதில் போட்டுக் கொள்ள முதலமைச்சர் கேசிஆர் தயாராக இல்லை. ஆளுநரைச் சந்தித்து, தனது பங்கில் வைத்துள்ள கட்டடடத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு காலி செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு தர அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த ஆண்டு இறுதியில் அந்தக் கட்டடத்தை தரைமட்டமாக்கிவிட்டு, ஹஃபீஸ் என்ற ஒப்பந்ததார் கொடுத்த திட்டப்படி புதிய கட்டடம் கட்ட கேசிஆர் திட்டமிட்டுள்ளார். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், புதிய கட்டடம் கட்ட ரூ.350 கோடி முதல் ரூ.500 கோடி வரை ஆகலாம் என மதிப்பிடப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் 1200 கோடி ரூபாய் என மதிப்பிட்டுள்ளது.
அலுவலகம் மட்டுமல்ல, அவரது வீடு மற்றும் முகாம் அலுவலகத்துக்கும் வாஸ்து சரியில்லை என கேசிஆர் நம்புகிறார். அந்தக் கட்டடம், ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, முதலமைச்சராக இருந்தபோது, 2005-ஆம் ஆண்டு கட்டப்பட்டது, வாஸ்து நிபுணர்களின் ஆலோசனையுடன் கட்டப்பட்டது. அவர், 2009-ல் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அவரையடுத்து, கே. ரோசையா முதல்வரானார். வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைப்படி, அந்தக் கட்டடத்தில் மாற்றங்கள் செய்தார். ஆனால், ஒரே ஆண்டில் அதிகாரம் பறிபோனது. அவரையடுத்து வந்த கிரண்குமார் ரெட்டி, வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாதவர். எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. தனது பதவிக்காலம் முழுவதும் ஆட்சியில் இருந்தார்.
கேசிஆருக்கு தற்போது 40 கோடி ரூபாயில் புதிய வீடு மற்றும் முகாம் அலுவலகம் இணைந்த கட்டடம் தயாராகி வருகிறது. நவம்பர் இறுதியில் அவர் அதில் குடியேற இருக்கிறார்.
``ஹைதராபாத்தின் புகழ்பெற்ற சார்மினார் கோபுரம், தெலங்கானாவுக்கு சரியான வாஸ்து இல்லை என கேசிஆர் முடிவெடுக்காமல் இருந்தால் நல்லது'' என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார் ஷபிர் அலி.

நன்றி : பி.பி.சி. தமிழ் -15.11.2016

          

Monday, 14 November 2016

வாசியுங்கள்...வாழ்நாள் அதிகரிக்கும்!

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! சிக்மண்ட் ஃப்ராய்ட் கிட்டத்தட்ட எல்லாருக் குமே தங்கள் வாழ்க்கை, தங்கள் வேலை, தங்கள் குடும்பம் என்ற கவலைகள், அக் கறைகள், ஆர்வங்கள் என  எல்லாம் தங்களைச் சுற்றியே அமைகின்றன. யாருமே இதை ஆழமாக உணர்வதில்லை.
இதனா லேயே பல நடைமுறைச் சிக்கல்கள். இப்படித் தோன்றும் சிக்கல்களையும் பிரச்னைகளை யும் சரிவரக் கையாள வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் தங்களை மீறி, தங்களுடைய குறுகிய உலகத்தைத் தாண்டிப் பார்க்க வேண் டும். அதற்கான மாற்று வழிதான் வாசிப்புப் பழக்கம். புத்தகம் வாசித்தால் உங்கள் அறிவு வளர்கிறதோ இல்லையோ ஆயுள் வளர்வது நிச்சயம் என்கிறது ஆராய்ச்சி.
ஆமாம்... சமீபத்தில் அமெரிக்க யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வாசித்த லுக்கும், ஆயுளுக்கும் உண்டான நெருக் கத்தை  தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்ட வர்களில் சுமார் 3700 பேரிடம் அவர்களது வாழ்வியல் முறை, படிக்கும் பழக்கம் என்ற ரீதியில் ஆய்வினை மேற்கொண்டனர்.
காலையில் எழுந்தவுடன் செய்தித்தாளைப் படிப்பதே அவதார நோக்கமாக, முகத்தை மூடிக்கொள்பவர்கள் எனக்கு ஆயுள் கெட்டி என்று கர்வப்பட்டுக் கொள்ள வேண்டாம். செய்தித்தாள் அல்லாது பல்வேறு புத்தகங் களை படிப்பவர்களுக்குத்தான் நீண்ட ஆயுள் என சமூக அறிவியல் மற்றும் மருத்துவப் பத்திரிகையில் ஆய்வறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறமை நம்மிடம் இருந்தாலும் சில நேரங்களில் கவனச்சிதறல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இன்பாக்ஸில் வந்து விழும் இமெயில்களுக்கு பதில் அனுப்பிக்கொண்டே, ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பார்த்து லைக்ஸ் கொடுப்போம்.
அதேநேரத்தில் ஹெட்செட் டில் பாடல் களையும் கேட்டுக் கொண்டி ருப்போம். இவற்றையெல்லாம் முழுக்கவனத் தோடு செய்கிறோமா என்றால், இல்லை. எல்லாம் கடமைக்கே. ஆனால், அமைதியான இடத்தில் அமர்ந்து  5 நிமிடங்கள் புத்தகம் படிக்கும் போது மனதை ஒருமுகப்படுத்தி, கவனத்தை  வளர்த்துக்கொள்ளக்கூடிய நீண்டகால பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். நல்ல வாசிப்பிற்கு கவனம் முக்கியம். வாசிக்கும்போது செலுத்தும் கவனம், தகவல் களை உள்வாங்கிக் கொண்டு அதை தக்க வைத்துக் கொள்ளும் செயலில் மூளையை ஈடுபடுத்துகிறது.
இந்த செயல்முறை மூளையை கூர்மையாக்கி, நினைவுத்திறனை மேம்படுத்தும். வாசித்தலோடு தொடர்புடைய மொழியாற்றல், பார்வை, கற்றல் மற்றும் நரம் பியல் இணைப்பு போன்ற அனைத்து செயல்பாடுகளையும் இணைக்கும் சவாலான பணிகளை படிப்பு என்னும் ஒரே செயலால் செய்துவிட முடியும். மனதிற்குப் பிடித்த புத்தகத்தை படிக்கும் போது முதல் 6 நிமிடங்களுக்குள்ளாகவே 68 சதவிகித மன அழுத்தம் குறைந்துவிடுவதாக ஆய்வு கூறுகிறது. ஓர் இசையைக் கேட்பதாலும், நடைப்பயிற்சி மேற்கொள்வதாலும் குறையும் மனஅழுத்ததைக் காட்டிலும் படிப்பதால் மன அழுத்தம் அதிகம் குறையும்.
நீலக்கதிர்களைக் கக்கும் மொபைல், லேப்டாப், டேப்லெட், டி.வி எல்லாவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, அரைமணி நேரம் அமைதியாக ஒரு புத்தகத்தை படி யுங்கள். அப்புறம் பாருங்கள்... தூக்கம் கண் களைத் தழுவும் மாயத்தை! தூக்க மாத் திரையின் அவசியமே இருக்காது. வாசிப்பின் மீது நேசம் வைத்து வளருங்கள்... உங்கள் சந்ததிக்கே அது நிழல் தரும்.
நன்றி : விடுதலை 14.11.2016



Monday, 7 November 2016

எதிர் வண்ணங்களால் தீட்டப்பட்ட சுவர்களிடம் ......

அவனோடு  தீவிரமாய்
நான் வாதிடும் நேரம்
அமைதியாக
அமர்ந்திருக்கிறாய் நீ !

பல நேரங்களில்
என்னை விட தீவிரமாய்
வாதிடும் நீ .....
என்னை விட இவர்களை
எதிர்ப்பதற்கான
காரணங்களை அதிகமாக
தெரிந்துவைத்திருக்கும் நீ.....
அமைதியாக அமர்ந்திருக்கிறாய்
என்றாய் ஆத்திரத்தோடு....
நீ என்னிடம் ....

'அரங்கின்றி வட்டாடிடும்'
நபர் அவர் என்பதை
நான் அறிவேன்....
நீ அறியாய்.....
கல்லுளி மாங்கனாய்
எதிர்தரப்பு .....

'யாரு கையைப்பிடிச்சு
இழுத்தா' எனும்
நடிகர் வடிவேலு வசனம் போல
திரும்பத் திரும்ப
கேள்வி கேட்கும்
அவனின் நோக்கமறியாது
பச்சைப் பிள்ளைக்கு
பாடம் எடுக்கும் குரலில்
மீண்டும் மீண்டும்
தரவுகளால் நிரப்புகிறாய்
உனது வாதத்தை.....

தூங்குபவன் யார் ?
தூங்குவது போல
நடிப்பது யார் ?
எனும் தன்மை அறிந்து
உன் வாதங்களை
அடுக்கு ....
வென்றெடுக்க
சில நேரம் வாய்ப்பிருக்கலாம்....

எதிர் வண்ணங்களால்
குழைத்து குழைத்து
தீட்டப்பட்ட
சுவர்களிடம்
ஏதும் பேசாமல்
கடந்து செல்வதே மேல்.....

                                --வா.நேரு -
                                   07.11.2016


Tuesday, 1 November 2016

இளந்தலைமுறையினருக்குப் பாடங்கள்.....

இளந்தலைமுறையினருக்குப் பாடங்கள் 

முனைவர் வா.நேரு
தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்

தகைசால் சான்றோர்களைக் கல்லூரிக்கு வரவழைப்பது, அவர்கள் சொல்லும் கருத்துகளை மாணவர்களைக் கேட்க வைப்பது, ‘கேட்பினும் கேளாத்தகையவாய்’ செவிகளை ஆக்காது, பல்வேறு கருத்துகளை மாணவர்களின் செவி களில் விழவைப்பது அதன்மூலமாக கற்கும் கல்விக்கு மெருகூட்டுவது என்பது நல்ல கல்லூரிகளின் செயல்பாடு. அந்த வழியில் திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்து தங்கள் மாணவ, மாணவியர்கள் மத்தியில் உரையாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க, பல்வேறு கல்லூரிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய  உரைவீச்சுகளின் தொகுப்பாக, ‘கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தமிழர் தலைவர்’ என்னும் புத்தகம் வெளிவந்திருக்கின்றது. நல்ல  பலன் தரும் முயற்சி.

25.7.1974 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆற்றிய உரையில் ஆரம்பித்து, மதுரை மன்னர் திருமலைக் கல்லூரியில் 3.11.1998 அன்று ஆற்றிய உரை வரை ஏறத்தாழ 25 ஆண்டுகளில், 25 கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக இந்த நூல்.
இந்த நூலின் அறிமுகவுரையில் மதுரை மன்னர் திரு மலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நம்.சீனிவாசன் அவர்கள் இந்த நூலின் சிறப்பினை சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.
‘‘கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் மாணவர்களி டையே உரை நிகழ்த்த அழைப்பு வரும்போதெல்லாம் பல்வேறு பணிகளுக்கிடையிலும் தமிழர் தலைவர் உற் சாகமாக ஒப்புதல் வழங்குகின்றார். இளைஞர்களின் உள்ளத் தில் கருத்துகளை விதைக்க வாய்ப்பாகக் கருதுகின்றார். மாணவர்கள் ஆர்வ மிகுதியினால் அழைத்தாலும், பேரா சிரியர்கள் விரும்பி வேண்டினாலும் தமிழர் தலைவர் நிகழ்ச்சியில் பங்கேற்க

ஒரு விதியினைக் கடைப்பிடிக்கின்றார். கல்லூரி முதல்வர் அல்லது பல்கலைக் கழக தலைமை அதிகாரி எழுத்து வடிவிலான அழைப்புக் கடிதம் அனுப் பினால் மட்டுமே இசைவு தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். தமிழர் தலைவர் அவர்கள் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் ஆயிரக்கணக்கான கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கின்றார். ஆனால் அவை யாவும் தொகுக்கப்படவில்லை. இந்நூலில் 25 கல்லூரிகளில் நிகழ்த்திய உரைகள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றது’’ எனக்குறிப்பிட்டுள்ளார்.
கற்பவையாக இளம்வயதிலேயே பெரியாரியலை ஏற்றுக் கொண்டு, கசடற பெரியாரியலைக் கற்றுக்கொண்டு வாழ்வில் கடைப்பிடித்ததால்,பெரியாரியலைப் பிஞ்சு வயதிலேயே  கற்றபின் தந்தை பெரியாரைப் பின்பற்றும் இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கு பெரியார் வழி நிற்பதற்கான வழியைக் கற்பிப்பதால் தனது தொண்டர்களால் ஆசிரியர் என அழைக்கப்படும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாணவ, மாணவிகள் மத்தியில் கற்பிக்கும் ஆசிரியராய் நின்று கருத்துகளைக் கூறியதோடு மட்டுமல்லாது, மாணவ, மாணவியர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதிலும் அளித்த பதிவுகள் இவை.
அமெரிக்கன் கல்லூரியில் உரையைத் தொடங்கும்போதே ‘‘தந்தை பெரியார் அவர்கள் இரண்டு மணி நேரத்திற்குமேல் உரையாற்றினாலும் இறுதியாக ஒன்றை மறக்காமல் கூறு வார்கள். ‘நான் சொன்னேன் என்பதற்காக எதையும் நம்பி விடாதீர்கள், பகுத்தறிவோடு சிந்தியுங்கள், சரி எனப் பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் தள்ளி விடுங்கள்’ என்று சொல்வார்கள். அவர் முடிவில் சொல்வதை நான் தொடக்கத்திலேயே சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் முடித்த இடத்திலிருந்து நாங்கள் பணி தொடங்குகின்ற நிலையில் இருக்கிறோம். நாங்கள் கூறுகிற கருத்துக்கள் உங்களுக்குக் கசப்பானதாகவும்இருக்கலாம்.தேவையானதாகவும் இருக்கலாம். தேவையற்றதாகவும் இருக்கலாம். கொள்ளவேண்டி யதையும் தள்ள வேண்டியதையும் உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்’’ எனச் சொல்லித்தான் தமிழர் தலைவர்  ஆரம்பிக்கின்றார்.
இந்தப் புத்தகத்தின் துவக்கத்திலேயே சரி எனப்பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் தள்ளி விடுங்கள் என்று  சொல்வதுமட்டுமல்ல உரையை முடிப்பதற்குமுன் (பக்கம்23) ‘‘நான் இங்குப் பேசிவிட்டுப்போன பிறகு இன்னொரு பேச்சாளரை எங்கள் கருத்துக்கு மாறுபாடானவர்களை அழைத்து எங்கள் கருத்துகளுக்கு மறுப்புக் கூறச் செய்யுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு உண்மை விளங்கும் . இருதரப்பு வாதங்களில் எங்கு வலிமை இருக்கிறது என்று புரிந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு ஏற்படும்’’ எனக் குறிப்பிடுகின்றார். தந்தை பெரியார் நான் சொன்னேன் என்பதற்காக நம்பாதீர் கள், பகுத்தறிவோடு சிந்தியுங்கள், சரி எனப்பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார் என்றால், ஆசிரியர் அவர்களோ’’ எனக்கு மாறுபட்ட கருத்து கொண்டவர்களின் பேச்சுகளையும் கேளுங்கள். கேட்டபின்பு எது உண்மை என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கள்’’ என்று சொல்கின்றார். தான் சொல்லும் கருத்தின் உண்மைத்தன்மை மீதான நம்பிக்கை, நூறு சதவீதம் இருந்தால் மட்டும்தானே இப்படிச் சொல்ல இயலும், சொல்லியிருக்கின்றார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாணவர்கள் மத்தியில்.
தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் ஒவ்வொரு உரையும் தந்தை பெரியாரின் கொள்கை ஒன்றை விரிவாக அய்யா ஆசிரியர் அவர்கள் விளக்கும் விதமாக அமைந்துள்ளது சிறப்பாக உள்ளது. தமிழின் சிறப்பைக் குறிப்பிடும் ‘நந்தனம் கலைக் கல்லூரியில் ஆற்றிய உரை’ கோவிலுக்குள்ளே தமிழ் இருக்கிறதா என்னும் வினாவைத் தொடுத்து ஏன் இல்லை என்பதற்கான வரலாற்றை ஆசிரியர் கொடுப்பதாக உள்ளது. ‘எங்கள் இலட்சியம் எல்லாம் இந்த நாட்டில் ஜாதியற்ற சமுதாயம் அமையவேண்டும்.பேதமற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்பதுதான்’எனச்சொல்லும் மதுரை தியாகராசர் கல்லூரி உரை பொருளாதாரப் பேதத்திற்கும், ஜாதி பேதத்திற்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டுவதோடு, யாகம் என்ற பெயரில் வீணாக்கப்படும் பொருள்களைப் பட்டியலிட்டு இது நியாயமா என்னும் கேள்வியை மாணவர்கள் மத்தியில் எழுப்பும் வண்ணம் அமைந்துள்ளது. சுதந்திரச் சிந்தனையை வளர்க்கவேண்டும், அது ஏன் வளரவில்லை என்னும் வரலாற்றைச் சுட்டிக்காட்டுவதோடு, ஆசிரியருக்கே உரித் தான நகைச்சுவை உணர்வை வாசகர்கள் அறியும் வண்ணம் நம் நாட்டு மூட நம்பிக்கைக்கும், வேற்று நாட்டு மூட நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை ‘விருதாச்சலம் அரசு கலைக்கல்லூரியில் ஆற்றிய உரை காட்டுகிறது.
தந்தை பெரியாரை திரையிட்டு மறைக்கப் பார்த்தவர்கள் எல்லாம் இன்றைக்கு திகைத்துப் போயிருக்கின்றார்கள். ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறை வதில்லை’ என்பதுபோல மொழி பெயர்க்கப்படும் மொழி களில் எல்லாம் தந்தை பெரியாரின் புத்தகங்கள் விற்றுத் தீர்கின்றன, அய்யாவின் புத்தகங்களை இன்றைக்குப் படிப்பவர்கள் 70, 80 ஆண்டுகளுக்குமுன்னால் இவ்வளவு புரட்சிகரமான பேச்சுகளைத் தந்தை பெரியார் பேசியிருக்கின்றாரா என  வியந்து நிற்கின்றார்கள். மனித நேயத் தின் மறுபெயராய், புரட்சி என்னும் சொல்லின் விளக்கமாக  நடமாடிய மனிதரல்லவோ பெரியார் என அதிசயத்துப் போகின்றார்கள்.
பல மொழிகளில், பல நாடுகளில் பெரியார் பன்னாட்டு மய்யம் போன்ற இயக்கங்கள்மூலமாக தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி’ தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் எல்லாம் இன்றைய இளைஞர்கள் எண்ணங்களிலே புகக் கூடாது. இதுபோன்ற மன்றங்களிலே நுழையவிடக்கூடாது. பேசப் படக்கூடாது என்று கிரகணத்தை உருவாக்கியவர்கள் உண்டு, அதைக் கண்டு பயந்தவர்கள் எல்லாம் உண்டு’ (பக்கம் 48) எனக்குறிப்பிட்டு மனிதர்களின் மனங்களிலே மாற்றம் வரவேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். ‘மாற்றம் என்பது உடையிலே இருந்து, முடியிலே இருந்து பயன் என்ன? மனிதன் சிந்தனைகளிலே மாற்றம் வேண்டும்! செயல் முறைகளிலே மாற்றம் வேண்டும்! அந்த மாற்றங்கள் சமுதாய நன்மைக்கு,  சமுதாய முன்னேற்றத்துக்குத் துணை செய்வதாக -வகை செய்வதாக அமைய வேண்டும்' என மாணவர்களிடம் அறிவுறுத்தும் ஆசிரியர் ‘வகுப்பறைக்கு வெளியே உள்ள உலகியலைக் கற்றுக்கொள்ளுங்கள். புத்துலகம் படைக்கலாம்' எனக் குறிப்பிடுகின்றார் தஞ்சை சரபோஜி கல்லூரியில் நடந்த விழாவில்.
மதுரை யாதவர் கல்லூரியில் மாணவர்களின் வினாக் களுக்கு தமிழர் தலைவரின்  பதில்களை இன்றைய மாணவ, மாணவிகள் கட்டாயம் படித்தல் வேண்டும். ‘திரு மணத்திற்கு பொருத்தம் பார்க்காது வரதட்சணை, ஜாதகம் என்று பார்க்கும் படித்த இளைஞர்களைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?’ என்பது கேள்வி. ஆசிரியரின் பதில் ‘மிகக் கேவலமாகக் கருதுகிறேன் நான்’ என்று ஆரம் பிக்கின்றது. பின் ஏன் அப்படிக் கருதுகிறேன் என்பதற்கு விளக்கம் தருகின்றார். இன்றைக்கு  நம்மை நோக்கி கேட்கும் பல கேள்விகளுக்கான பதிலை நாம் இதில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய பேருரை, ‘இவ்வளவு பெரிய பல்கலைக் கழகத்திலே தாழ்த்தப்பட்டோர் ஆறு பேர் மட்டுமே என்பதை எண்ணும் போது நெஞ்சம் கொதிக்கிறது’ என்று குறிப்பிட்டு இட ஒதுக்கீட்டின் வரலாற்றை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு ஆற்றிய உரையாக இருக்கிறது. தான் கற்ற ‘சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்’ தமிழர் தலைவர் ஆசிரியர் ‘தாய் வீடு’ எனக்குறிப்பிட்டு ஆற்றிய உரை சமூக நீதியின் வரலாற்றை குறிப்பிட்டு ‘நம்முடைய நாட்டிலே மண்ணுக்கு ஒருமைப்பாடு பேசுகிறோமே தவிர , மனிதனுக்கு ஒருமைப்பாடு பேசுவதாகத் தெரியவில்லை’ எனக்குறிப்பிட்டு பேதமை உண்டாக்கும் ஜாதியினை பாபு ஜெக ஜீவன்ராம் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பேசுவதாக அமைந்துள்ளது.
பெண்களின் முன்னேற்றம் குறித்து தந்தை பெரியார் எப்படியெல்லாம் எண்ணினார், அதற்கு எந்த எந்த வகையில் எல்லாம் உழைத்தார் என்பதனை இளம் மாணவிகளுக்கு எடுத்துக்கூறும் விதமாக அய்யா ஆசிரியர் அவர்களின் ‘கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் ஆற்றிய உரை’யும், ‘தஞ்சை-வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில் நுட்பக்கல்லூரியில் ஆற்றிய உரை’யும்  அமைந்துள்ளன. ‘பல்கலைக் கொள்கலனா’ய் அமைந்த அறிஞர் அண்ணா எப்படி கண்டதும் கொண்டதுமான தலைவராக தந்தை பெரியாரை வரித்துக்கொண்டார் என்பதும், அண்ணாவை பெரியார் எப்படியெல்லாம் உயர்வாக மதித்தார், நடத்தினார் என்பதையெல்லாம் வரலாற்றுச் சம்பவங்களோடு அய்யா ஆசிரியர் அவர்கள் விவரிக்கும் தனித்தன்மையான உரை யாக, ‘புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை’ கொடுக்கப்பட்டுள்ளது.
‘இனி வரும் உலகம்‘ என்னும் அற்புதமான தந்தை பெரியாரின் கருத்துகளை தமிழர் தலைவர் தன்னுடைய நடையில் விவரிக்கும் மதுரை மன்னர் திருமலைக் கல்லூரி யில் ஆற்றிய உரை என ஒவ்வொரு உரையுமே தந்தை பெரியாரின் தத்துவங்களை, நடைமுறை உத்திகளை விவரிக்கும் தன்மையுடையதாக இருக்கிறது.
‘தங்கப் பதக்கம் வாங்கியவன் என்று அறிமுகப்படுத்திய தைவிட, தன்னை ‘தந்தை பெரியாருடைய தொண்டன்’ என்று அழைத்தற்காகவே, அறிமுகப்படுத்தியதற்காகவே தான் மிகுந்த மகிழ்ச்சியும், மன நிறைவும் கொள்கிறேன்’ என்று மதுரை மன்னர் திருமலைக்கல்லூரியில் ஆற்றிய உரையில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிடுகின்றார்.
தந்தை பெரியாரின் தொண்டனாய் ஒன்பது வயதில் திராவிடர் கழகக் கொடி பிடித்து, ஒரே தலைவர், ஒரே கொள்கை, ஒரே கொடி என தனது 84 வயதினை டிசம்பர் 2, 2016 இல் எட்டும் தமிழர் தலைவர் அவர்களின் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான இந்த நூல் கழகப் பொறுப்பாளர்கள், பேச்சாளர்கள் கைகளில் தவழ்வது மட்டுமல்ல, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் படிக்கும், படித்த தமிழர்கள் ஒவ்வொருவர் கையிலும் தவழ வேண்டிய புத்தகம், அவர்கள் பக்கம் பக்கமாகப் படித்து பலன் பெறவேண்டிய புத்தகம். ‘தகுதி-திறமை’ எனப் புரியாமல் பேசும் இளந்தலைமுறையினர் பலர் இந்த நூலைப் படித்தால், அறிவியல் மனப்பான்மையை, பெண்ணுரிமையை, பகுத்தறிவினை, தந்தை பெரியாரின் தனித்தன்மைகளை, தந்தை பெரியாரின் தன்னிகரில்லா போராட்ட உணர்வினை, திராவிட இயக்கத்தின் எதிர் நீச்சல் வரலாற்றைப்  பாடமாக கற்றுக்கொள்வார்கள் என்பது உறுதி.


நன்றி : விடுதலை 01.11.2016

Monday, 31 October 2016

தீபாவளிப் பட்டாசுகளால் ஏற்பட்ட புகை டில்லியைத் திணறடித்திருக்கிறது

தீபாவளிப் பட்டாசுகளால் ஏற்பட்ட புகை டில்லியைத் திணறடித்திருக்கிறது
31 அக்டோபர் 2016

புகை சூழ் டில்லிImage copyrightSOUTIK BISWAS
Image caption
பட்டாசுப் புகையும் பனியும் சேர்ந்து பார்க்கக்கூடிய தூரத்தை குறைத்திருக்கிறது டில்லியில்
தலை நகர் டில்லியில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் முடிந்து விட்டன. பட்டாசுகளின் விஷப்புகை மண்டலம் சூழ்ந்து போக்குவரத்தை மந்தப்படுத்தியுள்ள நிலையில், பட்டாசுப் புகை குறித்த கோபாவேசமான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
காற்றில் சுகாதாரத்துக்கு ஆபத்து விளைவிக்கும், பி.எம்.10 துகள்கள் ஒரு கன மீட்டருக்கு 999 மைக்ரோ கிராம் என்ற ஆபத்தான் அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. பாதுகாப்பான அளவு என்பது 100 மைக்ரோ கிராம்கள்தான்.
ஏற்கனவே இது குறித்து அதிகாரிகள் எச்சரித்திருந்தார்கள்.
காற்றில் மாசு நீக்கி சுத்திகரிக்கும் கருவிகளை சாலைகளுக்கு அருகில் நிறுவப்போவதாக கடந்த வாரம் டில்லி மாநில அரசு அறிவித்திருந்தது.
ஆனால், திங்கட்கிழமை காலை, தலைநகரின் வீதிகளில் பெரிய அளவில் புகை மண்டலம் படரந்து, பார்க்கும் தன்மை மிகக் குறைவாகவே இருந்தது.
சமூக ஊடகங்களில் #பனிப்புகை என்ற வார்த்தை பிரபலமாகப் பரவியது.
முதல் நாள் கொண்டாட்டம், அப்புறம் திண்டாட்டம்
‘’நேற்றிரவு , பட்டாசு வெடி எல்லாம் அற்புதம்தான். இப்போது மூச்சு திணருங்கள்’’ , என்று ப்ரதீக் ப்ரசஞ்சித் என்பவர் டிவிட்டரில் கருததைப் பதிவு செய்தா.
நோய்டாவில் காலை 6.30 மணி #airpollution #smogImage copyright@NANDITA_ZEE
Image caption
நோய்டாவில் புகை மண்டலம்
Zero visibility at Sarai Kale Khan #Delhi #smogImage copyright@TK_SCRIBBLER
So while entering to Noida from Anand Vihar, thats how morning was for Delhi after #Diwali #fog #smog #crackersSpoiledEnviormentImage copyright@MUSAFIRMINAKSHI
Perhaps we Indians r the only ppl who Pay & Pray for this environmental degradation, by now it should have been bright day lightImage copyright@HAROONSHEIKH786
தீபாவளிக்கு முன்னர், பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று மக்களைக் கோரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இதே போன்று கடந்த காலங்களில் நடந்த பிரசாரங்களுக்கு பலன் ஏதும் ஏற்படவில்லை.
உலகின் மோசமாக மாசடைந்த நகர்
கொண்டாட்டங்கள் என்றாலே வெடிகள் இல்லாமல் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. சிலருக்கு இது அவர்களின் செல்வ நிலையைக் காட்ட கிடைக்கும் ஒரு சந்தர்ப்பம். வர்த்தகக் குடும்பங்கள் , ஒரு இரவில் வெடித்து தள்ள, பல லட்சக்கணக்கான ரூபாய் செலவில் பட்டாசுகளை வாங்கிக் குவிக்கின்றனர்.
உலகின் மிக மோசமாக மாசடைந்த 20 பெரு நகரங்களில், 13 பெரு நகரங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்று உலக சுகாதார நிறுவனம் 2014ல் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று கூறியது.
உலகிலேயே மிகவும் மோசமாக மாசடைந்த பெரு நகரம் டில்லிதான் என்றும் அது கூறியது.
காற்று மாசடைவது இந்தியாவில் இளம் வயதிலேயே ஏற்படும் இறப்புகளுக்கு முன்னோடி காரணமாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும், காற்று மாசுபடுவதால் ஏற்படும் நோய்களால், சுமார் 6 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
தீபாவளிப் பட்டாசுகளைத் தவிர, டில்லியில் குளிர்காலத்தில், வறிய மக்கள் குளிரைத் தவிர்க்க, குப்பைக் கூளங்களை எரிப்பதும், மாசு ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
டில்லியைச் சுற்றிலும் பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பில், விவசாய விளை நிலங்களை திருத்த, விவசாயக் கழி்வுப் பொருட்களை விவசாயிகள் எரிப்பதும் மற்றொரு காரணம். இந்தத் தீ பல நாட்கள் தொடர்ந்து எரிகிறது.

நன்றி : பி.பி.சி. 31.10.2016