Tuesday, 8 April 2025

நினைவில் கொள்கிறேன்....

 

இன்பமெனினும்

துன்பமெனினும்

இயக்கத்தோடு

பகிர்ந்துகொள்

என்பதுதான்

ஆத்திசூடி எப்போதும்

பெரியார் இயக்கத்தில்…


பிறருக்குப் பயன்படு

அதனால் மகிழ்வுறு

என்பதுதான் தந்தை

பெரியாரின் தத்துவம்…


மிகப்பெரும் துக்கமா?

தனிவாழ்வில்…

இன்னும் தீவிரமாய்

இயக்க வேலைகளில்

ஈடுபட்டு மறந்து வாழ்

என்பதுதான் அய்யா 

ஆசிரியர் வீரமணி 

அவர்கள் காட்டும் வழி !


எனது தம்பியின்

நினைவு நாளில்

நினைவில் கொள்கிறேன்

நான் இவற்றை!


              வா.நேரு,09.04.2025








2 comments:

Anonymous said...

வாழ்ந்து வழிகாட்டுகிறீர்கள்...தொடர்வோம்... துன்பம் மறக்கத் தொண்டறம் தொடர்வோம்🙏

வா.நேரு said...

நன்றிங்க..