Showing posts with label அண்மையில் பேசிய புத்தகம். Show all posts
Showing posts with label அண்மையில் பேசிய புத்தகம். Show all posts

Sunday, 13 July 2025

ஒற்றை வாளி-சிறுகதைத் தொகுப்பு - பேரா சு.காந்திதுரை

https://www.youtube.com/live/7dCxL_hnLAo?si=lnvr8rnPSljTf6c3
வாருங்கள் படிப்போம் குழுவினை அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள் வாட்சப் குழுவாக நிறுவி,அதன் ஒருங்கிணைப்பாளராக பேரா பெ.உமா மகேஸ்வரி அவர்கள் மிகச்சிறப்பாக கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகின்றார்கள்.வாரந்தோறும் ஒரு நூல் மதிப்புரை சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகின்றது. அதனுடைய 311வது நிகழ்வில், மதுரை தியாகராசர் கல்லூரி ,தமிழ்த்துறை தலைவர் அய்யா பேரா முனைவர் சு.காந்திதுரை எழுதிய சிறுகதைத் தொகுப்பான 'ஒற்றை வாளி' என்ற நூலினை திறனாய்வு செய்தேன். அய்யா சு.காந்திதுரை அவர்கள் மிக நெகழ்ச்சியாக ஏற்புரை நிகழ்த்தினார்.அந்த நிகழ்வின் இணைப்பு மேலே உள்ள சுட்டியில் உள்ளது.விரும்புகிறவர்கள் கேட்கலாம்.'வாருங்கள் படிப்போம் ' குழுவில் வந்த பின்னோட்டங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

எழுத்தாளர் பேராசிரியர் காந்திதுரை என்கின்ற ஒரு அற்புதமான படைப்பாளியை நமக்கு அறிமுகம் செய்து வைத்த நேரு அண்ணாவிற்கு நன்றி.

அதிலும் அவர் இன்றைய வளரும் எழுத்தாளர்களுக்கு வழி காட்டினார் என்று தான் கூற வேண்டும். அதிகாலை 3 மணிக்கு எழுத ஆரம்பித்து விடுவாராம்..தினம் தோன்றுபவற்றை தாளில் எழுதி வைத்து விடுவார்..இயல்பாக நடக்கும் விஷயங்கள்..ஏக்கங்கள்,மண் மணம் இப்படி... இரு நாட்களுக்கு முன்பு தான் நேரு அண்ணாவிடம் கூறினேன்.உடனே தயாராகி ஒரு சிறப்பான திறனாய்வை வழங்கியமைக்கு வாழ்த்துகள்!!பங்கேற்றுச் சிறப்பித்த தோழமைகளுக்கு நன்றி!!

பேரா உமா மகேஸ்வரி அவர்கள்,ஒருங்கிணைப்பாளர்,’வாருங்கள் படிப்போம்’

 

ஒரு எளிய மனிதராக விளங்கும் சிறப்புக்குரிய ஒரு ஆளுமையை அறிமுகப்படுத்தினீர்கள் அண்ணா. மிக்க நன்றி!

இன்னும் ஓரிரு கதைகளைச் சொல்வீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

ஆனால் நேரம் இடம் கொடுக்கவில்லை என்பதை அறிந்து நீங்கள் முடித்துக் கொண்டது கொஞ்சம் ஏமாற்றம் தான். 

பரவாயில்லை .ஒரு கிணற்றுத் தண்ணீருக்கு ஒரு வாளித் தண்ணீர் பதம்!

பேரா. மகாதேவன் அவர்கள்,சென்னை.

 

அருமையான நூலைத் தேர்ந்தெடுத்து அதனை பாங்குற திறனாய்வு செய்த அண்ணன் நேரு அவர்களுக்குப் பாராட்டு

டாக்டர் கோ.ஒளிவண்ணன் அவர்கள், நிறுவனர் ‘வாருங்கள் படிப்போம்’, மாநிலத் துணைத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

 

மிகச்சிறப்பானதொரு நூல் அறிமுகம்  நேரு அண்ணா…

இசை ஆசிரியர் லோ.குமரன் அவர்கள்,சென்னை.

 

சிறப்பான நூல் அறிமுகம் அய்யா. வணக்கங்களும் வாழ்த்துகளும்

தகடூர். மு.சக்திவேல் அவர்கள்.



 

அருமையான நூல்.அருமையான திறனாய்வு.மனமார்ந்த பாராட்டுகள் நேரு அண்ணாவிற்கு…

எழுத்தாளர் ஆசிரியர் கலையரசி,அவர்கள்.

 

இன்றைய சிறப்பு விருந்தினர், படைப்பாளர் பேராசிரியர் காந்திதுரை ஐயா அவர்களை, கடந்த மாதம், மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ் கல்லூரி யில் நடந்த என்னுடைய கவிதைநூல் திறனாய்வில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு, எனக்கும், நேரு சார் க்கும் கிடைத்தது. முதன்முறை பார்த்தது போல் இல்லாமல் அவ்வளவு இயல்பாக, உரிமையாக பேசினார். அவர் இவ்வளவு படைப்புகள் படைத்திருப்பது இன்று தான் தெரியும்..

இன்று, நேரு சார் திறனாய்வு செய்த கதைகளில் அவ்வளவு யதார்த்தம்..

இப்படி,மண் சார்ந்த, மக்களின் மனம் சார்ந்த, இத்தனை சிறந்த படைப்பாளரை அறிமுகம் செய்த தோழர் - நேரு அவர்களுக்கும், உமா mam க்கும் என் அன்பும்.. நன்றியும்

கவிஞர்.வினோத் பரமானந்தன் அவர்கள்,இராணுவஅதிகாரி,இராஜஸ்தானில் இருந்து.



வணக்கம் சார்🙏🏿
நேற்றைய திறனாய்வு மிக அருமையாக இருந்தது.
(Story Vs Plot )

கதை மற்றும் அதன் கருத்து- இதன் வேறுபாட்டை நேற்று மூன்று கதைகளிலும் தெளிவாக கூறினீர்கள்.

முதலில் புத்தகத்தைப் பற்றி, அதன் பதிப்பாளர் பற்றி,பதிப்புரை ,பின்பு கதை ஆசிரியர் பற்றி, அவருடைய ஏனைய படைப்புகள், பின்பு கதைக்குள் செல்வது என்று புத்தகத் திறனாய்வு format புரிந்து கொள்ள முடிந்தது. 

ஒவ்வொரு கதையிலும் அவருடைய மொழி மற்றும் அதன் நடையை பற்றி வாக்கியங்கள் வாசித்து திறனாய்வு செய்தது மிகவும் அருமை.

அதில் உங்கள் அனுபவத்தையும் நீங்கள் மதுரை மார்க்கெட்டில் சந்தித்த  ஒரு முதியோரின் குடும்பத்தைப் பற்றியும்  பகிர்ந்து கொண்டீர்கள்.

 கதைகள் அனைத்தும் எழுத்தாளர் அனுபவம்,அவர்  பார்வையில், வாசகர்கள் புரிந்து கொள்ளக்கூடிய நடையில் எளிமையாக இருக்க வேண்டும் என்பதை 
புரிந்து கொள்ள முடிந்தது.


கதை ஆசிரியர் -அவர் எப்படி காலை 3 மணிக்கு எழுந்து கதை எழுதி, இந்த 11 கதைகளையும் தன் கதை  குவியல்களில் இருந்து தேர்ந்தெடுத்து, பதிப்பித்த விதம் மிகவும் சுவாரசியமாக இருந்தது .


 தங்களின் பல வேலைகளுக்கு இடையே , இந்தப் புத்தகத்தை எடுத்து திறனாய்வு செய்து, அந்தக் கதை திறனாய்வின் format ல் செய்தது உங்கள் அனுபவத்தை குறிக்கின்றது.

 மேலும் உங்கள் பல முயற்சித் திட்டங்கள் வெற்றி பெற ,
எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 மிக்க நன்றி🙏🏿
ஶ்ரீதேவி

வாருங்கள் படிப்போம் குழு உறுப்பினர் வாட்சப் வழியாக...

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...வா.நேரு

Sunday, 6 April 2025

முனைவர் க. சுபாஷிணியின் "தமிழர் புலப்பெயர்வு" — நூல் திறனாய்வு: முனைவர் வா. நேரு

தமிழர் புலப்பெயர்வு என்னும் இந்த நூல் தமிழ் மரபு அறக் கட்டளையின் இயக்குனர் கா சுபாஷினி அவர்களால் எழுதப்பட்ட ஓர் அருமையான நூல் . ஓர் ஆராய்ச்சி நூல். எப்படி எல்லாம் தமிழர்கள் காலம் காலமாக புலம் பெயர்ந்தார்கள், எதற்காகப் புலம்பெயர்ந்தார்கள்,ஏன் புலம்பெயர்ந்தார்கள் புலம்பெயர்கிற அவர்கள் என்னென்ன இன்னல்களை சந்தித்தார்கள் அல்லது என்னென்ன ஏற்றங்களைச் சந்தித்தார்கள் என்பதைப் பற்றி எல்லாம் நமக்கு ஆதாரங்களோடு எடுத்துக்காட்டுகிற ஓர் அருமையான நூலாக இந்தத் தமிழர் புலப்பெயர்வு என்கின்ற நூல் உலகளாவிய பயணங்கள்- குடியேற்றங்கள்- வரலாறு என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அறக்கட்டளையின் கிளைகள்  இந்தியா, மலேசியா, இலங்கை, ஜெர்மனி அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் உள்ளது.

இந்தப் புத்தகத்தினுடைய முதல் பதிப்பு ஜனவரி 2024 ஆம் ஆண்டு வந்திருக்கிறது மிகக் குறுகிய காலத்திலே ஆறு மாதத்திலேயே இரண்டாவது திப்பு ஜூன் 2024-லேயே வந்திருக்கிறது. 374 பக்கங்கள் விலை ரூபாய் 450 ரூபாய். இந்த நூல் காணிக்கை என்று சொல்லி தன் உடலில் காயங்களையும் மனதில் வலிகளையும் சுமந்து இன்றைய நம் பெருமைகளுக்கு வழி வகுத்துத் தந்த அவர்களுக்கு என்று கொடுத்திருக்கிறார். அந்த அவர்கள் என்பவர்கள் அடிமைகளாகவும் ஒப்பந்தக் கூலிகளாகவும் உடல் உழைப்பு தொழிலாளர்களாகவும் உலகின் பல நாடுகளுக்கும் தீவுகளுக்கும் புதிய வாழ்க்கையைத் தேடிப் பயணம் செய்த தமிழ்ப் பெண்கள், ஆண்கள் குழந்தைகள் என்று அவர் கொடுத்திருக்கிறார்.

இந்த நூலுக்கு மிகச் சிறப்பாக வாழ்த்துரையினை தமிழ்நாட்டினுடைய மாண்புமிகு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சி நாயகர் அய்யா மு.க,ஸ்டாலின் அவர்கள் கொடுத்திருக்கிறார். அதேபோல வாழ்த்துரையினை மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களும் இலங்கையினுடைய அமைச்சர் மாண்புமிகு திரு செந்தில் தொண்டைமான் அவர்களும் கொடுத்திருக்கிறார்கள். ஓர்  அருமையான அணிந்துரையை, அணிந்துரையே ஓர் ஆய்வுச்சுருக்கம் போல இருக்கிறது. அதனை ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் திரு ஆர் பாலகிருஷ்ணன் அவர்கள் கொடுத்திருக்கிறார். அதேபோல பதிப்புரையை நிறைய நூல்களைப் படைத்திருக்கக்கூடிய ஆய்வறிஞர் முனைவர் தேமொழி அவர்கள் கொடுத்திருக்கிறார். முன்னுரையாக தன்உரையை இந்த நூலினுடைய ஆசிரியர் முனைவர் கா சுபாஷினி அவர்கள் கொடுத்திருக்கிறார்.

 

நூல்களில் இரண்டு வகையான நூல்கள் இருக்கின்றன. ஒன்று சில நூல்களை மேலோட்டமாக ஒரே மூச்சிலே படித்து முடிக்கக் கூடிய  நூல்கள். இன்னொரு வகை  நாம் கொஞ்சம் கொஞ்சமாக படித்து சுவைக்க வேண்டிய நூல்கள்.பாதுகாத்து வைக்க வேண்டிய நூல்கள். திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்பெல்லாம்  இரண்டாவது வகை. அந்த வகையில் இந்த ‘தமிழர் புலப்பெயர்வு இரண்டாவது வகையாக இருக்கக்கூடிய ஒரு  நூலாக  இருக்கிறது ஒரே மூச்சிலே படித்துவிட்டு தூக்கிப் போடக்கூடிய ஒரு  நூலாக  இல்லாமல் நாம் பாதுகாக்க வேண்டிய, பல நேரங்களில் நாம் ரெஃபரன்ஸ்  நூல் என்று சொல்வோமே அதைப்போல நமக்கு பயன்படக்கூடிய ஒரு  நூலாக இந்தத்  தமிழர் புலப்பெயர்வு என்ற  நூல்  இருக்கிறது.

ந்த நூலில்  மொத்தம் 10 அத்தியாயங்கள் இருக்கின்றன.இந்த நூலின் உள்ளடக்கத்தைப் பற்றி ஒரு 50  நிமிடம் உரையாற்றி இருக்கின்றேன்.வாய்ப்பு இருக்கும்போது கேட்டுப்பாருங்கள். நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஸ்ரீதேவி(வாருங்கள் படிப்போம் குழு) தன்னுடைய கருத்தாக “மிக அருமையான புத்தகத் திறனாய்வு.புத்தகம் வாங்கிப் பல நாட்கள் வாங்கிவிட்டது.எல்லா அத்தியாயங்களையும் அதனுள் இருக்கும் தலைப்புகளின் வரிசையையும் அதனுள் சொல்லப்பட்ட கருத்துகளையும் மிக விரைவாகவும் சுருக்கமாகவும் கூறி,அதனோடு தொடர்புடைய மற்ற புத்தகங்களையும் உங்கள் அனுபங்களையும் கூறி புத்தகத்தைப் படிக்க ஆர்வம் ஏற்படுத்தி விட்டீர்கள்.

எப்படி மிக அதிகமான தகவல்களை உடைய புத்தகத்தை திறனாய்வு செய்யலாம் ? என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது இன்றைய திறனாய்வு .மிக்க நன்றி அய்யா” என்று குறிப்பிட்டிருந்தார்.  நன்றி அவருக்கு.

 

முனைவர் க. சுபாஷிணியின் "தமிழர் புலப்பெயர்வு" 
— நூல் திறனாய்வு: முனைவர் வா. நேரு

https://youtu.be/nf89_fyPJyU




Tuesday, 26 April 2022

டோட்டோசான்- ஜன்னல் ஓரத்தில் ஒரு சிறுமி


23.04.2022 அன்று டோட்டோசான்- ஜன்னல் ஓரத்தில் ஒரு  சிறுமி  என்னும் நூலைப் பற்றி வாருங்கள் படிப்போம் குழுவில் பேசிய உரை எனக்கே மன நிறைவாக இருந்தது. பலரும் பாராட்டிய நிகழ்வாகவும் அமைந்தது..அந்த உரை யூடியூப்பில்.ஒரு மணி நேர நிகழ்வு. நேரம் இருப்பவர்கள் கேட்டுப்பாருங்கள். நன்றி.


https://youtu.be/Oiq-fGsuMuY