Showing posts with label வா.நேரு-வின் கவிதைகள். Show all posts
Showing posts with label வா.நேரு-வின் கவிதைகள். Show all posts

Saturday, 26 July 2025

உள் மனது விசாரிப்புகளோடு…

 

                உள் மனது விசாரிப்புகளோடு…

ஒவ்வொருவர்

மனதிற்குள்ளும்

மாபெரும் காயங்கள் 

புதைந்து கிடக்கின்றன…                        

 

பேச இயலாதவன் கண்ட

கனாப்போல

சொற்கள் பல இருந்தும்

சொல்ல இயலாமல்

புதைந்து கிடக்கின்றன…

 

ஒரு நொடிக் கவனக்குறைவால்

இருசக்கர வாகனம் கவிழ்ந்து

ஏற்பட்ட விபத்தால்

ஏற்பட்ட காயத்தின்

அடையாளங்கள் புறத்தில்

எளிதாக அடையாளம்

காட்டி நிற்கின்றன…

 

அகத்தில் ஏற்பட்ட

காயங்களுக்கு

அடையாளங்கள் ஏதுமில்லை…

எப்போதாவது ஏன் அப்படி

நிகழ்ந்தது எனும்

உள் மனது விசாரிப்புகளோடு

கடந்து போகும்

அந்தக் காயங்கள்

ஒவ்வொருவரின் உடலும்

புதைக்கப்படும்போதுதான்

புதைக்கப்படுகிறது நிரந்தரமாய்…

 

                             வா.நேரு,

                             26.07.2025

Tuesday, 13 May 2025

படாதபாடுபடும் முனைப்பில்...

 பக்திப்பழம் அவன்…

பக்தியைக் காப்பாற்ற

படாத பாடுபடுகிறான்…


‘எல்லாம் வல்ல’ கடவுளைக்

காப்பாற்ற மனிதன் எதற்கு

இத்தனை சண்டை போடுகிறான்..

இளம்வயது முதல் எனக்கு

இது புரியவேயில்லை..


ஆளுக்கொரு கடவுள்

ஆளுக்கொரு ஆயுதமென

இவர்களின் சண்டையே

ஆகப்பெரும் சண்டை

வரலாறு முழுவதும்…


பக்தியைக் காப்பாற்ற

படாதபாடுபடும் முனைப்பில்

ஒழுக்கத்தைக் காப்பாற்றத்

தவறுகிறான் என்பது

செவி வழிச்செய்தி…

பக்தி போனால் நட்டமில்லை..

ஒழுக்கம் போனால்…?

                              வா.நேரு,
                              13.05.2025

Wednesday, 9 April 2025

டொனால்ட் டிரம்ப்...

 

கடலுக்கு அருகில்

நின்று கடல் அலையே

என் காலைத் தொடாதே

என்று கட்டளையிட்டு

அவமானப்பட்ட

ஆங்கில மன்னன்தான்

நினைவுக்கு வருகிறான்...

அமெரிக்க அதிபர்

டொனால்ட் டிரம்ப்

செயல்களைப் பார்த்து…


                          வா.நேரு,09-04-2025


Sunday, 6 April 2025

இராமாயணத்து இராமரும் மோடியும்....

 

இராமாயணத்து இராமரும்

மோடியும் ஒன்று

என்றொருவர் கவிதை

எழுதியிருக்கிறார்...

மோடியை வரவேற்று...

உண்மைதான்...

மனைவியைக் காட்டில்

தவிக்க விட்டுவிட்டு

நாட்டை ஆண்டவர் இராமர்..

மனைவி இருப்பதையே

தேர்தல் பத்திரங்களில்..

சமூகத்திற்கு....

காட்டாமல் குஜராத்

மாநிலத்தை..நாட்டை

ஆண்டவர் மோடி...

விலங்குகள் வாழும்

காட்டில் பயந்து பயந்து

பிள்ளைகளை வளர்த்தாள்

இராமயணத்தில் சீதை..

ஒற்றை அறை வீட்டுக்குள்

பயந்து பயந்து வாழ்ந்தார்...

வாழ்கின்றார் யசோதாபென் மோடி..

இருவரும் ஒன்றுதான்..

சரியாகத்தான் கவிதை

எழுதியிருக்கிறார் அவர்...

                                வா.நேரு,

                                06.04.2025

Saturday, 22 March 2025

இன்குலாப் ஜிந்தாபாத்....

தோழர் பகத்சிங்

முழங்கிய

‘இன்குலாப் ஜிந்தாபாத்’

இந்தி மொழிச்சொல்லாக

எனக்குத் தெரியவில்லை…


சில நேரங்களில்

புரட்சி ஓங்குக என்னும்

மொழிபெயர்ப்பை விட

‘இன்குலாப் ஜிந்தாபாத்’

நாடி நரம்புகளில்

ஊடுருவதை முழக்கம்

இடுகையில் பார்த்திருக்கிறேன்..


ஆண்டுகள் பல போனபின்பும்

போபால் மாநாட்டின்

ஊர்வலத்தில் நடனமாடிக்கொண்டே

முழக்கமிட்ட சீக்கிய சகோதரனின்

முழக்கம் காதுக்குள்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

'இந்து முஸ்லீம் சீக்....குஹே..

பை..பை,...பைபை'  


சில சொற்கள் மொழிகடந்து

நம் மனதிற்குள்

ஊடுருவி விடுகின்றன!

‘தோழர் பகத்சிங் ஜிந்தாபாத்’...

இன்னுயிர் போகுமென்ற

நிலையிலும் அவரும்

அவரது தோழர்கள்

இராஜகுருவும் சுகதேவும்

இதே நாளில் அன்று

இணைந்து முழங்கிய

'ஜிந்தாபாத் ஜிந்தாபாத்'

‘இன்குலாப் ஜிந்தாபாத்’

‘நாஸ்திகம் ஜிந்தாபாத்’

                               வா.நேரு,23.03.2025




யோசித்துக்கொண்டிருக்கிறேன்...

 தோழர்,இந்தக் கவிதை

என்னைப் பற்றி

எழுதியதுதானே என்றார் அவர்..

மறைக்க இயலவில்லை..

ஆமாம் என்றேன் மெல்லிய குரலில்

எளிதில் கண்டுபிடிக்கும்

நிலையில்தான் எனது

கவிதைக்கருவும் கதைக்கருவும்…

என்னைச் சுற்றி நிகழும்

நிகழ்வுகளே என் கவிதைக்குள்ளும்

என் கதைக்குள்ளும்…

எங்கோ நிகழ்வுவதுபோல்

எழுதுதல் வேண்டும் எனும்

அறிவுரைப்படி எல்லாம்

எழுதிப்பார்க்கிறேன் ஆனாலும்

எளிதில் அடையாளம்

கண்டு கொள்கிறார்கள்..

எவரையும் இழித்துப் பழித்து

எழுதுவதில்லை எனினும்

என் செய்வது ? எழுதலாமா?

எழுதுவதை நிறுத்தலாமா?

என யோசித்துக்கொண்டிருக்கிறேன்..

                                      வா.நேரு,22.03.2025

Friday, 14 March 2025

அம்மா செண்பகம் இராமசுவாமி புகழ் நிலைக்கட்டும்....

 பெரியாரின் தத்துவத்தை

இளையோர் மனங்களில்

ஏர்போல் உழுது ஆழ

விதைக்கும் அன்பர் இவர்…


‘பெரியாரைப் புரிந்துகொள்வது

எப்படி?’ –ஓர் அற்புதமான

நூலினை ஆய்ந்தறிந்து

கொடுத்த பெருந்தகை இவர்..


‘கலகக்காரர் தோழர் பெரியார்’

எனத் தொடங்கி கடந்த

கால் நூற்றாண்டுக்காலத்தில்

தந்தை பெரியார் பற்றி

ஐந்து நிஜ நாடகங்களைக்

கொடுத்தவர் இவர்…


இந்த நாட்டில் சிவப்புச்சட்டை

ஆட்சி மலர இந்தக்

கருப்புச்சட்டைக்காரர்தான்

தேவையென்பதை ஆய்ந்து

ஏற்றுக்கொண்டவர் இவர்…


விதம்விதமாய்ப் பெரியாரை

உற்று நோக்குகிறார்..

வேறுபட்ட வடிவங்களில்

நாடகமாய் அரங்கேற்றுகிறார்…


இளையோர் பங்கேற்பால்

அரங்கங்களை அதிர வைக்கிறார்..

பெண்களின் வெடிச்சிரிப்பால்

பழமைவாதிகளைப்

பயந்தோட வைக்கிறார்…


கருப்பும் நீலமும் சிவப்பும்

இணைந்து போராடும்

ஓர் எதிர்காலத்தைக் கட்டமைக்கிறார்

தன் நாடகங்களின் வழி…

 

27 ஆண்டுகளுக்கு முன் மறைந்த

தன் இன்னுயிர் இணையர்

அம்மா செண்பகம் இராமசுவாமி

அவர்களின் நினைவாய்

அவர் நினைவு நாளில்

தான் எழுதிய நூல்களின் வழியே

தமிழ் சமூகம் அம்மாவை

நினைவு கூரக் களம் அமைக்கிறார்…


மார்க்ஸ் மேல் அளவற்ற காதல்

கொண்ட ஜென்னிபோல்

மார்க்ஸ் நினைவு நாளில் மறைந்திட்ட

அம்மா செண்பகம்மேல் அளவற்ற

காதல் கொண்ட தோழர்

மு.இராமசுவாமியை நேரில் கண்டோம்

மனதில் உவகை கொண்டோம்..


எப்போதும் தோழர் மு.இராமசுவாமியை

இயக்கிக் கொண்டே இருக்கும்

அம்மா செண்பகம் இராமசுவாமி

புகழ் நிலைக்கட்டும்!வாழ்க!

வாழ்க !அவரின் நினைவுகள்! 

வா.நேரு,14.03.2025


Tuesday, 11 March 2025

வாசிக்கும் மனம்...

 

                                        

 

ஒரு நல்ல

புத்தகத்தின் வாசிப்பு

நம்மை எங்கெங்கோ

அழைத்துச்செல்கிறது


அத்துவானக் காட்டில்

துயரத்தில் அல்லல்படும்

அவர்களின் துயரத்தில்

நம்மையும் கூட

பங்குபெற வைக்கிறது..


ஏதுமற்ற பழங்குடிப்பெண்ணாக

இருந்தாலும் அவளின்

கள்ளங்கபடமற்ற நகைப்பும்

வாழ்ந்து காட்டவேண்டும்

எனும் உள்ளத் துடிப்பும்


தன் துயரை மட்டுமே

எண்ணி அழுதுகொண்டிருக்காமல்

தன்னைப்போல் பாதிக்கப்பட்டு

அழுதுகொண்டிருப்பவர்களுக்காக

நீளும் அவளின்

உதவிக் கரங்களும்


உன்னதமாக வாழ்வது எப்படி

என்னும் உண்மையைப்

போதிக்கிறது எழுத்தின் வழியே

அரிவாள் ஜீவிதம்நாவலின்

ஜெகந்திஏனோ படித்து

முடித்தபின்பும் மனதிற்குள்

வாழ்ந்து கொண்டிருக்கிறாள்

கதை என்னமோ அவள்

சாகும் இடத்தில்

இருந்துதான் தொடங்குகிறது !

 

                   வா.நேரு,11.03.2025




 

Monday, 3 March 2025

செத்தபின்பும்....

 

ஒரு கொள்கைக்காகவே

வாழ்தல்…

ஒரு கொள்கைக்காகவே

பேசுதல்…

ஒரு கொள்கைக்காகவே

சாகுதல்…

இவையே ஒரு மனிதரை

செத்தபின்பும்

பேசவைக்கும்..

அவரைப் பற்றிப் பலரும்

எழுத வைக்கும்…

 

                       வா.நேரு,03.03.2025

Saturday, 1 March 2025

தமிழ்நாடு வெல்லும்...தளபதி வாழ்க!

 

பிறந்த நாள்

கொண்டாட்டம் என்பது

கொள்கையைப்

பிரச்சாரம் செய்யும்

ஒரு வழிமுறை

என்றார் பெரியார்…

பட்டி தொட்டி எங்கும்

ஊர்தோறும் இன்று

உடன்பிறப்புகள்

ஒன்றிணைந்து உரக்க

முழுக்கங்களை

எழுப்பியிருக்கிறார்கள்...

திராவிட மாடல்

அரசின் நாயகர்

மாண்புமிகு முதல்வர்

தளபதி மு.க.ஸ்டாலின்

வாழ்க ! வாழ்க! என

வாழ்த்தி நாமும்

முழக்கம் சொல்லுவோம்..

‘தமிழ்நாடு போராடும்

தமிழ்நாடு வெல்லும்’

                        வா.நேரு,01.03.2025

 

 

Friday, 21 February 2025

கரும்பு தந்த தீஞ்சாறாய்...

நம் தாய் நமக்கு

தொட்டிலில் இட்டு

தாலாட்டிய மொழி..

அடிபடும்போதும் நாம்

அடிக்கும்போதும் நம்மை

அறியாமல் நம்

வாயிலிருந்து வந்து

விழும் மொழி…

நம் எண்ணத்தில்

எப்போதும் ஓடும் மொழி..

‘கரும்பு தந்த தீஞ்சாறாய்’

எப்போதும் இனிக்கும்

எம் மொழி தமிழாம்!

இனிய தாய்மொழி

நாள் வாழ்த்துகள் !

                        வா.நேரு,21.02.2025


Thursday, 20 February 2025

மாட்டிவிடாமல் மீட்டதற்காக...

 

மூளைக்குள்

அப்பிக்கிடக்கும்

அழுக்கை அகற்றுவது

அவ்வளவு ஒன்றும் எளிதல்ல...

ஆபத்தான மலக்கழிவு

நுண்ணுயிர்கள் மண்டிக்கிடக்கும்

கும்பமேளா ஆற்றில்

குளிப்பதற்குப் போட்டியிடும்

மனிதர்களுக்கு உண்மையை

உணர்த்துவது அவ்வளவு சுலபமல்ல..

நாட்டை ஆள்பவர் முதல்

நாடோடிகள் வரை

இந்த மலக்குப்பைக் குட்டையில்

மூழ்கி எழுந்தால்

மோட்சம் என நம்புவதை

முறிப்பது அவ்வளவு எளிதல்ல..

பகுத்தறிவுக் கண்ணாடி அளித்த

தந்தை பெரியாரை நினைத்திடுவோம்

இந்தக் குப்பைகளுக்குள் நாம்

மாட்டிவிடாமல் மீட்டதற்காக...

                               வா.நேரு,20.02.2025

Wednesday, 19 February 2025

மரணமேளாவா?...

மகாமேளாவா?

மரணமேளாவா?

சரியான கேள்வியெழுப்பிய

மம்தாவிற்கு எதிராகப்

பொங்குகிறார்கள்..

யோகி-யின் பக்தர்கள்..

கும்பமேளாவில் குளித்த

பெண்களின் வீடியோக்கள்

அவர்கள் உடைமாற்றும்போது

எடுத்த வீடியோக்கள்

அமோக விற்பனை ஆன்லைனில்!

'தினமணி'க் கரடியே உங்கள்

முகத்தில் காறித் துப்புகிறது!

ரெயிலில் ஏற முண்டியடித்த

கூட்டத்தில் மிதிபட்டு...

கும்பமேளா நெரிசலில் சிக்கி...

எத்தனை பேர் செத்தனர்?…

அட உடைபடும்

ரெயில் ஜன்னல்கள்..

விரட்டப்படும்

ரெயில் ஓட்டுநர்கள்..

உலகமே பார்த்துச்சிரிக்கிறது

உங்கள் பக்தியின்

இலட்சணம் பார்த்து!..

இதில் மம்தாவைக்

கண்டிக்க வேண்டுமாம்!    

                          வா.நேரு,19.02.2025 

Tuesday, 18 February 2025

முறைகேடாய்ப் பணம் சேர்த்தாலே

 

அழுக்குச்சேற்றில்

குளிப்பதை

அகம் மகிழ்ந்து

பதிவிட்டிருந்தான்

தெரிந்தவன் ஒருவன்..

தமிழ் நாட்டில் பிறந்து

வளர்ந்து  திராவிட

இயக்கத்துக் கல்வியால்

உயர் நிலைக்குப் போன

அவனுக்கு இந்த ஆசை

ஏன் வந்து தொலைத்தது?

தெரியவில்லை…

முறைகேடாய்ப் பணம்

சேர்த்தாலே..பக்தி

முந்திக்கொண்டு

வந்து விடும்போல…

                     வா.நேரு,18.02.2025

Monday, 17 February 2025

பிப்ரவரி 17...

மதகுருக்களே

மன்னர்களைவிட

அதிகாரமிக்கவர்களாய்

வலம் வந்த இருண்ட காலம்...

பூமியைச் சூரியன்

சுற்றுகிறது என மத நூல்

சொன்னதை நம்பிய

அந்தக் காலம்...

இல்லை இல்லை

சூரியனைத் தான் பூமி

சுற்றுகிறது எனச்சொன்னவர்...

பிரபஞ்ச இரகசியத்தை

அறிவியல் வழி

உலகுக்கு அறிவித்தவர்...

இந்த உலகம் கடவுளால்

படைக்கப்பட்டதல்ல என

அறிவியல்வழி ஆய்ந்து

எழுதியவர் பேசியவர்...

ஆய்ந்து அறிந்து கடவுள்

இல்லை எனச்சொன்னவர்

அறிவியல் அறிஞர்

ஜியார்டானோ புரூனோ

மதவாதிகள் கட்டளையால்

கொடூரமாய்க் கொல்லப்பட்ட

நாள் இன்று பிப்ரவரி 17...

                          வா.நேரு,17.02.2025

 

 

 

 

 

Saturday, 15 February 2025

துள்ளலும் மகிழ்ச்சியுமே தனி…

உவகை

மகிழ்ச்சி

உற்சாகம்

கைகுலுக்கல்

உண்மையான

உளமார்ந்த நலமா?...

விசாரிப்புகள்..

ஒரு கொள்கைக்காக

எங்கெங்கோ பிறந்த

நாமெல்லாம் சாதி மதம்

துறந்து ஒன்றிணைந்து

செயல்படுகிறோம் எனும்

உணர்வால் ஒன்றிணையும்

கொள்கை உறவுகள்

சந்திப்பால் ஏற்படும்

துள்ளலும் மகிழ்ச்சியுமே தனி…

                      வா.நேரு,16.02.2025

           (சிதம்பரத்தில் நேற்று திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம்)


Wednesday, 12 February 2025

அவைகள் பெயரால்

 

மாறிக்கொண்டே

இருக்கிறது உலகம்..

மாறாமல் இருப்பது

கடவுளும் மதமும்…

அவைகள் பெயரால்

ஏற்படுத்திய

அர்த்தமற்ற சடங்குகளும்

அதற்கு மக்கள்

செலவழிக்கும் பெரும்பணமும்..

அவைகள் பெயரால்

நடைபெறும் சச்சரவும்

சண்டைகளும்

                           வா.நேரு,12.02.2025

Sunday, 9 February 2025

நீயும் நானும் உணர்வோமா?

 

கூடி வாழ்தல்

ஒரு கலை...

மனிதர்களைவிட

சிற்றுயிர்கள்தான்

கூடிவாழ்தலுக்கு

முன்னெத்தி ஏர்கள்..

எறும்பும் தேனியும்

ஏன் கரையானும் கூட

பொறுப்புணர்வோடு

இணைந்து வாழ்தலுக்கு

எடுத்துக்காட்டாய்

இப்புவியில்...

நீயும் நானும் உணர்வோமா?

வீண் சண்டையிட்டு மடிவோமா?

                               வா.நேரு,09.02.2025

Thursday, 6 February 2025

தம்மின் தம் மக்கள்...

 

என் கவிதைகளை

நிறையப் படித்திருக்கும்

என் தோழர் ஒருவர்

என் மகனின் கவிதையைப்

படித்துவிட்டுப் பாராட்டினார்…

உங்கள் கவிதையைவிட

கவித்துவத்தில் உங்கள்

மகன் கவிதை நன்றாக

இருக்கிறது என உளமாறப்

பாராட்டி மகிழ்ந்தார்…

இன்னொரு நண்பர் அவனது

கவிதையை வாட்சப்

ஸ்டேட்டசில் வைத்திருந்தார்…

'தம்மின் தம் மக்கள்...'

பெருமைதான் பெற்றோராகிய

எங்களுக்கு….

                வா.நேரு , 06.02.2025

 

Wednesday, 5 February 2025

சுய புளகாங்கிதம்...

திருப்பரங்குன்றம் 

கோயில் மேல் தர்கா

எனக் கச்சை கட்டுதுகள்

எச்சைகள்...

காலம் காலமாய் இருப்பதுதானே!

இதுக்கு எதுக்கு இத்தனை கூச்சல்?

சுய புளகாங்கிதம்...

கைகால்களில் விலங்கிட்டு

அமெரிக்காவிலிருந்து

திருப்பி அனுப்பப்படும்

இந்தியர்கள்...

ஒன்றிய அரசின்

பட்ஜெட்டில் 

பட்டை நாமம்

தமிழ்நாட்டுக்கு...

2 கோடிப்பேருக்கு

வேலைவாய்ப்பு

மோடி வாயால் 

சுட்ட வடை...

அகல பாதாளத்திற்குப்

போகும் ரூபாய் மதிப்பு...

விழிபிதுங்கி நிற்கும் 

நடுத்தர வர்க்கம் !

எதுக்கும் பதில்

சொல்லாத எச்சைகள்

அதுகூட நிற்கும்

வெத்து வேட்டுகள்

போடும் கூச்சல்...

உங்க பருப்பு 

தமிழ்நாட்டில் வேகாது

ராசா...வேகாது…

                                          வா.நேரு,05.02.2025