பக்திப்பழம் அவன்…
பக்தியைக் காப்பாற்ற
படாத பாடுபடுகிறான்…
‘எல்லாம் வல்ல’
கடவுளைக்
காப்பாற்ற மனிதன்
எதற்கு
இத்தனை சண்டை போடுகிறான்..
இளம்வயது முதல்
எனக்கு
இது புரியவேயில்லை..
ஆளுக்கொரு கடவுள்
ஆளுக்கொரு ஆயுதமென
இவர்களின் சண்டையே
ஆகப்பெரும் சண்டை
வரலாறு முழுவதும்…
பக்தியைக் காப்பாற்ற
படாதபாடுபடும்
முனைப்பில்
ஒழுக்கத்தைக் காப்பாற்றத்
தவறுகிறான் என்பது
செவி வழிச்செய்தி…
பக்தி போனால் நட்டமில்லை..
வா.நேரு,
13.05.2025
No comments:
Post a Comment