Sunday 8 January 2012

அண்மையில் படித்த புத்தகம் : கடவுளை பார்த்தவனின் கதை

நூலின் தலைப்பு : கடவுளை பார்த்தவனின் கதை
மூல ஆசிரியர் : லியோ டால்ஸ்டாய்
தமிழில் : பாலு சத்யா
வெளியீடு : புக்ஸ் பார் சில்ரன் , சென்னை-18
இரண்டாம் பதிப்பு : 2008
விலை : ரூ 20
மொத்த பக்கங்கள் : 64
மதுரை மைய நூலக எண் : 174037

லியோ டால்ஸ்டாய் மிகச்சிறந்த எழுத்தாளர் என்பதை நாம் அறிவோம். காந்தியார் தனது வாழ்க்கையில் பாதித்த நூல்களில் ஒன்று லியோ டால்ஸ்டாய் அவர்களின் போரும் அமைதியும் எனக் குறிப்பிடுவோர். எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல் இந்த "கடவுளை பார்த்தவனின் கதை".புனிதப் பயணம் என்று பணத்தை அள்ளி இரைத்து சென்று வருபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கதை

இரண்டு பெரியவர்கள், இருவருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், நிறையப் பணத்தை வைத்துக்கொண்டு புனிதப் பயணம் போகின்றார்கள் , அதில் ஒருவர் மிக ஏழ்மையோடு சாகக் கிடக்கும் குடும்பத்தைப் பார்த்து அவர்களுக்கு உதவுகின்றார். புனிதப் பயணம் போவதற்காக வைத்திருந்த பணத்தை இவர்களுக்கு செலவழித்ததால் , மீதப் பயணத்தை தொடர முடியவில்லை . பயணத்திலிருந்து திரும்பி ஊருக்கு வந்து விடுகின்றார். மற்றொருவர் புனிதப் பயணத்தை முடித்துக்கொண்டு ஊருக்கு வருகின்றார். இதுதான் கதை. ஆனால் இதனை லியோ டால்ஸ்டாய் சொல்லும் விதம் அற்புதம். லியோ டால்ஸ்டாய் 1828-ல் பிறந்து 1910-ல் மறைந்தவர். ஏறத்தாழ 150,160 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கதையாக இருக்கலாம் இது. கடவுள் இல்லை என்று உரக்க சொல்லவில்லை இதில் ஆனால் மனிதனை நினை என்பது கடவுளை நினைப்பதை விட அதிகத் தேவையானது என்பது மிக அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

வா.நேரு - 09-01-2012

1 comment:

Unknown said...

very nice. . . ..