Tuesday 22 May 2012

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்


பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நல்.இராமச்சந்திரன் பயிற்சியைத் தொடங்கி வைத்து  உரையாற்றுகிறார்.

பெரியார் மணியம்மை ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வீ.அன்பராஜ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அயன்ஸ்டீன் அரங்கத்தில் திரை வழியே பங்கேற்றவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.

வல்லம், மே 21- பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யம், திராவிடர் கழக இளைஞர் அணி மற்றும் பகுத்தறி வாளர் கழகமும் இணைந்து நடத்திய தமிழ் இணை யப் பயிலரங்கத் தொடக்க விழா நேற்று பல்கலைக் கழக வள்ளுவர் அரங்கில் கோலாகலமாய் நடை பெற்றது.
தொடக்க விழா
இந்நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்புரை வழங்கினார்.  பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை முதன்மையர் பேராசிரியர் க.திருச்செல்வி தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் வா.நேரு அறிமுக உரையாற்றினார். இப்பயிலரங்கிற்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. நல்.இராமச் சந்திரன் அவர்களின் தொடக்க உரையில் கிராமப் புற மாணவர்களும், இளைஞர் களும் இத்தகைய தமிழ் இணையப் பயிலரங்கம் மூலம் தங்களையும் தங்களது சமூகத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று கூறியதோடு பிரமிக்கச் செய்யும் சாதனைகளை கிராமப் புறங்களில் இருந்து வரும் இளைஞர்களால்தான் சாதிக்க முடியும். அதற்கு  கிடைத்த வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்தினால் அசாதாரண வெற்றிகளையும் நன்மைகளையும் குவிக்க இயலும் என்று தனது தொடக்க உரையில் தெரிவித்தார். பெரியார் புரா திட்டத்தின் வழியாக கிராமப் புற 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு கணிதம் மற்றும் ஆங்கில பாடங்கள் கணினி முறையில் பல்கலைக்கழகத்தின் மூலம் கற்றுத்தர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக, துணைப் பொதுச் செயலாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் கா.செந்தில்குமார் நன்றியுரை வழங்கினார்.
நிறைவு விழா
200 க்கும் மேற்பட்ட கிராம புற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். இப் பயிலரங்கத்தில் தமிழ் இணையம் வளர்ச்சி வரலாறு வலைப்பூ உருவாக்கமும் பயன்பாடுகளும் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகம் ஆகிய பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சிகள் வழங் கப்பட்டன. திராவிடர் கழக மாநில இளைஞர் அணி செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் திராவிட எழில் இப்பயிற்சி பயிலரங்கத்தை ஒருங்கிணைத் தனர்.  இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவானது மாலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அய்ன்ஸ்டீன் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பகுத்தறிவா ளர் கழக மாநில துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி வரவேற்புரை வழங்க பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் மு.அய்யாவு தலைமையுரை ஆற்றினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ்  சிறப்புரை யாற்றி, இப்பயிற்சியில் பங்கேற்ற வர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் இப்பயிற்சியில் பங்கேற்றவர்களில் சிலர் இப்பயிற்சியானது தங்கள் அறிவுகண்களை திறந்ததாகவும், பயனுள்ளதாக அமைந்தாகவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி உயராய்வு மய்ய கூடுதல் இயக்குநர் ந.சிவசாமி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிகள் பல்கலைக் கழக துணைவேந்தர் சீரிய வழிகாட்டுதலின்படி மிகச் சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர்.மு.அய்யாவு, ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யத்தின் கூடுதல் இயக்குநர் பேரா. முனை வர்.ந.சிவசாமி, பவர் தொண்டு நிறுவன செயலாளர் முனைவர்.உ.பர்வீன், பெரியார் சிந்தனை மய்ய துணை இயக்குநர் முனைவர்.க.அன்பழகன், மாநில ப.க.துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்கறிஞர் சி.அமர்சிங், மாவட்ட செயலர் மானமிகு த.ஜெக நாதன், மாநில மாணவரணி செயலர் மானமிகு திராவிட எழில் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Saturday 19 May 2012

ஆந்திராவில் தமிழர் தலைவர் ஒலித்த சமூக நீதிக் குரல்


தனியார் துறைகள் பெருகி வரும் பொருளாதாரச் சூழலில்
தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு என்பதே நமது அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கை!
ஆந்திர மாநிலம் ரேபல்லியில் நடைபெற்ற சமூகநீதி பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி எழுச்சியுரையாற்றுகின்றார். ஆந்திர சமூக நீதி பேரவையின் மதிப்புறு தலைவர் கேசன சங்கர் ராவ் உடன் உள்ளார். பேரவையின் தலைவர் கேசன ராம கோட்டிஸ்வரராவ் தமிழர் தலைவரின் ஆங்கிலப் பேச்சினை தெலுங்கில் மொழி பெயர்க்கின்றார். (10.5.2012)
தெனாலி மே, 11- புதிய பொருளா தாரச் சூழலில், தனியார்த் துறைகள் பெருகி வரும் இக்காலக் கட்டத்தில் சமூக நீதிக் கண்ணோட்டத்தில் நமது அடுத்த நடவடிக்கை - தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தி அதனைப் பெறுவதுதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் தெனாலி அருகில் ரேபல்லி பேரூரில் மாபெரும் சமூக நீதிப் பொதுக் கூட்டம்  ஆந்திர மாநில சமூகநீதிப் பேரவை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மே 10 ஆம் நாள் ரேபல்லி அரசு இளநிலை கல்லூரி மைதானத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கிய பொதுக் கூட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேருரை ஆற்றினார். ஆந்திர மாநிலத்தின் சமூகநீதித் தலைவர்கள் மற்றும் போராளிகள் பலர் கலந்து கொண்டு உரையாற்றிச் சிறப் பித்தனர்.

தமிழர் தலைவரை வரவேற்றனர்

ரேபல்லி சமூக நீதிக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து இரயிலில் சென்ற தமிழர் தலைவரை தெனாலி இரயில் நிலையத்தில் மே 10ஆம் நாள் காலை 6 மணி அளவில் சமூக நீதிப் பேரவையின் தலைவர்கள் அன்புடன் வரவேற்றனர். தமிழர் தலைவருடன் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு, பொதுச் செயலாளர் வீ. குமரேசன், மேனாள் நீதிபதி ஆர். பரஞ்சோதி  ஆகியோர் சென்றனர்.

முற்பகல் செய்தியாளர் சந்திப்பு

தெனாலி நகரத்திலேயே விடுதியில் தமிழர் தலைவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆந்திர சமூக நீதிப் பேரவையின் சார்பாக முற்பகல் 11.30 மணியளவில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சமூகநீதிப் பேரவையின் மதிப்புறு தலைவர் கேசன சங்கர்ராவ் அவர்களின் தெனாலி இல்ல வளாகத்திலேயே செய்தியாளர்களை தமிழர் தலைவர் சந்தித்தார்.
சமூகநீதிப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய சமூக நீதிப் பேரவையின் தலைவர் வழக்குரைஞர் கேசன ராம கோட்டீஸ்வராவ், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ.குமரேசன், பேராசிரியர் கவுடு சத்தியநாராயணா, வழக்குரைஞர் கேசன ராமசாமி, கொக்கிலிகட்டா வெங்கட நரசிம்மராவ், சுனில் கவுடு.
செய்தியாளர்களிடம் தெனாலியில் உள்ள தெலுங்கு, செய்திப் பத்திரிகை மற்றும் தெனாலியில் உள்ள தெலுங்கு, செய்திப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடக செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் சுருக்கமாகக் கூறியதாவது:

சமூக நீதிப் பயணம் பல காட்டாறுகளைக் கடந்து வந்துள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவில் தமிழக, ஆந்திரப் பகுதியினைச் சார்ந்த மக்கள் தலைவர்கள் சமூகநீதி வெளிச்சத்தைத் தூக்கிப் பிடித்த காரணத்தால்தான் சமுதாயத்தில் கடவுள், மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வு பெற்று உயர்நிலைக்கு, மற்றவர் களுக்கு இணையாக வர முடிந்தது. அடுத்து சமூகநீதித் த்துவத்தை தந்தை பெரியார் மாபெரும் இயக்கமாக வளர்த்தெடுத்தார். சமூக நீதிப் பயணம் ஒழுங்காக நடைபெற தளம் அமைத்துக் கொடுத்தார்.
அடுத்த கட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் இதர சமூகநீதித் தலைவர்களுடன் இணைந்து போராடிய காரணத்தால் மண்டல் குழு பரிந்துரைகள் படிப்படியாக நடைமுறைக்கு வரும் சூழல்கள் உருவாயின.

இப்பொழுது மாறிவரும் பொருளாதாரச் சூழலில் அடுத்த கட்டத்தை சமூக நீதிப் பயணம் எட்டியுள்ளது. இதுவரை கல்வி, வேலை வாய்ப்புகளில் அரசு மற்றும் அரசு சார்ந்த நிலையங்கள் மற்றும் நிறுவனங்களில் மட்டுமே இருந்து வந்துள்ளது இட ஒதுக்கீடு முறை, தனியார் மயமாகும் சூழலில், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை.

அதனை நடை முறைப்படுத்துவதற்கு திராவிடர் கழகமும் இதர சமூக நீதி அமைப்புகளும் குரல் கொடுத்து அதற்காகக் களம் இறங்கும் சூழல்கள் உருவாகி உள்ளன. இந்த சவால் நிறைந்த சமூக நீதிப் பயணத்தை ஒடுக்கப் பட்ட, அடக்கப் பட்ட மக்களுடன், சமூகத்தின் அடித்தளத் தில் உள்ள மக்களின் ஆதரவினையும் சேர்த்து போராட அணியமாக உள்ளோம். இட ஒதுக்கீடு என்பது வெறும் வேலை வாய்ப்புக்கான, வாழ்விற்கான வருவாய் ஈட்டும் வழி என்பதை விட, நாட்டு நிர்வாகத்தில், அதிகாரத்தில் அனைத்துத் தள மக்களும் பங்கேற்கும் அதிகாரப் படுத்துதல்   என்ற நோக்கத்தில்தான் என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அனைத்துப்  பிரிவு மக்களும் பங்கேற்கும் ஆட்சி அதிகார முறையே உண்மையான மக்களாட்சியாகும்.

மேற்குறிப்பிட்ட தனது உரைக்குப் பின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு தமிழர் தலைவர் பதிலளித்தார். செய்தியாளர் சந்திப்பில் தமிழர் தலை வருடன் ஆந்திர சமூக நீதிப் பேரவையின் மதிப்புறு தலைவர் கேசன சங்கர் ராவ், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு, பொதுச் செயலாளர் வீ.குமரேசன் மற்றும் மேனாள் நீதிபதி ஆர்.பரஞ்சோதி ஆகியோர் இருந்தனர்.
மாலையில் தெனாலியில் இருந்து 43 கி.மீ. தொலைவிலுள்ள ரேபல்லியில் நடைபெற்ற சமூக நீதிப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று எழுச்சி மிகு பேருரை ஆற்றினார்.

தோழர் சரயா குழுவினரின் பாடல் நிகழ்ச்சி

கூட்டத்தின் தொடக்கத்தில் பகுத்தறிவாளர் தோழர் சரையா தலைமையில் மக்கள் சேவை சங்கத்தின் தோழர்கள் உணர்ச்சி மிக்க சமூக நீதிப் பாடல்களை நாட்டு இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டே பாடினர். தந்தைபெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோரைப் பற்றிய தெலுங்குப் பாடல்களைப் பாடிய போது திரண்டிருந்த மக்கள் கூட்டத்தினர் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சமூக நீதிக் கூட்டத்தில் அறிமுக உரையினை சமூக நீதிப் பேரவையின் தலைவர் கேசன ராமகோடீஸ்வர ராவ் ஆற்றினார். அதனையடுத்து ஆந்திர சமூக நீதிப் பேரவையின் மதிப்புறு தலைவர் சங்கர்ராவ் தலைமையுரை ஆற்றினார்.

ஆந்திர சமூக நீதிப் பேரவை மதிப்புறு தலைவர் கேசன சங்கர் ராவ் தலைமையுரை

தலைவர் வீரமணிகாரு, இந்த சமூக நீதிப் பொதுக் கூட்டத்தின் கலந்து கொண்டு உரையாற்றுவது எங்களுக் கெல்லாம் எழுச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது. தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் கொள்கை வாரிசாக உள்ள வீரமணிகாரு மிகுந்த தொலைநோக் குடன் எங்களைப் போன்ற சமூக நீதி அமைப்புகளை ஊக்கப்படுத்தி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு பாடுபட்டு வருகிறார். இந்த தலைமுறையின் நலனுக்குப் பாடுபடுபவர்கள் அரசியல்வாதிகள்; எதிர்காலத் தலைமுறைக்கும் சேர்த்துப் பாடுபடுபவர்கள் அரசியல் அறிஞர்கள். அத்தகைய அறிஞராகத் திகழ்கின்ற வீரமணிகாரு முன்னெடுக்கும் சமூக நீதிப் பயணச் செயல் பாடுகளில் நாங்கள் - எங்களை, எங்கள் பகுதி மக்களை இணைத்துக்கொண்டு முழுமையாகப் போராடுவோம்.

இதுவரை சமூக நீதிப் பலன் கிடைக்காத அடித்தள மக்களுக்கும், இப்போது பலன் பெற்று வரும் மக்களின் அடுத்த கட்ட உயர்விற்கும் சேர்த்து எங்களது சமூக நீதிப் பேரவை பாடுபடும். அதற்கான செயல்பாடுகளில் எங்களை சமூகநீதித் தலைவர் வீரமணிகாரு வழி நடத்திட வேண்டும்.- இவ்வாறு கேசன சங்கர்ராவ் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார். பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ.குமரேசன்
அடுத்து பகுத்தறிவாளர் கழகப்பொதுச் செயலாளர் வீ. குமரேசன் சுருக்கமாக உரையாற்றினார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முறையாகத் திருத்தப்பட்டது சமூக நீதித் தத்துவத்தின் நடைமுறை அணுகுமுறையான இட ஒதுக்கீட்டுக்காகத்தான் என்பது வரலாறு. அந்த முதல் சட்டத்திருத்தத்திற்கு தந்தை பெரியார் தலைமையேற்று நடத்திய போராட்டங்கள்தான் காரணமாக அமைந்தன- 1951 ஆம் ஆண்டில்.

தந்தை பெரியாரது கொள்கை வழித் தோன்றலாக பொது வாழ்க்கையில் உள்ள தமிழர் தலைவர் கி.வீரமணி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 76 ஆவது திருத்தத்திற்குக் காரணமாக அமைந்தார்.  ஆம். தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டின் அளவு 69 விழுக்காட்டினைப் பாதுகாக்க வேண்டிய தனி சட்டமே விதி 31 (சி)யின் கீழ் கொண்டு வரும் ஆலோசனையினை வழங்கி அரசமைப்புச் சட்டத்தில் ஒன்பதாவது அட்டவணையில் அதனைச் சேர்த்து, அந்தச் சட்டத்திற்கு நீதிமன்ற ஆய்வில் இருந்து பாதுகாப்பு வழங்கும் வழி முறைகளை நடைமுறைகளாக்கிவர் வரலாற்று சாதனையாளர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆவார்.  தந்தை வழியில் தனயன் என சமூக நீதித் தத்துவப் போராட்டத்திலும் தந்தை பெரியாரின் கொள்கை வழித் தோன்றலாகவே தமிழர் தலைவர் விளங்குகிறார். மற்ற மாநில சமூக நீதிப் போராட்டங்களுக்கு ஊக்கம் கொடுத்து, முன் மாதிரியாகவும் தமிழர் தலைவர் விளங்குகிறார்.

சமூக நீதிப் பொதுக் கூட்டத்தில் தலைவர்கள் பலர் உரையாற்றிய பின்பு தமிழர் தலைவர் நிறைவுப் பேருரை ஆற்றினார். அவரது ஆங்கிலப் பேச்சினை பிரபல வழக்குரைஞர் கேசன ராம கோட்டீஸ்வர ராவ் தெலுங்கில் மொழி பெயர்த்தார். மொத்தம் 50 நிமிடங்கள் பேசிய தமிழர் தலைவரின் கருத்தாழ மிக்க உரையினை ஆர்வமுடனும் அமைதியாகவும் பொதுமக்களும் பங்கேற்ற தலைவர்களும் செவிமடுத்தனர்.

தமிழர் தலைவரின் சமூக நீதித் தத்துவ எழுச்சிப் பேருரை

தெலுங்கு மொழியில் உங்களுடன் பேச இயலாத தற்கு பொறுத்தருள வேண் டுகிறேன். நான் தமிழ் மொழியில் பேசினாலும், ஆங்கிலத்தில் பேசினாலும் அது ஒரு பொருட்டல்ல. காரணம், நம் அனைவருக் கும் பொதுவான மொழி, புரிந்த மொழி, போராட் டங்கள் நடத்தப்பட வேண் டிய மொழி சமூகநீதி மொழியாகும்.

ஆந்திர மாநிலம் அன்றைய சென்னை மா காணத்துடன் இணைந்து இருந்த சூழலில் அன்றைய ஆந்திரத் தலைவர்கள் பனகல் ராஜா, பொப்பிலி ராஜா ஆகியோர் நீதிக் கட்சி ஆட்சியில் சமூக நீதிக்காகப் பாடுபட்டார்கள். அடுத்து லச்சண்ண கவுடு ராமசாமி சவுத்திரி, நீதியரசர் பி.எஸ். ஏ.சாமி ஆகியோர் சமூக நீதிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர்.

ஜோதிபாபூலே, சாவித்ரி பாய் பூலே, சாகுமகராஜ், நாராயண குரு, தந்தை பெரியார், பாபாசாகிப் அம்பேத்கர் ஆகியோர் தூக்கிப் பிடித்த சமூக நீதிக் கொள்கை யினை இன்று தொடர்ந்து, கூடுதல் வலிமையுடன் எடுத்துச் செல்ல வேண்டிய காலக் கட்டத்தில் இருக்கி றோம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள சமூக நீதி வழிமுறைகளை நடை முறைப்படுத்தாததால் அரசியல் விடுதலை பெற்று 65 ஆண்டுகள் நிறை வடைந்த வேளையிலும், சமூக நீதிக்காகப் போராட வேண்டியுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம் கூறிய வழிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்திருந்தால், சமூக நீதி விளக்கம், சமூக நீதிப் போராட்டத்தின் தேவையே தோன்றியிருக்காது. இந்திய அரசப்புச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தவே சமூக நீதி இயக்கம் பாடுபடவேண்டியுள்ளது; பாடுபட்டும் வருகிறது. நமக்கு பத்திரிகை ஊடகங்கள் ஆதரவாக இல்லை. அதைவிட ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும் உங்களின் ஆதரவே சமூக நீதிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லும் வலிமை வாய்ந்தது.

சமூக நீதி விளக்கம் - ரயில் பயணம்

சமூக நீதித் தத்துவம் என்பது புரியாத புதிரல்ல. புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவதும் கடினமான தும் அல்ல. எடுத்துக் காட்டாக, தெனாலியிலிருந்து வெமூரு, கொல்லூரு வழியாக ரேபல்லிக்கு தினசரி ரயில் சென்று வந்து கொண்டிருக்கிறது. தெனாலியில் கிளம்பும் ரயிலில் இடம் பெரும்பாலும் காலியாக உள்ள நிலைமை ரேபல்லிக்கு வரும்போது ரயில் முழுவதும் பயணிகள் நிறைந்ததாக மாறிவிடுகிறது.

இது எதார்த்தமான நிலைமை. தெனாலியில் இருந்து வெகு சிலரே பயணப் படும் சூழலில், பயணம் செய்பவர்கள் உட்கார்ந்து கொண்டு, வசதியாகப் படுத்துக் கொண்டும் பயணம் செய்யலாம். காரணம், பெரும்பாலான இடங்கள் காலியாக இருக்கும். தெனாலியில் இருந்து கிளம்பி வெமூருக்கு வந்தவுடன், பயணிகள் ஏறுவார்கள். அடுத்த கொல்லூரு விலும் பயணிகள் ஏறுவார்கள்.
ஏறிய பயணிகள் அமர்வதற்கு இடம் வேண்டி, அது வரை படுத்துக் கொண்டு வந்த பயணிகளை எழுப்பி அவர்களை உட்காரச் சொல்வது இயல்பு. ஆனால், இதுவரை வசதியாகப் படுத்துக் கொண்டு வந்தவர்கள் தங்களை எழுந்து உட்காரச் சொல்வது தவறு என்று சொன்னால் அது எப்படி நியாயமாகும்? உட்காருவதற்கு ஆள் இல்லாத சூழலில் படுத்துக்கொண்டு பயணிக்கலாம். உட்கார ஆள் வந்ததும், எழுந்து உட்கார்ந்து அடுத்தவருக்கு இடம் அளிப்பதுதான் முறை; சரி; நியாயமும் கூட. முறையாகப் பயணம் செய்பவரைக் காத்திருக்க வைத்து, படுத்துக் கொண்டு ஒருவர் பயணம் செய்வது சரியா? இல்லை என்று நாம் சொல்லுகிறோம். ஆதிக்கவாதிகள் சரி என்று சொல்லுகிறார்கள். இப்படிநிலை ஒத்த சமூகச் சூழல்கள் நிறைந்திருக்கிறது இந்த நாட்டில்.

இதுவரை ஒடுக்கப் பட்ட மக்கள், அடக்கப்பட்ட மக்கள் படித்திட வாய்ப்பில்லை. வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதனால் ஆதிக்க வாதிகள் ஏகபோகமாக அனுபவித்து வந்தனர். இப்பொழுது அடித்தள மக்கள் எழுச்சி கொண்டு கல்வி கற்று அதிகார வேலை பார்க்கும் நிலைக்கு வரும்போது, அவர்களுக்கு உரிய பங்கினை அளிப்பதுதான் ஆதிக்க வாதிகளுக்கு முறையாகும். ஆனால் உரிய பங்கினை அளிக்க மறுத்து வருகின்றனர். உரிய பங்கு எவ்வளவு என்பது பற்றி விளக்குவதுதான் சமூகநீதித் தத்துவம்; உரிய பங்கினைப் பெற்றுத் தருவதுதான் சமூக நீதி இயக்கத்தின் பணியாகும்.

ஒடுக்கப்பட்ட மக்கள்தான் ஒழுங்கான வழிமுறையில் இயல்பாகப் பிறந்தவர்கள்!

சமுதாயத்தில் அடக்கப்பட்ட மக்களின் உரிய பங்கினை மறுப்பதற்கு ஆயிரக்கணக்கான கார ணங்கள் சொல்லப்படுகின்றன.  புராண, இதிகாச, மனுஸ்மிருதி கோட்பாடுகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. கடவுளை, மதத்தினை துணைக்குச் சேர்த்துக் கொள்ளுகிறார்கள். மக்கள் அனைவரும் ஒன்றல்லவாம். பிரம்மாவின் முகத்தில் உதித்தவர் பிராமணர்; தோளில்பிறந்தவர் க்ஷத்திரியர்; தொடையில் தோன்றியவர் வைசியர்; பாதத்திலிருந்து வந்தவர்கள் சூத்திரர்கள்.

இவ்வாறு புராண காரணங்கள் கூறி சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்துள்ளது தான் வரலாறு. தந்தை பெரியார் தனது பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டங்களில் இந்தப் புராண விளக்கங்களை விளக்கிக் கூறும்போது, ஒருமுறை கூட்டத்தில் ஒருவர் கேட்டாராம். இந்த நான்கு வகையிலும் வராத பஞ்சமர்கள் எப்படிப் பிறந்தார்கள் எனக்கேட்டார். அதற்குத் தந்தை பெரியார், பஞ்சமர்கள்தான் ஒழுங்காக, இயல்பாக, தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தவர்கள் என பதில் சொன்னார். இப்படிப் புராணத்தைக் காட்டி மக்களை வேறுபடுத்தி, அண்ணல் அம்பேத்கார் கூறுவது போல, அடுக்கு முறையில் வேறுபடுத்தி, அடித்தள மக்கள் உரிய நிலைக்கு, உயர்வு நிலைக்கு வராமல் ஆதிக்க வாதிகள் ஆண்டாண்டுகாலமாக பார்த்துக் கொண்டனர்.

நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் சமூக நீதி இயக்கம் பாடுபட்ட காரணத்தால் அடக்கப்பட்ட மக்கள் கல்வி கற்று, அரசு அதிகார வேலை வாய்ப்புகளில் ஓரளவிற்கு உயர முடிந்தது. அடக்கப்பட்ட மக்கள் இன்னும் நுழைய முடியாத, இட ஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்படாத துறைகளுள் ஒன்று நீதித்துறை. உச்ச நீதிமன்ற நீதிபதியாய் பலர் உள்ளனர். அடக்கப் பட்ட மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற வகையில் ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதி கூட தற்சமயம் உச்சநீதி மன்றத்தில் இல்லை.

கேட்டால் உயர்நீதிமன்றத்தில் இருந்துதான் உச்ச நீதி மன்றத்துக்கு வர இயலும் என்று காரணம் சொல்லுகிறார்கள். உயர்நீதிமன்றங்கள் பலவற்றில் தாழ்த்தப்பட்ட சமுதாய நீதிபதிகள் மிகப் பலர் உள்ளனரே; ஆனால் ஆதிக்கவாதிகளுக்கு மனமில்லை. எனவேதான் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற பதவிகளிலும் இட ஒதுக்கீடு முறை - தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். மக்கள் சமுதாயத்தில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் பிரதிநிதித்துவம் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிகளில் உரிய முறையில் இல்லை. தற்சமயம் உள்ள ஒரே பெண் நீதிபதியும் உயர்ஜாதி வகுப்பினரைச் சார்ந்தவராகவே உள்ளார். எனவே உயர் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் சமூக நீதியினை பிரதிபலிக்கின்ற வகையில் இட ஒதுக்கீடு நடைமுறை யாக்கப்பட வேண்டும்; அதற்கான போராட்டம் நடத்தப்படும்.

தனியார் துறையிலும் வேண்டும் இடஒதுக்கீடு!

ஒரு பக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கல்வி நிலையங்களில், அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் வேலை வாய்ப்பு என ஓரளவு இட ஒதுக்கீடு நடைமுறை இருந்தாலும், இன்றைய மாறி வரும் பொருளாதாரச் சூழல் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு முழுமையாக வரும் சூழலை உருவாக்க வில்லை.

தனியார் மயமாக்கல் எனும் அரசு கொள்கை மூலம், அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருகின்றன. அரசின் பணத்தில், ஆதரவில் துவக்கப்படும் தனியார் நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட,  சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் அடுத்த கட்ட சமூக நீதிப் பயணத்தைத் திராவிடர் கழகம் முன்னெடுக்கும். உங்கள் சமூக நீதிப் பேரவையும், இந்த மக்களும் உடன் போராட முன்வர வேண்டும். தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் பல இந்நாட்டில் முளைத்துள்ளன.

அமெரிக்கா முதலாளித் துவ நாடு. அந்த நாட்டிலேயே கருப்பின மக்களுக்கு, வெள்ளை இன மக்களுக்கு என முதலாளித்துவ தனியார் நிறுவனங்களில் உடன்பாட்டு முறை   என்ற பெயரில் இட ஒதுக்கீடு நடைமுறை உள்ளது. அந்த அணுகு முறையிலேயே இந்நாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறு தனியார் துறையில் இடஒதுக்கீடு கடைப் பிடிக்கப்படுவது தான் சரியான அணுகுமுறை யாகும்.

அரசினரின் கவனத்தை ஈர்த்துத் தனியார் நிறுவனங் களிலும் இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த அனைத்து விதப் போராட்ட முறைகளும் கடைப்பிடிக் கப்படும். சமூக நீதிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் துவக்குவோம்! புதுப் பயணம், அடக்கப்பட்ட மக்களுக்கு மற்றுமொரு விடியலாக அமையும் என்பது உறுதி. இந்த சமூக நீதிக் கூட்டத்தினை ஏற்பாடு செய்த சமூக நீதிப் பேரவை பாராட்டுக்குரியது. உழைத்தவர்கள் அனை வருக்கும் நன்றி.

கலந்து கொண்ட தலைவர்கள்

சமூகநீதிப் பொதுக் கூட்டத்தில் கேசன ராமசாமி, முதுநிலை வழக்குரைஞர் ஒடுக்கப்பட்ட மக்கள் சங்கத் தலைவர், பேராசிரியர் கவுடு சத்தியநாராயணா, மேனாள் முதல்வர், உஸ்மானியா பல்கலைக் கழகக் கல்லூரி, பேராசிரியர் விஜய் ராஜூ, கே. சுனில் கவுடு, ஆந்திர பார் கவுன்சில் உறுப்பினர், வெண்டேரு ரவிபாபு யாதவ், ஆந்திர மாநில திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், கொக்கிலிகட்டா வெங்கடநரசிம்ம ராவ், மக்கள் சேவை சங்கம், பொப்பிலி வெங்கடேசுவர ராவ், குண்டூர், ஆர். சுதாகர் ஆகிய சமூக நீதித் தலைவர்கள் மற்றும் போராளிகள் உரையாற்றினர்.

இரவு 9 மணி வரை நடைபெற்ற சமூக நீதிப் பொதுக் கூட்டம் நன்றி கூறலுக்குப் பின் நிறைவு பெற்றது. இறுதி வரை கூட்ட மைதானம் பொது மக்கள் நிறைந்து காணப்பட்டது சமூக நீதிப் பொதுக் கூட்ட வெற்றிச் சிறப்பினை அந்நிலை எடுத்துக் காட்டியதாக இருந்தது.

Friday 18 May 2012

அய்.அய்.டி. நுழைவுத்தேர்வு மாற்றமும் - தமிழக மாணவர்களும் (2)


அய்.அய்.டி. நுழைவுத்தேர்வு மாற்றமும் - தமிழக மாணவர்களும் (2)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பல விடைகளில் ஒன்றைத் தேர்ந் தெடுக்கும் முறையின் மூலம் 3 மணி நேரம் மட்டுமே நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக் கப்படவேண்டும் எனும் கோரிக்கையை வைத்திருக்கிறார். இரண்டு தேர்வுகள் 6 மணி நேரம் தேவையில்லை, இன்னும் எளிமைப்படுத்தலாம் என்று கூறியிருக்கின்றார்.
யார் இந்த ஆனந்த்? சூப்பர் 30 நிறுவனம் என்பது என்ன? எனும் கேள்வி களுக்கு விடை காண ஒரு 7 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். ஏழை மாணவர்கள் அய்.அய்.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும், அவர் களுக்கு பயிற்சி  கொடுக்க வேண்டும் என்னும் நோக்கில் 2003-ல் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பரால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்.  - ராமானுசம் கணிதப்பள்ளி என்னும் பெயரில் செயல் படும் இந்த நிறுவனம் வருடத்திற்கு 30 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து தனிப் பயிற்சி கொடுக்கின்றது. அவர்களுக்கு உணவு, இருப்பிடம், பயிற்சி அனைத்தை யும் இலவசமாக கொடுக்கின்றார்கள்.
இந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை 300 பேர் வரை அய்.அய்.டி. நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று படித்து முடித்திருக் கின்றார்கள், படித்துக் கொண்டிருக் கிறார்கள். வேறு எவரிடமும் நன் கொடையோ, பணமோ வாங்குவதில்லை, 30 பேருக்கு மேல் பயிற்சி கொடுப்பதில்லை என்று செயல்படுகின்ற இந்த நிறுவனத்தில் சென்ற இரு வருடங்களாக 30 -க்கு 30 என படித்த அனைவருமே நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று அய்.அய்.டி. நிறுவனத்தில் படித்துக் கொண்டி ருக்கிறார்கள். வெற்றி பெற்று அய்.அய்.டி.யில் படித்துக்கொண்டிருப்பவர்கள், அடுத்த ஆண்டு பயிற்சி பெறுவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்,
வெற்றி பெறும் வழி முறைகளை சொல்லித்தருகின்றார்கள், அதன்மூலம் புதியவர்கள் வெற்றி பெறு கின்றார்கள். அவர்தான் மத்திய அமைச்சரை சந்தித்து இந்தத் தேர்வினை எளிமையாக்குங்கள் என்ற கோரிக் கையை வைத்திருக்கின்றார். இந்த செய்திக்கு இணையத்தில் பின்னூட்டம் எனப்படுகின்ற வாசகர் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பலர் அய்.அய்.டி.நுழைவுத்தேர்வில் மாற்றம் என்றவுடனேயே கூடாது, கூடாது , மாற்றினால் தகுதி, திறமை போய்விடும் என்று கூறியிருக்கின்றார்கள். . சிலர் சரியாகவே கேட்டிருக்கின்றார்கள், அய்.அய்.டிக்கள் இந்தியாவில் ஆரம் பிக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, எத்தனை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளை அந்த நிறு வனங்கள் தந்திருக்கின்றன, அல்லது உலக அளவிலான அறிவியல் கண்டு பிடிப்புகளை அந்த நிறுவனங்களில் படித்தவர்கள் தந்திருக்கிறார்களா? இல்லையே? அரசாங்கம் ஒவ்வொரு மாணவருக்கும் இலட்சக்கணக்கில் செலவு செய்கிறது, படிக்கிறார்கள், பெரிய பெரிய நிறுவனங்களில் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார்கள், தன் பெண்டு, தன் பிள்ளை, சொத்துண்டு, சுகம் உண்டு என்று வாழ்கின்றார்கள், அவர் களால் இந்த சமூகத்திற்கு என்ன பயன் என்று கேட்டிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பிள்ளைகள் ஏன் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை, எங்கே பிரச்சனை என்ற கேள்விகள் எழுகின்றபோது, அங்கே ஒரிஜனலான கிரியேட்டிவிட்டி உள்ளவர்கள் சேர்க்கப் படுவதில்லை, மாறாக 6-ஆம் வகுப்பி லிருந்து பயிற்சி கொடுக்கப்பட்டு,  அந்த பயிற்சி பெற்றவர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று, அய்.அய்.டி.யில் நுழை கின்றார்கள். இந்த பயிற்சியினை மிகப் பிரபலமான பல நிறுவனங்கள், பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை கட்டண மாகப் பெற்று கொடுக்கின்றன. ஒடுக்கப்பட்ட, பயிற்சி எடுக்காத மாணவர்களை பயமுறுத்தும் விதமாகவே இந்த நுழைவுத்தேர்வுகள் இருக்கின் றனவே தவிர, உண்மையிலேயே மாணவ மாணவிகளின் சிந்தனைத் திறனின் அடிப்படையில் அவர்களைத் தேர்ந் தெடுக்கும் தேர்வாக இந்த நுழைவுத் தேர்வுகள் இல்லை என்பதுதான் உண்மை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு படிக்கும் பல இலட்சக்கணக் கான மாணவர்களுக்கு இந்த அய்.அய்.டி. நுழைவுத்தேர்வுகள் என்றால் என்ன வென்றே தெரியாத நிலைமைதான் உள்ளது. தாய்மொழியிலும் தேர்வு வைக்கப் பட்டு, அவர்களின் சிந்தனைத் திறத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு பின்பு அவர்களுக்கு உயர் கல்வி அளிக்கப் பட்டால் அவர்களும் ஒளிர்வார்கள், நாட்டின் பெருமையும் ஒளிரும்.2006-இல் ஒரு அய்.அய்.டி. சேர்க்கை குறித்த வழக்கில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், அய்.அய்.டி. சேர்க்கை எப்படி நடக்கிறது என்பதில் ஒரு வெளிப் படையான தன்மை இல்லை என்று கூறியிருக்கிறது.   பார்ப்பன ஊடகங்கள் புதிய முறை கூடாது என்று கூறுகின்றன. பார்ப்பன பேராசிரியர் அமைப்புகள் புதிய மாற்றம் வரவே கூடாது என்று கூறு கின்றன.

உடனே பயந்து போன மத்திய அரசு ஜுன் மாதத்திற்கு பின் முடிவெடுக்கலாம் என்று முடிவெடுப்பதில் நழுவுகிறது. நம்முடைய தமிழக நாடாளுமன்ற உறுப் பினர்கள் புதிய முறையை, +2 மதிப் பெண்களுக்கு 40 மதிப்பெண் கொடுக் கும் முறையை ஆதரிக்க வேண்டும் ,கருத்தொற்றுமையை உண்டாக்க வேண் டும், மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில்சிபல்  அவர்களை சந்திக்க வேண் டும்.  தமிழகத்தில், சென்னையில் அய்.அய்.டி. நிறுவனம் உள்ள்து,250 ஏக்கர் பரப்பளவில் மக்கள் வரிப்பணத்தில் பல்வேறு விதமான வசதிகளோடு மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ளது.  ஆனால் தமிழக மாணவ ,மாணவிகள் 2 சதவீதம் கூட இதில் படிக்க  முடிய வில்லை.  முழுக்க ஆந்திரா, மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் இத்தேர்வில் வெற்றி பெற்று சேருகின்றார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சென்ற வருடம் கோயம்புத்தூரில் 937 பேர் இந்த நுழைவுத் தேர்வினை எழுதியிருக்கிறார்கள், ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. தேர்வு முறையில் மாற்றம் வருவதை வரவேற்கக்கூடிய அதே நிலையில், நமது மாணவ, மாணவிகள் இந்த அய்.அய்.டி. நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதற்கு எப்படிப்பட்ட பயிற்சிகளை கொடுக்க வேண்டும், எந்த வகுப்பிலிருந்து கொடுக்க வேண்டும், ஒரு ஆனந்த் என்பரால் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 30 பேருமே இந்த அய்.அய்.டி .நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வைக்க முடிகிற தென்றால், தமிழகத்திலிருந்து ஏன் முடியவில்லை என்னும் கேள்வியை எழுப்பி கல்வியாளர்கள், ஆட்சியாளர்கள் விடை காண வேண்டிய நேரமிது. (நிறைவு)
நன்றி :விடுதலை 17-05-2012

அய்.அய்.டி. நுழைவுத்தேர்வு மாற்றமும் - தமிழக மாணவர்களும் (1)


அய்.அய்.டி. நுழைவுத்தேர்வு மாற்றமும் - தமிழக மாணவர்களும் (1)(வா. நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்)  

இந்தியாவில் இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் (அய்.அய்.டி.) 15 உள்ளன. ஆண்டுதோறும் இந்த நிறுவனங்களில் மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன.  IIT-JEE   என்று கூறப்படும் இந்த நுழைவுத் தேர்வு முறைகளில் சில மாற்றங்களை 2013-இல் கொண்டு வரலாம் என்ற அடிப்படையில் மத்திய அரசு இரண்டு குழுக்களை அமைத்தது. அந்த குழுக்கள் சில பரிந்துரைகளை அளித்துள்ளனர்.

அதில் முக்கியமான ஒன்று +2-ல் எடுக்கும் மதிப்பெண்களுக்கு 40 மதிப் பெண்களும், மீதம் உள்ள 60 மதிப்பெண் களுக்கு நுழைவுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களையும்  சேர்த்து அதன் அடிப்படையில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்ப தாகும். மேலும் சில பரிந்துரைகளையும் அவர்கள் அளித்துள்ளார்கள். அய்.அய்.டி. நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் சங்கங்கள் புதிய முறையை எதிர்த்திருக்கிறார்கள்.

பழைய முறையே நீடிக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். அய்.அய்.டி கான்பூரின் செனட்டும், டெல்லி,மும்பை போன்ற அய்.அய்.டி. நிறுவன பேராசிரியர்கள் கூட்டமைப்பு களும் புதிய முறை கூடவே கூடாது என்று அறிக்கை கொடுத்திருக்கின்றார்கள்.

நமது மரியாதைக்குரிய பேராசிரியர், பல முனைவர்களை உருவாக்கிய முனைவர் வசந்தா கந்தசாமி அவர்கள், அய்.அய்.டி. சென்னை நிறுவனத்தில் தான் பட்ட துன்பங்களை எல்லாம் நமது மேடை களிலே எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அய்.அய்.டி. நிறுவனத்தில் படிப்பவர்கள் மட்டுமல்ல, பணி புரியும் பேராசிரியர்கள் பலரும் பார்ப்பனர்களே.

எப்படி நீதித்துறையில் இன்னமும் அவாளின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறதோ, அவ்வாறே  அய்.அய்.டி- நிறுவனத்தில் அவாளின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது.

அவாளின் சங்கம்தான் புதிய முறை வேண்டாம் என்று கூறியிருக் கிறது. ஏன் வேண்டாம் புதிய முறை என்று சொல்கின்றபோது, +2 வில் வாங்கும் மதிப்பெண்ணை கணக்கிலேயே எடுக்கக் கூடாது, +2-வில் வாங்கும் மதிப் பெண் ணுக்கு 40 மதிப்பெண்கள் என்று கொடுத் தால் தரம் கெட்டுவிடும், தகுதி போய் விடும், திறமை போய்விடும் என்று சொல் கின்றார்கள்.

பெருந்தலைவர் காமராசர் சொன்னதுதான் ஞாபகம் வருகின்றது, உன் தகுதி, திறமையும் தெரியும், உங்கப் பன் தகுதி, திறமையும் தெரியும் என்று. தந்தை பெரியார், பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் போன்றவர்களின் முயற்சி யால் அய்.அய்.டி நிறுவனங்களில் தாழ்த் தப்பட்டோருக்கு(15), மலைவாழ் மாணவர் களுக்கு(7.5) இட ஒதுக்கீடு உள்ளது.

மண்டல் குழுவின் அமலாக்கத்தால், தன்னுடைய பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத் துவேன் என்று சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் அமல்படுத்தியதால், மண்டல் குழுவை அமல்படுத்தவேண்டும் என்பதற்காக போராட்டங்களும், மாநாடு களும் திராவிடர் கழகம், திராவிடர் கழகத் தலைவர்  மானமிகு கி.வீரமணி அவர் களின் வழிகாட்டுதலில் நடத்திய காரணத்தால்  27 சதவீத இடஒதுக்கீடு அய். அய்.டி. நிறுவனங்களில் உள்ளது. ஆனால் இதிலும் ஒரு பொடியை பார்ப்பனர்கள் வைத்துள்ளார்கள்.

மொத்தம் 10000 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் 1500 இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கு, 750 இடங்கள் மலை வாழ் மாணவர் களுக்கு, 2700 இடங்கள் பிற்படுத்தப் பட்டோருக்கு ஒதுக்க வேண்டும். இதில் 1500 இடங்களுக்கு தகுதியான (?) தாழ்த்தப்பட்டோர், தகுதியான (?) மலைவாழ் மாணவர்கள் கிடைக்கவில்லை என்றால் அதனை நிரப்பமாட்டார்கள், அடுத்த வருடம் நிரப்புவார்கள், ஆனால் பிற்படுத்தப்பட்ட 2700 இடங்களில் தகுதியான  மாணவர்கள் கிடைக்கா விட்டால் (பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு இந்த வருமான வரம்பு என்னும் இடையூறும் இருக்கிறது) பொதுப்பிரிவிலிருக்கும் மாணவர்களை எடுத்து நிரப்பி விடுவார்களாம். .

ஊருக்கு ஊர் சாதிக் கணக்கெடுப்பு நடத்துவது போல 15 அய்.அய்.டி. நிறுவ னங்களில் வேலை பார்க்கும் பேராசிரி யர்கள், அலுவலர்கள், மாணவ, மாண விகள் அனைவரையும் சாதி வாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும், அப்போது தான் மக்கள் தொகையில் 3 சதவீதம் உள்ள பார்ப்பனர்கள் எவ்வளவு இடத்தை அய்.அய்.டி நிறுவனங்களில் ஆக்கிர மித்து வைத்து உள்ளார்கள் என்பது தெரிய வரும்.

அண்மையில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் திரு.கபில்சிபல்   அவர்களை சந்தித்த சூப்பர் 30 நிறு வனத்தின் நிறுவனர் ஆனந்த், அய். அய்.டி. நுழைவுத் தேர்வினை எளிமை யாக்க வேண்டும்.....தொடரும் 
நன்றி : விடுதலை 15-5-2012