Tuesday 14 August 2018

வாட்சப்பால் மன நோயா ?.......

நடு இரவில்
தொடர்ச்சியாக
அனுப்பப்பட்ட
வாட்சப் செய்திகள்.......
காலையில் பார்த்தவுடன்
அயர்ச்சிதான்....

ஓய்வுபெற்று
ஓய்வில் இருக்கும் அவரின்
நடு நிசிச்செய்திகளாக
நிறைய வாட்சப் செய்திகள்

இத்தனை செய்திகளை
நடு இரவில்
அனுப்பியிருக்கிறீர்களே!
அவ்வளவு முக்கியத்துவம்
வாய்ந்ததாக
எதுவும் இல்லையே ? என்றேன்

எவன் படித்தான்....
எவன் பார்த்தான்....
நூற்றுக்கணக்கில் வரும்
வாட்சப் செய்திகளில்
ஏதேனும் பத்தை
பத்து பேருக்காவது
அனுப்பிவைத்துக்கொண்டே
இருக்கிறேன் ....என்றார்

அர்த்தமும் இல்லாமல்
பொருத்தமும் இல்லாமல்
அர்த்த ராத்திரியில்
தூங்காமல்.......

இது ஒருவகை
மன நோயோ?
வாட்சப்பால் மன நோயா ?
மன நோயால் வாட்சப்பா ?

                                                                        வா.நேரு,14.08.2018


                                   

No comments: