Monday 24 June 2019

நெருப்பினுள் துஞ்சல்....டாக்டர் மா.பா.குருசாமி

டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களுக்குப் பின்னால் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முதல்வராகவும் ,ஆதித்தனார் கல்லூரிகளுக்கு வழிகாட்டுபராகவும் இருந்தவர்கள். பொருளியல் துறை பேராசிரியரான அவர் 150 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கின்றார். தற்போது மதுரை  காந்தி அருங்காட்சியத்தின் செயலாளராக இருக்கின்றார்கள். அவர் எனது சிறுகதைத் தொகுப்பு நூல் 'நெருப்பினுள் துஞ்சல் 'நூலைப் படித்துவிட்டு எழுதிய புத்தக அறிமுகம் 'சர்வோதயம் மலர்கிறது' என்னும் மாத இதழில் வெளிவந்துள்ளது. மிகப்பெரியவர் அவர்.அவரின் இந்த விமர்சனம் மிகப்பெரிய ஊட்டச்சத்து எனக்கு.மிக்க நன்றியோடு இதனை எனது வலைப்பக்கத்தில் வெளியிடுகின்றேன்.படிக்க கீழே உள்ள சுட்டியை (நெருப்பினுள் துஞ்சல்) அழுத்தவும்.
அன்புடன்
வா.நேரு

நெருப்பினுள் துஞ்சல்

No comments: