Saturday 13 February 2021

உலகின் இயற்கை....

                                          உலகின் இயற்கை....


பறவைகள் கூட

அழகாய் கூடிக்கூடி

கொஞ்சும்..குலாவும்..

குவலாயம் ஒன்றெனப் 

பாடி மகிழும்

காதல் அடைதல்

உலகின் இயற்கை....


ம்னிதன் செயற்கையாய்

செதுக்கிக்கொண்ட

சாதி மதக்கூடுகள்

இயற்கை உணர்வாம்

காதலுக்கு 

கல்லறைகளாய்

வெகு காலமாய்....


உடைத்து நொறுக்கி

முட்டையை விட்டு

வெளிவரும் 

பிள்ளைப் பறவைகளாய்

ஜாதி மதக்கூடுகளை

உடைத்து நொறுக்கி

காதலால் 

வெளியேவரும்

இணையர்களுக்கு 

அடைக்கலமாய் 

என்றும் தந்தை பெரியாரும்

அவர் தந்த கொள்கைகளும்,,,,


ஆண் பெண் இணைப்பு

எனும் அன்பாலே

பெருகிப் பல்கிய

மனித இனம்......

யாயும் ஞாயும் 

ஆராகியரோ ....

என அன்புடை நெஞ்சத்தால்

தாம் கலந்து

பல்கிப் பெருக்கிய

மனித இனம்..


உலகில் உள்ள

மனித இனம் 

உருப்பெற்றது எல்லாம் 

ஓரிரு பெண்கள் வழியே

என மரபியல்அறிவியல் 

அடித்துச்சொல்லும் 

இந்த நூற்றாண்டில்


அறிவிலிகள் சிலர்

கடவுள் எங்களை

தனது முகத்தில் இருந்து

படைத்தார் எனப் 

பிதற்றித் தெரியும்

இந்த நாட்களில் 


உச்ச நீதிமன்றத்தின்

அண்மையத் தீர்ப்பும் கூட

காதலுக்கு ஆதரவாகத்தான்...

ஜாதியை ஒழிக்கும்வழி

ஜாதி மறுத்து  நடக்கும்

திருமணமே.....


காதலுக்கு என்றும் 

வரவேற்பு அளிப்போம்...

அண்டை வீட்டில் மட்டுமல்ல

நமது வீட்டிலும் 

உவந்து காதலுக்கு  

மதிப்பு அளிப்போம்...

இணைத்து வைப்போம்...

காதலர்கள் வாழ்ந்தால்

மட்டும்தானே உலகில்

'காதல் வாழும் '

                  வா.நேரு,14.02.2021.

No comments: