Tuesday 14 December 2021

உலகத்தின் போக்கை மாற்றிய சில புத்தகங்கள்.....

உலகத்தின் போக்கை மாற்றிய சில புத்தகங்கள் என்னும் தொடர்சொற்பொழிவை ஆற்றுவதற்கான வாய்ப்பினை நான் பெற்றேன். நேற்று(5-12-2021) மாலை 7.30 மணிக்கு முதல் உரை.சுமார் 20 நிமிடங்கள் மட்டும்.வர்ஜீனியாவில் இருக்கும் ஆற்றல் மிகு கவிஞர் ம.வீ.கனிமொழி அவர்களின் ஒருங்கிணைப்பில்,புதுச்சேரி ஒரு துளிக்கவிதை அமைப்பின் பொறுப்பாளர் தோழர்  கவிஞர் தி.அமிர்தகணேசன்,தமிழ் அமெரிக்க ஊடகப் பொறுப்பாளர்கள்,வல்லினச்சிறகுகள் மின்னிதழ் ஆசிரியர் ராஜி ராமச்சந்திரன் உள்ளிட்ட பல ஆளுமைகள் இணைந்து  ஏற்பாடு செய்த  நிகழ்வு.’சங்கப்பாடல்கள் எளிமையாக்கம் ‘ என்னும் தலைப்பில் கவிஞர் இராஜி வாஞ்சி அவர்களின் ஆழமான,நுட்பமான உரை,’யாருமற்ற சாலை ‘என்னும் தலைப்பில் கவிஞர் அனுசுயாதேவி(அனுமா),கவிஞர் மாலதி  ராமலிங்கம்,கவிஞர் க.வீ.கனிமொழி ஆகியோரின் தங்கள் சொந்தக் கவிதை வாசிப்பு,நிறைவாக தோழர் கவிஞர் அகன் அவர்களின் ‘காலமெல்லாம் கவிதை’ என்னும் தலைப்பில் சொற்பொழிவு…மிக நன்றாக இருந்தது. நேரம் இருக்கும்போது கேட்டுப்பாருங்கள். தங்கள் கருத்தை வலைத்தளத்தில் பதிவிடுங்கள். நன்றி.

வா.நேரு 

 

No comments: