Tuesday 2 July 2024

வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை...

நன்றி: விடுதலை 02.07.2024..



"இந்த நிகழ்ச்சி மிக அருமையாக நடந்து முடிந்தது.. ஒவ்வொன்றையும் தனித்தனியாக பேசலாம். மிக ஆழமான அவசியமான கருத்துக்களை அனைத்து பயிற்சியாளர்களும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள்.  நமது குழுவின் பங்களிப்பு அபரிமிதமாக இருந்தது. அன்பு நன்றிகள்  பேரன்பும் அனைவருக்கும்💕

 தோழர் அர்ஷா  "வாருங்கள் படிப்போம்" வாட்சப் குழுவில்

" இன்று நடந்த நிகழ்வில் மிக ஆச்சரியகரமான நிகழ்ச்சிகள் நடந்தது...

 ஒன்று என் வாழ்க்கையில் நான் இதுவரையிலும்  20 நிமிடங்களுக்கு மேல் மேடைகளில் பேசுவது அரிது.. சில வேலைகளில் அது அரை மணி நேரத்தை தாண்டி இருக்கும் அவ்வளவுதான்...
 ஒன்றரை மணி நேரம் கடந்த பிறகு எனக்கு ஒரு சீட்டு வருகிறது ஆனால் நான் நினைத்தது நான் ஒரு 30 நிமிடத்தை கூட கடக்கவில்லை அதற்குள் ஏன் சீட்டு தருகிறார்கள் என்று முதல் விடயம் என் வாழ்வில் முதல் முறையாக நேரம் ஆகிவிட்டது என்று சீட்டு வந்தது இதுதான் முதல் முறை...
 நான் உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை பார்த்து அரை மணி நேரம் முடிவதற்குள் ஏன் இப்படி 
 என்று கேட்க அவர்கள் சொன்னார்கள் ஒன்றரை மணி நேரமாக  1.1/2பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எதிர்பாராத விதமாக ஆசிரியர் வந்து விட்டார்.
 
அதாவது தோழர் கி. வீரமணி அவர்கள் வந்து விட்டதால் என்று காரணம் சொன்னார்கள்...

 நாவல் குறித்து பேசும் போது ஏனோ எனக்கு அவ்வளவு தீவிரமான ஆவேசம் வருகிறது ஏனெனில் நான் 20 வருடங்களாக அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதால் இருக்கலாம் 
 
குறைந்தது ஒரு 80 இளங்கலை மாணவர்கள்,
முனைவர் பட்டம் பெற்றவர்கள்,
 முதுகலை முடித்தவர்கள் 
 வெற்றிகரமாக படித்து முடித்து தொழிலில் இருப்பவர்கள்
 என விதவிதமான  இளைஞர் பட்டாளம் நடுவயதினர் என பாகுபாடு அற்று இலக்கியம் படைப்பது குறித்து தீவிரம் காட்டுகிறார்கள் என்பது மிக மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது🍁

 ஆனாலும் நான் மேடையில் ஏறி பேச ஆரம்பித்தபோது எனக்கு ஒரு பெரும் துயரம் என்னை வாட்டிக் கொண்டிருந்தது..
 என் அன்புக்குரிய தோழர் 
 மனுஷ புத்திரன் அவர்கள் கவிதை குறித்தான தனது அற்புதமான உரையை நிகழ்த்தி விட்டு கிளம்பி சென்றுவிட் டார்... அதை நான் எதிர்பார்க்கவில்லை 
 
அவர் மேடையில் இல்லை என்பது எனக்கு மிகப்பெரிய துயரமாக இருந்தது.. ஆனால் எப்போதையும் எப்போதையும் விட இன்று மிக நல்லதொரு 
 உரையாடலை நிகழ்த்தி இருக்கிறேன்.. என்பது மட்டும் நிச்சயம்.. 🍁

 நாவல் ஆசிரியர் கரன்கார்க்கி

மற்றும் பல பின்னோட்டங்கள் comments பகுதியில்...