Tuesday 23 July 2024

‘அம்பலப்படுத்தும் மந்திரம்’

 

            ‘அம்பலப்படுத்தும் மந்திரம்’

அறிவியல் வெளிச்சம்

பொதுமக்களை அண்டாமல்

பார்த்துக்கொள்கின்றன

நம் நாட்டு ஊடகங்கள்..

 

நாட்டை ஆள்பவர் முதல்

நடமாடும் சாமியார்கள்வரை

அனைவரும் ‘தங்களைத் தாங்களே

கடவுள் ‘ என அறிவித்துக்கொள்கின்றனர்..

இவர்கள் கடவுள்கள்தான்

என்பதை எந்தச்சோதனையின்

மூலம் நாம் அறிந்துகொள்வது?

எந்தப் பரிசோதனைக் கூட்த்தில்

முக்கி எடுத்து

இவர்களை நாம் கடவுள்

எனப் புரிந்து கொள்வது?

 

செத்துப்போன பெண்ணை

உயிர்ப்பித்துக்கொண்டு

வருவேன் எனச்சொல்கிறான்

ஒரு சாமியார்..

நூற்றுக்கணக்கில் மக்கள்

சாகக் காரணமான

அந்தச்சாமியார்

‘பிறப்பவர் எல்லாம் ஒரு நாள்

சாகத்தானே வேண்டும்’

என வேதாந்தம் பேசுகிறான்..

அவனைக் கைது செய்யாமல்

உத்தரப்பிரதேச அரசு

வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது..

 

அறிவியலுக்குப் புறம்பான

அத்தனையும்

பக்தி என்னும் பெயரால்

பரப்பப்படும் தேசமாய் நம் தேசம்..

 

உலகில் எவ்வளோவோ மாற்றங்கள்

செயற்கை நுண்ணறிவு

இயந்திரங்கள்...

எத்தனையோ

அற்புதங்கள்...

இந்தியாவில் அதனைப்

பக்திக்கு பயன்படுத்துவது எப்படி

என்றுதான் சிந்தித்துக்

கொண்டிருக்கிறார்கள்..

 

அய்யா பெரியாரின்

கருத்தை அழுத்தமாய்ச்

சொல்ல வேண்டியிருக்கிறது..

" உன் கடவுள்;

அவன் கடவுள்;

இவன் கடவுள்;

எவன் கடவுளும்

இல்லை; இல்லை;

இல்லவே இல்லை ."

 

‘நடமாடும் கடவுள்களாய்’

தங்களைத் தாங்களே

சொல்லிக்கொள்ளும்

அபத்தர்களை

அம்பலப்படுத்தும்

மந்திரமாய் எனக்கு

இதுதான் தோன்றுகிறது…

"கடவுள் இல்லை; கடவுள் இல்லை;

கடவுள் இல்லவே இல்லை ."



 

                        வா.நேரு

                        23.07.2024

4 comments:

Anonymous said...

மிகச் சிறப்பு அய்யா...👍

முனைவர். வா.நேரு said...

நன்றியும் மகிழ்ச்சியும்...பெயரையும் பின்னோட்டத்தில் இணைக்கலாம்.

Anonymous said...

சுதா மணி தருமபுரி

Anonymous said...

நன்றி.மகிழ்ச்சி.