Sunday, 13 July 2025

ஒற்றை வாளி-சிறுகதைத் தொகுப்பு - பேரா சு.காந்திதுரை

https://www.youtube.com/live/7dCxL_hnLAo?si=lnvr8rnPSljTf6c3
வாருங்கள் படிப்போம் குழுவினை அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள் வாட்சப் குழுவாக நிறுவி,அதன் ஒருங்கிணைப்பாளராக பேரா பெ.உமா மகேஸ்வரி அவர்கள் மிகச்சிறப்பாக கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகின்றார்கள்.வாரந்தோறும் ஒரு நூல் மதிப்புரை சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகின்றது. அதனுடைய 311வது நிகழ்வில், மதுரை தியாகராசர் கல்லூரி ,தமிழ்த்துறை தலைவர் அய்யா பேரா முனைவர் சு.காந்திதுரை எழுதிய சிறுகதைத் தொகுப்பான 'ஒற்றை வாளி' என்ற நூலினை திறனாய்வு செய்தேன். அய்யா சு.காந்திதுரை அவர்கள் மிக நெகழ்ச்சியாக ஏற்புரை நிகழ்த்தினார்.அந்த நிகழ்வின் இணைப்பு மேலே உள்ள சுட்டியில் உள்ளது.விரும்புகிறவர்கள் கேட்கலாம்.'வாருங்கள் படிப்போம் ' குழுவில் வந்த பின்னோட்டங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

எழுத்தாளர் பேராசிரியர் காந்திதுரை என்கின்ற ஒரு அற்புதமான படைப்பாளியை நமக்கு அறிமுகம் செய்து வைத்த நேரு அண்ணாவிற்கு நன்றி.

அதிலும் அவர் இன்றைய வளரும் எழுத்தாளர்களுக்கு வழி காட்டினார் என்று தான் கூற வேண்டும். அதிகாலை 3 மணிக்கு எழுத ஆரம்பித்து விடுவாராம்..தினம் தோன்றுபவற்றை தாளில் எழுதி வைத்து விடுவார்..இயல்பாக நடக்கும் விஷயங்கள்..ஏக்கங்கள்,மண் மணம் இப்படி... இரு நாட்களுக்கு முன்பு தான் நேரு அண்ணாவிடம் கூறினேன்.உடனே தயாராகி ஒரு சிறப்பான திறனாய்வை வழங்கியமைக்கு வாழ்த்துகள்!!பங்கேற்றுச் சிறப்பித்த தோழமைகளுக்கு நன்றி!!

பேரா உமா மகேஸ்வரி அவர்கள்,ஒருங்கிணைப்பாளர்,’வாருங்கள் படிப்போம்’

 

ஒரு எளிய மனிதராக விளங்கும் சிறப்புக்குரிய ஒரு ஆளுமையை அறிமுகப்படுத்தினீர்கள் அண்ணா. மிக்க நன்றி!

இன்னும் ஓரிரு கதைகளைச் சொல்வீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

ஆனால் நேரம் இடம் கொடுக்கவில்லை என்பதை அறிந்து நீங்கள் முடித்துக் கொண்டது கொஞ்சம் ஏமாற்றம் தான். 

பரவாயில்லை .ஒரு கிணற்றுத் தண்ணீருக்கு ஒரு வாளித் தண்ணீர் பதம்!

பேரா. மகாதேவன் அவர்கள்,சென்னை.

 

அருமையான நூலைத் தேர்ந்தெடுத்து அதனை பாங்குற திறனாய்வு செய்த அண்ணன் நேரு அவர்களுக்குப் பாராட்டு

டாக்டர் கோ.ஒளிவண்ணன் அவர்கள், நிறுவனர் ‘வாருங்கள் படிப்போம்’, மாநிலத் துணைத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

 

மிகச்சிறப்பானதொரு நூல் அறிமுகம்  நேரு அண்ணா…

இசை ஆசிரியர் லோ.குமரன் அவர்கள்,சென்னை.

 

சிறப்பான நூல் அறிமுகம் அய்யா. வணக்கங்களும் வாழ்த்துகளும்

தகடூர். மு.சக்திவேல் அவர்கள்.



 

அருமையான நூல்.அருமையான திறனாய்வு.மனமார்ந்த பாராட்டுகள் நேரு அண்ணாவிற்கு…

எழுத்தாளர் ஆசிரியர் கலையரசி,அவர்கள்.

 

இன்றைய சிறப்பு விருந்தினர், படைப்பாளர் பேராசிரியர் காந்திதுரை ஐயா அவர்களை, கடந்த மாதம், மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ் கல்லூரி யில் நடந்த என்னுடைய கவிதைநூல் திறனாய்வில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு, எனக்கும், நேரு சார் க்கும் கிடைத்தது. முதன்முறை பார்த்தது போல் இல்லாமல் அவ்வளவு இயல்பாக, உரிமையாக பேசினார். அவர் இவ்வளவு படைப்புகள் படைத்திருப்பது இன்று தான் தெரியும்..

இன்று, நேரு சார் திறனாய்வு செய்த கதைகளில் அவ்வளவு யதார்த்தம்..

இப்படி,மண் சார்ந்த, மக்களின் மனம் சார்ந்த, இத்தனை சிறந்த படைப்பாளரை அறிமுகம் செய்த தோழர் - நேரு அவர்களுக்கும், உமா mam க்கும் என் அன்பும்.. நன்றியும்

கவிஞர்.வினோத் பரமானந்தன் அவர்கள்,இராணுவஅதிகாரி,இராஜஸ்தானில் இருந்து.



வணக்கம் சார்🙏🏿
நேற்றைய திறனாய்வு மிக அருமையாக இருந்தது.
(Story Vs Plot )

கதை மற்றும் அதன் கருத்து- இதன் வேறுபாட்டை நேற்று மூன்று கதைகளிலும் தெளிவாக கூறினீர்கள்.

முதலில் புத்தகத்தைப் பற்றி, அதன் பதிப்பாளர் பற்றி,பதிப்புரை ,பின்பு கதை ஆசிரியர் பற்றி, அவருடைய ஏனைய படைப்புகள், பின்பு கதைக்குள் செல்வது என்று புத்தகத் திறனாய்வு format புரிந்து கொள்ள முடிந்தது. 

ஒவ்வொரு கதையிலும் அவருடைய மொழி மற்றும் அதன் நடையை பற்றி வாக்கியங்கள் வாசித்து திறனாய்வு செய்தது மிகவும் அருமை.

அதில் உங்கள் அனுபவத்தையும் நீங்கள் மதுரை மார்க்கெட்டில் சந்தித்த  ஒரு முதியோரின் குடும்பத்தைப் பற்றியும்  பகிர்ந்து கொண்டீர்கள்.

 கதைகள் அனைத்தும் எழுத்தாளர் அனுபவம்,அவர்  பார்வையில், வாசகர்கள் புரிந்து கொள்ளக்கூடிய நடையில் எளிமையாக இருக்க வேண்டும் என்பதை 
புரிந்து கொள்ள முடிந்தது.


கதை ஆசிரியர் -அவர் எப்படி காலை 3 மணிக்கு எழுந்து கதை எழுதி, இந்த 11 கதைகளையும் தன் கதை  குவியல்களில் இருந்து தேர்ந்தெடுத்து, பதிப்பித்த விதம் மிகவும் சுவாரசியமாக இருந்தது .


 தங்களின் பல வேலைகளுக்கு இடையே , இந்தப் புத்தகத்தை எடுத்து திறனாய்வு செய்து, அந்தக் கதை திறனாய்வின் format ல் செய்தது உங்கள் அனுபவத்தை குறிக்கின்றது.

 மேலும் உங்கள் பல முயற்சித் திட்டங்கள் வெற்றி பெற ,
எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 மிக்க நன்றி🙏🏿
ஶ்ரீதேவி

வாருங்கள் படிப்போம் குழு உறுப்பினர் வாட்சப் வழியாக...

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...வா.நேரு

No comments: