Thursday, 22 January 2026

கற்றுக்கொண்டே இருக்கிறோம்.....

 

உண்மையான பாராட்டு

எப்போதும் நமக்கு ஓர்

உத்வேகம் தருகிறது…

இன்னும் பணியாற்ற..

இன்னும் எழுத…

இன்னும் வாசிக்க…

இன்னும் இன்னும்

எத்தனை உந்துதல்களை

நமக்கு ஒரு பாராட்டு

தருகிறது !


நேற்றைக்கு முந்தைய நாள்தான்

‘உண்மை ‘ இதழுக்கு

கட்டுரை ஒன்றை

அனுப்பி இருந்தேன் !

‘பாம்புக்கடி ‘ பற்றிய

கட்டுரை அது !

நேற்று காலை

மதுரைக்கு வந்த

93 வயது இளைஞர்

அய்யா ஆசிரியர் அவர்களைப்

புத்தகம் கொடுத்து

மதுரைக்கு வரவேற்றபோது ,




நீங்கள் ‘உண்மை’க்கு அனுப்பிய

‘பாம்புக்கடி’ பற்றிய

கட்டுரையைப் படித்தேன் …

நன்றாக இருக்கிறது…

நிறையப் புதிய செய்திகள்…

எனப் பாராட்டினார்…

மனதிற்குள் அப்படி ஒரு

மகிழ்ச்சி பொங்கி வழிந்தது…

மிகப்பெரும் இலக்கியவிருதினைப்

பெற்றது போல் உணர்வு

நிரம்பியது எனக்கு…

முதல் நாள் அனுப்பிய

கட்டுரையை உடனே படித்து

பார்த்தவுடன் பாராட்டும்முறை…

இந்த வயதில்…

கற்றுக்கொடுத்துக்கொண்டே

இருக்கிறார் எங்கள் ஆசிரியர் !

அவரிடம் கற்றுக்கொண்டே

இருக்கிறோம் நாங்கள்…

                        வா.நேரு, 22.01.2026

No comments: