இந்த நாள்! இந்த நாள்!...
அவருக்கு இறுதி
வணக்கம் செலுத்த
தமிழ்நாடே திரண்டு
வந்த நாள்…
அண்ணா..அண்ணா..
எனத் தமிழ்நாடே
அழுது புலம்பிய நாள்!
மாற்றார்களின் மனதிலும்
இடம்பிடித்த
மகத்தான மனிதருக்கு
இறுதி நிகழ்வு நடந்த நாள்!
சாரை சாரையாய்த் தமிழர்கள்
சென்னைக்கு வந்து குவிந்து
அழுது புலம்பிய நாள் !
தனக்கென ஏதும் சேர்க்காமல்
தமிழர்களுக்காய்
‘தமிழ்நாடு’ எனப் பெயர்
கொடுத்த தலைவன்…
நம் வீட்டுத்திருமணத்தை
நாமே நடத்திக்கொள்ள
சுயமரியாதைத் திருமணத்தைச்
செல்லும் எனச்
சட்டமாக்கிய தலைவன்
இறந்து எத்தனை
ஆண்டுகள் ஆனாலும்
இருமொழிக்கொள்கைதான்
தமிழ்நாட்டில் என்பதைச்
சட்டமாய் …
தமிழர்கள் மனதில்
ஓவியமாய் வரைந்து
வைத்த தலைவன்..
உனது குரல்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
உலகமெல்லாம் இருக்கும்
தமிழர்கள் இல்லங்களில்…
உனது எழுத்து
சொல்லிக்கொண்டே இருக்கிறது
தம்பிகளுக்கு வழிகாட்டுதல்களை…
புதிய ‘பராசக்தி’கள் கூட
நீ சொன்ன
‘தீ பரவட்டும் ‘என்பதைத்தான்
திருப்பிச்சொல்கின்றன..
மறையவில்லை அண்ணா நீ!
எங்கள் மனதில் இருக்கிறாய்!
சாகவில்லை அண்ணா நீ !
சட்டங்களில் இருக்கிறாய் !
வாழ்க அண்ணா ! நீ வாழ்க!
வா.நேரு,03.02.2026
No comments:
Post a Comment