திருடனைப் பிடிங்க
திருடனைப் பிடிங்க
எனத் திருடியவனும்
சேர்ந்து ஓடுவதைப்போல
நீட் தேர்வு முறைகேட்டைக்
கண்டித்து ஏபிவிபி அமைப்பு
போராடுகிறதாம்!
" நீட் தேர்வில், மோசடி
என்பது தவறு...
நீட் தேர்வே மோசடிதான்"
முன்னாள் முதல்வர்
மு.க.ஸ்டாலின் சொன்னதுபோல
மோசடிக்காகவே மோடி அரசால்
நிலைநிறுத்தப்பட்ட நீட் தேர்வு…
உச்சநீதிமன்றத் தடையை மாற்றி…
வேண்டும் என்று சொன்னவரை
குழுவுக்குத் தலைவராய்ப் போட்டு…
பணிரெண்டு வருடங்களாய்
பம்மாத்துப் பண்ணும் மோடி அரசு..
இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து
வினாத்தாளை வாங்கியவன் பிஜேபி
அதை வாங்கிப் பலருக்கு விற்று
பணம் பார்த்தவன் பிஜேபி..
பிஜேபியின் மாணவர் அமைப்பு
இதற்கு எதிராய்ப் போராடுகிறதாம்!
உலக மகா நடிப்படா சாமி !
ஒட்டு மொத்த தமிழ்நாடும்
வேண்டாம் எங்களுக்கு
நீட் என்றபோதும்…
சட்டசபையில் நிறைவேற்றி
அனுப்பிய் நீட் வேண்டாம்
தீர்மானத்தைக் காணோம்
என்று பசப்பியதும் பிஜேபி…
ஒட்டு மொத்த நாடும்
கொந்தளித்து எழும் நிலையில்
பொங்கும் பாலைத் தண்ணீர்
ஊற்றி அணைப்பதுபோல
தங்கள் கட்சி மாணவரணியாம்
ஏபிவிபி-காரர்களை போராட்டம்
செய்யச் சொல்லி அனுப்பி
வைத்திருக்கிறது பிஜேபி…
வேண்டாம் வேண்டாம்
நீட் தேர்வு வேண்டாம் எனும்
ஒற்றை கோரிக்கையோடு
இந்திய ஒன்றியம் முழுவதும்
மாணவர்கள் பொங்கி எழட்டும்..
அந்தந்த மாநில அரசே
மருத்துவ மாணவர் சேர்க்கையை
நடத்தும் எனும் பழைய
நிலைமை வரட்டும்…
அதுவுரை மனதில் தீப்பந்தம் ஏந்தி
மாணவர்களே மாணவிகளே
தெருவுக்கு வாருங்கள் !
அநீதிக்கு எதிராய்
அணிதிரண்டு வாருங்கள் !
வெல்லட்டும் உங்கள் போராட்டம் !
வீழட்டும் அநியாய நீட் தேர்வு…
வா.நேரு,
14.05.2026.
No comments:
Post a Comment