Sunday 25 December 2011

நேற்று (25.12.2011 ) படித்த புத்தகம்

நூலின் தலைப்பு : புதிய நோக்கில் புரட்சிக் கவிஞர்
நூலின் ஆசிரியர் : இல.சொ.சத்தியமூர்த்தி, எம்.ஏ., பி.எல்.
பதிப்பகம் : வயல்வெளிப் பதிப்பகம்,இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்),பெரம்பலூர் மாவட்டம்- 612901
விலை : ரூபாய் ஐம்பது
முதல் பதிப்பு : திசம்பர் 2003

தமிழில் பலதுறை சார்ந்த அறிஞர்கள் எழுதுகிறார்கள். இந்த நூலின் ஆசிரியர் ஒரு நீதிபதி. கல்லூரிக் காலத்தில் புரட்சிக் கவிஞர் பற்றிக் கலந்து கொண்ட கட்டுரைப்போட்டியில் வெற்றி பெறுகின்றார். பின் பல் வருடங்கள் கழித்து அந்தக் கட்டுரையின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். புரட்சிக் கவிஞர் பற்றி பல நுட்பமான செய்திகளை உள்ளடக்கிய புத்தகமாக இந்தப் புத்த்கம் உள்ளது.

மொத்தம் 128 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் 10 தலைப்புகளில் கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. புதிய நோக்கில் புரட்சிக் கவிஞரை பார்த்திருக்கின்றார் என சொல்லலாம். "கல்வி நல்காக் கசடர்களுக்குத் தூக்கு மரம் உண்டாம் " எனும் கவிதையைக் குறிப்பிட்டு , கற்றவன் ஒவ்வொருவனும் கல்லாதவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்னும் கருத்தில் பாடிய பாடல் என்பதனை எடுத்துக் காட்டுகளோடு கூறியுள்ளார். மிகவும் அக்க்றையோடு பல்வேறு தகவல்களைத் திரட்டி ஒன்று சேர்த்து , தன் எழுத்துக் கை வண்ணம் சேர்த்துக் கொடுத்துள்ளார். பாராட்டப் படவேண்டியவர். மதுரை மத்திய நூலகத்தில் இதன் எண்: 156244.

வா.நேரு ,26.12.2011

No comments: