Sunday 25 December 2011

மாநில ப.க.

ப.க. தோழர்கள் விடுதலை சந்தா ரூ.3,74,430 2013-இல் உலக பகுத்தறிவு, மனிதநேய மாநாடு

மாநில ப.க. கலந்துரையாடலில் தமிழர் தலைவர் அறிவிப்பு

சென்னை, டிச. 19-சென்னை பெரியார் திடலில் மாநில பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.3,74,430 விடுதலைக்கான சந்தா வழங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலக பகுத்தறிவு மனிதநேய மாநாடு நடைபெறும் என்று கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவித்தார்.

விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் பொன் விழா ஆண்டில் சென்னையில் பகுத்தறி வாளர் கழக மாநில, மாவட்டப் பொறுப்பா ளர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாவாக ரூ3,74,430 அளிக்கப்பட்டது.

ஊமை.ஜெயராமன் உள்ளிட்ட தோழர்கள் கழகத் தலைவரிடம் சந்தாவை வழங்கினர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் 18.12.2011 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு சென்னை-பெரியார் திடல் அன்னை மணியம்மை மன்றத்தில் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர் கள் வழிகாட்டு நெறி யுரையாற்றினார்.

பொறுப்பாளர்கள் தாங்கள் சேகரித்த விடுதலை சந்தாக்களின் தொகையாக ரூ3,74,430 அய் தமிழர் தலைவ ரிடம் அளித்தனர்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங் கோவன் கலந்துகொண் டார்.

பொதுச் செயலாளர் வீ. குமரேசன்

கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த பொறுப்பாளர் களை, தோழர்களை வரவேற்று பகுத்தறிவா ளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரே சன் உரையாற்றினார்.

விடுதலை சந்தா சேகரிப்புப் பணியில், கடந்த கலந்துரையாடல் கூட்டங்களில் வழங்கப் பட்ட தொகை, களப்பணி ஆற்றிவரும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் மாவட்ட அளவிலான பங்கேற்பு, பங்களிப்பு பற்றி எடுத்துக்கூறினார்.

இயக்கத்தின் பிற அணியினருடன் இணைந்து பணியாற்றி, தங்களது விடுதலை சந்தா சேகரிப்பு பங்க ளிப்பினை தனித்துவ மாக காட்டிடும் பகுத் தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் பணிபற்றி ஊக்கப்படுத் திப் பேசினார். விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் பொன்விழா ஆண்டு நிறைவு பெற இருக்கின்ற தருணத்தில் விடுபட்ட விடுதலை சந்தாக்களை சேகரித்து இன்னும் முனைப்பாகப் பணி ஆற்றிட வேண்டு கோள் விடுத்தார்.

ப.க. தலைவர் வா. நேரு

பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வா.நேருவுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வா.நேரு தலைமை உரையாற்றியதாவது:
பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக 50 ஆண்டுகள் விடுதலை நாளிதழின் ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக் கும் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்து களை, பாராட்டுகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம்.

தந்தை பெரியாரின் இயலே, மனிதநேய நெறி, உலகுக்கு புதுப் பாதை காட்டும் நெறி-அந்த நெறியை உலக மெங்கும் பரப்பிட அய்யா ஆசிரியர் அவர் களின் பணிக்கு உறு துணையாக இருப் போம். பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பிற மொழிகளில் நமது இயக்க நூல்கள் வெளி யீடு, இணையதள பயிற்சி முகாம் போன்ற வற்றை முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

தமிழர் தலைவர் நெறியுரை

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி நெறியுரையாற்றினார்.
விடுதலை ஏட் டிற்கு சந்தா சேர்த்திடும் பணியில் முனைப்பாக ஈடுபட்டுள்ள பகுத்தறி வாளர் கழகத்தின் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பகுத்தறிவாளர் கழகத் தின் பணித்தளம் பரந்து பட்டது.

பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பா ளர்கள் மற்றும் தோழர் கள் அரசுப்பணி, அலு வலகப் பணியில் ஈடுபட் டுள்ள தன்மையால் களம் இறங்கி போராட்ட தளத்தில் பங்கேற்க இய லாது. ஆனால் பகுத்த றிவுக் கருத்துகளை மூட நம்பிக்கை ஒழிப்பினை, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பது பற்றிய பிரச் சாரப் பணியில் முழு மையாக ஈடுபடலாம்.

பெரியார் உலக மயமாக்கல் பணியில் பகுத்தறிவாளர் கழகம் பெரும்பங்கு வகித்திட வேண்டும். வெளி மாநி லங்களில் அயல்நாடு களில் பெரியாரின் மனிதநேயக் கருத்துகள் சென்றடையும் வகையில் பல்வேறு நவீன தொழில் நுட்ப தளங்களான இணையதளம், மின் னஞ்சல் மூலம் பிரச்சா ரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2013ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலக பகுத்தறிவு, மனிதநேய மாநாடுபெரியார் உலகமய மாக்கல் பணியில் ஒரு கட்டமாக 2013ஆம்ஆண்டு தொடக்கத்தில் இயக்கத்தின் சார்பாக உலக பகுத்தறிவு, மனிதநேய மாநாடு நடத்திட வேண்டும்.

அம்மாநாட்டினை நடத்துவதில் பகுத்தறிவாளர் கழகத்தின் பணி பெரும்பங்கு வகித்திட வேண்டும். கால அவகாசம் கணிசமாகவே உள்ளது. பகுத்தறிவுக் கருத்துகள் பரப்பும் பணியினை பல்வேறு தளங்களில் பிரித்து காலக்கட்டத்தின் முன்னுரிமை அறிந்து களப்பணி ஆற்றிட தோழர்கள் முன் வரவேண்டும். விடுதலை சந்தா சேர்க்கும் பணியினை நிலைத்து நீடிக்கும் கொள்கை பரப்பும் அணுகுமுறையாகக் கருதி அளிக்கப்பட்ட இலக்கினை பொறுப்பாளர்கள் விரைந்து முடித்திடல் வேண்டும் என்று கூறி விளக்கவுரையாற்றினார்.

பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் கலந்துரையாடல் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் பேசியதாவது:

கணினி தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில் கருத்துப் பரப்பும் பணியிலும் புதுமையான தொழில்நுட்ப அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இணையதளம் மூலம் உலகின் மூலை முடுக்குகளில் உள்ளவர் களிடமெல்லாம் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இருப்பதை முழுமையாகப் பயன்படுத்தும் வண்ணம் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தங்களது அணுகுமுறை ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த நூற்றாண்டும், இன்னும்வருகின்ற காலமும் பெரியார் கருத்து வெற்றியடையும் காலம் என்பது உறுதி. தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துகளுக்கெல்லாம் முதன்மைச் சொத்து தமிழர் தலைவர் ஆசிரியர் ஆவார்கள். அவர்களது வழிகாட்டுதலில் வரக் கூடிய காலங்களில் பெரியார் உலகமயமாக்கல் மேலும் வலுப்படும். வலுப்படுத்தும் கரங்களாக கழகத் தோழர்கள் செயல்பட வேண்டும் என்றார்.

கோ.சாமிதுரை

திராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை தமது உரையில் கூறியதாவது:
பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் இயக்கத்தின் மற்ற அணியினரைவிட, பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பினைப் பெற்றவர்கள். பழகுநிலைச் சூழலுக்கு ஏற்றவாறு பகுத்தறிவுக் கருத்து பிரச் சாரப் பணியில் ஈடுபட முன்வரவேண்டும். விடுதலை சந்தா சேகரிப்புப் பணியில் பகுத்தறி வாளர் கழகத் தோழர்கள் தனி முத்திரை பதித்திட வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பினை வளப்படுத்தி சந்தா சேகரிப்புப் பணியினை விரைந்து முடித்திட வேண்டுகிறேன்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தமது உரையில் கூறியதாவது:

விடுதலை சந்தா சேர்த்திடும் பணியில் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பல்வேறு மாவட்டங்களில் இயக்கத்தின் இதர அணித் தோழர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின் றனர். தனிப்பட்ட முயற்சியில், உரியவர்களைச் சந்தித்து சந்தா தொகையினை மட்டுமல்ல. விடுதலை வளர்ச்சிக்கு நிதி திரட்டும் ஆற்றல் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு உண்டு. அந்த ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி விடுதலை பரப்பும் பணியில் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட பங்களிப்பினை விரைந்து, குறித்த காலத்தில் முடித்திட பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் முயல வேண்டும்.

முயற்சி திருவினை யாக்கும் என்பது உங்களது செயல்பாடுகளில் பிரதிபலித்திட வேண்டும். மேலும் கலந்துரை யாடல் கூட்டத்தில் பகுத்தறி வாளர் கழகத்தில் மாநில துணைத் தலைவர் பொறுப்பினை புதிதாக ஏற்றுள்ள கோ.ஒளிவண்ணன் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் டாக்டர் ஆர்.எஸ். இரத்தினசபாபதி ஆகியோர் உரையாற்றினர்.

No comments: