Thursday 19 April 2012

பயன்படு பேஸ்புக்கே !பயன்படு !


உனைப் பார்த்து
ஆண்டுகள் பல ஆயின


ஒரே பள்ளியில்
படித்ததும்
ஒன்றாய்க் குளித்ததும்
கிணற்றில் டைவ்
அடித்து குதித்ததும்
வீட்டில் மின்விளக்கு
இல்லாமையால்
இரவல் வெளிச்சங்களில்
ஒன்றாய் படித்ததும்
திண்பண்டங்களை
பகிர்ந்ததும்
சிரித்து மகிழ்ந்ததும்
மறந்தே போய்
வருடங்கள் பல
ஆயின நண்பா !

பேஸ்புக்கில் வந்து 
நட்பு செய்ய விருப்பம் 
எனத் தகவல் 
கொடுத்திருந்தாய் 

புதிதாய் நட்பா ? 
நீயும் நானும் 
ஒன்றாய் இருந்த 
தகவல்கள் அனைத்தும் 
மூளையில் இருந்து 
பதிவிறக்கம் 
செய்யப்பட்டு 
பட பட வென 
மனதில் ஓடிக்கொண்டிருக்க 
விருப்பம் என 
விடை கொடுத்தேன் 

நன்றி ! நன்றி 
இணையத்திற்கும் 
பேஸ் புக்கிற்கும் 

இன்னும் சிலர் 
முகம் அப்படியே 
மனதில் ஊஞ்சலாடுகிறது 
அவர்களின் முகமும் 
பாவனையும் 
உரிமையாய் பேசிய 
பேச்சுகள் மட்டுமே 
மனதில் இருக்க 

வெகு காலமாய் 
தொடர்பு எல்லைக்கு 
அப்பால் இருக்கும் 
அவர்களையும் 
தொடர்பு கொள்ள 
பயன்படு பேஸ்புக்கே ! 
பயன்படு !

வா. நேரு - 

17-4-12 கவிதையை வெளியிட்ட eluthu.com - ற்கு இனிய நன்றிகள்  

                                 


No comments: