Wednesday 2 January 2013

ஜாதியும் ஜாதகமும்

                         

படிக்காத அப்பாவும்
படித்த மகனும்
சேர்ந்தே
தூக்கிக்கொண்டு
அலைகிறார்கள்
ஜாதகத்தை
வெகு காலமாய் !

இருபத்து ஐந்து வயதில்
மகனுக்கு பெண்ணைப்
பார்க்க ஆரம்பித்த அப்பா
அவனுக்கு வயது
முப்பத்தைந்தைக் கடந்த பின்பும்
ஒவ்வொரு ஜோதிடனாய்
பார்த்து பார்த்து
கேட்டு கேட்டு எழுகின்றார்
மகனுக்கு இன்னும்
பெண் அமைந்தபாடில்லை!

வசதி இருக்க
படிப்பு இருக்க
நன்றாய் வாழும்
வாய்ப்பு இருக்க
பாழாய்ப்போன
ஜாதக நோட்டைத்
தூக்கிக்கொண்டு
அலைகின்றார்
பரிதாபத்திற்குரியவர்களாய் !

போகும் இளமை
வருமா எனும் சிந்தனையில்லை !
பொன்னான வயதை
இழக்கின்றோமே எனும் புரிதலில்லை !
அடுத்தவர் உழைப்பில்
அள்ளிப்போடும்
பணத்தால் வாழும்
ஜோதிடர் சொல்படியே
ஆடுகின்றார் !
அவன் சொல்லும் சொல்லுக்கெல்லாம்
பரத நாட்டியம் போல்
மூட நம்பிக்கை நாட்டியம்
ஆடுகின்றார்!

மூளைக்குள்
ஏற்றிக்கொண்ட
மூட நம்பிக்கை
விலங்கினை
நொறுக்கத் துணிவின்றி
நொந்தும் வெந்தும்
புலம்பியே அலைகின்றார்
கோவில் கோவிலாய்
பரிகாரம் -தோசமென

பெண் கருப்போ
சிவப்போ பரவாயில்லை !
ப்ண் படித்தவளோ
படிக்காதவளோ பரவாயில்லை !
நம்ம பையனுக்கு
வயதாகி விட்டது பாருங்கள் !
ஜாதகம் மட்டும்
பொருந்தினால் போதும்
ஜாம் ஜாம் என நடத்திடலாம்
கல்யாணத்தை எனப்
பிதற்றினார் என்னிடத்தில்

தூக்கி தீயில் போடு
உனது மகன் ஜாதகத்தை !
ஜாதியும் ஜாதகமும்
தேவையில்லை எனத் துணிந்துசொல் !
அடுத்தவருடம் பேரப்பிள்ளையை
கொஞ்சும் சுகம்
உனக்கு உண்டு என்றேன் !

எழுதியவர் :வா. நேரு
நாள் :2012-12-30 06:33:13
Nantri : eluthu.com
கவிதைக்கு வந்த சில எதிர்வினைகள் உங்கள் பார்வைக்கு
இருபத்து ஐந்து வயதில்

மகனுக்கு பெண்ணைப்

பார்க்க ஆரம்பித்த அப்பா

அவனுக்கு வயது

முப்பத்தைந்தைக் கடந்த பின்பும்

ஒவ்வொரு ஜோதிடனாய்

பார்த்து பார்த்து

கேட்டு கேட்டு எழுகின்றார்

மகனுக்கு இன்னும்

பெண் அமைந்தபாடில்லை!

----யதார்த்த வரிகள் கோள்களை மனிதன் உற்று நோக்கினால் அறிவியல்

வான சாத்திரம். கோள்கள் தன்னை

நோக்கும் என்று நம்பினால் அது

ஜோதிடம் வாழ்க்கைக்கு வழி காட்டி

அதுவே வரம் தரும் மரம் என்று

நம்பினால் அது மனிதனின் சோம்பேறித்

தனம். ASTROLOGY IS ONLY INDICATIVE .

கோள்கள் ஒளிவீசும் இயற்கையின்

வடிவங்கள் அதன் அடிப்படை தெரியாமல் கண்மூடித்த் தனமாக

பின்பற்றினால் அது மனிதனின் தவறு

கவிதைக்கு நன்று எனும் * வா. நேரு

----அன்புடன்,கவின் சாரலன் என்ற சங்கரன் அய்யா

எதுவும் ஓர் எல்லைக்குட்பட்டே...

எதுவும் விளிம்பின் பீச்சலாய் இருப்பின் தவறே...agan

நல்லதொரு சமுதாய சிந்தனை அய்யா !

ஜோதிடம் என்பது

விஞ்ஞானமா ?

மெய்ஞானமா ?

அஞ்ஞானமா ?

மூன்றிலும் இருக்கும் இந்த ஜோதிட கணிப்பு !

அளவுக்கு மேல் எதையும் / எவரையும் நம்பும் போது தன்னம்பிக்கை தளர்ந்துவிட்டது, சுயஅறிவு சுருங்கிவிட்டது என்பது வெளிச்சமாகிறது !

துஸ்பிரயோகம் என்பது எதாவதொன்றினை அல்லது யாரையாவதொருவரை பிழையான எண்ணங்களில் பயன்படுத்தலைக் குறிக்கிறது.....!

யாரவது ஒருவரால் அல்லது எதாவது ஒன்றினால் தம்மைத் தாமே பிழையாக பயன்படுத்திக் கொள்ள இடம் கொடுப்பது சுய துஷ்பிரயோகமாகிறது !

பலரின் வாழ்க்கை கேள்விக்குறிக்குப் பினால் நிற்கிறது இது போன்ற துஷ்பிரயோகங்களால் !       K.S.Kalai







1 comment:

Unknown said...

miga arumai. . . .