Thursday 26 January 2017

பண் பாட்டு அறிஞர் பேராசிரியர் தொ. பரமசிவனுக்கு தமிழறிஞர் விருது


பண் பாட்டு அறிஞர் பேராசிரியர் தொ. பரமசிவனுக்கு  தமிழறிஞர் விருது




திருநெல்வேலி, ஜன. 26- பண் பாட்டு அறிஞர் பேராசிரியர் தொ. பரமசிவனுக்கு, கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மய்யத்தின் சார்பில் தமிழறிஞர் விருதும், ரூ. ஒரு லட்சம் பொற்கிழியும் செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டது.

கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மய்யத்தின் சார் பில், ஆண்டுதோறும் படைப் பாளிகள், தமிழறிஞர்கள், பிற துறைகளில் இருந்து தமிழுக்கு சேவை ஆற்றும் நபர்கள் என்ற அடிப்படையில் தலா மூவரை தேர்வு செய்து விருதுகளும், ரூ. ஒரு லட்சம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த விருது தொடர்ந்து வழங்கப் படுகிறது.

2016ஆம் ஆண்டுக்கு இலக் கிய விருது எழுத்தாளர் சிவசங் கரி, சூழலியல் விருது தியோ டர் பாஸ்கரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும், தமிழறிஞர் விருது பேராசிரியர் தொ. பரமசிவனுக்கு வழங்கு வதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கான விழா, கோவையில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், பேராசி ரியர் பரமசிவனின் உடல்நலம் காரணமாக அவருக்கு மட்  டும் திருநெல்வேலியில் அவ ரது இல்லம் தேடிச் சென்று விருது வழங்கப்படும் என உல கத் தமிழ்ப் பண்பாட்டு மய்யம் அறிவித்திருந்தது.

இதன்படி, மய்யத்தின் நிறுவனர் மருத்துவர் நல்ல. பழனிச்சாமி, செயலர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகி யோர் பாளையங்கோட்டையில் உள்ள பேராசிரியர் தொ.பரம சிவன் இல்லத்துக்கு நேரில் வந்து செவ்வாய்க்கிழமை விருதை வழங்கினர். விருதுக்கான சான் றிதழ், ரூ. ஒரு லட்சம் பண முடிப்பு ஆகியவற்றை வழங்க, பேராசிரியர் தொ. பரமசிவன், அவரது மனைவி பாப்பா ஆகி யோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், கவி ஞர்கள் தேவேந்திர பூபதி, கிருஷி, தமிழ் வளர்ச்சிப் பண் பாட்டு மய்ய துணைத் தலை வர் ரமேஷ் ராஜா, மக்கள் மருத்துவர் ராமகுரு, முனைவர் இலக்குவன், தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றி யல் துறைத் தலைவர் என். ராமச்சந்திரன், உதவிப் பேராசி ரியர் கார்மேகம், ஆசிரியர்கள் சங்கர்ராம், சங்கரநாராயணன், சேதுராமலிங்கம், ராஜகோபால், சன். கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

ஏற்புரையாற்றிய தொ. பரமசிவன் கூறியது: முகவரி இல்லாதவர்களுக்கு அவர்களது முகவரி தேடிச் சென்று விருது வழங்குவதே சிறப்பு. அந்த வகையில் கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மய்யத்தின் சார்பில் தமிழறிஞர் விருதை எனது இல்லம் தேடி வந்து அளித்தமைக்கு நன்றி.

பண் பாட்டு அசைவுகள், அழகர் கோயில், பரண், விடுபூக்கள், உரைகல், இந்து தேசியம், செவ்வி, மானுட வாசிப்பு என 8 நூல்களை எழுதியுள்ளேன். புழங்கு பொருள்களைக் கொண்டு தமிழர்கள் அறிந்திராத விவரங் களை அறியப்படாத தமிழகம் எனும் நூல் மூலம் விளக்கிக் கூறினேன். அவை பிரசித்தி பெற்று 16 பதிப்புகள் வந்து விட்டன.

பண்பாட்டு விழுமியங் களை தேடிச் சென்று அறிந்து அவற்றை அறியாதவர்களுக்கு தெரியும் வகையில் அளித்தது மட்டுமே எனது பணி. மற்ற படி அனைத்துமே நமது பண் பாட்டுக்குச் சொந்தமானவை என்றார் அவர்



நன்றி : விடுதலை 26.01.2017

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்.

நன்றி.

முனைவர். வா.நேரு said...

வணக்கம். நன்றி, வருகைக்கும் கருத்திற்கும்