Wednesday 24 January 2018

தந்தை பெரியாரும்-உளவியலும்.....ஜெ. வெண்ணிலா

உளவியல் என்பது ஒரு மிகப்பெரிய பகுதி. உளவியல் குறித்து பல கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றுள் அடிப்படையான ஒன்று மாஸ்லோ கோட்பாடு. தேவைதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்றார் அவர். அந்த அடிப்படையில்  மனிதர்களின் தேவைகளை  5 அடுக்குகளாகக் காட்டினார். அது பிரமிட் வடிவம் கொண்டது. ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தேவை உண்ண உணவு, இருப்பிடம் போன்றவை. அப்புறம் பாதுகாப்பான இடம், பாதுகாப்பான வேலை போன்றவை அடுத்த அடுக்கு. அடுத்து அன்பு செலுத்தப்படுதல், அப்புறம் சமூக ரீதியலான மரியாதை. அப்புறம் முழுத்திறனையும் நான் உயயோகப்படுத்தி விட்டேன், நான் நன்றாக இருக்கின்றேன் எனத் தன்னை உணர்தல் போன்றவை.தேவைகள் மனிதர்களுக்கு மனிதர் மாறுபடும் என்றாலும்,  எந்தத் தேவையாக இருந்தாலும் இந்த 5 அடுக்குகளுக்குள் கொண்டு வந்து விடலாம். இந்த 5 அடுக்குகளில் எல்லாக் காரணிகளும் நிறைவேறி இருந்தால் ஒரு மனிதன் மன நிறைவாக இருக்கலாம்.
இந்த 5 அடுக்குகளில் இருப்பதில் எது குறைந்தாலும் அது நமக்கு பிரச்சினையைத் தரும்  என்பது உளவியல். நமது தேவை நிறைவேறவில்லையென்றால்  நமக்கு மன உளைச்சல் வரும். என்றைக்காவது காலையில் எழுந்தவுடன் அலுப்பு, சலிப்பு போன்றவை இருந்தால் நமக்கு உளவியல் பிரச்சினை இருக்கிறது என அர்த்தம்..திருப்தி இல்லாத நிலைமையில் நாம் அடுத்தவர்களை நோண்டுவோம்.தேவையைப் பொறுத்து இந்த நோண் டுதல் தொடரும் -பிரச்சினைகள் தொடரும்.
மனிதர்கள் நம்பிக்கைகளின் அடிப்படையில் வாழ்கின்றார்கள். நான் நன்றாக இருக்கிறேன் என்று நினைப்பது ஒரு வகையான நம்பிக்கை என்றால், நான் எதற்குமே லாயக்கில்லை என்று நினைப்பது, யாரும் என்னை விரும்புவதில்லை என்று நினைப்பது இவை எல்லாம் கூட நம்பிக்கைதான். இந்த நம்பிக்கைதான் மன உளைச்சலைக் கொடுக்கின்றது. சேரக் கூடாத வர்களோடு சேர வைக்கிறது, தவறான காரியங்களைச் செய்ய வைக்கிறது. இதுதான் அடிப்படையான தன்மை.
நம்மை, சமூகத்தை மிகவும் பாதித்த சம்பவம் மாணவி அனிதாவின் தற்கொலை. அண்மையில் ஒரு பள்ளியில் படித்த 4 மாணவிகள் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டார்கள். இப்படி நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நமக்கு மிகுந்த கவலையைத் தருகின்றன.எங்கோ நடக்கும் மன உளைச்சல் விளைவு இது என நாம் விட்டுவிடமுடியாது.இது நமது வீட்டைத் தாக்க எவ்வளவு நேரம் ஆகும்?. எப்படி இதனை அணுகப் போகிறோம்?ஏன் மன உளைச்சல், தற்கொலை போன் றவை நிகழ்கின்றன? என்பதனை நாம் உளவியல் கருத் துக்களோடு பார்க்க வேண்டும்.
வாழ்க்கையில் நம்பிக்கைதான் குணத்தை மாற்று கின்றது. தந்தை பெரியார் நாம் நம்பிக் கொண்டிருந்த நம்பிக்கைகளைத்தான் அசைத்தார்.  நம்பிக்கைகளுக்கு  ஆதாரமான விசயங்களை அசைத்தார் .நம்பிக்கைகளை அசைப்பதற்கு கேள்விகள்தான் அடிப்படை..பெரியார் அத்தனையையும்  கேள்வி கேட்டார். கேள்வியைக் கேட்டு கேட்டு பதிலை வரவழைத்தார். நாம் கேள்வி கேட்கப் பழக வேண்டும். நான் கேள்வி கேட்கச் சொன்னேன் ?ஏன் கூட்டத்தில் இருக்கும் பெண்கள்  யாரும் கேள்வி கேட்கவில்லை? நமக்கு பெண்களுக்கு  பதில் சொல்லித்தான் பழக்கம்.சிறுவயதிலிருந்து நாம் கேள்வி கேட்கப்பழகவில்லை.பெரியார் சொன்னது கேள்வி கேட்கத்தான். நிறையக் கேள்விகள் நாம்  கேட்க வேண்டும். பெண் விடுதலை என்பதே கேள்விகள் அடிப்படையில்தான் நிகழும். நமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால்  என்ன மாதிரியான நம்பிக்கை யினால் நமக்கு இந்தப் பிரச்சினை வருகிறது என்று நமக்குள்ளேயே நாம் கேள்வி கேட்டிருக்கின்றோமா ?
பணமே அத்தனை மகிழ்ச்சியை யும் நமக்கு  கொடுத்துவிடும் என்னும் நம்பிக்கையா? எல்லாமே ஒழுங்கு இல்லாமல் இருக்கிறது என்னும்  நம்பிக்கையா? வீடுகளில் செல்போன் தான் பிரச்சினை என்னும் நம்பிக் கையா? இப்படி நமக்கு நாமே கேள்வி கேட்க வேண்டும். என்ன பிரச்சினை என்று தெரியாமலேயே நமது பெண்கள் இருக்கின்றார்கள், அதுதான் பிரச் சினை.  பெண்கள் படிக்கின்றார்கள், வெளியில் வந்து வேலை பார்க்கின் றார்கள். இன்றைக்கு ஒரு ஆய்வு சில சாதிப் பெண்களுக்கு, வீட்டுப் பெண் களுக்கு  மனச்சிதைவு நோய் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. ஏன்? அந்தப் பெண்களுக்கு மதம் சார்ந்த சடங்குகள் மிக அதிகம். அது அவர்களைப் பாதிக்கின்றது. மனச் சிதைவு நோய்வாய்ப்படுகின்றார்கள்.  அடுப்படியிலேயே வைத்திருந்தால் நமது வீட்டுப் பெண்களுக்கும்  வரும் பெண்களுக்கு அவர்களுடைய திறனை, சக்தியைப் பயன்படுத்த விடவேண்டும்.பெண் விடுதலை வேண் டும். இன்னும் வரவில்லை என்பதற்கு பெண்களின் எண்ணமும் காரணமாக இருக்கிறது. ஆண்களைச் சார்ந்தே சிறுவயதிலிருந்தே பழகிவிடு கின்றோம். சுயமாக வாழ வேண்டும். பெரியார் சொன் னது போல பெண்கள் சுயமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும்.
தந்தை பெரியார் பெண்களிடம் கர்ப்பப்பையை எடுத்து விடுங்கள் என்றார். அப்புறம் சந்ததி எப்படி வளரும் என்று கேட்டபோது அது ஆண்களின் கவலை என்றார். அது உன் கவலை இல்லை. உளவியலில் ஒருமுகமாக பார்ப்பது, அதாவது போகஸாகப் பார்ப்பது மிக முக்கியம். தந்தை பெரியார் பெண் விடுதலை விசயத்தில் போகஸாக பெண்களுக்கு கர்ப்பப்பை என்பது பெண் விடுதலைக்கு தடையாக இருக்கிறது என்று பார்க்கின்றார். இப்படித்தான் பார்க்க வேண்டும் உளவியல் அடிப்படையில். .
தந்தை பெரியார் எப்படி  ஒரு பிரச்சினையை அணுகுவது என்பதனை நமக்கு கற்றுக் கொடுத் திருக்கின்றார். அது உளவியல் அடிப்படை சார்ந்தது. எதையும் மேலோட்டமாகப் பார்ப்பதல்ல தந்தை பெரியாரின் அணுகுமுறை. எதனையும் ஆழமாகப் பார்ப்பது. உள்ளுக்குள் சென்று பார்ப்பது என்பதல்ல, பெரியாரின் அணுகுமுறை. உள்ளுக்குள் உள்ளுக்குள் உள்ளுக்குள் சென்று பார்ப்பது, ஒவ்வொரு விசயத்தை யும் நிர்வாணமாகப் பார்ப்பது. அடிப்படையிலிருந்து ஆரம்பித்து அணுகி அணுகிப் பார்ப்பது என்பது. தந்தை பெரியாரின் இந்த அணுகுமுறையை நான் பயன்படுத்துகின்றேன். பிரச்சனைகளைத் தீர்க்கின்றேன். கடவுளைப் பற்றி இப்படி அணுகினால் அச்சம்தான் கடவுளுக்கு அடிப்படை என்பதனை நாம் உணரமுடியும்
நாங்கள் உளவியலில் ஒவ்வொரு விசயத்தையும் என்ன? ஏன், எதற்கு? யார்? எங்கே? என்னும் 5 டபுள்யூ மற்றும் எப்படி என்னும் ஒரு ஹெச் என்பதாகப் பார்க்கவேண்டும் என்று சொல்லித்தருகின்றோம். இதைத்தான் பெரியார் சொல்கின்றார். இல்லை, இல்லை பெரியார் சொன்னதை நாங்கள் சொல்கின்றோம். அவரின் தர்க்க முறைகள் ஆச்சரியமானவை.பெரியார் சொன்ன தத்துவ விசாரணை  என்று ஒரு பகுதி இருக் கிறது. சர்வ சக்தி என்று சொல்லப்படும் கடவுள் பற்றி
7 கேள்விகள் கேட்கின்றார். 70 வகையான பதில்கள் இருப்பதைச் சொல்கின்றார்.
நாம் நினைப்பதற்கும் நடப்பதற்கும் உள்ள வேறுபாடே மன அழுத்தம். நான் உளவியல் ரீதியாக அணுகும்போது ஒவ்வொரு விசயத்தையும் நிர்வாண மாகப் பார்ப்பது போல் பார்க்கின்றேன். அதுதான் உண்மை. நீங்கள் முகம் சுளிக்கலாம். ஆனால் அப்படிப் பார்த்துப் பழக வேண்டும்.  சமூக அறிவியல் படிக்கும் போது முதல் நாள் நாமெல்லாம் ஸ்பிருச்சுவலாக (ஆன்மிகமாக) இருக்க வேண்டும் என்றார்கள். மறு நாள் பாடம் ஆரம்பிக்கும்போது முதல் பாடமே தந்தை பெரியார் பற்றித்தான். ஆசிரியரிடம் கேட்டேன், அவர் பெரியார் இல்லாமல் சமூக அறிவியல் பாடம் எப்படி இருக்க முடியும் என்றார்! பெரியாரைத் தாண்டி சமூக அறிவியல் கிடையாது. நாம் எந்தத் துறைக்குள் சென் றாலும் பெரியார் சொன்ன கருத்துக்களைப் பார்க்கலாம். உளவியலிலும் அப்படித்தான். பெரியார் சொன்ன பல விசயங்கள் உளவியலாக சொல்லித்தரப்படுகின்றன.
மும்பையில் உளவியல் சார்ந்து ஒரு கருத்தரங்கம் வைத்திருந்தார்கள். சென்றிருந்தேன். அங்கே சென்றால் தந்தை பெரியார் சொன்ன  கேள்விகள் கேட்பதைத் தான் சொல்லித்தருகின்றார்கள். இதுதான் எனக்கு முதலிலேயே பெரியார் மூலமாகத்தெரியுமே என்றுதான் நினைத்தேன். பெரியார் ஒழுக்கத்தை மாணவப் பருவத் திலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்திச் சொல்கின்றார். நாம் நினைத்துக் கொண்டி ருக்கின்ற ஒழுக்கம் என்பது வேறு. பெரியார் சொன்ன ஒழுக்கம் என்பது வேறு. நாம் எடுத்துக் கொண்டிருக்கின்ற பொறுப்பை செவ்வனே செய்வதுதான் ஒழுக்கம் என்று சொல்கின்றார் பெரியார்.. இந்த அரங்கத்தில் பேச வந்தி ருக்கின்ற எனது ஒழுக்கம், நான் பேசுவது 10 பேருக்கா வது உபயோகமாக இருக்கும்படி பேசுவதுதான். ஒவ் வொரு நிமிடத்தையும் நாம் ஒழுக்கமாக செய்திருக்கின் றோமா என்று யோசிக்கவேண்டும் என்று சொல்கின்றார் பெரியார். ஒவ்வொரு நிமிடமும், படிக்கும்தோறும் ஆச்சரியத்தைக் கொடுக்கின்றார் பெரியார்.
உறவு முறைகளில் வரும் சிக்கல்கள் என்பவை உளவியலில் மிக முக்கியமானவை. உறவுமுறைகளில் வரும் சிக்கலுக்கு தீர்வு கொடுக்க  நான் ஒரு மன நல மருத்துவரைத்தான் நாடுகின்றேன். அந்த மன நல மருத்துவர் அய்யா ஆசிரியர் வீரமணி. நமது மாமியார் ஏதாவது சொல்லிவிட்டார் என்று சொன்னால் அதனையே நினைத்துக்கொண்டிருப்போம். இல்லை வேறு யாரும் ஏதாவது சொல்லிவிட்டால் அதனைப் பற்றி நினைப்பது,பேசுவது என இருப்போம். அய்யா ஆசிரியர் சொல்கின்றார் , மாடு அசை போடுவதுபோல, உறவுகள் சொல்லும் சொற்களை அசை போடுவதை நிறுத்துங்கள் என்று சொல்கின்றார்.  அவரின் வாழ்வியல் சிந்தனைகள் மனதைத் தொடுபவை. ஒரு நிகழ்வை நாம் பாதிக்கப்பட்டவர்கள் நிலையில் நின்று பார்க்க வேண்டும். இதனைத்தான் “வாழ்வியல் சிந்தனைகள்” கட்டுரையில் அய்யா ஆசிரியர் அவர்கள் “எம்பதி” யோடு இருங்கள் என்று சொல்கின்றார். அடுத்தவர் களைப் பற்றிக் குறை சொல்வதற்கு முன் அவர்கள் நிலையில் நின்று நாம் யோசிக்க வேண்டும் என்று சொல்கின்றார். அடுத்தவர் நிலையில் நின்று பிரச்சினை களை அலசுகின்றபோது மன அழுத்தம் இருக்காது. மன அழுத்தம் இல்லையென்றால் அமைதி இருக்கும்.மகிழ்ச்சி இருக்கும். ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப் போவதற்கு முன்பு மனிதத்தன்மையோடு நடந்து கொண்டோமா ? என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சொல்கின்றார்.
அடுத்து கல்வி. பகுத்தறிவுக் கல்வி வேண்டும் என்றார் பெரியார். சுயமரியாதை உணர்ச்சியைத் தரும் கல்வி வேண்டும் என்றார். குழந்தைகளுக்கு சுயமரி யாதையை, பகுத்தறிவைச்சொல்லித்தரும் கல்வி வேண்டும் என்றார்.நமது பிள்ளைகளுக்கு 13 வயது வரை தான் நாம் சொல்லித்தர முடியும். நாம் சொல்வதை அந்த வயதுவரைதான் கேட்பார்கள். அதற்குப்பின் அவர்கள் சொல்வதை நாம் கேட்கவேண்டும். கேள்வி கேட்கவிட வேண்டும். உங்களை எதிர்த்து பேச விடவில்லையென்றால் அடிமையாகத்தான் இருப்பான். சுதந்திரமாக சிந்திக்க வேண்டும் என்றால் கேள்வி கேட்க விடுங்கள். 13 வயதுவரை நிறையப் பேச வேண்டும். அப்போதுதான் நம்மிடம் பேசுவான்.
பிள்ளைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது.எதையும் சமாளிக்கும் மன வலிமையை உண்டாக்க வேண்டும். எனது மகளிடம் “கணினியை பயன்படுத்து, போட்டோவை நெட்டில் போட்டு விடுவேன் என்று சொன்னால், போட்டால் போடுடா, எனக்கு ஒரு காபி அனுப்படா” என்று சொல்லிவை என்றுதான் சொல்லி வைத்திருக்கிறேன். புளுவேல் கேமிற்குப் பிள்ளைகள் எப்படி பலியாவர்கள், நாம் நம் பிள்ளைகளிடம் பேசினால்? நாம் நமது பிள்ளைகள் சொல்வதைக் காது கொடுத்து கேட்க வேண்டும். பிள்ளைகளைக் கவனிக்க வேண்டும். “வாழ்வியல் சிந்தனைகள்”  5-ஆம் பாகத்தில் விடலைப் பருவத்தில் என்னும் தலைப்பில் ஆசிரியர் வீரமணி எழுதியிருக்கின்றார்; குழந்தைகள் அடிக்கடி உடல் ரீதியாகப் பிரச்சினை இருக்கிறது என்று சொன் னால், கை வலிக்கிறது,வயிறு வலிக்கிறது என்று சொன் னால் கவனிக்க வேண்டும். பேசவேண்டும்.  மருத்து வரிடம் காண்பிக்க வேண்டும்.அப்படியே உளவியல் மருத்துவரைப் போல அந்த வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் அய்யா ஆசிரியர் எழுதியிருக்கின்றார். படிக்கும் பிள்ளைகளுக்கு ஹோமோ செக்ஸ் தொந்தரவு இருக்கின்றது. வெளி நாட்டில்தான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள். இங்கும் இருக் கிறது. பகுத்தறிவோடு குழந்தைகளை வளர்க்க வேண் டியது அவசியம். அப்போதுதான் பிள்ளைகள் எந்தப் பிரச்சனையையும் சமாளிப்பார்கள்.மனம் என்னும் குப்பையை கிளீன் செய்யுங்கள் என்று ஆசிரியர் சொல்கின்றார்.
பகுத்தறிவை பயன்படுத்த வேண்டும். பகுத்தறி வோடு சிந்திக்காத சமூகத்தில் என்ன கொண்டு வந்தாலும் பலன் இல்லை என்றார் பெரியார். டிஜிட்டல் இண்டியா கொண்டு வந்தாலும் பகுத்தறிவு இல்லை யென்றல் பலன் இல்லை.எதையும் பகுத்தறிவு மூலம் அணுக வேண்டும். அப்படித்தான் திருமணம் என்ப தனை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்றார் பெரியார். சமூகப்பணி ஆற்றுவதற்கு திருமணம் தடையாக இருக்கிறது என்றார் பெரியார். மன நலத் தோடு வாழ்வதற்கான வழிதான் பகுத் தறிவு. எனக்கு உடல் ரீதியாக பல பிரச் சினைகள் உண்டு. ஆனால் மன தைரியத் தோடு இருப்பதற்கு பகுத்தறிவுதான் கார ணம். பிள்ளைகள் அவர்களாக வளர்கின் றார்கள் என்றார் பெரியார்.பிள்ளைகள் வளரவேண்டும். நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். எனது மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தனியாக வெளி நாடு சென்று வந்தாள் .உலக அளவில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்றாள். அய்யா ஆசிரியர் அவர்களிடம் பாராட்டு பெற்றாள்.
உடல் ரீதியாக எல்லோருக்கும் பிரச் சினைகள் இருக்கின்றன. நான் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் படுத்துக்கொண்டு கொஞ்சம் சோர்ந்து இருந்தேன். எனது பெரிய அத்தான் வந்து பார்த்தார்.எனக்கு இருதயத்தில் எத்தனை ஓட்டை இருக்கிறது தெரியுமா? என்ன நடந் தது என்று படுத்துக் கொண்டு கிடக்கிறாய், நாமெல்லாம் பெரியாரிஸ்ட் இல்லையா ? என்றார். துள்ளி எழுந்து உட்காருவதுபோல எழுந்தேன். எத்தனை வலிகளைத் தாங்கிக்கொண்டு தந்தை பெரியார் பாடுபட்டார். அவரின் உடல் வலியோடு ஒப்பிடும் போது நமது உடல் வலியெல்லாம் வலியே அல்ல என்பதுதான் உண்மை.
மற்ற தலைவர் எல்லாம் நெஞ்சில் இருக்கின்றார்கள். ஆனால் பெரியார் மூளையில் இருக்கின்றார். நெஞ்சில் இருப்பது அழிந்துவிடும். ஆனால் மூளையில் இருப்பது அழியாது. அதனால் தான் நமது எதிரிகளால் தமிழகத்தில் நோட்டாவைக் கூட வெல்ல முடியவில்லை. என்னோடு இருப்பவர்களுக்கு, உளவியல் துறையில் இருப்பவர் களுக்கு  இல்லாத ஒரு விசயம் என்னிடம் இருக்கிறது. அது பெரியார் கொள்கை. அது மனப்பாடமாகத்தெரியும். அதனை இன்றைக்கு இருக்கும் பிரச்சினைகளோடு இணைத்து தீர்வைச்சொல்கின்றேன். தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது என்பதற்கு அடிப்படைக்காரணம் பெரியார்தான். அதனால் எனது துறையில் வெற்றி பெற முடிகிறது.உளவியல் பற்றி நாள் கணக்கில் பேச இயலும், நான் அதனின் சில பகுதிகளை மட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறேன்!
மதுரையில் 30.12.2017 அன்று நடைபெற்ற  கருத்தரங்கத்தில் “தந்தை பெரியாரும் உளவியலும்” என்னும் தலைப்பில் ஜெ.வெண்ணிலா அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.
தகவல்: வா.நேரு

நன்றி : விடுதலை 24.01.2018

No comments: