Tuesday 7 February 2023

'சங்கப்பலகை' நூல் பற்றி...கண்ணகுமார விஸ்வரூபன்

 எனது அண்மை நூலான சங்கப்பலகை நூல் பற்றி 'தேரியாயணம் 'புகழ்,தேரிக்காட்டு இலக்கியவாதி தோழர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்களின் கடிதம்..


அன்புத் தோழருக்கு வணக்கம்!

தங்களது சங்கப் பலகை 

நூலை முழுமையாக வாசித்து முடித்தேன். 

இலக்கிய ஆளுமை ஜெயகாந்தன் அவர்கள் தனது நூலுக்கு தானே முன்னுரை எழுதிக் கொள்வார். 

அந்த முன்னுரைகளெல்லாம் பின்னர் ஒரு தொகுப்பாக வெளிவந்தது.

முன்னுரைகளே ஒரு நூலாக வெளிவந்தது என்றால் அது ஜெயகாந்தனின் முன்னுரைகள் மட்டுமே!

அதைப்போல மதிப்புரைகளே தொகுப்பாக வெளிவருவது என்பது தங்களது சங்கப் பலகை மட்டுமே எனக் கருதுகிறேன். 

கி.ரா, இமையம் போன்ற பிரபலமான எழுத்தாளர்கள் தொட்டு, அறிமுக எழுத்தாளர்கள் வரை அனைவரது நூல்களையும் அருமையாக மதிப்பாய்வு செய்துள்ளீர்கள். 

அதிலும் புதிய படைப்பாளிகளின் படைப்புகளைத் தங்களது சிறப்பான மதிப்புரைகளின் மூலம் துலக்கமாக வெளிச்சப்படுத்தியுள்ளீர்கள். 

மதிப்புரை எழுதுவதென்பது ஒரு மகத்தான கலை!

அது தங்களுக்கு அழகாய்க் கைவந்துள்ளது.

இந்த அருங்கலைப்பணி இனிதே தொடரட்டும்!

இன்னும் பல நூல்களை சங்கப் பலகையில் அருமையாய் அரங்கேற்றுங்கள்.

மதிப்புறு முனைவரான உங்களை மதிப்புரைகளின் முன்னவராகவே காண்கிறேன். 

        என்றென்றும் 

            அன்புடன் 

         கண்ணகுமார 

            விஸ்வரூபன்.




2 comments:

Anonymous said...

வாழ்த்துகள் தோழர் - ரெஜினா சந்திரா.

Anonymous said...

மகிழ்ச்சி.நன்றி தோழர்