Sunday 24 September 2023

சிறந்த நூல் விமர்சனம் என்று படைப்பு குழுமம் அறிவிப்பு...

 

சிறு வயதில் இருந்தே புத்தகம் வாசிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. இன்று வரை அது தொடர்கிறது. எனக்கென்று ஒரு வலைப்பூவை http://vaanehru.blogspot.com/ ஏற்படுத்திக்கொண்டபிறகு , நான் வாசிக்கும் புத்தகங்களில் மிக ஈர்ப்பாக இருக்கும் புத்தகங்கள் பற்றி புத்தக விமர்சனங்களைத் தொடர்ந்து அதில் பதிவிட்டு வருகின்றேன்.அப்படி ஜூன் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தைச்சார்ந்த ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்கள் எழுதிய பனையோலை என்னும் நாவல் பற்றி எழுதிய புத்தக விமர்சனத்தை எனது வலைத்தளத்திலும் படைப்பு முக நூல் பக்கத்திலும் பகிர்ந்திருந்தேன். முக நூலில் ஜூன் மாதம் நூல் விமர்சனம் பகுதியில் படைப்பு குழுமம் சிறந்த படைப்பு என்று தேர்ந்தெடுத்து அறிவித்து இருக்கின்றார்கள்.மகிழ்ச்சி.பல ஆயிரம் படைப்பாளிகளை இணைக்கும் ஒரு தளமாக படைப்பு முக நூல் தளம் இருக்கிறது. நிறையப்படைப்பாளிகளுக்கு சிறப்பு சேர்க்கும்வண்ணம் செப்டம்பர் 30 சென்னையில் நேரடியான நிகழ்ச்சியைத் திருவிழா போல படைப்பாளிகளை வைத்து நடத்துகின்றார்கள்.பாராட்டுகளும் வாழ்த்துகளும்…


 

2 comments:

Anonymous said...

Congratulations - Regina Chandra.

முனைவர். வா.நேரு said...

Thanks Madam