Saturday 9 September 2023

ராணியே என்றாலும்...

 

 

 

கருவறைக்குள்ளே

இருந்த அர்ச்சகன்

காஞ்சிபுரம் தேவநாதன்

செய்த செயல்

நாடறியும் ஊரறியும்...

பிறப்பால் அவன் பார்ப்பான்

கருவறைக்குள் நுழைவதில்

எந்தத் தடையும் இல்லை..

.

அரசகுடும்பத்தைச்சார்ந்த

இராணி அவர்...

மத்தியப்பிரதேசம் பன்னாவின்

ராணி ஜிதேஸ்வரி...

கருவறையில் காட்டப்படும்

தீபத்தை கும்பிட முனையும்போது

அர்ச்சகரால் தள்ளிவிடப்பட்டு

கீழே விழுகிறார்...

தரதரவென இழுத்துச்செல்லப்படுகிறார்..

வழக்குப் பதிவு...

வன்மமான பதிவுகள்...

 

சனாதனம் தர்மம் அல்ல...அதர்மம்

அது எதிர்க்கப்படவேண்டியது இல்லை...

ஒழிக்கப்படவேண்டியது என

தம்பி உதயநிதி சொல்லியதற்காக

துள்ளிக்குதித்த சனாதனவாதிகளே!

இதற்கு எங்கே உங்கள் பதில்...

 

இராணி குடித்திருந்தாராம்..

ஆதலால் உள்ளே விடவில்லையாம்

பொய் சொன்னாலும்

பொருந்தச்சொல்லுங்கடா

போக்கத்த பசங்களா...

வெள்ளை உடை

உடுத்தியிருக்கிறார் ராணி..

அவர் ராணியே என்றாலும்

பெண் என்றால்

சனாதனம் கருவறைக்குள்ளே

அனுமதிக்காது...

அதுவும்

கணவனை இழந்த பெண் என்றால்

அனுமதிக்கவே அனுமதியாது...

 

21-ஆம் நூற்றாண்டிலும்

இதுதான் நிலைமை...

சந்திரனுக்கு விண்கலம்

அனுப்பி என்ன பயன்?

வீணாய்ப் போன

சனாதனத்தை கையில்

வைத்துக்கொண்டு...

https://twitter.com/Gobhiji3/status/1700143039514288199?s=20

 

ஓங்கி உரக்கச்சொல்வாம்

சனாதனம் ஒழிக!

ஒழிப்போம் சனாதனத்தை...

ஒழியட்டும் சனாதனம்..

 

                        வா.நேரு ,

                           09.09.2023.

 

 

 

 

 

 

 

No comments: