Sunday 7 August 2011

மகிழ்ச்சியாய் நம்பிக்கையாய்

மகிழ்ச்சியாய் நம்பிக்கையாய்
முகத்தில் அரும்பும்
வியர்வையை
தவழ்ந்து வரும்
இளந்தென்றல்
முகத்தில் படர்ந்து துடைக்கும் !

பறவைகள் தங்கள்
இன்னிசையால் எழுப்பும்
ஓசை உற்சாகத்தை
அள்ளி அள்ளி கொடுக்கும்

மகிழ்ந்து பேசி நடக்க நடக்க
நேற்றைய கவலையெல்லாம்
நம்மை விட்டு விலகி ஓடும

நடைப்பயிற்சியால்
மகிழ்ச்சியாய் நம்பிக்கையாய்
புலரும் காலைப் பொழுது

No comments: