Friday 19 August 2011

பூனைக்குட்டி வெளியில் வந்தது

ஊழல் ! ஊழல் !
என ஓலமிட்ட
கதர்க்குல்லாய்
அணிந்த பூனைக்குட்டி
வெளியில் வந்தது !

வன்முறையை மட்டுமே
வழியாய்க் கொண்ட
காந்தியாரைக் கொன்ற
வன்முறைக் கூட்டம்
ஏவிய அம்பு
மிகக் கவனமாய்
காந்தியார் சொன்ன
அகிம்சைப் படி
நடக்க அறிவுரை சொன்னது !

நான் சொன்னபடி நட!
இல்லையேல் நடக்க
விடமாட்டேன் பாராளூமன்றத்தை
என்று அடாவடி செய்யும்
குரங்குக் கூட்டத்தலைவி
பெருமிதமாய்ச் சொன்னார்

எங்கள் மாணவர் அணிதான்
கதர்க்குல்லாய் பின்னால்
இதிலென்ன குற்றம் !

குற்றமில்லை குரங்குத் தலைவியே !
வெளிப்படையாய் நாங்கள்
என்று அறிவித்து செய்தால்-
அதுதான் உங்களுக்கு
வழக்கமே இல்லையே !

ஒளிந்திருந்தே அம்பு
எய்யும் இராமனக் கூட்டமே !
சுன்னத் செய்து
காந்தியைக் கொன்ற
காலிகள் கூட்டமே !

அன்றே சொன்னார்
எங்கள் ஆசிரியர் வீரமணி!
பாபா ராம்தேவும்
அன்னா கசாரேவும்
காவியின் பினாமிகள்!
கவனமாய் இருங்களென்று !
தும்பை விட்டு
வாலைப் பிடிக்கும்
காங்கிரசு இயக்கமே !

பம்மினால் நடக்காது!
பதுங்கினால் தீராது !
ஒட்ட நறுக்குங்குள்
முகமூடிகளை -
இவர்கள் யாரென
உலகுக்கு காட்டுங்கள் !
அப்படியானால் தப்பிப்பீர்கள்!
இல்லையேல் தவிப்பீர்கள் !



No comments: