Sunday 7 August 2011

உரமாய் இளந்தளிர்களிடத்தில்

இளந்தளிர்
ஒன்று தன்னைத்தானே
மண்ணெண்ணய் ஊற்றி
கருக்கிக்கொண்டது

ஆடு மாடு
மேய்த்துக்கொண்டே
பகுதி நேரம் போல
பள்ளியில் படித்து
மாநில அளவில்
முதலிடம் பெற்றோரைப்
பற்றி பெருமையுடன்
படித்துக் கொண்டே
வந்தபொழுது
+2 வில் தோல்வி
மாணவி தற்கொலை
அதுவும் நான்
படித்த அரசு பள்ளியில்
என்ற செய்தி கண்டு
இதயம் நொந்தது

வெற்றி பெறுவது எப்படி
என்று பாடம் நடத்துவோரே!
தோல்வியை எப்படி
தாங்குவது என்பதையும்
சேர்த்து சொல்லுங்களேன்
பாடத்தில் தோற்று
வாழ்க்கையில் ஜெயித்தோரின்
வரலாற்றை பாடமாய்
நடத்துங்களேன் !

விழுவதும் எழுவதுமே
வாழ்க்கை
வீணாய் உயிரைத்
தொலைத்தல் கொடுமை
எனபதை உரமாய்
இளந்தளிர்களிடத்தில்
விதைக்க ஒரு
வழி காண்போமா ?

No comments: