Tuesday 18 February 2014

கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு வாழ்த்து -

ஈரோட்டுச்சூரியனின்
வெம்மையை
வார்த்தை கூடுகளுக்குள்
குவித்து வைத்த கவிஆடியே !

ஈரோட்டுத் தந்தையையும்
தமிழையும்
இரு கண்களாய்
கவி புனைந்த
புரட்சிக் கவிஞரின்
வழி என்பதாலோ
நீ உனை
ஈரோடு தமிழன்பன்
என அழைத்துக்கொண்டாயோ ?

வண்ணங்களில்
வர்ணம் தீட்டும்
வித்தை கற்றதாலோ
வார்த்தைகளில்
சிற்பம் கட்டும்
வல்லமை பெற்றாயோ?

எத்தனை புதுமைப்
பூக்களை பூக்கவிடும் முய்ற்சி
உன் கவிதைத் தடாகத்தில்
ஹைக்கூ என்றாய்
கற்றுக் கொண்டோம்
சென்ரியூ என்றாய்
அறிந்துகொண்டோம்
லிமரைக்கூ என்றாய்
தெரிந்து கொண்டோம்
வினாக்களால் கவிதை என்றாய்
விடைகளைத் தேடுதல்
வினாக்களால் மட்டுமே
சாத்தியம் எனப் புரிந்து கொண்டோம் !

தமிழ் இலக்கியத்தின்
பக்கங்களில்
பாப்லோ நெருடோவை
அமரவைத்தாய் !
இளைப்பாறுதல் இல்லா
'இலக்கியப் படைப்பாளியே !
எண்பதுகளில் அடிவைக்கிறாய்!
இறுமாப்பு எய்துகிறோம்
உன் படைப்புகளால் !
வாழிய ! வாழிய !
உன் புகழ் வாழிய !


                        வா. நேரு -
நன்றி : எழுத்து.காம்- 18.2.2014

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துரை அருமை ஐயா...

வாழ்த்துக்கள்...

முனைவர். வா.நேரு said...

நன்றி, தனபாலன் அவர்களே. பூட்டினால் திண்டுக்கல் புகழ்பெற்றதுபோல, தனபாலன் கமெண்ட்களால் திண்டுக்கல் வலைத்தளங்களில் புகழ்பெறுகிறது. வாழ்த்துக்கள்

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

நல்ல வாழ்த்துக்குப் பாராட்டுகள்.
அவரது அலைபேசி எண்ணோ, வலைப்பக்க-மின்னஞ்சல் முகவரியோ இருந்து சேர்ததிருந்தால் தொடர்பு கொண்டு வாழ்த்த நினைப்போர்க்கும் உதவுமே? தெரிந்தால் தெரிவியுங்களேன்?