Thursday 20 October 2016

கடந்து போன காலங்கள்(11)

           கடந்து போன காலங்கள்(11)

படிக்கும் காலங்களில்
உதவிய
மனிதர்கள் போலவே
சில மரங்களும் கூட
எந்நாளும் என் நினைவில்......

நிறைந்து நிற்கும்
பெரியகுளம் கண்மாய்
எங்கள் ஊருக்கு கிழக்காக
பழையூர் செல்வதற்கு பாதையாக.....

கண்மாய்க் கரையின்
இருபக்கமும் மாமரம்
புளியமரம் பனைமரம்
என எத்தனை மரங்கள் ......
கரைக்கு கீழே
பசுமையாய் எத்தனை வயல்கள்.....

ஒரு மாமரத்தின்
கிளைதனை உரசிச்செல்லும்
பனைமரம்
மரத்தின் மீதேறி
மாமரத்துக் கிளையில்
அமர்ந்து
பனைமரத்தில் சாய்ந்து
பல மணி நேரங்கள்
படித்திருக்கிறேன்
பிள்ளைகளிடம் சொன்னால்
சிரிக்கிறார்கள்
பரிணாம வளர்ச்சியை
நிருபித்திருக்கிறீர்கள்
எனக் கேலிகூட  பேசுகிறார்கள்....
ஆனால் அந்த அமைதி
இலைகளும் கிளைகளுமே
மட்டுமே கண்ணில்
பட்ட காலங்களில்
ஒன்றிய மனமும்
அதில் மனதிற்குள்
அழுந்திப் பதிந்த பாடங்களும்....

இன்றைக்கு எனது ஊர்
மாணவர்களும் கூட
டைகட்டி சூட்போட்டு
வேனில் ஏற்றப்பட்டு
அயல் ஊர்களுக்கு
படிப்பு எனக் கடத்தப்படும்
நேரங்களில்

கண்மாய் நிறைய
நீர் கிடக்க
நீரின் மேலே
வெண் நாரைகள் மிதக்க
பறவை ஒலிகளும்
பசுமைத் தாவரங்களும்
மட்டுமே கவனத்தில் விழ
கவனமாகப் படித்த காலங்கள்
நினைவில் மங்கா
கடந்து போன காலங்கள்.......
                                                          வா.நேரு-20.10.2016





2 comments:

Unknown said...

true
young days are always to be remembered to keep us under check...great men always recollect their younger days....
so you will become great soon.

முனைவர். வா.நேரு said...

Thanks for your feedback ,sir