Monday 31 October 2016

தீபாவளிப் பட்டாசுகளால் ஏற்பட்ட புகை டில்லியைத் திணறடித்திருக்கிறது

தீபாவளிப் பட்டாசுகளால் ஏற்பட்ட புகை டில்லியைத் திணறடித்திருக்கிறது
31 அக்டோபர் 2016

புகை சூழ் டில்லிImage copyrightSOUTIK BISWAS
Image caption
பட்டாசுப் புகையும் பனியும் சேர்ந்து பார்க்கக்கூடிய தூரத்தை குறைத்திருக்கிறது டில்லியில்
தலை நகர் டில்லியில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் முடிந்து விட்டன. பட்டாசுகளின் விஷப்புகை மண்டலம் சூழ்ந்து போக்குவரத்தை மந்தப்படுத்தியுள்ள நிலையில், பட்டாசுப் புகை குறித்த கோபாவேசமான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
காற்றில் சுகாதாரத்துக்கு ஆபத்து விளைவிக்கும், பி.எம்.10 துகள்கள் ஒரு கன மீட்டருக்கு 999 மைக்ரோ கிராம் என்ற ஆபத்தான் அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. பாதுகாப்பான அளவு என்பது 100 மைக்ரோ கிராம்கள்தான்.
ஏற்கனவே இது குறித்து அதிகாரிகள் எச்சரித்திருந்தார்கள்.
காற்றில் மாசு நீக்கி சுத்திகரிக்கும் கருவிகளை சாலைகளுக்கு அருகில் நிறுவப்போவதாக கடந்த வாரம் டில்லி மாநில அரசு அறிவித்திருந்தது.
ஆனால், திங்கட்கிழமை காலை, தலைநகரின் வீதிகளில் பெரிய அளவில் புகை மண்டலம் படரந்து, பார்க்கும் தன்மை மிகக் குறைவாகவே இருந்தது.
சமூக ஊடகங்களில் #பனிப்புகை என்ற வார்த்தை பிரபலமாகப் பரவியது.
முதல் நாள் கொண்டாட்டம், அப்புறம் திண்டாட்டம்
‘’நேற்றிரவு , பட்டாசு வெடி எல்லாம் அற்புதம்தான். இப்போது மூச்சு திணருங்கள்’’ , என்று ப்ரதீக் ப்ரசஞ்சித் என்பவர் டிவிட்டரில் கருததைப் பதிவு செய்தா.
நோய்டாவில் காலை 6.30 மணி #airpollution #smogImage copyright@NANDITA_ZEE
Image caption
நோய்டாவில் புகை மண்டலம்
Zero visibility at Sarai Kale Khan #Delhi #smogImage copyright@TK_SCRIBBLER
So while entering to Noida from Anand Vihar, thats how morning was for Delhi after #Diwali #fog #smog #crackersSpoiledEnviormentImage copyright@MUSAFIRMINAKSHI
Perhaps we Indians r the only ppl who Pay & Pray for this environmental degradation, by now it should have been bright day lightImage copyright@HAROONSHEIKH786
தீபாவளிக்கு முன்னர், பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று மக்களைக் கோரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இதே போன்று கடந்த காலங்களில் நடந்த பிரசாரங்களுக்கு பலன் ஏதும் ஏற்படவில்லை.
உலகின் மோசமாக மாசடைந்த நகர்
கொண்டாட்டங்கள் என்றாலே வெடிகள் இல்லாமல் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. சிலருக்கு இது அவர்களின் செல்வ நிலையைக் காட்ட கிடைக்கும் ஒரு சந்தர்ப்பம். வர்த்தகக் குடும்பங்கள் , ஒரு இரவில் வெடித்து தள்ள, பல லட்சக்கணக்கான ரூபாய் செலவில் பட்டாசுகளை வாங்கிக் குவிக்கின்றனர்.
உலகின் மிக மோசமாக மாசடைந்த 20 பெரு நகரங்களில், 13 பெரு நகரங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்று உலக சுகாதார நிறுவனம் 2014ல் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று கூறியது.
உலகிலேயே மிகவும் மோசமாக மாசடைந்த பெரு நகரம் டில்லிதான் என்றும் அது கூறியது.
காற்று மாசடைவது இந்தியாவில் இளம் வயதிலேயே ஏற்படும் இறப்புகளுக்கு முன்னோடி காரணமாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும், காற்று மாசுபடுவதால் ஏற்படும் நோய்களால், சுமார் 6 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
தீபாவளிப் பட்டாசுகளைத் தவிர, டில்லியில் குளிர்காலத்தில், வறிய மக்கள் குளிரைத் தவிர்க்க, குப்பைக் கூளங்களை எரிப்பதும், மாசு ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
டில்லியைச் சுற்றிலும் பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பில், விவசாய விளை நிலங்களை திருத்த, விவசாயக் கழி்வுப் பொருட்களை விவசாயிகள் எரிப்பதும் மற்றொரு காரணம். இந்தத் தீ பல நாட்கள் தொடர்ந்து எரிகிறது.

நன்றி : பி.பி.சி. 31.10.2016

No comments: