Sunday 27 August 2023

ஒரே ஒரு சிறுகதை ..ஒரு மணி நேரம் திறனாய்வு

யூ டியூப் இணைப்பு

https://youtube.com/live/jmNKcSUBuCw?feature=shared 


 

புதிது புதிதாய் பல முயற்சிகளைச்செய்து கொண்டே இருப்பவர் தோழர் அகன் என்னும் அமிர்தகணேசன் அவர்கள்.அவரின் முயற்சியால் ‘வல்லினச்சிறகுகள் ‘ என்னும் இணைய இதழ் மிகச்சிறப்பாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்தது.பல தமிழ்ப்பெண் ஆளுமைகளை உலகுக்கு அடையாளம் காட்டியது.

அந்த வகையில் வாரமலர் என்னும் பெயரில் ஒரே ஒரு  சிறுகதையை எடுத்துக்கொண்டு அதனை ஒரு மணி நேரம்  திறனாய்வு செய்யும் கூட்டம் இணைய வழியாக நடத்துகின்றனர். கவிஞர் தோழர் ம.வீ.கனிமொழி அவர்கள் அமெரிக்காவின் வர்ஜீனியாவிலிருந்து மிகச்சிறப்பாக இந்த இணைய வழி நிகழ்வை ஒருங்கிணைக்கின்றார்.

 

இந்த மாதம் 25.08.2023 காலை 7 மணிக்கு திரு.சிவமணி அவர்கள் எழுதிய ‘உயில் ‘ என்னும் சிறுகதை திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே அந்தச்சிறுகதை சில நாட்களுக்கு முன்னர் திறனாய்வாளர்களுக்கு அனுப்பப்பட்டது.திறனாய்வுக்கு எனப் படிக்கும்போது,நான் 2,3 முறை அந்தச்சிறுகதையைப் படித்தேன்.இண்றைய காலகட்டத்தில் தேவையான கதைக் கருவினைக் கொண்டிருக்கும் கதை. இணையக் கூட்டத்தில் எனது பாராட்டுக் கருத்துக்களையும் எனது விமர்சனத்தையும் பதிவு செய்தேன்.அதனைப் போல தோழர் இரம்யா நடராஜன்,தோழர் ஶ்ரீஜா தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.நிகழ்வினை ஒருங்கிணைத்த தோழர் ,ம.வீ.கனிமொழி அவர்கள் தனது கருத்தினைப் பதிவு செய்தபோது இறப்பு காப்பீடு பற்றிக் குறிப்பிட்டு காப்பீட்டுக்காக அமெரிக்காவில் நடக்கும் கொலைகளைப் பற்றியும் குறிப்பிட்டார். நிகழ்வில் இணைந்து  இந்தச்சிறுகதையின் ஆசிரியர் சிவமணி திரு.சிவமணி அவர்கள் மிக நெகிழ்வாக இந்தச்சிறுகதைத் திறனாய்வு  பற்றிக் குறிப்பிட்டு தனது கருத்துகளையும் பதிவு செய்தது நிகழ்வுக்கு சிறப்புச்சேர்த்தது.

 

.நிகழ்வில் வல்லினச்சிறகுகள் இதழின் ஆசிரியர் அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த தோழர் இராஜி இராமச்சந்திரன்,புதுக்கோட்டை கவிஞர் மு.கீதா,வாருங்கள் படிப்போம் குழுவினச்சார்ந்த அண்ணன் இளங்கோ,அண்ணன் குமரன் ஆகியோரும் கலந்து கொண்டது சிறப்பு.

 

தோழர் இராஜி இராமச்சந்திரன் அவர்களின் வாட்சப் பதிவு:

*#வாரமலர் 94*

திரு. சிவமணி அவர்களின் "உயில்" சிறுகதையை ஆழ்ந்து படித்து, உள்வாங்கி, தொய்வில்லாத் திறனாய்வினை அளித்த முனைவர் நேரு ஐயா, இரம்யா நடராஜன், ஶ்ரீஜா மற்றும் ஒருங்கிணைத்துச் சிறந்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட கனிமொழி ஆகியோருக்குப் பாராட்டுகள். ஆசிரியர் திரு. சிவமணி அவர்கள் தம் அறிவார்ந்த உரையைத் தன்னடக்கத்துடன் வழங்கியது சிறப்பு. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஊக்குவித்த கீதா மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

வா.நேரு,

27.08.2023

 


No comments: