Monday 23 October 2023

ஆய்வாளர் அய்யா பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களோடு கலந்துரையாடுதல் நிகழ்ச்சி

 

வாருங்கள் படைப்போம் குழுவின் சார்பாக இன்று(24.10.2023) இரவு 7.30 மணிக்கு படைப்பாளர்,ஆய்வாளர் அய்யா பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களோடு கலந்துரையாடுதல்  நிகழ்ச்சி. தன்னுடைய 17 வயதில் தொடங்கி இன்று வரை வாசிப்பை ,கண்ணாக நேசிப்பவர்.இடதுசாரி இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு,கள ஆய்வுகளை மேற்கொண்டவர்.அவருடைய படைப்புகளை,ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்க,படிக்க வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.வாருங்கள் படைப்போம் குழுவில் இதுவரை 149 படைப்பாளிகளை நேர்காணல் செய்திருக்கிறார்கள்.தொடர்ச்சியாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு நிகழும் இந்த நிகழ்வு எழுத நினைப்பவர்களுக்கு நல்ல விருந்து.ஆராய்ச்சி மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு வழிகாட்டும் பாதை. அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்களின் வழிகாட்டுதலில் ,ஒருங்கிணைப்பாளர்கள் தோழர்கள் வினிதா மோகன்,உமாமித்ரா,அர்ஷா,சுனிதா,அண்ணன்கள் இளங்கோ,குமரன் ஆகியோர்களின் ஒருங்கிணைப்பில் நிகழும் இலக்கிய  நிகழ்வு. வாருங்கள் ,காணொலி வழியாகச்சந்திப்போம். அய்யா பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் படைப்புகளோடும் அவரின் கள ஆய்வு பகிர்வுகளோடும்  இன்றைய மாலை நேரத்தை மகிழ்வான நேரமாக ஆக்கிக்கொள்வோம்.
தோழமையுடன் 
வா.நேரு,






இதுவரை வாருங்கள் படைப்போம் குழுவில் பங்கு பெற்ற படைப்பாளிகள் பற்றிய காணொளி கீழே...


No comments: