Tuesday 11 June 2024

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 'எழுத்தே வாழ்க்கை ' என்னும் நூலைப் பற்றிய மதிப்புரை..

 எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 'எழுத்தே வாழ்க்கை ' என்னும் நூலைப் பற்றிய மதிப்புரையை 'வாருங்கள் படிப்போம் 'குழுவில் வழங்குவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.எனக்கும் நிறைவான உரையாக அமைந்த உரை இந்த உரை.கேட்டு விட்டுத் தங்கள் கருத்துகளை பின்னோட்டமாகப் பதிவிட்ட  தோழமைகளின் கருத்துகள் கீழே. நிகழ்வின் யூ டியூட் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.வாய்ப்பு இருப்பவர்கள் கேட்டுப்பாருங்கள். நன்றி.

https://www.youtube.com/live/p7egdyU4ecc?si=YgSts25fCX7nmlpE



தோழர் மனம் நிறைந்த வாழ்த்துகள். பல நிகழ்வுகள் புதிதாய் கேட்க பயன்படும். ஒருசில மட்டுமே கேட்டு கற்க பயன்படும். அவற்றில் உங்கள் திறனாய்வு முதன்மையானது. சதாப்தி ரயில் மாதிரி தடையில்லாமல் பயணித்தீர்கள். பல நிகழ்வுகள் என்னோடு ஒன்றியிருந்தது. பழைய புத்தகக்கடை அவற்றில் ஒன்று. நான் திருவல்லிக்கேணியில் எட்டு வருடங்கள் தங்கியிருந்தேன். புத்தகப் புழுவாக இருந்தவனை சிந்திக்க வைத்ததில் இந்த பழைய புத்தகக்கடைக்கு உண்டு. அவ்வளவு பழைய புத்தகக்கடைகளை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது. அக்காலத்தில் கையில் ஒரு ஐம்பது ரூபாய் இருந்தால் விலை மதிக்க முடியாத புத்தகங்களை சுலபமாக வாங்கலாம். உலக அறிவே அங்கு தெருவில் கொட்டிக் கிடக்கும். தொலைபேசி துறை பற்றி பேசினீர்கள். ஒரு டிரக் கால் போட்டு, அதை இரு தெரு தாண்டி பேசி.... இரவு பகல் பாராமல் எவ்வளவு தொழிலாளர்கள்.... எவ்வளவு உழைப்பு. வசதியை ஏற்படுத்த அரசுத்துறை. வசதி வந்த பிறகு லாபம் ஈட்ட தனியார் துறை.திரு விட்டல்ராவின் வாழ்வின் உன்னதம் மீண்டும் தொலைதொடர்பு துறை வந்தது போலிருந்தது. நயாகரா நீர் வீழ்ச்சியை அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்த ரசித்த விதம் அருமை. புத்தகங்கள் படிப்பதின் பயனை, வீட்டிற்கு ஒரு நூலகம் என்ற முனைப்பும், அதனை 80 வயது மூதாட்டி அம்மையாரின் துணையுடன் சொன்ன விதம் அருமை. பழைய புத்தக வியாபாரின் நேர்மை மனதை தொட்டது. மீண்டும் காத்திருக்கிறோம் உங்கள் திறனாய்வில் கற்க.

எழுத்தாளர் கோபி.சேகர்..

--------------------------------------------------------------------------------------------------------------------------


இப்போதுதான் யூடியூபில் பார்த்தேன். 

எழுதுபவர்களுக்கும், புதிதாக எழுத வருபவர்களுக்கும் நிறைய தகவல்களை கொடுத்துக்கொண்டே போகிறார் அண்ணன் நேரு அவர்கள்.

இரவு பதீனோரு மணிக்கு எழுதுவது, அதிகாலை 4-6 எழுதுவது, அதை தினந்தோரும் கடைபிடிப்பது என்பன பயனுள்ள தகவல்கள்.

எழுதும் முறை பற்றி பேசும்போது ஒளிவண்ணன் அவர்களின் பேச்சுப் பதிவு முறையை குறிப்பிட்டது புதிதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது.

இன்னும் பலர் காகிதத்தில் எழுதி வருவதை குறிப்பிட்டார்.

நான் பல காலமாக லேப்டாபில்தான் எழுதி வருகிறேன் என்பதை நான் நினைத்துப் பார்த்துக்கொண்டேன்.

நல்ல, சரளமான, அலுப்பூட்டாத திறனாய்வு. 

அண்ணன் நேரு அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ம.தோல்காப்பியன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

மிகக் குறுகிய ஒருநாள் இடைவெளியில் சிறப்பான திறனாய்வு..எஸ் ராவின் இலக்கிய வாழ்க்கை குறிப்பாக ஒரு நாளைக்கு 6 மணி நேரம் எழுதுவது,வரும் அத்தனை கேள்விகளுக்கும்,அவர் பதில் அளிப்பது என அவரைப் பற்றிப் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.வீட்டுக்கொரு நூலகம் முன்னெடுப்பைப் பற்றி அவைநாயகன் அவர்களும் ஒளி வண்ணன் அவர்களும் பேசியது அவசியம் தேவையான ஒன்று...மொத்தத்தில் சிறப்பான நிகழ்வை அளித்த நேரு அண்ணாவிற்கும்,பங்கேற்ற தோழமைகளுக்கும் நன்றி!!
பேரா.உமா மகேஸ்வரி

---------------------------------------------------------------------------------------------------------------------------

மிகவும் அருமையான ,
தகவல்கள் பொதிந்த 
திறனாய்வு. 

எப்போதும் ஆசைபட்டதுண்டு: 
அடுத்த பிறவி என ஒன்றிருந்தால் 
எஸ்.ரா வின் ஜோல்னா பையாக பிறக்க வேண்டும் என. 

சிறப்பான திறனாய்வு எனவும் சொல்லலாம் . 
இளைய சமுதாயத்திற்குத் தேவையான 
பாட உரை எனவும் சொல்லலாம். 

வாழ்த்துகளும் 
வணக்கங்களும் .
-கலா கோபி.

----------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்றைய நிகழ்வு.. ஒரு திறனாய்வு போல் இல்லாமல்... வாசிப்பு..
புத்தக வாசிப்பை பிள்ளைகளிடம் எப்படி கடத்துவது,
எழுதுவதற்கான நேரம் ஒதுக்குதல்.. 
இப்படி சுய பரீட்சை செய்து பார்த்த நிகழ்வாக இருந்தது..

அதிலும்.. குறைந்த நேரத்தில் தயார் செய்வதில் அழுத்தம் 
அதிகமாக இருக்கும்..

எத்தனை அழுத்தம் இருந்தாலும்..
தன் வாசிப்பை, தன் திறனாய்வின் வழியே அழுத்தமாய் சொன்ன 
நேரு சார் க்கு.. மனதினிய வாழ்த்துகள்...

எழுத்தாளர் வினோத் பரமானந்தன்

----------------------------------------------------------------------------------------------------------------------------

அருமை நேரு சார். வாசிப்பையும் எழுத்தையும் நேசிக்கும் ஒருவரைப் பற்றி சுவையாக எடுத்துரைத்தீர்கள்.  வகுப்பரையில் அமர்ந்து பேராசிரியரின் உரை கேட்பது போல் இருந்தது.

ரெஜினா சந்திரா...

----------------------------------------------------------------------------------------------------------------------------

என்னால் முழுமையாக ஜூம் இணைப்பில் கேட்க முடியவில்லை. யூடியூபில் தான் பார்த்தேன். ஒரு புத்தகம் வெளியிட அதன் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு திறன் இருக்கிறது. ஆனால் அது எத்தனை பேரால் வாசிக்கப் படுகிறது என்பதை நினைத்தால் வருத்தம் தான் வருகிறது.‌எஸ் ரா அவர்களின் சிறந்த நூல் என்றே சொல்லலாம்.
பாராட்டுக்கள் நேரு அண்ணா.

நூலகர் சுசிலா

-----------------------------------------------------------------------------------------------------------------------------

முழுமையாக உரையை கேட்டு மகிழ்ந்தேன். ஒரு நிமிடம் கூட சேதம் செய்யவில்லை. எழுத வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான திறனாய்வு. நேரு ஐயா அவர்களின் பேச்சு மிகவும் தெளிவாகவும், எளியவர்கள் புரியும் வண்ணம் இருந்தது. எனக்கு இந்த திறனாய்வில் என்னை மாற்றி கொள்ள நினைப்பது பேப்பர் மற்றும் பேனாவில் எழுதுவதை தவிர்த்து கணினியை நேரடியாக பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் எனக்கு தோன்றியது. வாசிக்கும் பழக்கம் நிச்சயமாக வேண்டும் என்பதும் அதே போல் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது. நிகழ்ச்சி அருமை. நன்றி குழுவினருக்கு.
Dr.V.Mohanraj.,Ph.D.

----------------------------------------------------------------------------------------------------------------------------

நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்விலேயே கருத்து தெரிவித்த அண்ணன் கோ​.ஒளிவண்ணன்​, அண்ணன் ​லோ. குமரன்​,அய்யா புலவர்  நா​நா ஆறுமுகம்​ உள்ளிட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. மறுநாள் காலை ​தொலைபேசியில் அழைத்துப்பாராட்டிய அய்யா  நட்புத்தமிழ் வட்டம் மகாலிங்கம் அவர்களுக்கும் நன்றி.




No comments: