Sunday 25 August 2024

அமைதியாய் இருப்பது நலம்….

 


 

வெட்டுவதா?தொடர்வதா?

என்பது சூழலைப் பொறுத்தது..

அவரவர் மனதைப் பொறுத்தது..

 

வெட்டிக்கொண்ட சிலர்

சில ஆண்டுகள் கழித்து…

தொடர்ந்து இருக்கலாம்…

தவறு இழைத்துவிட்டேன்

என்று புலம்பியவர்கள் சிலரை

நான் சந்தித்திருக்கிறேன்…

 

வெட்டிக்கொள்ளாமல்

இப்படித் தொடர்ந்து

என் வாழ்வை நானே

சீரழித்துக்கொண்டேனே..

என்று தவிக்கும் சிலரையும்

நான் சந்தித்திருக்கிறேன்..

 

எதிலிருந்தும் எவரும்

வெட்டிக் கொள்வதும்

விட்டுக் கொடுத்துத் தொடர்வதும்

அவரவர் சூழல் பொறுத்தது..

அவரவர் மனம் பொறுத்தது..

அவரவர் பொருளாதாரம்

பொறுத்ததும் கூட…

 

எவர் செய்வதையும்

எங்கேயோ இருந்துகொண்டு

இது சரி..இது தவறு

எனச்சொல்லும் நாட்டாமைத்தனம்

இல்லாமல் அவரவர்

தேர்வுக்கு விட்டுவிட்டு

அமைதியாய் இருப்பது

நமக்கு  நலம்…

 

                    வா.நேரு,

                    25.08.2024

 

No comments: