Tuesday 1 October 2024

உண்மை நெருப்பு வெளிச்சத்தில்....

 

       

அதட்டிப் பேசினால்

மிரட்டிப் பேசினால்

அமர்ந்து விடுவார்கள்

என  அறிவிலியே

ஆட்டம் போடுகின்றாய்..

விளக்கில் விழுந்த

விட்டில்பூச்சி போல

மேடையில் அங்குமிங்கும்

அலைகிறாய்,பிதற்றுகிறாய்..

 

உண்மை எனும் நெருப்பின்

கங்குகள்டா எங்கள் மகள்கள்

நீ மிரட்ட மிரட்ட

இன்னும்

பலமாய் உண்மை நெருப்பு எரியும்..

உன் புராணக் குப்பைகள்

யாவும் தில் எரியும்

உண்மை  நெருப்பு வெளிச்சத்தில்

நீ கட்டிவைத்த பொய்மைக்

கோட்டைகள் யாவும் பொசுங்கும்! சாகும்!



 

கருத்துகளைக் கருத்துகளால்

சந்திக்க வலிமையின்றி

இங்கும் அங்கும் குதிக்கிறாய்!

ஏளனமாய்ப் பேசுகிறாய் !

ஏதோதோ உளறுகிறாய் !

தற்குறியே ! வரலாறு அறிவாயா நீ!

 

தீ பரவுட்டும் நூல் படித்திருக்கிறாயா?

கருத்துப்போரில் எவ்வளவு மரியாதையாய்

அறிஞர் அண்ணாவும்

சோமசுந்தர பாரதியாரும்

நடந்து கொண்டார்கள் என்பதை அறிவாயா நீ!


குண்டர்களின் கூடாரமாய்

குற்றவாளிகளின் புகலிடமாய்

அமைப்புக் கட்டும் உனக்கு

பண்பும் தெரியாது !வரலாறும் புரியாது…

 

எங்களைப் போல இனிவரும்

இளைஞர்கள் இருக்கப்போவதில்லை!

உன் மொழியில் அவர்கள்

பதில் மொழி பேசும் காலம்

வெகு விரைவில்!

 

பெரியாரியலை உணர்ந்த பெண்கள்

பெரும் நெருப்பு! கருத்துகளால்

சாத்தத் தெரிந்த பெண்கள் அவர்கள்!

அடங்கி இரு ! இல்லையேல்

இன்னும் அசிங்கப்படுவாய்!

                              வா.நேரு,

                               01.10.2024

                        

 

 

 

 

2 comments:

anandam said...

அடங்கி இரு.... இல்லையானால் இன்னும் அசிங்கப்படுவாய்!

அருமை அண்ணே!

காவல்துறையின் கைகளை யார் கட்டிப் போட்டது????

முனைவர். வா.நேரு said...

உணமை அண்ணே..காவல்துறையின் அமைதி புரியாத புதிர். நிறையக் கருப்பு ஆடுகள் காவல்துறைக்குள்...அரசு அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.