எனக்குத் தெரிந்த
நாள்முதல்
இன்றுவரை
இயக்கப்பணி ஒன்றே
மூச்சாய் இயங்கும்
அன்பு அண்ணன் ஆதவன்!
அருப்புக்கோட்டை என்றாலே
கண்முன்னால் வரும்
உருவம் இவரின் உருவம் !
விடுதலையை உண்மையை…
கழக ஏடுகளை…
வீதி வீதியாய்
வீடு வீடாய்ச் சென்று
சேர்க்கும் வேலையைப்
பல்லாண்டுகளாய்
சிரித்த முகத்தோடு
தேனீ போலப் பரப்பும்
பரப்புரையாளர் இவர்!...
தந்தையின் வழியில்
திராவிடர் கழகப்பணியைத்
தீயாய்த் தொடரும்
களப்பணியாளர் இவர் !
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்
தந்தை பெரியாரின் கொள்கையை
அய்யா ஆசிரியர் வழியில்
செயல்படுத்தும் தொண்டர் இவர்!
இவரைப் போன்றோர்தான்
திராவிடர் கழகத்தின்
உயிர் போன்றோர்!
சமூகத்திற்கு விழி போன்றோர்..
வாழ்க ! வாழ்க ! என
அண்ணன் ஆதவனை
இப்பிறந்த நாளில்
வாழ்த்தி மகிழ்கிறோம்!...
வா.நேரு,25.03.2026

8 comments:
உண்மை உண்மை உண்மை
விடுதலை ஆதவன் என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும் என்கின்ற அளவிற்கு விடுதலை நாளிதழுடன் ஐக்கியபட்டவர் ஆதவன்
@ எழுத்தாளர் மதிகண்ணன், கதவு பதிப்பகம்....நன்றி தோழர்
ஆதவன் அய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
வாழ்த்துவோம்
ஆதவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இணைந்து வாழ்த்துவோம் அண்ணே. நன்றி
அய்யா சிறப்பான பதிவு
நன்றி.மகிழ்ச்சிங்க அய்யா.
Post a Comment