Tuesday 29 October 2013

நிகழ்வும் நினைப்பும் (6) --கடவுளான என் மீது ....

"நித்யானந்தா இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 100 குழந்தைகளை எந்தவிதமான பாடத்திட்டமும் இல்லாமல் நித்யானந்தா பாடத்திட்டம் என்ற ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு மாநில அரசு என எந்த அரசுகளின் கல்வித்துறையின் அனுமதியில்லாமல், ஒரு உள்ளூர தங்கும் பள்ளியை நடத்தி வருகிறார். அதன் மூலம்அவர் கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கிறார். இது சட்ட விரோதம் என உமேஷ் ஆரத்தியா கூறியுள்ளார்.

உமேஷ் ஆரத்தியாவின் அறிக்கையை தொடர்ந்து, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் மேல் நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு கர்நாடக அரசு வந்துள்ளது என தெரிகிறது. இதைத் தெரிந்து கொண்ட நித்யானந்தா கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையாவை, கண்டபடி திட்டி தனது இணையதளத்தில் பேசியுள்ளார். என் மேல் நடவடிக்கை எடுத்த முதல்வர்கள் காணாமல் போனார்கள். என் மேல் நடவடிக்கை எடுத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சதானந்த கவுடா ஆகியோர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டனர். கடவுளான என் மீது காவல்துறையை ஏவும் முதல்வர் சித்தராமையா விரைவில் சின்னாபின்னமாகிவிடுவார் என சாபமிட்டார்."  நக்கீரன்  செய்தி.

                                 நித்யானந்தா ஜெயிலுக்குள் கம்பி எண்ணாமல்  வெளியில் தெரிவதும், மீண்டும் தொலைக்காட்சிகளில் பிரசங்கம் செய்வதும், அதைப் படித்தவர்கள் பல பேர் கன்னத்தில் போட்டுக்கொண்டு பார்ப்பதும் என்ன கொடுமையடா இது ? என்று யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்களே !. நானே கடவுள் என்று சொல்லும் தைரியம் நித்யானந்தாவிற்கு எப்படி வந்தது ?  கடவுளான என் மீது .... என்று சொல்கின்றாரே இந்த ஆள் ? யார் இவர்? இவர் பூர்வீகம் என்ன ? எப்படி பிரபல்யம் ஆனார் ? இப்படி நானே அல்லா என்று ஒரு முஸ்லீம் அல்லது நானே பரமபிதா என்று ஒரு கிறித்துவர் சொன்னால் அந்த மதத்தைச்சேர்ந்தவர்கள் விட்டு விடுவார்களா? இப்படிச்சொல்லும் நித்யானந்தாவிற்குப்பின்னால் இந்து மதத்தைக் காப்பாற்றப்போகிறோம் என்று சொல்பவர்கள் - இராம கோபாலன் போன்றவர்கள் இருக்கின்றார்களே ? எப்படி ? தப்பித்தவறி கூட இதைப்பற்றி ஜெயமோகன்கள் - குருமூர்த்திகள் பேச மாட்டேன் என்று மெளனம் சாதிக்கின்றார்களே ? ஏன் ?  தமிழ் இந்து பேப்பர் எழுதுவதற்கு தமிழகத்தில் வேறு யாருமே இல்லாதது போல ஜெயமோகன் கட்டுரைகளாகவே நிறைய வெளியிடுகிறதே ? ஏன் ?  எதிர்ப்பது போல் காட்டிக்கொள்ளும் இவர்களை எல்லாம் இணைக்கும் மையப்புள்ளி எது ?

No comments: