நிகழ்வும் நினைப்பும்(29) :ஜாக்கிரதை, ஜாக்கிரதை, சாமியாரு ஜாக்கிரதை
எத்தனையோ செய்திகள் அந்த ஆசிரமம் பற்றி, பெற்ற மகளை அங்கு விட்டுவிட்டு எப்படி நிம்மதியாக இருந்தார்கள். 'பிகே' இந்திப்படத்தில் , போலிச்சாமியாரின் சீடராக கதாநாயகியின் அப்பா வருவார். அவரை அறிமுகப்படுத்தும் காட்சியே அமர்க்களமாக இருக்கும். சாமியாரே கதி என இருக்கும் அவர் கடைசியில் திருந்துவதாகக் காட்டுவார்கள். மெத்தப்படித்தவர்கள், மேதாவிகள் எனத் தங்களைத் தாங்களே நினைத்துக்கொள்வோர், அழைத்துக்கொள்வோர் பலர் இன்னும் பல்வேறு சாமியார்களிடம் தங்கள் குடும்பததுப்பிள்ளைகளை எல்லாம் பக்தி என்று விட்டிருப்போர் சிந்திக்க. சில ஆண்டுகளுக்கு முன்னாலேயே, திராவிடர் கழகத்தின் சார்பாக ஒரு இசைத்தட்டு வெளியிடப்பட்டது. ஜாக்கிரதை, ஜாக்கிரதை, சாமியாரு ஜாக்கிரதை .....எத்தனை சொன்னாலும் திருந்தவே மாட்டோம் என்றால் என்னதான் செய்வது. இனி நக்கீரனில் வந்த செய்தி தங்களுக்காக .
எத்தனையோ செய்திகள் அந்த ஆசிரமம் பற்றி, பெற்ற மகளை அங்கு விட்டுவிட்டு எப்படி நிம்மதியாக இருந்தார்கள். 'பிகே' இந்திப்படத்தில் , போலிச்சாமியாரின் சீடராக கதாநாயகியின் அப்பா வருவார். அவரை அறிமுகப்படுத்தும் காட்சியே அமர்க்களமாக இருக்கும். சாமியாரே கதி என இருக்கும் அவர் கடைசியில் திருந்துவதாகக் காட்டுவார்கள். மெத்தப்படித்தவர்கள், மேதாவிகள் எனத் தங்களைத் தாங்களே நினைத்துக்கொள்வோர், அழைத்துக்கொள்வோர் பலர் இன்னும் பல்வேறு சாமியார்களிடம் தங்கள் குடும்பததுப்பிள்ளைகளை எல்லாம் பக்தி என்று விட்டிருப்போர் சிந்திக்க. சில ஆண்டுகளுக்கு முன்னாலேயே, திராவிடர் கழகத்தின் சார்பாக ஒரு இசைத்தட்டு வெளியிடப்பட்டது. ஜாக்கிரதை, ஜாக்கிரதை, சாமியாரு ஜாக்கிரதை .....எத்தனை சொன்னாலும் திருந்தவே மாட்டோம் என்றால் என்னதான் செய்வது. இனி நக்கீரனில் வந்த செய்தி தங்களுக்காக .
நித்தியின் தவறான நடவடிக்கைகளை வெளி உலகத்துக்கு காட்டாமல் ஓய மாட்டேன்! மகளை இழந்த தாய் பேட்டி!

திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை, நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் - ஜான்சிராணி தம்தியினர். இவர்களது 24 வயது மகள் சங்கீதா. இவர், பி.சி.ஏ., படித்த பின்னர், கர்நாடக மாநிலம், பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன், துறவி பயிற்சிக்கு சேர்ந்தார். இந்த நிலையில், கடந்த, 28ம் தேதி, ஆசிரமத்தில் மர்மமாக இறந்தார். தனது மகள் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாகவும், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஜான்சி ராணி பெங்களுரு ராம்நகரம் மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை பெங்களுருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள நான், எனது மகள் சங்கீதாவையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினேன். பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் எனது மகள் துறவி பயிற்சிக்காக சேர்ந்தார். நானும் அங்கு செல்வேன். இந்தநிலையில் நித்தியானந்தா ரஞ்சிதா வீடியோ வெளியானபோது நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அந்த மாதிரி ஒரு தவறான செய்தி கொண்ட வீடியோவை எனது மகள் தனது லேப்டாப் மற்றும் பென் டிரைவில் வைத்திருந்தார். அதனுடன் ஊருக்கு வந்தாள். ஆசிரமத்தில் தவறான செயல்கள் நடக்கிறது என்றாள்.
சங்கீதா ஊருக்கு வந்தவுடன், அம்சானந்தா மற்றும் சிலர் வந்தனர். அவர்கள் சங்கீதாவின் லேப்டாப் மற்றும் பென்டிரைவை வாங்கி அதில் இருந்தவற்றை அழித்தனர். எங்களை நித்தியானந்தாவிடம் அழைத்துச் சென்றனர். அங்கு நித்தியானந்தா என்னிடம், நானும் ரஞ்சிதாவும் இருந்த வீடியோவை வெளியிட்டாங்க. அந்த வீடியோ வைத்தே என்னை ஒண்ணும் பண்ண முடியல. உன் பொண்ணு லேப்டாப்ல இருக்கும் வீடியோவை வைத்து என்ன பண்ண முடியும் என்று மிரட்டினார்.
நான் என் பெண்ணை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன். முதலில் விட்டுவிடுவதாக சொன்ன நித்தியானந்தா, அதன் பிறகு என் மகளை தனிமை சிறையில் அடைத்தார். நடிகை ரஞ்சிதா என் மகளை பளார் என்று அறைந்தார். ஒன்றரை வருடமாக நான் என் மகளை பார்க்க சென்றால், தூரத்தில் நிற்க வைத்து காட்டுவார்கள். பேச விடமாட்டார்கள்.
அந்த ஆசிரமத்தில் நிறைய மர்மங்கள் உள்ளது. அங்கு நிறைய தவறுகள் நடக்கிறது. என் கண் முன்பாகவே சிலையை ஒழுங்காக அலங்காரம் செய்யவில்லை என்று ஒரு சீடரை 10 பேர் சேர்ந்து அடித்ததை பார்த்தேன். அதுமட்டுமல்லாமல் அந்த ஆசிரமத்தில் புகார் செய்பவர்கள் ஒவ்வொருவரை பற்றியும் அவர்கள் தவறான செக்ஸில் ஈடுபட்டதாக ஒரு வீடியோவை நித்தியானந்தாவே தயாரிப்பார்.

நடந்த சம்பவம் குறித்து ராம்நகரம் மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திங்கள்கிழமை கர்நாடக உள்துறை அமைச்சரை சந்திக்க வாய்ப்பு கேட்டுள்ளோம்.
நித்தியானந்தாவின் தவறான நடவடிக்கைகளை வெளி உலகத்துக்கு காட்டாமல் ஓய மாட்டேன். நித்தியானந்தா தவறான செய்கையில் ஈடுபடுகிறார் என்பதற்கான நிறைய ஆதாங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் இப்போது சொன்னால் ஆசிரமத்தில் தங்கியிருக்கக் கூடிய எனக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லோருக்கும் பாதிப்பு வரும். அதனால் இப்போது அதை நான் சொல்லவில்லை. விரைவில் இதுபற்றிய உண்மைகளை வெளியிடுவேன் என்றார்.
செய்தியாளர்களின் சந்திப்பின்போது ஜான்சிராணியின் வழக்கறிஞர், கர்நாடகா வாட்டாள் நாகராஜ் கட்சி பிரமுகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உடனிருந்தனர்.
Nantri Nakkeeran
No comments:
Post a Comment