Sunday 19 January 2014

நிகழ்வும் நினைப்பும்(14) : நம்புகிறார்களா? நம்புவது போல நடிக்கின்றார்களா?

"சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
தொடர்புடைய விடயங்கள்

    துஷ்பிரயோகம்,
    கத்தோலிக்கம்,
    ஊழல்,
    மனித உரிமை,
    ஒருபாலுறவு

கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாதிரிமாரிலும் பார்க்க இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகரிப்பு என்று கருதப்படுகிறது.

ஜெனீவாவிலுள்ள ஐநா ஆணையத்தின் முன்பாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆஜரான வத்திக்கான் அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த ஆவணங்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன.

பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பவங்களை மட்டுமே வத்திக்கான் திருச்சபை இதுவரை அறிக்கையிட்டுள்ளது.

பாதிரிமாரின் பாலியல் துஷ்பிரயோக விவகாரங்களை கத்தோலிக்க திருச்சபை தலைமை மூடிமறைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிவில் அதிகாரிகளுக்கு முறையிடாமல், சம்பந்தப்பட்ட பாதிரிமாரை வேறு கத்தோலிக்க பங்குப் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் வத்திக்கான் மீது விமர்சனங்கள் உள்ளன"
பி.பி.சி.செய்தி 18.1.2014

 கத்தோலிக்கப் பாதிரிமார்களின் இத்தகைய செயல்களை மதவாதிகள் எப்படி நியாயப்படுத்துவார்கள் எனத் தெரியவில்லை. பாலியில் உணர்வு என்பது வயது வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பான ஒன்று. அதனை முறைப்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் வாழ்வியலில் நிறைய உள்ளன. அதனை விடுத்து விட்டு நான் முற்றும் துறந்தவன், திருமணம் செய்து கொள்ள மாட்டேன், கடவுளின் தூதுவர் சொன்ன செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் தூயவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு, சிறுவர்களிடம் இத்தகைய சேட்டைகள் பண்ணுவது எவ்வளவு பெரிய அநியாயம்? எவ்வளவு பெரிய அநாகரிகம்? அப்படி ஒரு கடவுள் உண்மையாகவே இருந்தால், தப்பு செய்யும் பாதிரியாரை அந்த நேரத்தில் படாரென்று அறைய மாட்டாரா? பார்த்துக்கொண்டு சும்மாவே இருப்பார் ? பிஞ்சுகளிடம் வம்பு செய்யும் பாதிரியார்கள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் திரிகிறார்கள் என்றால் கடவுள் என்று ஒருவர் இல்லை என்று தானே அர்த்தம் ?  இந்து மதக் கடவுள்களின்  ஏஜெண்டுகள் பண்ணும் அநியாயமும்  தாங்கமுடியவில்லை. ஒரு சாமியார் ? திடீரென்று பிரச்சனைக்கு உரிய நடிகையையும் சாமியாராக ஆக்கி விட்டேன் என்று சொல்லி விட்டார். தீட்சை பெற்றார், சாமியாராகி விட்டார் என்று  செய்தி கொடுத்து விட்டார். இதையெல்லாம் பார்த்தபிறகும் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்கள் என்றால் உண்மையிலேயே நம்புகிறார்களா? நம்புவது போல நடிக்கின்றார்களா? ஆத்திகர்களுக்கே வெளிச்சம்.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நம்புவதுபோல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார்கள்

முனைவர். வா.நேரு said...

உண்மை, நன்றி கரந்தை ஜெயக்குமார் அவர்களே.