Saturday 4 January 2014

நன்றி பாராட்டு விழா


 மதுரையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகத்தின் சிற்ப்புக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்து, செய்தியையும்  எழுதி அனுப்பிய பகுத்தறிவாளர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டத்தலைவர் சுப.முருகானந்தம் அவர்களுக்கும், திராவிடர் கழக மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம் அவர்களுக்கும் மிக்க நன்றி.   செய்தி வெளியிட்ட விடுதலை இதழுக்கு மிக்க நன்றி

மதுரை, ஜன.4- மதுரை மாநகர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ஒடிய மொழியில் தந்தை பெரியாரின் கருத்துக்களை முதன் முதலாக மொழி பெயர்த்து "பெரியாரங்கா ரக்சனா" எனும் நூலை எழுதிய பேராசிரியர் தனேஸ்வர் சாகு அவர்களுக்கு நன்றி பாராட்டு விழா 30.12.2013 திங்களன்று மாலை 6.00 மணியளவில் மதுரை ஆர்த்தி உணவு விடுதியில்  நடைபெற்றது. விழாவுக்கு பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் முனைவர்.வா.நேரு  தலைமை தாங்கி னார். மதுரை மாநகர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக  தலைவர் சுப.முரு கானந்தம் அனைவரையும் வரவேற் றார். விழாவிற்கு முன்னிலை வகித்து திராவிடர் கழக அமைப்புச் செய லாளர் வே.செல்வம் அவர்கள் பேரா. தனேஸ்வர் சாகு அவர்களின் சீரிய முயற்சியினை பாராட்டி பேசினார்.
திராவிடர் கழக மண்டல தலைவர் மீ.அழகர்சாமி பேரா. தனேஸ்வர் சாகு அவர்களைப் பாராட்டி பயனாடை அணிவித்தார். திராவிடர்கழக மாநில வழக்கறி ஞரணி துணைத் தலைவர் நீதி யரசர்(நிறைவு) பொ.நடராசன் அவர் கள் தந்தை பெரியாரின் உழைப்பால் தமிழகத்திற்கு கிடைத்த இட ஒதுக்கீடு, சுயமரியாதை திருமண சட்டம் போன்ற பயன்களை எடுத்துரைத்தும் பேரா. தனேஸ்வர் சாகு அவர்களைப் பாராட்டியும் பேசினார். விழாத் தலைவர் முனைவர் வா.நேரு இந்திய பகுத்தறிவாளர்கள் அமைப் பில் செயல்பாட்டில் சிறந்து விளங்கு பவர் பேரா. தனேஸ்வர் சாகு என்பதை எடுத்துரைத்து, தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாள் விழாவிற்கு ஒரிசாவிலிருந்த வந்திருந்த பேரா. தனேஸ்வர் சாகு அவர்கள் , தான் மதுரைக்கு அகில இந்திய தத்துவ மாநாட்டிற்கு வருவதை தெரிவித்ததால் இந்தக்கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டது என்பதையும், தமிழர் தலைவர் கைகளில் 1005 பவுன் தங்கத்திற்கான பணம் அளித்த விழாவில், தஞ்சையில் கலந்து கொண்டவர் என்பதையும், தமிழர் தலைவர் அவர்களை அழைத்து ஒரியாவில் தந்தை பெரி யாரின் மொழி பெயர்ப்பு நூலை வெளியிட வைத்து பெருமை சேர்த் தவர், தந்தை பெரியார் கொள்கை களின் பால், தமிழர் தலைவரிடம் மிகுந்த அன்பும், பற்றும் கொண்டவர், இன்னும் தந்தை பெரியாரின் நூல்கள் பலவற்றை அவர் மொழி பெயர்க்க வேண்டும்,  அவருக்கு துணையாக தமிழகம் எங்கும் உள்ள திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக தோ ழர்கள் இருப்பார்கள். தொடர்ந்து இது போன்ற பணியில் அவர் ஈடுபட வேண்டும் என்றும், பெரியாரங்கா ரக்சனா நூல் எழுதி யமைக்கு மனமார்ந்த நன்றியதலையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராசா அவர்கள் , தந்தை பெரியார் - தமிழர் தலைவர் கருத்துக்கள் பொறிக் கப்பட்ட நினைவுப் பரிசினை பேரா. தனேஸ்வர் சாகு, , அவரது துணை வியார் பிரதிமா சாகு அவர்களுக்கும்  வழங்கினார். நிறைவாக பேரா. தனேஸ்வர் சாகு அவர்கள் "அறிவியல் மனப்பான்மை" எனும் தலைப்பில், இந்தியாவில் பிறந்த சமூக சிந்தனையாளர்களை எல்லாம் நினைவு கூர்ந்தும், தான் ஜாதி மறுப்பு, வரதட்சனை மறுப்பு திருமணம் செய்து கொண்டவர் என்ற முன்னுரை யோடு பலத்த கைதட்டலுக்கிடையில் அவரது உரையை ஆரம்பித்து, காலம் காலமாக மனித இனம் தவிர, மற்ற உயிரினங்கள் எந்தவித மாற்றமுமின்றி இருக்கையில் மனிதர்கள் தங்கள் அறிவியல் மனப்பான்மையால் தான் இன்றைக்கு வசதியான எளிதான வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார்கள். எதையும் கூர்ந்து நோக்குவது, ஆராய்ச்சி செய்து முடிவுகளை காண்பது, திரும்பவும் அந்த முடிவை களை செயல்படுத்தி சோதனை செய்து விதிகளை உருவாக்குவது அறிவியல் மனப்பான்மையின் அடிப்படைக் கூறுகள். இதை எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறோமோ அவ்வளவு மனிதர்கள் சிறப்புற வாழலாம் என்றும், தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டுக்களுக்கு நன்றி கூற வார்த் தைகளே இல்லை, மிகவும் நன்றி என்று உணர்ச்சிவயமாக பேசினார். அவரது ஆங்கில உரையை முனைவர். வா.நேரு தமிழில் மொழி பெயர்த்து கூறினார். இறுதியாக வழக்கறிஞர் நா.கணே சன் நன்றி கூறினார். விழாவில் , மதுரை புறநகர் மாவட்ட தலைவர் பவுன்ராசா, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் அ.வேல் முருகன், மதுரை மாவட்ட தி.க. தலைவர் சே.முனியசாமி,மதுரை புற நகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மன்னர் மன்னன்,  மதுரை மாவட்ட தி.க செயலாளர் க.அழகர், மதுரை மாவட்ட தி.க துணைத் தலைவர் திருப்பதி,நா.முருகேசன் , காளியப்பன், இளைஞரணி தோழர் கள் பேக்கரி கண்ணன், வேல்துரை, மகளிர் அணித் தோழியர்கள் இராக்கு தங்கம்,நே.சொர்ணம் ,சுசிலா வேல் முருகன், நாகலட்சுமி,  போட்டோ இராதா, இரா.சடகோபன், மு.கனி., மோதிலால்,  ஆட்டோ செல்வம், மாரி முத்து,  மற்றும் கழகத் தோழர்களும் பகுத்தறிவாளர்களும் கலந்து கொண் டனர். நிறைவான நிகழ்ச்சியாக இருந்தது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான நிகழ்ச்சியை அறிய தந்தமைக்கு நன்றி ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

முனைவர். வா.நேரு said...

நன்றி தனபாலன் அவர்களே...