Wednesday 15 March 2023

வாருங்கள் நண்பர்களே,வாருங்கள் தோழர்களே

 அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் இன்று.தனக்காக வாழாமல் தந்தை பெரியாருக்காகவும் ,திராவிடர் கழக இயக்கத்திற்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்து மறைந்த பெருந்தகையின் நினைவு நாள் இன்று.அம்மையார் அவர்களின் நினைவைப் போற்றி வணங்கி அவர்களை நினைவு கூறுவோம்.நாளை மாலை 6.30 மணிக்கு இணைய வழியாக நடைபெறும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற நூல் ஆய்வரங்கக் கூட்டத்தில் தோழர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் தோழர் ஓவியா அவர்கள் எழுதிய 'கருஞ்சட்டைப்பெண்கள் ' என்னும் புத்தகம் பற்றிப் பேசுகிறார்.அந்தப் புத்தகத்தில் மிகச்சிறப்பாக கருஞ்சட்டை அணிந்து அந்தக் காலகட்டங்களில் களத்தில் நின்ற முன்னோடிகள் பற்றியும் குறிப்பாக அன்னை ம்ணியம்மையார் அவர்கள் பற்றியும் மிகச்சிறப்பாக தோழர் ஓவியா அவர்கள் பதிவு செய்திருப்பார்.தன்னுடைய நாவன்மையால் எதிரிகளையும் தன்பக்கம் ஈர்க்கும் சொல்வன்மை மிக்க சோர்விலா வழக்கறிஞர் தோழர் அ.அருள்மொழி அவர்களின் சீரிய உரை வழியாக அந்த நூல் பற்றி அறிய ஓர் வாய்ப்பு.இந்த நிகழ்விற்கு பெரியார் பன்னாட்டு அமைப்பினைச்சார்ந்த அம்மா மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்கள் தலைமை ஏற்று உரையாற்ற இருக்கிறார்.வாருங்கள் நண்பர்களே,வாருங்கள் தோழர்களே...அழைக்கின்றது பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.



No comments: