ஒரு நல்ல
புத்தகத்தின்
வாசிப்பு
நம்மை
எங்கெங்கோ
அழைத்துச்செல்கிறது…
அத்துவானக்
காட்டில்
துயரத்தில்
அல்லல்படும்
அவர்களின்
துயரத்தில்
நம்மையும்
கூட
பங்குபெற
வைக்கிறது..
ஏதுமற்ற
பழங்குடிப்பெண்ணாக
இருந்தாலும்
அவளின்
கள்ளங்கபடமற்ற
நகைப்பும்
வாழ்ந்து
காட்டவேண்டும்
எனும்
உள்ளத் துடிப்பும்…
தன் துயரை
மட்டுமே
எண்ணி
அழுதுகொண்டிருக்காமல்
தன்னைப்போல்
பாதிக்கப்பட்டு
அழுதுகொண்டிருப்பவர்களுக்காக
நீளும்
அவளின்
உதவிக்
கரங்களும்…
உன்னதமாக
வாழ்வது எப்படி
என்னும்
உண்மையைப்
போதிக்கிறது
எழுத்தின் வழியே
‘அரிவாள்
ஜீவிதம்’ நாவலின்
ஜெகந்தி…ஏனோ படித்து
முடித்தபின்பும்
மனதிற்குள்
வாழ்ந்து
கொண்டிருக்கிறாள்…
கதை
என்னமோ அவள்
சாகும்
இடத்தில்
இருந்துதான்
தொடங்குகிறது !
வா.நேரு,11.03.2025
No comments:
Post a Comment