Saturday 15 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக் கவிஞரும்(3)

ஆரியர்கள் எப்படி திராவிடர்களைத் தங்கள் வயப்படுத்தினர் என்பதை அர்த்தமுள்ள இந்துமதம்! எனப் பாகம் பாகமாய் எழுதிக் குவித்த , கோப்பையிலே என் குடியிருப்பு எனத் தன்வாக்குமூலம் எழுதிய கவிஞர் கண்ணதாசன் கவிதை வழியாக இன்னும் சிறப்பாகக் காணலாம். நாம் திராவிடர் என்றால் ஆரியர் யார் என்பதனை கண்ணதாசன் கூறுகின்றார் கேளுங்கள் .
“ஆடுமாடுகள் முன் நடந்திட
ஆரணங்குகள் பின் தொடர்ந்திட
காடு யாவையும் கடந்து சிற்சிலர்
கன்னித் தாயக எல்லை தொட்டனர்;”

நமது எல்லையை ஆடுமாடோடும் ஆரணங்கோடும் தொட்டவர்கள் யார்?இன்றைய சுப்பிரமணிய சுவாமி, சோ, குருமூர்த்தி அய்யர்களின் மூதாதையர்கள் , எத்தனை பேருக்குத் தெரியும் இது ...
“மஞ்சள் மேனியும் வஞ்ச நெஞ்சமும்
மான மென்னும் ஓர் எண்ணம் இன்மையும்
கொஞ்சும் வார்த்தையும் கொண்டவர் தமிழ்க்
கோட்டை வாசற் படியை மிதித்தனர்;”

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயையில் முதல் பக்கத்தில் வரும் “ பேராசைப் பெருந்தகையே, போற்றி,போற்றி “ பாடலோடு மேற்கண்ட வரிகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

“சொந்தமாக ஓர் நாடி லாதவர்
தொட்ட பூமியில் சூழ்ந்து வாழ்பவர்
எந்த நாடுமதம் சொந்த நாடென
ஏற்று மாந்தரை மாற்றி ஆள்பவர் “

ஈழத்தமிழெருக்கென ஒரு நாடு கிடைத்துவிடக்கூடாது , தமிழனின் கொடி தனி நாட்டில் பறக்கக்கூடாது என்பதற்காக எத்தனை சூழ்ச்சி செய்தனர், இன்றும் செய்கின்றனர், ஏனெனில் சொந்த நாடென்றால் என்னவென்றே அறியாதவர்கள் பார்ப்பனர்கள்.

சொத்து என்பதோ தர்ப்பை ஒன்றுதான்
தூய்மை என்பதோ துணியும் இன்மையாம்
வித்தை யாவையும் சூழ்ச்சிப் பள்ளியில்
விரும்பிக் கற்றதாம்; வேறு என் சொல!
நச்சரவுகள் மனித மேனியில்
நடமிடும் கதை இவர்கள் கதையாம்

அச்சம் மிக்கவர் கோழையர்; ஆயினும்
அடுத்து வீழ்த்திடும் திறமை மிக்கவர்!
அடியெடுத்து வைத்ததும், கண்ணெதிர்
அங்கு நின்றவோர் தமிழனைப்பார்த்து, இப்
படி அமர்ந்திடும் பண்புடை தென்னவ!
பாரில் உம்புகழ் பரவக் காண்கிறோம்!
மிடிமை இல்லதாம் உங்கள் தாயகம்!

வீரர் தேயமாம்! கேள்வி யுற்றனம்!
எனில் உமக்கொரு தெய்வம் இல்லையாம்!
என்ன மோசம், இஃதாண்டவன் ஏற்பரோ!
என்றதும் தமிழ் ஏறு கூறுவன்;
ஏன் இலை! கதிரோன் ஒரு தெய்வமாம்!
எழில் நிலாவும் யாம் போற்றிடு தெய்வமாம்
என்றுகூற அவ்வீணர்கள் யாவரும்
எழுதபதாயிரம் கடவுள்கள் கூறி, அக்
கடவுள் யாவரும் வானில் உண்டெனக்
கதைய ளந்தனர் கற்பனை பொங்கிட!

பொய்ய லால்சிறு மெய்யுமி லாமலே
புவியில் வாழும் திறம்மிகு ஆரியர்
சொன்ன யாவையும் தமிழன் ஏற்றனன்!
சூழ்ச்சி வென்றது! நாடு சாய்ந்ததே!

கடவுள் வாசலை காத்தனர் ஆரியர்!
கன்னியர் விழிக் கடலைக் காட்டினர்!
வீரம் முற்றும் ஒழிந்தது ஏட்டிலே!
தீரம் மாண்டு ஆரியர் சாத்திரத்
தீக்குழி யிடைச் சாய்ந்தனர் தென்னவர்!

இந்தக் கவிதையை இன்றைய இளைஞர்கள் கையில் கொடுத்து மனப்பாடம் செய்யச் சொல்லல் வேண்டும். அப்போதுதான் உண்மை வரலாறு அவர்களுக்குப் புரியும் . கடவுள் என்னும் கருத்தாக்கத்தால் எப்படி திராவிடன் ஆரியரின் சாத்திரத் தீக்குழியிடைச் சாய்ந்தனர் என்னும் வரலாற்றை உணர்வர்.
எப்படியெல்லாம் பொய் சொல்லித்தமிழர்களை ஆரியர்கள் ஏமாற்றினார்கள் என்பதனைப் பட்டியலிடும் புரட்சிக்கவிஞர் அதனை வெறுத்த, அந்தக் கடவுள் ,வேதம் என்னும் பொய்மைகளை எதிர்த்தவர்களை பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் என்பதனைப் பட்டியலிடுகின்றார்.
தம் சிறு வேதம் ஒப்பாத்
தமிழரை ஆரிய்ர்கள்
நஞ்சென்று கொண்டாரடி...
வெஞ்சிறு வேதம் ஒப்பா
வீரரை ஆரியர்கள்
வஞ்சித்துக் கொன்றாரடி .....

ஆரியர்தமை ஒப்பா
ஆதித் திராவிடரைச்
சேரியில் வைத்தாரடி ...
சேரிப் பறையர் என்றும்
தீண்டாதார் என்று சொல்லும்
வீரர் நம் உற்றாரடி “
தீண்டப்படாதவர்கள் என்று சொல்லப்படும் வீரர்கள் நம் உறவினர்கள் என்பதனை தமிழர்கள் அனைவருக்கும் சமத்துவப்பாட்டில் புரட்சிக் கவிஞர் சொல்வதைக் காண்கிறோம்......... நடைமுறையில் அப்படி இல்லையே ஏன்? எங்கே கோளாறு ?
வா.நேரு – 15-10-2011

1 comment:

anandam said...

கோப்பையிலே என் குடியிருப்பு எனத் தன்வாக்குமூலம் எழுதிய கவிஞர் கண்ணதாசன் கவிதை வழியாக இன்னும் சிறப்பாகக் காணலாம். என்பதன் தொடர்ச்சியாக,"நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே" என்று ஒரு திரைப்பாடலில்,"ஆலயம் செய்வோம், அதில் அனுமதியில்லை...நீ அந்தக் கூட்டமே அதில் அதிசயமில்லை"என்பதுவரைக்கும் இருப்பதையும் நினைத்துப் பார்த்தேன்.