Sunday 25 April 2021

பகடி செய்கிறாயே!

 திடீரெனத் 

தரையில் போடப்பட்ட

மீன்களாய் கரோனா

நோயாளிகள் .....

ஆக்ஸிஜன் ஆக்ஸிஜன்

எனும் அழுகுரல்

இந்திய நகரங்கள் பலவற்றின்

வளிமண்டலத்தை நிரப்புகிறது...

..


கோமியத்தால் 

எல்லாவற்றையும் 

குணமாக்கிவிடலாம் என 

எண்ணும் குணக்கொழுந்துகள்

மத்திய ஆட்சியில்

அமர்ந்திருக்கிறார்கள்...

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்

வாங்கவா ? வேண்டாமா?...

எவரிடம் வாங்குவது?....

முடிவெடுக்க மோடி அரசு 

.எட்டு மாதங்கள் எடுத்திருக்கிறது...


முடிவெடுக்க எடுத்த தாமதத்தால்

மருத்துவமனைகள் கதறுகின்றன...

மருத்துவர்கள் அழுகிறார்கள்...

கரோனா நோயாளிகள் 

மூச்சுத்திணறி சாகிறார்கள்.....

அவலம் நெஞ்சைப் பிழிகிறது...


பதினான்கு மாநில

மக்கள் அழுகுரலைத் தடுக்க,,

பி.எம்.கேர் நிதியிலிருந்து 

வெறும் 200 கோடி கொடுத்திருந்தால்

ஆக்ஸிஜன் இருந்திருக்கும்...

வல்லுநர்கள் சொல்கிறார்கள் 


மராட்டிய அரசு 

கரோனா தடுப்பில் தோற்றுப்போய்விட்டது...

அறிவிப்பவர் மத்திய 

சுகாதாரத்துறை அமைச்சர்...

அட அறிவிலிகளா!

உத்தரப்பிரதேசத்தில் என்ன வாழ்கிறது?

வரிசையாய் வீடுகள் எரியும் நேரம்

பக்கத்து வீட்டுக்காரன் அணைக்கவில்லை

என்று பகடி செய்கிறாயே!

உன் வீடும்தானே எரிகிறது?...


அனைத்தையும் தீர்த்துவைக்கும்

அரிய சஞ்சீவி என்று

மோடியைப் புகழ்ந்துகொண்டிருந்த்

சங்கிகள் ஒன்றும்

மாறுவதாகக் காணோம்.....

எல்லாம் பண்டிதர் நேரு

ஆட்சியால்தான் என்று

மந்திரம் போல டுவிட் 

செய்து கொண்டிருக்கிறார்கள்...


அறிவியல் மனப்பான்மை 

இல்லா ஆட்சியாளர்கள்

அழிவைத்தான் தருவார்கள்....

மதவெறி அடிப்படை

ஆட்சி நாட்டு 

மக்களை மாண்டு

போகத்தான் செய்யும்.


கும்பமேளா எனும் கரோனா மேளா

நடத்திவிட்டு  

கை மீறிப்போய்விட்டது எனக்

கையைப் பிசையும் ஆட்சியாளர்களே

ஆட்சிக் கட்டிலிலிருந்து

கீழே இறங்குங்கள்.....

மதத்தையும் அரசையும்

பிரித்து ஆட்சியை நடத்துவர்கள்

இனியாவது இந்தியாவை

ஆளட்டும்...... 

...


                               வா.நேரு

                                26.04.2021


No comments: