Thursday 27 July 2023

கறுப்புடை தரித்த அணி...

 


மக்களவையில்

இந்தியாவைக் காப்பாற்ற

‘இந்தியா’ அணியின்

உறுப்பினர்கள்

கறுப்பு உடை தரித்து

‘உரிமை முழக்கங்களை ‘

எழுப்புகிறார்கள்

 

தமிழ்நாட்டை பார்ப்பனியம்

சூழப்போகிறது...

இந்த நாள்  நமக்கெல்லாம்

துக்க நாள்...

கருப்புடை அணிந்து

கறுப்புக் கொடி ஏற்றுங்கள் என்றார்

தந்தை பெரியார்...

சுதந்திரம் வாங்கிய நாளில்..

 

இன்று காவி

இந்திய நாட்டையே

சூழ்ந்து நிற்கிறது...

வஞ்சகமும் சூழ்ச்சியுமாய்

படுபாதகம் செய்யும் சனாதனத்திற்கு

எதிராய் எல்லோரும் ஒன்றாய்

கருஞ்சட்டை உடையில்

மக்களவைக்குள்..

 

காவிகள் ‘மோடி,மோடி’ எனக்

கத்திக்கொண்டு இருக்கிறார்கள்...

பெற்ற சுதந்திரம் பறிபோய்விடுமோ..

ஜெர்மனியின் நாஜிகள் மீண்டும்

காவிப் போர்வைக்குள்

இந்தியாவில்

கால் பதித்துவிடுவார்களோ

எனும் அச்சத்தில்

‘இந்தியா’ எனும் பெயரில்

ஒன்றிணைந்து இருக்கிறார்கள்...


பட்டியல் இனத்து மக்களே

பழங்குடி மக்களே...

பிற்படுத்தப்பட்ட மக்களே...

சிறுபான்மை மக்களே..

ஒட்டு மொத்தத்தில்

பார்ப்பனரல்லாத மக்களே..

உங்களை எல்லாம் காப்பாற்ற

நாங்கள் ஒருங்கிணைந்து

கறுப்புடை தரித்து நிற்கின்றோம்

 

நீங்கள் எப்போது எங்களுக்கு

ஆதரவாய் ஒன்றிணையப்

போகிறீர்கள் என்று உரக்கக்

கேட்பது போல

உரிமை முழுக்கம் இடுகிறார்கள்

கறுப்புடை தரித்த நம்

மக்களவை உறுப்பினர்கள்..

 

கறுப்புடை எப்போதும்

பார்ப்பனரல்லாத மக்களை

ஒருங்கிணைக்கும்...

போராட்ட உணர்வேற்றும்...

பகை யார் என்பதைத்

தெளிவாக வரையறைக்கும்...

வந்து பார் என அறிவுத்திறமையால்

எதிரிக்கு அச்சமூட்டூம்...




 

‘கறுப்புடை ‘ தரித்த

‘இந்தியா ‘அணி வெல்லட்டும்..

மணிப்பூர் கொடுமைக்கெல்லாம்

முடிவு கட்டட்டும்....

 

                               வா.நேரு,

                                27.07.2023

No comments: