Friday 14 April 2023

வாருங்கள் தோழர்களே இன்று மாலை 6.30 மணிக்கு.







"ஜாதி என்பது இந்துக்கள் கலந்து உறவாடுவதற்குத் தடையாக உள்ள கல் சுவரோ கம்பி வேலியோ அல்ல; ஜாதி என்பது ஓர் எண்ணம், ஒரு மன நிலை. எனவே, ஜாதியை ஒழிப்பது என்பது ஒரு பவுதீகத் தடையை அழிக்கும் செயல் அல்ல; மக்களின் #எண்ணத்தில்மாற்றம்ஏற்படுத்தும் செயல்.

மூன்று காரணங்களுக்காக பவுத்தத்தை நான் விரும்புகிறேன்.

1) மூடநம்பிக்கைகள்- மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி என்பது போன்றவற்றை வெறுக்கும் பகுத்தறிவை பவுத்தம் போதிக்கிறது.

2) கருணையை பவுத்தம் போதிக்கிறது.

3) சமத்துவத்தை பவுத்தம் வலியுறுத்துகிறது.

ஒரு நல்ல வாழ்க்கைக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்வுக்கும் மனிதனுக்கு இவை தான் தேவை. கடவுளோ ஆத்மாவோ சமூகத்தை ஒருபோதும் காப்பாற்றாது."

-அண்ணல் அம்பேத்கர்.

ஒரே நேர்கோட்டில் பயணித்த இரு பெரும் தலைவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் என்பதால் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் அவர்கள் இருவரும் என்று சொல்லக்கூடிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொகுத்தளித்த "#பெரியார்- #அம்பேத்கர்_நட்புறவு_ஒருவரலாறு" எனும் நூலாய்வு இன்று.

நாமும் அறிந்து பலரும் அறியப்படுத்த வேண்டிய  அரும் தகவல்களைத் தர வருகிறார் எழுத்தாளர்- பேச்சாளர்- வாசிப்பின் நேசிப்பாளர் முனைவர்  
வா. நேரு அவர்கள்.

வாருங்கள் தோழர்களே இன்று மாலை 6.30 மணிக்கு.👇

#சமத்துவநாள் #ஏப்ரல்14

நன்றி : தோழர் கவிஞர்.ம.கவிதா அவர்களுக்கு


No comments: